Chinna Chinna Aasai
முதல் முறையாக சந்தோஷமாக ஒரு செல்பி எடுத்தாள்.
எடுத்ததும் அதை யாருக்கு அனுப்புவது என்று யோசனை கூட வரவில்லை.
உடனே லாவண்யாவிற்கும் ராம்குமாருக்கும் ஒரு குட் மார்னிங் மெசேஜோடு வாட்சப்பில் அனுப்பியவளுக்கு அப்போது மணி ஐந்து என்பது கூட தோன்றவில்லை.
ராம்குமாரிடம் ‘குரு! நீங்க சொன்னது அத்தனையும் நிஜம்’ என்று சொல்ல வேண்டும் போல...
அத்தியாயம் -5
ஷாப்பிங் செய்த அசதியில் வந்த உடனே படுத்துத் தூங்கிய வஞ்சுவிற்கு விடிகாலையிலேயே விழிப்பு வந்தது. புரண்டு புரண்டு படுத்தவளுக்கு மீண்டும் தூக்கம் வரவில்லை.
ராம்குமார் பற்றிய எண்ணங்கள் ஒரு புறம். அவள் வாங்கிய உடைகள் எப்படி பொருந்துமோ என்ற பரபரப்பு ஒரு புறமாக தூங்க முடியவில்லை.
எப்போதுமே அவள் அப்படித்தான். தீபாவளிக்கு அல்லது...
அவன் சொன்னால் வஞ்சு ஸ்விம் சூட்டில் கூட போவாள் என்பது அவனுக்கு தெரியாதே.
இருந்தாலும் அக்கறை அவனை உந்த ஒரு தயக்கத்தோடு ஆரம்பித்தான்.
“வஞ்சு! கண்டிப்பா இந்த மாதிரி அவுட்டிங் போனா தான் உன் பர்சனாலிட்டி டிவலப் ஆகும். ஆனா....” என்று இழுத்தவன் “உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும். எப்படி ஆரம்பிக்கனு தெரியல?” என்று முடிவை...
அத்தியாயம் -4
ராம்குமாரும் அவளும் ஒரே தளத்தில் தான் வேலை செய்வதால் இருவரும் தினமும் சந்தித்துக் கொண்டனர்.
ராம்குமார் சொன்னதற்காகவே அவன் தினமும் ரஞ்சித் மற்ற நண்பர்களை சந்திக்கப் போகும்போது கூடவே இவளும் போனாள்.
தானாக பேசவில்லை என்றாலும் கேட்ட கேள்விக்கு பதில் சொல்வாள். மீதி நேரம் அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பாள்.
அன்றாடம் வரும்...
அத்தியாயம்-3
ராம்குமாருக்கு அழைப்பு வந்தும் வஞ்சுவின் கவனம் அதில் இல்லை.
தனிமையிலும் தன் உடன் பணிபுரிபவர்களின் குத்தலான பேச்சிலும் மனதளவில் மிகவும் சோர்ந்து போய் இருந்தவளுக்கு அவன் வந்ததே யானை பலம் தர தான் இன்னும் அவன் கையைப் பிடித்து கொண்டு இருப்பதில் அவளுக்கு தவறாக எதுவும் தெரியவில்லை.
என்னவோ அந்த கையைப் பிடித்துக் கொண்டதில் ஒரு...
அவள் நேரம் கடைசி நிமிடத்தில் ப்ரொஜெக்டர் வேலை செய்யாமல் போக
“இப்ப நீ என்ன செய்வியோ தெரியாது? ப்ரொஜெக்டர் மட்டும் கொண்டு வரல? அவ்வளவு தான். மேம் இப்ப வர நேரம். அவங்க ரொம்ப கோபப்படற டைப். நீ தொலைஞ்ச. நாங்க நீ தான் காரணம்னு சொல்லிடுவோம்.”
என்று பாலாஜி அவளை மிரட்ட அவன் சொன்னதெல்லாம் உண்மை...
அத்தியாயம் -2
அன்று சில நிமிடங்கள் தான் பார்த்தாலும் இன்னும் அவளை நினைவிருப்பதே ராம்குமாருக்கு ஆச்சரியமாக இருந்தது.
கல்லூரியில் இவளை விட எத்தனையோ அழகிகளை அவன் பார்த்திருக்கிறான். சிலரை ரசித்தும் இருக்கிறான்.
கல்யாணம் மட்டும் அம்மா அப்பா சொல்படி தான் என்ற முடிவில் இருந்ததால் இதெல்லாம் காலேஜ் லைப்ல சகஜமப்பா என்று...
இன்னொருவன் “என்ன மச்சி மாட்டர்? ஓவரா நோட் பண்ணா மாதிரி தெரியுது? ரூட் விடறியா?” என்று ரஞ்சித்தை ஓட்ட ரஞ்சித் கையை தூக்கி விட்டான்.
“டேய்! அதை பாத்தா என் குட்டி தங்கச்சி மாதிரி தெரியுது. கூட்டி போய் குச்சி மிட்டாய் வாங்கித் தரனும் போல தோணுதே தவிர சைட் எல்லாம் அடிக்க முடியாது டா!...
சின்ன சின்ன ஆசை…!
அத்தியாயம் -1
பெங்களூரு மாநகரத்தில் அது ஒரு மிகப் பெரிய ஐடி நிறுவனம். கம்பெனி வளாகத்தில் அங்கங்கே பல அடுக்கு மாடி கட்டிடங்கள். ஒவ்வொன்றிலும் பல தளங்கள்.
அனைவரும் ஒரே நிறுவனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எல்லோரையும் எல்லோருக்கும் தெரிய வாய்ப்பு இல்லாத அளவிற்கு பிரம்மாண்டமான நிறுவனம்.
ராம் குமார் தன் கேபின் இருந்த...