விடையில்லா விடுகதை அவள்
அத்தியாயம் 3
பகல் துவங்குவது நினைவுகளில்
என்றால் இரவு முடிவது
உந்தன் கனவுகளில்!!!
“என்ன டா சொல்ற? உதவி தானே செஞ்சோம்? அதனால என்ன பிரச்சனை?”, என்று கேட்டான் தாமரை.
“அந்த லேடி கொஞ்சம் மோசம் டா. உன்னை பாத்திருந்தா அந்த பொண்ணை கண்டிப்பா வச்சு செய்யும்”
“என்ன டா சொல்ற?”
“ஆமா மீனா பாவம் டா. அவ...
அவர்கள் வரவில்லை என்றால் இவர்கள் மூவருக்கும் சேர்த்து சமைப்பாள். இப்போது வேறு வழி இல்லாததால் கிடந்த பாத்திரங்களை கழுவி போட்டாள். அப்போது அங்கே வந்த அவளது அத்தை “எனக்கு காலைல இடியாப்பம் செஞ்சு தரியா?”, என்று கேட்டாள். நலம் விசாரிப்பு கூட இல்லாமல் மெனு சொன்ன அத்தையை வெறித்துப் பார்த்தவள் கழுவுற மீனில்...
அத்தியாயம் 4
மனதில் இடம் தருவாயா
எந்தன் வலிகளை
இறக்கி வைக்க?
ஹாஸ்டல் அறையில் அவளுக்கு கொடுத்திருந்த கட்டிலில் படுத்திருந்தாள் அழகுமீனா. புது இடம் என்பதால் அவளுக்கு தூக்கம் வர வில்லை.
இன்று நடந்தது மட்டும் அல்ல. அவள் வாழ்வு முழுமையும் நடந்த நிகழ்வுகள் அனைத்துமே அவள் மனதில் படமாக ஓடிக் கொண்டிருந்தது. கடந்து வந்த அத்தனை பாதையிலும் அவள்...
“எதுக்கு டா இவ்வளவு கஷ்டம்? ஏதாவது நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிட்டு போகலாம்ல?”, என்று கேட்டான் கதிர்.
“என்னது கல்யாணமா? அவளுக்கு ஆல்ரெடி கல்யாணம் முடிஞ்சு டிவோர்சே ஆகிருச்சு. ஒரு பெண் குழந்தை வேற இருக்கு”, என்று சொல்ல இருவருக்குமே அதிர்ச்சி தான்.
இருவரும் வாயடைத்துப் போய் அமைதியாக இருக்க “அவ...
அத்தியாயம் 5
அர்த்தம் புரிந்த பிறகு
தான் சுவையும் புரியும்
தமிழிலும் காதலிலும்!!!
மீனாவின் குழந்தைக்கு மூன்று மாதம் ஆகி இருந்தது. அப்போது தான் குழந்தையைப் பார்க்க வந்தான் மகேஷ். அப்போதும் அவளிடம் அன்பு அக்கறை எல்லாம் இல்லை. அவனது தேவைக்கு அவளிடம் பேசினான். ஒரு வாரம் இருந்து விட்டு மீண்டும் சென்று விட்டான். அவளும் இப்போது அவனிடம் எதிர்பார்ப்பதை...
பெண்களுக்கு எதிராக பாலியல் தொல்லை செய்தால் சட்டம் கடுமையாக பாயும் என்பதால் அந்த கயவனும் அவளிடம் நெருங்க வில்லை. ஆனாலும் அவன் எதிரே வர அவளுக்கு பயம் தான்.
சில நேரம் அவளுக்கு தன்னையே புழுவை பார்ப்பது போல தான் தோன்றியது. ஒரு மாதிரி அருவெறுப்பும் அவமானமும் அவள் மனதில் அப்படியே பதிந்து...
“உன்னோட அழுக்கு துண்டை யாரும் தொடக்க கூட மாட்டாங்க அண்ணா. கண்டிப்பா அது அந்த சீட்ல தான் கிடக்கும்”, என்றாள் கலை.
“ஆமா ஆமா, அதை துவைச்சா தான் என்னவாம்?”, என்று வதனாவும் கேட்க அவன் அவர்களை முறைத்துப் பார்த்தான்.
பதிலுக்கு அவனை ஒரு பார்வை பார்த்தவர்கள் “வறோம் அக்கா”, என்று சொல்லி விட்டு பேருந்தில் ஏறி...
எதற்கு எடுத்தாலும் அழுது மன பாரத்தை தீர்க்கும் பெண்ணும் அவள் கிடையாது என்பதால் மனதுக்குள்ளே எல்லா அழுத்தமும் சேர்ந்து கொண்டே இருந்தது.
அன்று அவள் கணவனே அவளை அழைக்க அதிக சத்தோஷத்தில் தான் அவனிடம் பேசினாள். “என்னங்க எப்ப வருவீங்க? எனக்கு உங்களைப் பாக்கணும் போல இருக்கு”, என்றாள்.
“நினைச்ச நேரம் வறதுக்கு இது என்ன உன் ...
அத்தியாயம் 6
மறக்கும் நிலைக்கு தள்ளப்
படும் இதயம் என்றும்
வாசிப்பது மௌன ராகமே!!!
