SM
காலை உணவுக்குப் பிறகு அறையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தவர்கள், அடுத்து நீச்சல்குளம் சென்றனர்.
தந்தையும் மகளும் நீச்சல் குளத்தில் நீந்திக்கொண்டிருக்க... மரநிழலில் இருந்த பெஞ்சில் கீர்த்திச் சாய்ந்து படுத்திருந்தாள். ஒருமணி நேரம் போல நீரில் ஆடிவிட்டு இருவரும் மேலே வர... மூவரும் அறைக்குத் திரும்பினர்.
தந்தையும் மகளும் முன்னால் பேசிக்கொண்டு செல்ல... கீர்த்தி மெதுவாக வேடிக்கை பார்த்தபடி...
பிள்ளைகள் வெளியே ஹாலில் இருக்க... கீர்த்திச் சிறிய விளக்கை மட்டும் போட்டு விட்டு படுத்திருந்தாள். அவளது வலது கைக் கொண்டு முகத்தை மறைத்தபடி படுத்திருந்தாள்.
அவள் அருகில் கட்டிலில் யாரோ உட்காருவது போல இருக்க.... வலிய கரம் ஒன்று அவள் கைகளை எடுக்க முயல... அவளுக்கா அவள் கணவனின் ஸ்பரிசம் தெரியாது.
அவன் அவள் கண்ணீரைக் காணக்...
சாரல் மழையே
அத்தியாயம் 8
கீர்த்தி வீட்டில் இருந்து கிளம்பி கடற்கரை சாலைக்கு வந்திருந்தனர். நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருக்க... அடுத்து என்ன செய்வது என தர்மா நண்பர்களுடன் ஆலோசனை செய்து கொண்டிருந்தான். கீர்த்தி அமைதியாகக் காரில் உட்கார்ந்து இருந்தாள்.
தர்மாவுக்குக் கீர்த்தியை அப்போது தன் வீட்டுக்கு அழைத்துச் செல்ல விருப்பம் இல்லை. அவளை முறையாக மணந்த பிறகே...
சாரல் மழையே
அத்தியாயம் 15
மாலைதான் அவர்களை அழைக்க வருவான் என்று நினைத்த கணவன் இப்போதே வருவதால்... கீர்த்தித் தயாராக ஆரம்பித்தாள். அவள் எல்லாம் எடுத்துக் கொண்டு ஹாலுக்கு வர தர்மாவும் வந்திருந்தான். வாசன் வீட்டில் இல்லை. அவரது மனைவி தான் பழச்சாறு கொடுத்துப் பேசிக்கொண்டு இருந்தார்.
அவன் வந்து சிறிது நேரத்திற்கெல்லாம் சொல்லிக் கொண்டு குடும்பமாக அங்கிருந்து...
சாரல் மழையே
இறுதி அத்தியாயம் 1
முதல் மூன்று நாட்கள் விஷாகன் அங்கே பொருந்திப் போக மிகவும் கஷ்டபட்டான். மனதை திசை திருப்ப வகுப்பு, பாடம் என அதிலேயே கவனமாக இருந்தான்.
சிலர் நட்பு கரம் நீட்ட.... வேறு வழியில்லாமல் தான் இவனும் பேசினான். பள்ளியில் கூட அதிக நண்பர்கள் இல்லை. சில நண்பர்கள்தான் என்றாலும் பல...
“ஒருநாள் குடிச்சாலும் விஷம் விஷம்தான்.” என்றதும்,
“கீழ போட்டுடட்டுமா வேஸ்டானா பரவாயில்லையா?” என்றாள்.
வேண்டாம் என்று சொல்வான் என்றுதான் கேட்டாள். ஆனால் அவன் பரவாயில்லை போட்டு விடு எனச் சொல்வான் என நினைக்கவில்லை.
கீர்த்திச் சென்று குப்பைக் கூடையில் போட்டு விட்டு வர... தீபக்கின் மனைவி வர்ஷாவும், சுமந்த்தின் மனைவி நிஷாவும் அவளை இது தேவையா என்பது போலப்...
“உனக்கு இதுல பெருமை வேறையா?” என்ற நாயகி.... “இன்னும் வசி, விஷால், ரித்விகா என்ன செய்யக் காத்திருக்காங்களோ...அவங்களும் அவங்களே பார்த்துப்பாங்களோ என்னவோ.” என அவர் கவலையைப் பார்த்து சிரித்த தர்மா,
“காதல் திருமணம்தான் நம்ம வீட்டுக்குச் செட் ஆகுமோ என்னவோ... இதுவரை வந்த ரெண்டு மருமகள்களும் நல்லாத்தானே இருக்காங்க பாட்டி. பின்ன என்ன கவலையை விடுங்க.”...
