Wednesday, June 18, 2025

    மறந்து போ என் மனமே

    “நீ பழகிட்டு இருக்கப் பெண்ணைப் பத்தி ஆளுங்களை விட்டு விசாரிக்கச் சொன்னேன். ஒழுக்கமா இல்லைன்னுதான் ஆவ புருஷன் விவாகரத்து பண்ணி இருக்கான். திருந்தாதுன்னு சொல்லித்தான் பெத்தவங்களும் கூடப் பிறந்தவங்களும் வெளிய தொரத்தி விட்டுடாங்க.” என்றதும், இளமாறனுக்கு அதிர்ச்சிதான். இதற்கு முன் அவளுக்குத் திருமணம் ஆனதை சுந்தரி அவனிடம் சொல்லி இருக்கவில்லை. அதோடு அவனிடம் தம்பியின்...
    அத்தியாயம் 6  மறுநாள் விடிந்ததில் இருந்தே போராட்டம் தான். மகள்கள் இருவரும் முன்தினம் போல அம்மா எங்கேயும் சொல்லாமல் சென்று விடுவாளோ என்ற அச்சத்தில், பள்ளிக்கு செல்ல மாட்டோம் எனப் பிடிவாதம் பிடித்தனர். அது கூடப் பரவாயில்லை... இருவரும் ஒரே அழுகை.  வெண்மதியை ஓய்வறைக்குச் செல்ல கூட அவர்கள் விடவில்லை. அவள் பாத்ரூம் சென்றாலும், வாசலிலேயே காவல்...
    அத்தியாயம் 5  வசந்தாவும் பயந்து போய்த் தன் மகள்களுக்கு அழைத்துச் சொல்ல.. ரஞ்சிதாவின் குடும்பம் இன்னும் மணிமேகலையின் வீட்டில் தான் இருந்தது. அதனால் அக்காவும் தங்கையும் கிளம்ப.... அவர்கள் அவசரமாகக் கிளம்புவதைப் பார்த்த அவர்கள் கணவர்மார்கள் சந்தேகப்பட்டுக் கேட்க,  “வெண்மதியை காலையில இருந்து காணோமாம்.” என்றவுடன்,  “அடிப்பாவீங்களா... நேத்து நீங்க எல்லாம் சேர்ந்து செஞ்ச வேலைதான். அந்தப் பொண்ணு...
    “உங்க அம்மா அவங்களுக்கும் மேல இன்னைக்கு அவளுக்கு என்ன உபச்சாரம் செய்தாங்க தெரியுமா? நான் அவங்களுக்கு என்ன குறை வச்சேன்? வேலைக்கு வக்கனையா தான வடிச்சு கொட்டினேன்.” “என் வாழ்க்கையைப் பறிச்சு இன்னொருத்திக்கு கொடுப்பாங்களா?” “நான் அவங்களைக் கண்டிச்சு வைக்கிறேன். சத்தியமா எனக்குச் சுந்தரி அங்க வருவான்னு தெரியாது. இனிமே அவளுக்கும் எனக்கும் ஒன்னும் இல்லைன்னு சொல்லிட்டேன்....
    மறந்து போ என் மனமே  அத்தியாயம் 3  கோபித்துக் கொண்டு போன வெண்மதி போன வேகத்தில் திரும்பிவிட... அவள் புகுந்த வீட்டினருக்கு இளக்காரமாகத் தெரிந்தது. “பெரிசா கோவிச்சிக்கிட்டு போனா... அவ அக்கா ரெண்டு நாள்ல விரட்டி விட்டுட்டா.” என வசந்தா மகள்களிடம் சொல்லிக் கொண்டு இருந்தார். வெண்மதி ஊரில் இருந்து வந்து சில நாட்கள் பிரச்சனையை ஆறப்...
    தான் கணவனைச் சரியாகக் கவனிக்காமல் விட்டுவிட்டோமோ என்ற எண்ணம் அவளுக்கே இருந்தது. குழந்தை பிறந்து விட்டால் பெண்கள் தங்களைப் பற்றியே யோசிக்க மாட்டார்கள். அவளும் அப்படித்தான், குழந்தைகள் மாமனார் மாமியாரை கவனிப்பது என்றே இருந்துவிட்டாள்.  எல்லாம் சரியாகிவிட்டது கணவன் தன் அன்பிற்குக் கட்டுபட்டுவிட்டான் என்ற மனக்கோட்டையில் இருந்தவளுக்கு, மீண்டும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது.  அன்று வெண்மதிவின் தோழி...
    மறந்து போ என் மனமே அத்தியாயம் 2 வெண்மதியின் அம்மா சில மாதங்களுக்கு முன்பு திடிரென்று தவறிவிட... மூத்த மகள் கஜலக்ஷ்மியை மாமியார் பொறுப்பில் விட்டுவிட்டு சில நாட்கள் அவள் அங்கே பிறந்த வீட்டிலேயே தங்கி, அவள் அப்பாவை பார்த்துக் கொண்டாள்.  இவள் இருப்பது திருவெற்றியூர் அவள் அம்மா வீடோ தாம்பரத்தில்.... தினமும் போய் வரும்...
    மறந்து போ என் மனமே  அத்தியாயம் 1 வெண்மதிக்கு அதிகாலை ஐந்து மணிக்கே விழுப்பு வர.... முதலில் உணர்ந்தது, நேற்று இருந்த தலைவலி இப்போது இல்லை என்பதைத்தான். அது பெரிய ஆறுதலைக் கொடுக்க... இப்போதாவது வேலையைப் பார்ப்போம் என அப்போதே எழுந்து கொண்டாள்.  ஓய்வறைக்குச் சென்று விட்டு நீர் வடியும் முகத்தோடு வெளியே வந்தவள், முகத்தைத் துடைத்துக்...
    error: Content is protected !!