Pooththathu Aanantha Mullai
பூத்தது ஆனந்த முல்லை -12
அத்தியாயம் -12
ஆனந்த் தன் மனைவி மகனுடன் கும்பகோணம் வந்தடைந்தான். தேனின் அக்கா வினயாவின் மாமனார் தவறி விட்டார். துக்கத்தில் பங்கெடுப்பதற்காக வந்திருந்தனர்.
எந்த பேருந்தில் எத்தனை மணிக்கு வருகிறோம் என அப்பாவிடம் சொல்லியிருந்தாள் தேன். மகளின் வரவை பற்றி கணவன் மூலமாக அறிந்திருந்த கலைவாணி மகனிடம் கார் எடுத்து சென்று அவர்களை...
சுபர்ணாவின் மகனின் மொட்டையடிக்கும் விழாவுக்கு ஆனந்த் செல்லவே இல்லை. பெரிய மகனுக்கு அதி முக்கிய வேலை என அனைவரிடமும் சொல்லி சின்ன மகனை முன் நிறுத்தி, கடனாக வாங்கியிருந்த பணத்தை கொண்டு ஆடம்பரமாக விழாவில் முறை செய்து விட்டார் சுந்தரி.
பெரிய மகன் மீது கோவமாக இருந்தாலும் வாங்கிய கடனை அடைக்க அவனது தயவு வேண்டும்...
பூத்தது ஆனந்த முல்லை -11
அத்தியாயம் -11
தேன் முல்லையும் மகனும் வீட்டில் இல்லாமல் போகவும் தன் மீதுள்ள கோவத்தில்தான் வீட்டை விட்டு சென்று விட்டாள் என முடிவு செய்து விட்டான் ஆனந்த்.
இந்த நேரத்தில் எங்கு சென்றிருப்பாள், மீண்டும் அவளுடைய பிறந்த வீடு புறப்பட்டு சென்று விட்டால் எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவளை மீண்டும் இங்கு அழைப்பது,...
அவன் அம்மாவிடம் ஏதோ சொல்ல வாய் திறப்பதற்குள், “உன் கூட பொறந்த பொண்ணுக்கு செய்ய யோசனை பண்ணாதடா. இத்தனைக்கும் ஒரே ஒரு அக்காதான் உனக்கு. அவ சந்தோஷமா இருந்தாதான் நீ நல்லா இருக்க முடியும்”என்றார் சுந்தரி.
அம்மாவை என்ன சொல்வதென சங்கடமாக நெளிந்தான் ஆனந்த். கணவன் வாய் திறக்க போவதில்லை என்பதை உணர்ந்த தேன், “அண்ணியோட...
பூத்தது ஆனந்த முல்லை -10
அத்தியாயம் -10
சொன்னது போலவே திங்கள் கிழமை காலையில் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டாள் தேன்முல்லை.
தருணை தான் வைத்துக்கொள்கிறேன் என ஆனந்த் சொன்னதற்கும் ஒத்துக் கொள்ளவில்லை அவள்.
“நீங்க ஃப்ரீயா இருந்து வேலை தேடணும்னுதான் நான் வேலைக்கு போறேன், நீங்க பார்க்கிற வேலைய விட்டுட்டு கூட சீக்கிரமா வேற நல்ல வேலையா பாருங்க”...
பூத்தது ஆனந்த முல்லை -9
அத்தியாயம் -9
இரவானதும் ஆனந்த் வேலைக்கு கிளம்பி விட்டான். தருண் உறங்கிய பிறகு அப்பாவுக்கு பால் கலந்து கொடுத்தாள் தேன். தொலைக்காட்சியில் ஏதோ நிகழ்ச்சி பார்த்துக் கொண்டிருந்தார் தங்கப்பன்.
தேன் ஏதோ போலிருக்க தொலைக்காட்சியை அணைத்தவர், என்னவென விசாரித்தார்.
கணவனுக்கு அடுத்த வேலை தேடுவதில் இருக்கும் சிக்கலை சொன்னாள்.
