Friday, July 17, 2026

    Thamaraiyaal Kaelvan

    Thamaraiyaal Kaelvan 10

    0
    அத்தியாயம் 10 ஆத்மநல்லூர் மாதவப்பெருமாள் கோவிலிற்குச் சென்றிருந்தாள் தாமரை. அங்குக் கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்வுகள் நடந்தவாறு இருக்க, அக்கோவிலின் உள்ளே இருந்த அலுவலக அறையில் அமர்ந்து கோப்புகளைப் பார்வையிட்டிருந்தாள். எந்தெந்த கோவில்கள் எல்லாம் அவளின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன என்ற பட்டியலை அந்தக் கோப்பினுள் வாசித்தவாறு வந்தவள், அதிலிருந்த பிரகலாதப் பெருமாள் கோவில் என்ற பெயரைப் பார்த்ததும், 'இது சோலைவனத்துல...

    Thamaraiyaal Kaelvan 5

    0
    அத்தியாயம் 5 கொடிமரத்தினருகே ஒருவன், தன்னைச் சுற்றி நின்றிருந்த கோவில் பணியாளர்களிடமும் நிர்வாகியிடமும் சத்தமாய்ப் பேசிக் கொண்டிருப்பது காதில் விழ, அவனின் முதுகை வெறித்தவளாய் அருகே சென்றாள் தாமரை. அவளைக் கண்டதும், "வாங்க மேடம்" என்று இத்தனை நேரமாய்த் தன்னிடம் அநாகரிகமாகச் சண்டையிட்டிருந்த கோவில் பணியாளர்கள் சற்று பயத்துடன் அமைதியாகப் பேசுவதைக் கண்டு, யாரது என்று திரும்பிப்...

    Thamaraiyaal Kaelvan 12

    0
    அத்தியாயம் 12 "பத்து வருஷம் முன்னாடி நான் காலேஜ் படிச்சி முடிக்கிற நேரம் வந்த மாப்பிள்ளை தான் பிரதாபன். அவர் ஒரு சாஃப்ட்வேர் பிசினஸ் செஞ்சிட்டு இருந்தாரு. அந்தச் சாஃப்ட்வேரைப் பத்தி புரோமோட் செய்றதுக்காக எங்க காலேஜூக்கு வந்தப்ப என்னைப் பார்த்துப் பிடிச்சி போய், என்கிட்ட புரபோஸ் செஞ்சாரு" என்றவள் சொன்னதும், "உன்னோடதும் என்னை மாதிரி லவ்...

    Thamaraiyaal Kaelvan 13

    0
    அத்தியாயம் 13 "அடுத்து எங்கே போகனும் தாமரை? ஏதோ பெருமாள் கோவில் சொன்னீயே! அங்கேயா?" எனக் கேட்டான் மாதவன். கையில் இருந்த கோப்பை வாசித்தவளாய் பயணித்திருந்தவள் அவன் கேட்ட கேள்விக்கு ஆமெனத் தலையசைத்துப் பின் நிமிர்ந்து பார்த்து, "இங்கே ஏதோ அய்யனார் கோவில் இருக்குனு செந்தாமரை அம்மா சொன்னாங்களே! சக்தி வாய்ந்த அய்யனாருனு சொல்லி அவருக்கிட்ட வேண்டிக்கிட்டு...

    Thamaraiyaal Kaelvan 4

    0
    அத்தியாயம் 4 எப்படியேனும் அவன் புகைப் பிடித்தான் என்று நிரூபித்து விட வேண்டுமென்ற அவசரத்தில் உள்ளே நுழைந்தவள் மெல்லிய கோடாய் அகர்பத்தியின் புகை அந்த வீட்டின் ஜன்னலின் வழியே வெளியே செல்வதைக் கண்டு வாயடைத்து நின்றாள். 'அய்யய்யோ நாம தான் தப்பா நினைச்சிட்டோமா?' என்று நினைத்தவளாய் கெஞ்சும் கண்களுடன் அவனைப் பார்க்க, அவளைப் பொசுக்கும் கோபத்துடன் நெருப்பாய்ப்...

