நேசத்தின் நிழல் கறுப்பு
அத்தியாயம் – 16
அஜயும் கிருஷ்ணாவும் கமிஷனர் ஆபீஸ்க்கு கீழே காரைப் பார்க் செய்துவிட்டு படிகளில் உயர்ந்து அவரது அலுவலக அறைக்குள் நுழைந்தபோது கமிஷனர் ஜெயராமுக்கு எதிரே ஒரு இளைஞன் கலங்கிய கண்களோடு உட்கார்ந்திருந்தான். கையிலும், நெற்றியிலும் பெரிய பிளாஸ்டர் தெரிந்தது.
சல்யூட் வைத்தவர்களை வரவேற்று எதிரிலிருந்த காலியான இருக்கையைக் காட்ட இருவரும் அதில் நிறைந்தனர்.
“மிஸ்டர் அஜய்...!...
அத்தியாயம் – 13
ஆத்ரேயா எக்ஸ்போர்ட்ஸ் பி. லிமிடட் காலை நேர சுறுசுறுப்புடன் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருந்தது.
தனது அறையில் ஆளுயர நாற்காலியில் சாய்ந்து ஒரு பைலை மும்முரமாய் வாசித்துக் கொண்டிருந்த ஆத்ரேயன், “மே ஐ கமின் சார்...” என்ற குரலில் நிமிர்ந்தான்.
கண்ணாடிக் கதவுக்கு வெளியே பிரசன்னா நிற்பதைக் கண்டவன், “வாங்க பிரசன்னா...” என்றதோடு தானே நாற்காலியிலிருந்து...
அத்தியாயம் – 23
மாடியில் வெளியே தாளிடப்பட்ட கதவை வெகு நேரமாய் பாலாஜியும், தேன்மொழியும் தட்டிக் கொண்டிருந்தனர். மொபைல், போன் எதுவும் அங்கே இல்லாததால் டென்ஷனோடு அவர்கள் கத்திக் கொண்டிருக்க, கோபத்துடன் ஆராதனாவைத் தூக்கிக் கொண்டு கீழே வந்த காசியின் உள்ளம் வேதனையில் பொருமியது.
“ஐயோ ஆனந்திமா...! சொத்துக்காக அநியாயமா உன்னைக் கொலை பண்ணிருக்காங்களே... இந்த வீட்டுல...
அத்தியாயம் – 18
நேரம் நன்றாய் இருட்டத் தொடங்கியிருக்க மழை சோவென்று பெரும் இரைச்சலுடன் அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது. விஜயா ஹாஸ்பிடலில் மாலை நேர டியூட்டியில் இருந்த டாக்டர் பிரணவ் அறையில் சோகமாய் அமர்ந்திருந்தனர் அஜயும், கிருஷ்ணாவும்.
கையிலிருந்த ரிப்போர்ட்டிலிருந்து பார்வையை விலக்கிய பிரணவ் மூக்கின் மீது அமர்ந்திருந்த மெல்லிய கண்ணாடியைக் கழற்றிக் கொண்டே அவர்களை ஏறிட்டார்.
“டாக்டர்,...
அத்தியாயம் – 4
கைக்கு அடக்கமான சின்ன ரேடியோவில் ஜானகியின் குரல் சுகமாய் கசிந்து கொண்டிருக்க கண்ணை மூடி அமர்ந்து தலையை ஆட்டி ரசித்துக் கொண்டிருந்தாள் ஆனந்தி.
இதமான மாலையும், சுகமான பூந்தோட்டமும், சுகந்தம் தரும் ரோஜாக் கூட்டங்களுக்கும் நடுவே ஒரு ஸ்டூல் மீது காலை நீட்டி ரிலாக்சாய் அமர்ந்திருந்தாள்.
“அம்மா...” சமையல்காரப் பெண்மணி சாந்தா அவளது கையில்...
அத்தியாயம் – 24
“உண்மைதான், நீங்க சொல்லுற போல ஆத்ரேயன் கொஞ்சம் மனநிலை பாதிக்கப்பட்ட ஆள்தான்... அதுக்காக அந்தகன் பேருல நடந்த கொலையை எல்லாம் பண்ணினது ஆத்ரேயன்னு சொல்லுறது சரி இல்லையே...”
“மிஸ்டர் காசிநாதன்... இந்த கேஸ்ல முதன் முறை உங்களை விசாரிக்க வீட்டுக்கு வந்தபோதே உங்களை கவனிச்சோம்... ஒரு பதட்டம் இருந்துச்சு, அதோட நாங்க உங்க...
அத்தியாயம் – 15
காலை பதினொரு மணி.
மண் பாதையில் பத்து நிமிஷ குலுங்கலான பயணத்திற்குப் பிறகு தென்னந்தோப்புகள் அடர்த்தியாய் வர தோப்பின் உள்ளே கார் நுழைந்தது. மரங்களுக்கு நடுவே பிரம்மாண்டமாய் இருந்தது முன்னாள் அமைச்சர் சக்கரபாணியின் பங்களா. அவுட்டரில் பெரிதாய் இடத்தை வளைத்துப் போட்டு, இரு பக்கமும் தென்னையும், வாழையும் செழித்து வளர்ந்திருக்க முன்னில் அழகான...