அழகு மீனா விடுதிக்கு வந்து ஒரு வாரம் கடந்திருந்தது. அவள் வாழ்க்கையில் சில பிரச்சனைகள் இருக்கிறது தான். ஆனால் இப்போது எந்த சண்டையும் சச்சரவும் இல்லாமல் நிம்மதியாக இருந்தது.
போன் இன்னும் சரி செய்து வரவில்லை என்பதால் அவளால் பணத்தை தாமரையிடம் கொடுக்க முடிய வில்லை....
அவன் சொன்னதை தான் அவரும் சொல்ல “குழந்தையை வச்சி என்னை மிரட்டுவாங்களே தவிர அந்த குழந்தையை அவங்க எதுவும் செய்ய மாட்டாங்கன்னு லேட்டா தான் சார் புரிஞ்சது. பரவால்ல குழந்தை அங்கயே இருக்கட்டும். எங்க இருந்தாலும் நல்லா இருக்கட்டும். என் கிட்ட கூட்டிட்டு வந்தா அதை என்னால நல்லா பாத்துக்க முடியுமானு கூட தெரியலை....
அன்று இரவே அவள் அவனிடம் சொல்லி விட “எங்க அம்மா பேரப் பிள்ளைங்க வேணும்னு ஆசைப் படுறதை தப்புன்னு சொல்ல வரியா? இல்லை எங்க ரெண்டு பேருக்குள்ள சண்டை இழுத்து விடப் பாக்குறியா? எங்க அம்மா தான் எனக்கு எல்லாமே? மத்தவங்க எல்லாம் அம்மாவுக்கு அடுத்து தான். இனி அவங்களைப் பத்தி ஏதாவது சொன்ன...
அத்தியாயம் 7
புரியாத கேள்விக்கு
விடை போல தான் புரியாத
மனங்களின் காதலும்!!!
தாமரை அன்னை மற்றும் தந்தையைப் பார்த்துக் கொண்டிருக்க “இன்னைக்கு எங்களுக்கு முடிவு தெரியணும் தாமரை. நாளைக்கு பொண்ணு பாக்க வறோம்ன்னு அவங்க வீட்ல சொல்லிறட்டுமா?”, என்று கேட்டாள் வசந்தா.
“அம்மா ஒரு வருஷம் போகட்டுமே?”, என்றான் அவன் பரிதாபமாக.
“கல்யாணத்தை தள்ளிப் போட ஏதாவது காரணம் இருந்தா சரின்னு...
ஆனால் அதற்கு அவசியமே இல்லாமல் “ஏய் மீனா வெளிய வா டி”, என்ற கல்யாணியின் ஆங்காரமான குரல் கேட்டது.
“இப்ப என்னவோ? அதுக்குள்ள இவ மகன் ஏதாவது வத்தி வச்சிட்டானா?”, என்று எண்ணிக் கொண்டவள் குழந்தையை தொட்டிலில் போட்டு விட்டு வெளியே வர அங்கே அவளை குரோதத்துடன் பார்த்த படி நின்றாள் கல்யாணி.
சோமசுந்தரம், கிஷோர் மற்றும்...
மனித மனம் விசித்திரமானது. எதிரிகளுக்கு கூட இறங்கும். அடித்தவரைக் கூட அணைக்கும். அன்புக்கு அடிமையாக இருக்கும். அப்படி இருக்க மீனா மட்டும் விதி விலக்கா என்ன? கடன் காரனா கூட நீ எனக்கு வேண்டாம் என்று ஒரு நொடியில் சொல்லி விட்டுச் சென்று விடலாம். ஆனால் அவளால் அது முடிய வில்லை. அவனையே பார்த்த...
“உன் மனசுல என்ன இருக்குன்னு எங்களுக்கு தெரியாது. என் மகன் கிட்ட நீ வேண்டாம்னு சொல்லிருப்ப போல? அதான் எதுக்குன்னு தெறிஞ்சிக்கலாம்ன்னு வந்தோம்”
“அது.. அது வந்து..”, என்று அவள் திணற “இரு மா நான் பேசிக்கிறேன். நாங்க எல்லோரும் உன்னை எங்க வீட்டு மருமகளா ஏத்துக்க தான் ஆசைப் படுறோம். அவங்க அப்பா தான்...
“என்ன தான் ஆச்சு அண்ணா? அதுவும் சாகுற அளவுக்கு. என்னை நிம்மதியா இருக்கவே விட மாட்டாங்களா?”, என்று கேட்டாள்.
“அவங்களைப் பத்தி உனக்கு தெரியாதா? இருக்குறதுலே அதிக பைத்தியம் உன் அம்மாவும் அப்பாவும் தான். உங்க அப்பா கண்ணு முழிச்சிட்டார். இப்ப தான் பேசிட்டு வரேன். அவர் சொல்றதைக் கேட்டா எனக்கே அப்படி எரிச்சல் வருது...
“இவன் அந்த பொண்ணைக் கட்டிட்டு வந்தா நம்ம வீட்டுக்கு எவனும் பொண்ணு கேட்டு வர மாட்டான்”
“அப்படி எல்லாம் இல்லைங்க. இவங்களுக்குன்னு பிறந்தவன் வர தான் செய்வாங்க. கல்யாணம் முடிஞ்சு வாழ்க்கையை இழந்து குழந்தையை இழந்து நிக்குற பொண்ணுக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையுதுன்னு ஏன் நினைக்க மாட்டுக்கீங்க?”
“எனக்கு உன்னை மாறி பரந்த மனசு இல்லை...