சாரல் மழையே
அத்தியாயம் 1
சென்னை ஓ. எம். ஆர் சாலை, நேரம் நள்ளிரவு இரண்டு மணி. ரேஸ் விட்டது போல இரண்டு கார்கள் சீறிப்பாய்ந்து செல்ல, அந்த இரண்டில் ஒன்றில் இருந்த விஷால் அதிகபடியாகக் குடித்திருந்தபடியால்... சற்றே அவனின் கவனம் சிதற, பாதையின் நடுவே இருந்த டிவைடர்ல் மோத இருந்தவன், கடைசி நொடி சுதாரித்துக் காரை...
சாரல் மழையே
அத்தியாயம் 3
தர்மாவின் அலுவலகம் வழக்கம் போலப் பரபரப்பிற்குப் பஞ்சமில்லாமல் இருந்தது. ஒரு இருக்கையில் இருந்து மற்றொன்றிற்கு என ஆட்களின் நடமாட்டம். விடாது அழைக்கும் தொலைபேசி அழைப்புகள்... அதை உடனே ஏற்கும் பணியாளர்கள் என வேலைப் பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது.
கீர்த்தியைப் பார்த்ததும் தொலைபேசியில் அழைப்பில் இருந்தாலும், மேடம் எனக் கையசைத்தவர்களுக்குப் பதிலுக்குத் தானும் கையசைத்தவள்,...
சாரல் மழையே
அத்தியாயம் 22
மகன்கள் இருவரும் ஒரே நேரம் பசிக்கு அழுக... நல்லவேளை கீர்த்திக் காலையில் எழுந்ததும் தாய்ப்பால் பாட்டிலில் எடுத்து வைத்திருந்தாள். இருவரும் ஒரே நேரம் அழுதால் சமாளிக்க முடியாது. அதோடு அதிகாலை நேரம் அவளுக்குத் தாய்ப்பாலும் நன்றாக இருக்கும். அந்த நேரம் இவர்கள் இருவரும் உறங்கிக் கொண்டு இருப்பார்கள். அதனால் அந்த நேரம்...
சின்ன மருமகள் உண்டானதில் சுனிதாவுக்குச் சந்தோஷம். அதே சமயம் ஸ்ருதி இன்னும் உண்டாகவில்லை என எப்போதுமே முனங்கிக் கொண்டே இருந்தார்.
கீர்த்தியின் பிறந்த வீட்டினரின் செல்வ செழிப்பை பார்த்ததும், சுனிதாவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதற்குத் தர்மா மனது வைத்தால் தான் உண்டு என்பதால்.. அவனுக்கு ஐஸ் வைப்பதாக எண்ணி,
கீர்த்திக்கு வளையல் அடுக்கி முடித்ததும், “கீர்த்தி,...
சாரல் மழையே
அத்தியாயம் 11
புதுமணத் தம்பதிகள் வீடு வர... அருணா அவர்களுக்கு ஆரத்தி எடுத்தாள். கீர்த்திப் பூஜை அறையில் விளக்கேற்றி வந்ததும், அருணா அவர்களுக்குப் பால் பழம் கொடுக்க.... உண்டு முடித்தும், தர்மா கீர்த்தியுடன் சென்று அவனது தாத்தா பாட்டி, மற்றும் தன் அம்மாவிடம் ஆசிவாதம் வாங்கினான். பிறகு கீர்த்தியின் பாட்டியிடமும் வாங்கினர்.
கீர்த்தியை உள்ளே அழைத்துச்...
மாடியில் ஒரு அறையும், பெரிய தோட்டமும் உண்டு. நிறையப் பூ, காய்கறி மற்றும் பழவகைகள் என நிறையச் செடி, கொடிகள் வைத்திருந்தான். அதிக வெயில் தாக்காமல் இருக்க... அதற்குரிய வகையில் ஏற்பாடு செய்திருக்க... அதனால் அந்த இடமே குளுமையாக இருக்க... தந்தையும் மகளும் செடிகளுக்கு நீர் விட்டனர்.
அபிக்கு இந்த வேலை செய்ய ரொம்பப் பிடிக்கும்....