அத்தியாயம் – 10
சூரியன் கடமை முடித்து மேற்கு நோக்கி விரைந்து கொண்டிருந்தான். கிருஷ்ணாவுக்காய் காத்திருந்த அஜய் அவரைக் கண்டதும் நிமிர்ந்தான்.
“என்ன கிருஷ்ணா..! பிஎம் ரிப்போர்ட் வாங்கப் போறேன்னு சொல்லிட்டு இவ்ளோ லேட்டா வர்றீங்க...?”
“ஸாரி...! டாக்டர்ஸ்கிட்ட இருந்து ரிப்போர்ட் வாங்க கொஞ்சம் லேட்டாகிடுச்சு... ஏதோ அரசியல்வாதி ஒருத்தர் தற்கொலை பண்ணிகிட்டாராம்... ஹாஸ்பிடல் முன்னாடி அவரோட தொண்டர்கள்...
அத்தியாயம் – 7
வாஷ்பேஷின் கண்ணாடி முன் நின்று தாடையில் மின்சாரக் கத்தியை ஓடவிட்டுக் கொண்டிருந்தான் அஜய். ஹாலில் துவைத்த துணியை மடக்கி வைத்துக் கொண்டே முணுமுணுத்துக் கொண்டிருந்த அர்ச்சனாவின் குரல் கேட்க, புன்னகைத்துக் கொண்டான்.
“டெல்லியாம், டூராம்... இனி எங்காச்சும் டூர் போகலாம் கிளம்புன்னு சொல்லிட்டு வாங்க, அப்புறம் இருக்கு உங்களுக்கு... எவ்ளோ ஆசையா கிளம்பி...
அத்தியாயம் – 19
நேசிகாவின் வீட்டுக்கு செல்வதற்காய் தயாராகிக் கொண்டிருந்த யுவராஜ் கேட்டுக்கு வெளியே வண்டியின் ஹாரன் கேட்கவும் எட்டிப் பார்த்தான். இன்னோவாவில் இருந்து அஜய், கிருஷ்ணா இருவரும் இறங்குவதைக் கண்டவன் திகைப்புடன் கேட்டுக்கு சென்றான்.
“வாங்க சார், நீங்க இங்க...” யுவராஜ் கேள்வியுடன் அவர்களை நோக்க புன்னகைத்தான் அஜய்.
“ஏன், உங்க வீட்டுக்கு நாங்க வரக் கூடாதா...?”...
அத்தியாயம் – 1
அதிகாலை கிழக்குத் திசையில் சூரியனைப் பிரசவிக்கத் தயாராகிக் கொண்டிருக்க வானெங்கும் காலைப் பட்சிகளின் வரவேற்புக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
பூஜையறையில் மணமணக்கும் ஊதுபத்தி, சாம்பிராணி மணங்களுக்கு நடுவே தீபத்தை ஏற்றி வைத்து கை கூப்பி அமர்ந்திருந்தாள் ரேவதி. பதினாறு வயதுப் பெண்ணுக்கு அன்னையாக இருந்தாலும் அழகாய் இளமையாய் இருந்தாள்.
இயல்பாய் சிவந்திருந்த மெலிந்த இதழ்கள்...
அத்தியாயம் – 6
மதிய உணவு முடிந்து சாய்வு நாற்காலியில் ஒரு புத்தகத்துடன் சாய்ந்திருந்த ஆனந்தி அருகில் இருந்த தொலைபேசி சிணுங்கவே எழுந்து எடுத்தாள்.
“ஹலோ...”
“ஆனந்தி, எப்படி இருக்க...” கணவனின் குரலைக் கேட்டதும் அதுவரை இருந்த சுணக்கம் ஓடிப் போக சிணுங்கினாள்.
“இப்பதான் என் நியாபகம் வந்துச்சா உங்களுக்கு...?”
“என்னமா பண்ணறது, இங்கே ரெண்டு மூணு நாளா விடாம மழை......
அத்தியாயம் – 8
மேஜை வலிப்பிலிருந்து ஆனந்தி என்ன எடுக்கப் போகிறாள் எனத் திகிலோடு பார்த்து நின்ற பாலாஜியின் கண்கள் அவள் கையிலிருந்த கவரைக் கண்டதும் ஆச்சர்யமானது.
“அது என்ன கவர் ஆனந்தி...”
“சொல்லறேன், உங்களுக்காக என்னோட சின்ன கிப்ட்... பிரிச்சுப் பாருங்க...” சொன்னவள் நீட்டிய கவரை வாங்கி பிரித்துப் பார்த்தவன் இன்பமாய் அதிர்ந்தான்.
“உங்க பேருல ஒரு பெரிய...
