புல்லாங்குழலே! பூங்குழலே!
“ஆம் ராஜா”
“முதலில் ரஞ்சித் உதவியுடன் அவளது கைப்பேசி IMEI எண், கைப்பேசி எண்ணிற்கான ரசீது, குறுஞ்செய்தி தகவல்கள் என்று அனைத்தையும் வாங்க ஏற்பாடு செய்..
அடுத்து ஒலிவாங்கியின் பதிவுகளை பரிசோதித்துப் பார்.. வந்து ஒரு மாதம் ஆகிறது.. நிச்சயம் அவளின் குழுவினரிடம் தொடர்பு கொண்டு இருப்பாள்.. பதிவில் அவள் யாரிடமாவது பேசி இருந்தால், பதிவில் இருக்கும்...
வாய்விட்டு சிரித்தவன், சிரித்து முடித்ததும் அவளது கையை தனது கைக்குள் அடக்கியபடி, “ரணசிம்ம ராஜானு இல்லை, பொதுவாவே ராஜாக்கள் தங்கள் மனைவியை தேவி என்று தான் அழைப்பர்.. நேற்று இலைமறை காயாக கூறியதை இப்பொழுது நேரிடையாகவே கூறி விடுகிறேன்..
யாரும் நெருங்க முடியாத என்னிடத்தில் தைரியமாக வாதித்து, எனக்காக வருந்தி, எனது பின்புலத்திற்காக அல்லாமல் என்...
அத்தியாயம் 5
மீனாட்சி வேலைக்கு சேர்ந்து ஒரு மாதம் கடந்து இருந்தது.
இந்த ஒரு மாதத்தில் சந்ரா வாயில் இருந்து எதையும் அறிய முடியவில்லை என்றாலும் மற்ற வேலையாட்களிடம் அவர்களே அறியாமல் பலவாறு விசாரித்து சில தகவல்களை சேகரித்து இருந்தாள். அதன் விளைவாக அரச குடும்பத்தினரை பற்றி ஓரளவிற்கு புரிந்து கொண்டிருந்தாள்.
ராஜாவின் மறைமுக விசாரணைக்கும், ராஜமாதாவின் முறைப்பிற்கும்,...
அத்தியாயம் 3
மாலையில் ராஜமாதாவை மீனாட்சி சந்திக்க வேந்தன்புரம் சென்றபோது அவளை எதிர்கொண்ட தீரன் அவளது அடையாள அட்டையை கொடுத்தபடி, “முதல் நாள் வேலை எப்படி போச்சு?” என்று சாதாரணமாக கேட்டான். தனது சந்தேக வட்டத்திற்குள் அவள் இருப்பதாக அவன் காட்டிக் கொள்ளவில்லை.
அவள், “நல்லா போச்சு” என்றாள்.
“ஹ்ம்ம்.. என்ன இந்த பக்கம்?”
“டெய்லி இந்த நேரத்தில் ராஜமாதா...
“ஏன்?” என்று சிறு முறைப்புடன் கேட்டவள், “என்னோட அம்மா வச்ச பெயர்னு ஐயா சொன்னாங்க” என்றாள்.
“நான் தொட்டால் பூங்குழலை போல் குழைந்து விடுவாய் தான்” என்றபடி நாணத்துடன் நோக்கியவளின் கன்னத்தில் முத்தமிட்டவன், “ஆனால் நிஜத்தில் இந்த ராணி வீரமங்கை அல்லவா!” என்றான்.
“நீங்க புகழ்ற அளவுக்கு ஒண்ணும் நான் பெரிய வீர மங்கை இல்லை”
“ஆயுதம் ஏந்தியவர்களுடன்...
அத்தியாயம் 4
அடுத்த நாள் காலை உணவிற்காக அரச குடும்பத்தினர் அவர்களுக்கான உணவறையில் கூடி இருந்தனர். மகாராணி மட்டும் தலைவலி இருப்பதால் தனது அறையில் உணவை எடுத்துக் கொள்வதாக செய்தி அனுப்பி இருந்தார்.
பணிப்பெண் ஒருத்தி ராஜமாதா தட்டில் உணவை பரிமாறிவிட்டு மாறவர்மசிம்மன் தட்டில் பரிமாறினாள்.
தனது தட்டில் பரிமாறிய இடியாப்பத்தை பார்த்தவன், “சந்ராமா” என்று கத்தியிருந்தான்.
இளவரசனுக்கு பரிமாறப்...
அத்தியாயம் 6
ராஜமாதா அறையில் இருந்து வெளியே வந்த மீனாட்சியை பிடித்துக் கொண்ட சந்ரா தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.