    Thamaraiyaal Kaelvan 11

    0
    அத்தியாயம் 11 "சோலைவனத்துக்குள்ள டூரிஸ்ட் இடம் என்னலாம் இருக்கு அண்ணா" என்று ஓட்டுனரிடம் கேட்டாள் தாமரை. "இங்க அருவியும் கோவிலும் தான் இருக்கு மேடம். பெரிசா சுத்திப் பார்க்கிற மாதிரி எதுவும் இல்ல. இங்கே எப்பவுமே சிலுசிலுனு இருக்கக் கிளைமேட்னால சுற்றிலும் காடுகரைனு பார்க்க பிரியப்படுறவங்க தான் பெரும்பாலும் வருவாங்க" என்றார் அவர்‌. "ஓ சரிண்ணா. கண்ணா நீங்க...

    Thamaraiyaal Kaelvan 8

    0
    அத்தியாயம் 8 ஓங்கி உயர்ந்த மலையின் அடர்வனத்திற்குள் மகிழ மரத்தினடியில் தனது மடியில் கண்களை மூடியவாறு தலையைச்சாய்த்துப் படுத்திருப்பவனை இமைக்காதுப் பார்த்திருந்தாள் அவள். கருத்த தேகமும் நிமிர்ந்த தோளும் விரிந்த மார்பும் களையான முகத்தில் அடர்ந்த மீசையுமாய்த் திடகாத்திரமான ஆண்மகன் அவன் தனது மடியினுள் புதைந்து போவதைப் போல் இடையிறுக்கிய அணைப்புடன் உறங்கிக் கொண்டிருப்பதை எப்பொழுதும் போல்...

    Thamaraiyaal Kaelvan 17

    0
    அத்தியாயம் 17 "சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் ஏகாதசி. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி தான் ஏகாதசி. இது விஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய மிக முக்கியமான நாள். இது மிக முக்கிய...

    Thamaraiyaal Kaelvan 6

    0
    அத்தியாயம் 6 "நீங்க தான் அந்தச் சாமியாருக்கு காசு கொடுத்து அப்படிப் பேச வச்சீங்களா?" எனத் தாமரை கேட்டதும் வாய்விட்டுச் சிரித்திருந்தான் மாதவன். "ஏங்க என் மேல கொஞ்சம் கூட நல்ல அபிப்ராயமே இல்லையா உங்களுக்கு" எனக் கேட்டான். "ரொம்ப நாள் பழகினவங்களையே இந்தக் காலத்துல நம்ப முடியலை. உங்களை ரெண்டு மூனு நாளாகத் தானே எனக்குத் தெரியும்....

    Thamaraiyaal Kaelvan 16

    0
    அத்தியாயம் 16 "சொல்லுங்க சார்! ஆத்மநல்லூர் கோவில்ல தான் இருக்கேன். இதோ வந்துடுறேன் சார்" என்றவளாய் எழுந்தவள் ஓட்டுனர் முருகேசனை அழைத்தாள். "ஏதோ அர்ஜன்ட் மீட்டிங் இருக்காம். உடனே சார் வர சொன்னாரு. என்னை ஆபிஸ்ல இறக்கி விட்டுடுங்கண்ணா" என்றவளாய் அங்கிருந்து கிளம்பினாள். அங்குச் சென்று பார்க்க, இவளும் இவளின் மேலதிகாரி மட்டுமே இருக்க, அலுவலகமே வெறிச்சோடி இருந்தது. 'யாருமே...