“ஹார்லிக்ஸ் குடி கீர்த்தி.” என்ற அருணா டம்ளரில் ஹார்லிக்ஸ் விட்டுக் கொடுக்க... நவீனா மகளுக்கு அதைக் குடிக்கக் கொடுத்தார். கீர்த்திப் படுத்தபடி தான் குடித்தாள்.
குடித்துவிட்டு அவள் மீண்டும் உறங்கி விட... அருணாவுக்கு நிம்மதியாக இருந்தது. வெளியே வந்து தம்பியை அழைத்துச் சொன்னாள்.
வினோத் வரும் போது மாற்று உடை எடுத்து வந்திருக்க... நவீனா அறையில் இருந்த...
“நீங்க சொல்லுங்க தாத்தா...” என்றதும், ரங்கநாதன் சொத்துக்களின் விவரம், அதன் இப்போதைய மதிப்பு, அதை எப்படிப் பிரிகிறார்கள் எனச் சொல்லிக் கொண்டே வர.... சூரியா, வசீகரன், விஷால் தாங்கள் வைத்திருந்த தாளில் குறித்துக் கொண்டே வந்தனர்.
அவரவர் இப்போது இருக்கும் வீடு அவர்களுக்கே... அதில் ஒன்றும் மாற்றம் இல்லை. அதே போல நாயகியின் நகைகள் அவர்...
மறுநாள் ஞாயிறுக்கிழமை என்பதால் வழக்கம் போலக் காலை உணவு தயாராகிக் கொண்டிருந்தது. அருணா வந்திருப்பதால்... இன்னுமே சிறப்பான விருந்து தயராக. ஜமுனா சமைக்கக் கீர்த்தி அவருக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
எல்லோரும் ஒவ்வொருவராக வந்து சேர பத்து மணி ஆகிவிட்டது. சுனிதாவின் அண்ணன் மகள்கள் இனியா மற்றும் சௌம்யா இருவரும் நேற்றே வந்திருந்தனர். அதில் சௌமியாவை தான்...
சாரல் மழையே
அத்தியாயம் 4
மறுநாள் காலை தர்மா அலுவலகம் செல்லக் கிளம்பி வர... அருணாவின் பிள்ளைகள் பீச் போக வேண்டும் என ஆசைப்பட்டனர். தர்மா மனைவியை மாலை அழைத்துக் கொண்டு செல்ல சொன்னான். கீர்த்தியும் சரி என்றாள்.
சந்துரு எழும் போதே முன் மதிய பொழுதுதான். எழுந்தவன் நிதானமாகக் குளித்துக் கிளம்பி கீழே வர மதியம் ஆகி...
சாரல் மழையே
அத்தியாயம் 10
கீர்த்தியின் தாய் மாமா அவளை அழைத்துப் பேசி இருந்தார். எப்போது திருமணம்? எங்கே என எல்லாம் விசாரித்து இருந்தார். கீர்த்தி அதைத் தர்மாவிடம் சொல்லி இருக்க, அவன் அவர் எண்ணை வாங்கித் தானும் அழைத்துப் பேசினான். கீர்த்தியின் பெற்றோர் பற்றி எதுவும் பேசவில்லை. அவருக்குப் பத்திரிகை வைக்க விரும்புவதாகச் சொல்ல... சென்னையில்...
“உங்க அண்ணனை அப்படியெல்லாம் லேசா எடை போடாத. பெரிய இடத்துப் பெண்ணைப் பிடிச்சிருக்கான். என்னைக்கு இருந்தாலும் அந்தப் பெண்ணுக்கு அவங்க பிறந்த வீட்டு சொத்து வரும். அதெல்லாம் யோசிக்காமலா இருப்பான்.”
“ஏன் ஒரு வசதி இல்லாத பெண்ணைக் காதலிச்சிருக்க வேண்டியது தான... சும்மா அவன் நல்லவன் வேஷம் போடுறான். நீங்களும் நம்பிட்டு.” எனச் சந்துரு சகுனி...
மதியம் மூன்று மணிக்கு மேல தர்மா மகன்களோடு வந்து வீட்டில் இறங்க... அபி ஓடி வந்து தந்தையை அனைத்துக் கொண்டாள். “சாரி டா சாரி டா...” என்றான் தர்மா மகளிடம். அவள் நேற்றில் இருந்து எவ்வளவு மனஉளைச்சலில் இருந்திருப்பாள் என்று தெரியும்.
எல்லோரும் அவனை நலம் விசாரித்தனர். தர்மா எல்லோரோடும் பேசினாலும் பார்வையெல்லாம் மனைவி மீதுதான்....