அறையினுள் சென்று கதவை அடைத்து அவளது கையை பற்றிக் கொண்டு கலங்கிய கண்களுடனும் நெகிழ்ந்த குரலிலும், “ராஜாவை நல்ல பார்த்துக்கோங்க தாயி.. இனி இந்த கட்டை நிம்மதியா வேகும்” என்றவரின் பேச்சை இடையிட்டு,
“ஏன் இப்படி எல்லாம்...
அவளது விழிகளில் அலைப்புறுதலை கண்டவன் தைரியத்துடன் அவளை நெருங்க முயற்சிக்க, அவள், “அங்கேயே நில்லும்” என்றாள்.
“தேவி..” என்று ஆரம்பித்தவன் அவளது கண்கள் சிறிது ஆச்சரியத்தில் விரியவும், “என்ன?” என்றான்.
அவள் ‘ஒன்றுமில்லை’ என்பது போல் தலையை அசைக்க,
அவன், “நான் உன்னை மணக்க விரும்புகிறேன் தேவி.. நான் எழில்புரத்தின் ராஜா ரணசிம்மன்” என்றான்.
அவளது கண்கள் மேலும் விரிந்ததில்...
அத்தியாயம் 7
சந்ராவிடம் பேசிவிட்டு தனது அறைக்குச் சென்ற மீனாட்சி உடை மாற்றும் அறைக்கு சென்று பழைய கைபேசியை எடுத்து அந்த நபருக்கு குறுஞ்செய்தி அனுப்பினாள்.
“பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது” என்று இவள் அனுப்ப,
“ராஜமாதா?” என்ற பதில் வந்தது.
“எஸ்.. இன்னைக்கு என்னை கூப்பிட்டு அவங்க தான் என்னை இங்கே வர வச்சதா சொன்னாங்க”
“நீ தெரிந்த மாதிரி காட்டிக்கலை...
தீரன், “அவங்களோட கைப்பேசி பற்றிய அனைத்து தகவல்களையும் ரஞ்சித் அனுப்பிட்டார்.. IMEI எண் வைத்து சோதித்ததில் அவங்க ஸ்மார்ட் போனில் இது வரை ஒரே ஒரு சிம் மட்டும் தான் போட்டு இருக்கிறாங்க.. அது நம்மிடம் இருக்கும் எண் தான்.. இந்த எண்ணில் இருந்து சதேகப்படும் படி யாருக்கும் பேசவோ, குறுஞ்செய்தி அனுப்பவோ இல்லை.....
அவள் செல்ல முறைப்புடன், “உங்களுக்கு ஒரு சாக்கு” என்றாள்.
“உனக்காக தானே இளவட்டக்கல்லை தூக்கினேன்!”
“நான் தூக்க சொல்லலையே!”
“இளவட்டக்கல்லை தூக்கியதிற்கு பரிசு கிடையாதா?” என்று முகத்தை பாவம் போல் வைத்து அவன் கூற,
அவள், “இப்படி முகத்தை வைத்து ஏமாத்தாதீங்க” என்றாள்.
“நான் உன்னை ஏமாற்றுகிறேனா!” என்று அவன் ஒரு மாதிரி குரலில் வினவ,
அவள் பதற்றத்துடன், “நான் விளையாட்டா தானே...
அத்தியாயம் 8
ஒரு வாரம் கடந்த நிலையில், அன்று மாலை மீனாட்சி ராஜமாதாவிடம் அறிக்கை சமர்ப்பிக்க சென்ற பொழுது,
ராஜமாதா, “காரியம் முடிந்ததா?” என்று கேட்டார்.
அரை நொடி தடுமாறியவள், “இன்னும் இல்லை ராஜமாதா” என்றாள்.
அவர் கோபத்துடன், “இன்னுமா அவனை உன்னிடம் மதி மயங்கச் செய்ய முடியவில்லை!” என்றார்.
“ராஜா மனதை மாற்றுவது அவ்வளவு எளிது இல்லையே!”
அவர் முறைப்புடன், “நீயும்...
அத்தியாயம் 14
அடுத்த நாள் காலையில் தோட்டத்தில் தனது மெது ஓட்டத்தை ஆரம்பித்த மாறவர்மசிம்மன் புதிதாக தீரனும் சுதிரும் சட்டென்று கண்டு பிடிக்க முடியாத இடத்தில் நின்றபடி சுற்றுப்புறத்தை கண்காணித்துக் கொண்டிருப்பதை கண்டு தன்னுள் மென்னகைத்துக் கொண்டான்.