    Thamaraiyaal Kaelvan 15

    0
    அத்தியாயம் 15 மாதவப்பெருமாளின் உற்சவ சிலையைப் பார்த்து அதிர்ந்தவளாய் நின்றவள், "நான் கனவுல பார்த்த பெருமாள் சிலை இங்கே பாதுகாப்பா இருக்கும் போது, எனக்கு ஏன் அடிக்கடி அப்படிக் கனவு வந்துச்சு. அந்தச் சாமியார் சொல்ற மாதிரி நான் இங்கே செய்ய வேண்டிய காரியம் தான் என்ன?" எனச் சிந்தித்தவாறு சிலையைப் பார்த்திருந்த நேரம், "உங்களைப்...

    Thamaraiyaal Kaelvan 14

    0
    அத்தியாயம் 14 விடியற்காலையில் வீட்டின் பால்கனியில் தேநீரைக் குடித்தவாறு தீவிர சிந்தனையில் ஆட்பட்டிருந்தவளாய் அமர்ந்திருந்தாள் தாமரை. காலை அப்பாட்டைக் கேட்டுக் கண் விழித்ததும் தனது இல்லத்தில் தான் இருப்பதாக நினைத்து, "அம்மா" என்று கோபத்துடன் அழைத்தாள். தாயிடமிருந்து பதில் வராது போகவும், சோலைவனத்தில் தான் இருப்பதை உணர்ந்தாள். 'இங்கே எப்படி இந்தப் பாட்டுக் கேட்டுச்சு' என்றெண்ணியவளாய் எழுந்தவள் சுற்றும்...

    Thamaraiyaal Kaelvan 9

    0
    அத்தியாயம் 9 அந்த விடுதியின் அறையினுள்ளே சென்றவன் பொத்தெனக் கட்டிலில் விழுந்தவனாய், "ம்ப்ச் தாமரை கூடவே இருக்கலாம்னு நினைச்சா இப்படி ஆகிப் போச்சே" என்று வாய்விட்டே புலம்பியவாறு படுத்திருக்க, அதே நேரம் அங்கே தான் தங்க வேண்டிய அரசுக்குடியிருப்பின் வீட்டிற்குள் சென்றவளாய் தனது பணியினில் சேருவதற்கு அவசரம் அவசரமாகக் குளித்து விட்டு, கிளம்பிக் கொண்டிருந்தாள் தாமரை. அச்சமயம் அவளின்...

    Thamaraiyaal Kaelvan 19

    0
    அத்தியாயம் 19 "எப்படித் தான் அன்றாடம் அரசிமா இந்தப் பாதை வழியாய் நடந்து வந்து மாதவனுக்கு மாலைச் சூட்டினாரோ?" என்றவளாய் மூச்சு வாங்க மலை ஏற்றத்தில் நடந்திருந்தாள் கோதை. ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவிலிலிருந்து பின் பக்கமாய் இருந்த குறுக்குப் பாதை வழியாகச் சோலைவனம் நோக்கி நடந்திருந்தனர் கோதையும் அவளின் அன்னை நீலாம்பிகையும். "ஆமாம் கோதை! திருமணமாகிச் சென்ற...

    Thamaraiyaal Kaelvan 18

    0
    அத்தியாயம் 18 வண்டியில் இருந்து இறங்கி இருவரும் சேர்ந்து பிரகலாதப் பெருமாள் கோவிலினுள் காலடி எடுத்து வைத்ததும், தலை முதல் பாதங்கள் வரை உடலுக்குள் சிலிர்ப்பை உணர்ந்தனர். தானாய் அவனது கரம் அவளின் கரத்தோடு கோர்த்துக் கொண்டது. தாங்கள் பன்னெடுங்காலத்திற்கு முன் வணங்கிய எம்பெருமாளைக் காணப் போகிறோம் என்கின்ற நெகிழ்வான மனநிலையுடன் உள்ளே சென்றனர். கோவிலின் நடை திறக்கப்பட்டிருக்க,...

