Thamaraiyaal Kaelvan
அத்தியாயம் 12
"பத்து வருஷம் முன்னாடி நான் காலேஜ் படிச்சி முடிக்கிற நேரம் வந்த மாப்பிள்ளை தான் பிரதாபன். அவர் ஒரு சாஃப்ட்வேர் பிசினஸ் செஞ்சிட்டு இருந்தாரு. அந்தச் சாஃப்ட்வேரைப் பத்தி புரோமோட் செய்றதுக்காக எங்க காலேஜூக்கு வந்தப்ப என்னைப் பார்த்துப் பிடிச்சி போய், என்கிட்ட புரபோஸ் செஞ்சாரு" என்றவள் சொன்னதும்,
"உன்னோடதும் என்னை மாதிரி லவ்...
அத்தியாயம் 11
"சோலைவனத்துக்குள்ள டூரிஸ்ட் இடம் என்னலாம் இருக்கு அண்ணா" என்று ஓட்டுனரிடம் கேட்டாள் தாமரை.
"இங்க அருவியும் கோவிலும் தான் இருக்கு மேடம். பெரிசா சுத்திப் பார்க்கிற மாதிரி எதுவும் இல்ல. இங்கே எப்பவுமே சிலுசிலுனு இருக்கக் கிளைமேட்னால சுற்றிலும் காடுகரைனு பார்க்க பிரியப்படுறவங்க தான் பெரும்பாலும் வருவாங்க" என்றார் அவர்.
"ஓ சரிண்ணா. கண்ணா நீங்க...
அத்தியாயம் 10
ஆத்மநல்லூர் மாதவப்பெருமாள் கோவிலிற்குச் சென்றிருந்தாள் தாமரை.
அங்குக் கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் நடந்தவாறு இருக்க, அக்கோவிலின் உள்ளே இருந்த அலுவலக அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்வையிட்டிருந்தாள்.
எந்தெந்த கோவில்கள் எல்லாம் அவளின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன என்ற பட்டியலை அந்தக் கோப்பினுள் வாசித்தவாறு வந்தவள், அதிலிருந்த பிரகலாதப் பெருமாள் கோவில் என்ற பெயரைப் பார்த்ததும், 'இது சோலைவனத்துல...
அத்தியாயம் 9
அந்த விடுதியின் அறையினுள்ளே சென்றவன் பொத்தெனக் கட்டிலில் விழுந்தவனாய், "ம்ப்ச் தாமரை கூடவே இருக்கலாம்னு நினைச்சா இப்படி ஆகிப் போச்சே" என்று வாய்விட்டே புலம்பியவாறு படுத்திருக்க,
அதே நேரம் அங்கே தான் தங்க வேண்டிய அரசுக்குடியிருப்பின் வீட்டிற்குள் சென்றவளாய் தனது பணியினில் சேருவதற்கு அவசரம் அவசரமாகக் குளித்து விட்டு, கிளம்பிக் கொண்டிருந்தாள் தாமரை.
அச்சமயம் அவளின்...
அத்தியாயம் 8
ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலையைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள்.
கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த மீசையுமாய்த் திடகாத்திரமான ஆண்மகன் அவன் தனது மடியினுள் புதைந்து போவதைப் போல் இடையிறுக்கிய அணைப்புடன் உறங்கிக் கொண்டிருப்பதை எப்பொழுதும் போல்...
அத்தியாயம் 7
"நிஜமாவே ஆத்மநல்லூர்னு ஒரு ஊரு இருக்கா?" என்று மாதவன் அதிர்ச்சியுடன் கேட்டதும், ஆமெனத் தலையசைத்தாள் தாமரை.
"அந்த ஊருக்கு நீங்க டிரான்ஸ்ஃபர் ஆகிப் போகப் போறீங்கனு உங்களுக்கு முன்னாடியே தெரியுமா தாமரை?" என்றவன் கேட்டதற்கும் ஆமென அவள் தலையசைக்க,
"அப்புறமும் உங்களுக்கு எப்படி அந்தச் சாமியார் பேச்சுல நம்பிக்கை இல்லாம போச்சு. அப்படி ஒரு ஊரு...
அத்தியாயம் 6
"நீங்க தான் அந்தச் சாமியாருக்கு காசு கொடுத்து அப்படிப் பேச வச்சீங்களா?" எனத் தாமரை கேட்டதும் வாய்விட்டுச் சிரித்திருந்தான் மாதவன்.