“பணத்தை கட்டியாச்சுன்னா வில்லங்கம் ஏதுமில்லாம நல்ல...
பூத்தது ஆனந்த முல்லை -8
அத்தியாயம் -8
முன் அறிவிப்பு இல்லாமல் அப்பா மற்றும் மகனுடன் சென்னைக்கு வந்து விட்டாள் தேன்முல்லை. விடியற்காலை என்பதால் ஆனந்த் வீட்டில்தான் இருப்பான் என நினைத்திருந்தாள். ஆனால் வீடு வெளிப்பக்கமாக பூட்டப் பட்டிருந்தது.
மாப்பிள்ளைக்கு அழைத்து விவரம் கேட்டார் தங்கப்பன். அரை மணி நேரத்தில் வீட்டுக்கு வந்து விடுவதாக சொன்னான்.
“எங்கேயாம்ப்பா இந்த நேரத்துல?”...
கதவை தட்டிக் கொண்டு உள்ளே வந்தார் குழலி. அவருக்கு தேனிடம் தனியாக பேச வேண்டுமாம்.
தேனை தனியே விட்டு செல்ல ரமாவுக்கு விருப்பமில்லை, இவரும் ஏதேனும் சொல்லி நோகடித்து விடுவாரோ என்ற பயம். ஆகவே, “நான் போயே ஆகணுமா?” எனக் கேட்டார்.
அவர் கேட்ட விதமே போக மாட்டேன் என்பது போலிருந்தது. வம்பு பேசுபவர் அல்ல ரமா,...
பூத்தது ஆனந்த முல்லை -7
அத்தியாயம் -7
தேன்முல்லை பிறந்த வீட்டில்தான் இருந்தாள். ஊசியிலேயே கருக் கலைப்பு முழுதாகி விட்டதாகவும் இனி பயமில்லை எனவும் மருத்துவர் சொல்லியிருக்க அவளின் பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.
கலைவாணிதான், “ஜாக்கிரதையா இல்லாம இப்படி உடம்ப கெடுத்துகிட்டியே” என மகளிடம் அவ்வப்போது புலம்புவார்.
“அப்பவே இவரை வேணாம்னு நீ சொல்லியிருக்கணும், என்னத்த கண்டு மயங்குனியோ இவரையே...
பூத்தது ஆனந்த முல்லை -6
அத்தியாயம் -6
மருத்துவமனையின் பக்கத்திலிருந்த தேநீர் கடையில் ஆனந்தை கண்ட தங்கப்பனுக்கு பகீர் என்றானது. பயணக் களைப்பிலும் வருத்தம் தேங்கிய விழிகளுமாக தேநீர் அருந்திக் கொண்டிருந்தான்.
தங்கப்பன் இரவிலேயே வீட்டுக்கு சென்றிருந்தவர் காலை உணவு எடுத்துக் கொண்டு வந்திருந்தார். மாப்பிள்ளையின் செயல்களில் அவருக்கு ஏக மன வருத்தம், பெருத்த கோவம் என்ற போதும்...
சரியாக சாப்பிடாமல் கொள்ளாமல் அறைக்குள் சுருண்டு கிடந்த மகளை வற்புறுத்தி சாப்பிட வைத்துக்கொண்டிருந்த கலைவாணிதான் ஆனந்தின் அழைப்பை துண்டித்து கொண்டே இருந்தது.
“திரும்ப கால் பண்ணினாலும் எடுத்து பேசாத. உங்கிட்ட சொல்ல வேண்டிய எதையும் சொல்லாம இப்ப என்ன இதுக்கு கூப்பிடுறாராம். உன்னைத்தான் சொல்லணும், நீதான் இடம் தந்திட்ட, ஆரம்பத்திலேயே கண்டிச்சு விட்ருந்தா இந்த நிலைமை...
பூத்தது ஆனந்த முல்லை -5
அத்தியாயம் -5
உறைந்து போன நிலையில் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தான் ஆனந்த். அடுத்து என்ன செய்வதென ஏதும் புரியவில்லை.