“அந்தகன் கொஞ்ச நாள் முன்னாடி எனக்கு பேஸ்புக்ல அறிமுகம் ஆனான்... பேரு வித்தியாசமா இருக்கேன்னு பேசத் தொடங்கினேன்... நல்லா அன்பா, அக்கறையாப் பேசுவான், பொதுவான விஷயங்களை பேசிப்போம்... என் பர்த்டே முடிஞ்சு அடுத்தநாள் வீட்டுல கிடந்த பிளாக் பெயின்ட் டெட்பாடி பத்தி சொன்னேன்... யாரு கொன்னதுன்னு தெரியலை, நேசத்தின் நிழல் கறுப்பு by அந்தகன்னு...
அத்தியாயம் – 3
முழுமையாய் இருள் விலகியிராத காலை நேரத்தில் வாசல் கூட்டுவதற்காய் வெளியே வந்த ரேவதி முன்னில் வேஸ்ட் போட வைத்திருந்த பெரிய பாலித்தீன் கவரிலிருந்து வந்த துர்நாற்றத்தில் அதை ஒரு குச்சியால் இளக்கிப் பார்க்க, குப்பென்று வீசிய ரத்தத்தின் துர்வாடையில் அதிர்ந்து, “ஐயோ...” என அலறிக் கொண்டே வீட்டுக்குள் ஓடினாள்.
அப்போதுதான் எழுந்திருந்த பிரசன்னா...
அத்தியாயம் – 12
“என்ன சார், போன் போகலையா...” அஜய் இதயாவுக்கு போன் பண்ணுவதைப் பார்த்துக் கொண்டிருந்த அருணகிரி வேகமாய் அருகில் வந்து கேட்டார்.
“போன் சுவிட்ச் ஆப் ஆயிருக்கு... ஐ திங்க் இதயா ஈஸ் மிஸ்ஸிங்...” என்றவன், “கிருஷ்ணா, இதயாவோட நம்பர் லாஸ்ட்டா எந்த ஏரியால சுவிட்ச் ஆப் ஆயிருக்குன்னு பாருங்க, குயிக்...” என்றதும் அவர்...
அத்தியாயம் – 20
நெட் ஒன் கபே, அடையார்.
மாடியில் இருந்த பெயர்ப்பலகையை வாசிக்கும்போதே கோகுல் எதிர்ப்பட்டு அஜய், கிருஷ்ணாவை வரவேற்றான்.
“சார்... உள்ள வாங்க, உங்களுக்கு தான் வெயிட்டிங்...” எனவும் இருவரும் அந்த கபேக்குள் நுழைந்தனர்.
மாடியில் உள்ள புளோர் முழுதும் சின்ன சின்ன காபின்களாய் பிரிக்கப்பட்டு பாதி அலுமினிய சுவராலும் மேலே பாதி கண்ணாடி சுவராலும் தடுக்கப்பட்டிருந்தது.
ஒவ்வொரு...
அத்தியாயம் – 22
ஆத்ரேயன் சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியுடன் நோக்கிய டாக்டர், “கடவுளே, அப்படி எதுவும் நீங்க அட்டம்ப்ட் செய்யலை தானே...?” என பதட்டமாய் கேட்க அவன் கவலையுடன் கூறினான்.
“டோன்ட் வொர்ரி டாக்டர், செய்யலை... பட், எதுவும் செய்துடுவனோன்னு பதட்டமா இருக்கு... கொஞ்ச நாளைக்கு இந்த பிஸினஸ், ஆபீஸ் எல்லாம் மூட்டை கட்டி வச்சிட்டு எங்காச்சும்...
அத்தியாயம் – 17
“ஆத்ரேயா எக்ஸ்போர்ட்ஸ்னா சொன்னிங்க...?” அஜய் மீண்டும் அழுத்திக் கேட்க தலையாட்டினான் யுவராஜ்.
“ஆமா சார், அங்க தான் நேசிகாவோட அப்பா கேசவன் வொர்க் பண்ணறார்... அம்மா மேகலை ஒரு பிரைவேட் ஸ்கூல்ல டீச்சரா இருந்தாங்க, இப்ப நேசிகா படிச்சு முடிச்சு வேலைக்கு டிரை பண்ணவும் ஜாப் ரிஸைன் பண்ணிட்டு வீட்டுல இருக்காங்க...”
“ம்ம்...” ஜீ...
அத்தியாயம் – 11
“வாவ்... இன்னைக்கு தான் புருஷனா அழகா, பொண்டாட்டி சொன்னதை மறக்காம வாங்கிட்டு வந்திருக்கிங்க...” அஜய் நீட்டிய கவரில் இருந்த புத்தகங்களைப் பார்த்த அர்ச்சனா சந்தோஷத்துடன் அவன் எதிர்பாரா நேரத்தில் கன்னத்தில் இதழைப் பதிக்க ஆச்சர்யமானான் அஜய்.
“ஆஹா, இப்படி கிடைக்கும்னா தினமும் மறக்காம கிரைம் நாவல் வாங்கிட்டு வந்திருப்பனே...” எனவும் சிரித்தாள்.
“சரி, சாப்பிட...