"ஏங்க என் மேல கொஞ்சம் கூட நல்ல அபிப்ராயமே இல்லையா உங்களுக்கு" எனக் கேட்டான்.
"ரொம்ப நாள் பழகினவங்களையே இந்தக் காலத்துல நம்ப முடியலை. உங்களை ரெண்டு மூனு நாளாகத் தானே எனக்குத் தெரியும்....
அத்தியாயம் 5
கொடிமரத்தினருகே ஒருவன், தன்னைச் சுற்றி நின்றிருந்த கோவில் பணியாளர்களிடமும் நிர்வாகியிடமும் சத்தமாய்ப் பேசிக் கொண்டிருப்பது காதில் விழ, அவனின் முதுகை வெறித்தவளாய் அருகே சென்றாள் தாமரை.
அவளைக் கண்டதும், "வாங்க மேடம்" என்று இத்தனை நேரமாய்த் தன்னிடம் அநாகரிகமாகச் சண்டையிட்டிருந்த கோவில் பணியாளர்கள் சற்று பயத்துடன் அமைதியாகப் பேசுவதைக் கண்டு, யாரது என்று திரும்பிப்...
அத்தியாயம் 4
எப்படியேனும் அவன் புகைப் பிடித்தான் என்று நிரூபித்து விட வேண்டுமென்ற அவசரத்தில் உள்ளே நுழைந்தவள் மெல்லிய கோடாய் அகர்பத்தியின் புகை அந்த வீட்டின் ஜன்னலின் வழியே வெளியே செல்வதைக் கண்டு வாயடைத்து நின்றாள்.
'அய்யய்யோ நாம தான் தப்பா நினைச்சிட்டோமா?' என்று நினைத்தவளாய் கெஞ்சும் கண்களுடன் அவனைப் பார்க்க, அவளைப் பொசுக்கும் கோபத்துடன் நெருப்பாய்ப்...
அத்தியாயம் 3
தியானம் செய்து தன்னைச் சமன் செய்தவளாய் தனது வீட்டிற்குச் சென்ற தாமரை அன்னையிடம் பேசி சமாதானம் செய்தாள். பின்பு இருவருமாகச் சேர்ந்து உண்டுவிட்டு ஓய்வெடுத்தனர்.
ஆத்மநல்லூரைப் பற்றி விமலா கூறியதிலிருந்து அந்தக் கோவிலைப் பற்றியும் ஊரைப் பற்றியும் அங்குச் செல்வதற்கு முன்பு விசாரித்துத் தெரிந்து கொள்ள வேண்டுமென எண்ணியிருந்தாள் தாமரை. அதன் பொருட்டு அன்று...
அத்தியாயம் 2
"ஏன்மா ஆத்மநல்லூர்னு சொன்னதும் ஷாக் ஆகுற?" எனக் கேட்டாள் தாமரை.
அச்சமயம் வீட்டின் வாசல் கதவைத் தட்டும் ஓசைக் கேட்டு மகளிடம் தேநீர் அளித்தவராய் சமையலறையில் இருந்து எட்டிப் பார்த்தார் விமலா.
வாசலில் நின்றிருந்தவனைக் கண்டு, "வாங்க தம்பி. உள்ளே வாங்க" என அழைத்தார்.
"பரவாயில்லங்கமா" என்றவனாய், "மேலே திங்க்ஸ்லாம் அரேஞ்ச் செஞ்சிட்டேன். இன்னிக்கு நைட் வெளில...
அத்தியாயம் 1
நாராயண மந்திரம் – அதுவே நாளும் பேரின்பம்
பிறவியில் வந்த பந்தங்கள் தீர்த்து
பரமன் அருள் தரும் சாதனம்.
உடலினை வருத்தி மூச்சினை அடக்கும்
தவத்தால் பயனில்லை!
உயிர்களை வதைத்து ஓமங்கள் வளர்க்கும்
யாகங்கள் தேவையில்லை!
மா தவா மது சூதனா என்ற மனதில் துயரமில்லை
ஆதியும் அந்தமும் = நாராயணனே
அன்னையும் தந்தையும் = நாராயணனே
பக்தியும் முக்தியும் = நாராயணனே
பகலும் இரவும் = நாராயணனே
பிறவியில்...