உறவுகள் விஷயத்தில் தன்னை வஞ்சித்த கடவுள் நட்பு மற்றும் விசுவாசிகள் விஷயத்தில் தன்னை ஆசிர்வதித்ததாக கருதினான்.
சட்டென்று தன்னவளிடம் பேசும்...
அத்தியாயம் 10
மாறவர்மசிம்மனின் வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த மீனாட்சி யோசனையில் ஆழ்ந்திருந்தாள். வண்டியின் முன்பக்கம் ஓட்டுனரும் தயாளனும் இருக்க, பின் பக்கம் மாறவர்மசிம்மனும் மீனாட்சியும் அமர்ந்து இருந்தனர்.
இன்று மீனாட்சியின் பெற்றோர் இறந்த தினம். அதனை முன்னிட்டு அநாதை ஆசிரமத்தில் மதிய உணவிற்கு தனது செலவில் ஏற்பாடு செய்யக் கேட்ட மீனாட்சி உணவை தனது கையால் பரிமாற...
அத்தியாயம் 13
சுவாமி தரிசனத்தை முடித்து விட்டு கோவிலின் வெளிப் பிரகாரத்தில் ஆள் அரவம் குறைவாக இருந்த இடத்தில் மாறவர்மசிம்மனும் மீனாட்சியும் அமர்ந்து இருந்தனர்.
அவள், “கோவில் அருமையா இருக்குது.. இந்த கோவிலோட வரலாறு பற்றி சொல்லுங்களேன்” என்றாள்.
“இந்த கோவில் பராக்கிரம பாண்டிய மன்னரால் கட்டப்பட்டது.. மன்னரோட கனவில் சிவபெருமான் தோன்றி, பாண்டியர்களின் முன்னோர்கள் வழிபட்ட லிங்கம்...
அத்தியாயம் 12
மாறவர்மசிம்மனின் “யார் நீ?” என்ற கேள்வியில் திடுக்கிட்ட மீனாட்சி அதை மறைத்தபடி வெளியே சாதாரண குரலில், “உங்களுக்குத் தெரியாதா?” என்று கேட்டாள்.
அவளது முகத்தையே உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தவன் அவளது நொடி நேர திடுக்கிடலை கண்டு கொண்டான்.
அவன், “தெரியவில்லையே! அதனால் தான் கேட்கிறேன்” என்றான் கூர்மையான பார்வையுடன்.
தன் முன் இருப்பது தனது காதலன் அல்ல,...
அத்தியாயம் 15
உச்சகட்ட அதிர்ச்சியில் இருந்த மீனாட்சி வாய் திறந்து பேச திணறுகையிலேயே மாறவர்மசிம்மன் இறுக்கமான முகபாவத்துடன், “ரோஜாவனம் வா” என்று கூறி வேகமாக நகர்ந்தான்.
சில அடிகள் நகர்ந்து இருந்தவன் திரும்பி நகராமல் நின்றிருந்தவளைப் பார்த்து, “மீனாட்சி” என்று அழைத்தான்.
அவள் திடுக்கிட்டு அவனை திரும்பிப் பார்க்க, “வா” என்றான்.
அவள் சாவி கொடுத்த பொம்மையை போல் அவன்...
அத்தியாயம் 9
அடுத்த அறைக்குச் சென்றதும் மீனாட்சி கண்களை விரித்தபடி, “வாவ்.. எவ்வளவு வித்யாசமான பொருட்கள்” என்றாள்.
அவளது முகத்தை உன்னிப்பாக பார்த்த மாறவர்மசிம்மன் அதில் உண்மையான உற்சாகம் தெரியவும் சகஜமானான்.
அந்த அறையில் ஒரு பக்கம் மண்ணில் செய்த பாத்திரங்கள் இருக்க, இன்னொரு பக்கம் அம்மி கல், ஆட்டுக்கல், உரல் என்று இருக்க, மற்றொரு பக்கம் பீங்கானால்...
அத்தியாயம் 11
மாறவர்மசிம்மனிடம் ஆயுதத்தை எதிர்பார்க்காதவர்கள் ஒரு நொடி அதிர்ந்தாலும் அவனை தாக்கத் தயாரானார்கள்.
மாறவர்மசிம்மனின் பிச்சுவா கத்தி சற்று வித்தியாசமானதாக இருக்கும். ஒரே பிடியில் இரு கத்திகளை கொண்டிருக்கும். இரு கத்திக்கும் இடையே இன்னொரு கத்தி நுழையும் அளவிற்கு இடைவெளி இருக்கும்.
வண்டியை விட்டு மாறவர்மசிம்மன் சற்று நகர்ந்ததும், முன் பக்கம் ஒருவனும் பின் பக்கம் ஒருவனும்...