Pooththathu Aanantha Mullai
பூத்தது ஆனந்த முல்லை -3
அத்தியாயம் -3
கணவன் வரப் போகும் நேரத்துக்காக காத்திருந்தாள் தேன்முல்லை. தருணுக்கு பதினோராவது மாதத்திலேயே மொட்டை அடித்து காது குத்தி விடலாம் என சற்று முன்னர்தான் அவளது அம்மா யோசனை சொல்லியிருந்தார்.
சோர்வாக வந்து சேர்ந்த ஆனந்த் கை கால் கழுவி வந்து குழந்தையை தூக்கிக் கொண்டான். அவனது வயிற்றை கவனித்த பின்னர்...
சரியாக சாப்பிடாமல் கொள்ளாமல் அறைக்குள் சுருண்டு கிடந்த மகளை வற்புறுத்தி சாப்பிட வைத்துக்கொண்டிருந்த கலைவாணிதான் ஆனந்தின் அழைப்பை துண்டித்து கொண்டே இருந்தது.
“திரும்ப கால் பண்ணினாலும் எடுத்து பேசாத. உங்கிட்ட சொல்ல வேண்டிய எதையும் சொல்லாம இப்ப என்ன இதுக்கு கூப்பிடுறாராம். உன்னைத்தான் சொல்லணும், நீதான் இடம் தந்திட்ட, ஆரம்பத்திலேயே கண்டிச்சு விட்ருந்தா இந்த நிலைமை...