“இப்படியெல்லாம் சிக்கல் ஆகும்னு முன்னாடியே தெரியாதாடா ஆனந்தா? எதுக்காக ஆஃபீஸ் பணத்தையெல்லாம் எடுத்த? போலீஸ் கேஸ் எதுவும் ஆகிடாதே?” பயத்தோடு கேட்டார் வேதாச்சலம்.
“அதெப்படி ஆகாம இருக்கும்? ஆஃபீஸ்ல உள்ள கடனை எல்லாம் அடைக்க...
ஆனந்ததும் எவ்வளவோ பேசி பார்த்து விட்டான், நேரில் போய் பேசியும் கூட நிர்வாகம் அதன் முடிவில் உறுதியாக இருந்தது.
மற்ற அலுவலக ஊழியர்களுக்கும் தெரிந்தால்தான் பயம் இருக்கும், எதிர்காலத்தில் இது போன்ற தவறுகள் நிகழாமல் இருக்கும் என்பதால் இந்த நடவடிக்கையில் ஒளிவு மறைவையும் கடைபிடிக்கவில்லை நிர்வாகம். ஆகவே இந்த செய்தி அலுவலகத்தில் அனைவருக்குமே தெரிந்து விட்டது....
பூத்தது ஆனந்த முல்லை -4
அத்தியாயம் -4
தருணின் முதல் பிறந்தநாள் விழாவை நடத்த தங்கள் குடியிருப்பின் கம்யூனிட்டி ஹாலை ஏற்பாடு செய்திருந்தான் ஆனந்த். அவனது அலுவலக நண்பர்கள் மற்றும் குடியிருப்பு வளாகத்தில் தேனுக்கு ஓரளவு பழக்கமானவர்களுக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
இரு குடும்பத்து ஆட்களும் முதல் நாளே சென்னைக்கு வந்து விட்டனர். கலைவாணியும் சுந்தரியும் மறைமுகமாக ஒருவரை ஒருவர்...
அவளின் பிடிவாதத்தில் அடுத்த நாளே புது பைக் வாங்கியிருந்தான் ஆனந்த். எப்படி பணம் கிடைத்தது என மனைவி கேட்டதற்கு அப்பா கடனாக வாங்கிக் கொடுத்தார் என்றான்.
“அந்த கடனையும் நீங்கதானே அடைக்கணும்” என அவள் கேட்டதற்கு பதில் தராமல் சலிப்பாக பார்த்தான்.
“எப்படி பார்த்தாலும் நான் சொல்றது இல்லைனு ஆகிடாதே”
“அவருக்கு என்ன வருமானம் வருது எனக்கு சும்மா...
பூத்தது ஆனந்த முல்லை -3
அத்தியாயம் -3
கணவன் வரப் போகும் நேரத்துக்காக காத்திருந்தாள் தேன்முல்லை. தருணுக்கு பதினோராவது மாதத்திலேயே மொட்டை அடித்து காது குத்தி விடலாம் என சற்று முன்னர்தான் அவளது அம்மா யோசனை சொல்லியிருந்தார்.
சோர்வாக வந்து சேர்ந்த ஆனந்த் கை கால் கழுவி வந்து குழந்தையை தூக்கிக் கொண்டான். அவனது வயிற்றை கவனித்த பின்னர்...
பூத்தது ஆனந்த முல்லை -2
அத்தியாயம் -2
உறவினர் வீட்டு திருமணத்திற்கு சென்று வந்த தேனுக்கு பிறந்த வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. ஆனந்தையும் அவனது வீட்டினரையும் கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார் கலைவாணி. அண்ணனும் அக்காவும் என்னவோ தங்கை படுகுழியில் விழுந்து விட்டாள் எனும் அளவிற்கு அவளை பரிதாபமாக பார்த்தனர்.
கணவனோடு மன வருத்தம் என்ற போதும் தன் பிறந்த...