    Thamaraiyaal Kaelvan 21

    0
    அத்தியாயம் 21 வீரபத்திரனிடம் கருப்பண்ணன் கோதை மீதான தனது விருப்பத்தைக் கூறிய மறுநாள், வீரபத்திரனின் வீட்டிற்கு வந்திருந்தார் முருகையன். மார்கழி முதல் நாளான அன்று தான் கோதை விரதத்தைத் தொடங்கியிருந்தாள். அன்று வீரபத்திரனைக் காணவென அவன் இல்லத்திற்குச் சென்ற முருகையன், "கோதைக்கேற்ற வரனை தேடிக் கொண்டிருக்கிறேன் மருமகனே! சோலைவனத்தில் வசிப்போர் பெரும்பாலும் அரசாங்க படை வீரர்களாகவும் காவலர்களாகவும் பணிபுரிபவர்கள்...

    Thamaraiyaal Kaelvan 20

    0
    அத்தியாயம் 20 "தாங்கள் தான் அதிவீரபராக்கிரமரான கருப்பண்ணரோ?" புருவத்தை உயர்த்தியவாறு தனக்கு முன்னே நின்று அலட்சியமாய்க் கேட்டிருந்த கோதையை ரசித்த அவனது கண்கள் அவளின் கையைப் பற்றித் தன்னருகே இழுத்திட, தன் மீது பூ போல் விழுவாள் என்று எண்ணியிருந்தவனின் நெஞ்சின் மீது பாராங்கல் மோதிய உணர்வு உண்டாக, பட்டெனக் கண்களைத் திறந்து பார்த்தான் கருப்பண்ணன். "எதற்காக உன்னை...

    Thamaraiyaal Kaelvan 30

    0
    அத்தியாயம் 30 அழகிய‌ மாதவப் பெருமாள் கோவிலில் உற்சவச் சிலையாய் போலிச் சிலை வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்ததும் திடுக்கிட்டுப் போயினர் இருவரும். மாதவப் பெருமாளின் போலிச் சிலையைக் கையில் ஏந்தியவனாய் வேதனைப் படர்ந்த முகத்துடன் மாதவன் அதிர்ந்து நின்றிருந்த பொழுது, தூரத்தில் யாரோ வரும் ஆளரவம் கேட்க, 'அய்யோ யாரோ வராங்க போலருக்கே' என மனத்தோடு நினைத்தவளாய் விறுவிறுவெனத் துரிதக்...

    Thamaraiyaal Kaelvan 28

    0
    அத்தியாயம் 28 அன்று அந்நாட்டின் அனைத்து திக்கு திசைகளிலும் கோதையின் வீரச் செயலே செவி வழிச் செய்தியாய்ப் பரவியிருக்க, அவளின் புகழே அன்று அனைவரின் பேசு பொருளாய் இருந்தது. இரவு நெருங்கிக் கொண்டிருக்க, மருத்துவக் குடிலில் தீப்பந்த ஒளியில் மயக்கத்தில் படுத்திருந்தாள் கோதை. அவளின் கரத்தைப் பற்றியவனாய் பதைபதைத்த நெஞ்சத்துடன், "வந்து விடு கோதை! மீண்டு வந்து...

    Thamaraiyaal Kaelvan 22

    0
    அத்தியாயம் 22 கோதை ஆற்றங்கரையில் யாருமற்ற தனிமையில், ஆற்று மணலில் வானத்தைப் பார்த்தவாறு படுத்திருந்தவனின் மார்பினில் தாடையைப் பதித்து அவன் முகத்தை நோக்கியவளாய் படுத்திருந்தாள் கோதை. "நான் இவ்வாறு களவியலில் ஈடுபடுவேன் என்றெல்லாம் கனவிலும் நினைத்ததில்லை கண்ணா" என்றாள். "களவியலா? அப்படியென்றால்" தெரிந்தும் தெரியாதவன் போல் கேட்டிருந்தான். "அன்புடைய இருவர் நல்வினையால் எதிர்ப்பட்டு, காதல் கொள்வது. ஒருவனும் ஒருத்தியும் கூடிவாழும்...
    error: Content is protected !!