Sunday, June 15, 2025

    Irul Vanaththil Vinmeen Vithai

    அவள் மனமிறங்காமல் போக எழுந்து போய் பால்கனியில் நின்று கொண்டான். அரை மணி நேரமாகியும் அவன் வராமல் போகவும்தான் லேசாக கோவத்தை தணித்தவள் அவனிடம் சென்றாள்.  “வந்து படுங்க” என்ற அவளின் குரல் கேட்டு திரும்பினான்.  “தூங்காம இங்க வந்து நின்னா ஆச்சா? வாங்க, தூங்குங்க” என்றாள்.  “இவ்ளோ மோசமாவா சொதப்புறதுன்னு என்னை நானே அனலைஸ் பண்ணிட்டு இருந்தேன்...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -10 அத்தியாயம் -10(1) மகள் மற்றும் மருமகனின் கைப்பேசிகளுக்கு விடாமல் அழைத்துக் கொண்டே இருந்தார் ராஜன். மித்ராவின் பக்கத்தில் தலையணையை அணைவாக வைத்து அவளின் கையை அதை சுற்றிப் போட வைத்தான். விழிக்காமல் உறக்கத்திலேயே இருக்கவும் ராஜனிடமிருந்து அடுத்த அழைப்பு. ‘ஹையோ மாமா, எழுப்பி விட்ராதீங்க உங்க பொண்ண,...
    அத்தியாயம் -8(2) “என் ஷூ போட்டுக்கோ மித்ரா” என்றவனின் பக்கம் திரும்பவில்லை அவள். “என் பைக் எடுத்திட்டு வர்றேன், அதுல கொண்டு போய் உன்னை வீட்ல விடுறேன்” என அவன் சொன்னதை கவனியாதது போலவே நின்றாள். அருகில்தானே செல்கிறோம் என கைப்பேசியும் எடுத்து வரவில்லை அவள். ஏதாவது வாகனம் வருகிறதா என பார்த்து நின்றாள்....
    இருள் வனத்தில் விண்மீன் விதை -7 அத்தியாயம் -7(1) செண்பகவள்ளி இறந்த உடனேயே அவளிட்ட சாபம் பற்றி தேனப்பன் குடும்பத்துக்கு தெரிய வந்தது. அவள் சொன்னால் அப்படியே பலித்து விடுமா என ஆணவத்தோடே இருந்தனர். ஆனால் அவள் சொன்னது போலவே நடக்க ஆரம்பித்தது. செல்வமும் செல்வாக்கும் ஒரு பக்கம் உயர்ந்தோங்க துர்மரணங்களும் கொடிய வியாதிகளும்...
    அத்தியாயம் -12(2) “இருன்னு சொன்னா இருக்க போறேன், அதுக்கு குடும்பம் மொத்தத்தையுமா டேமேஜ் பண்ணனும்?” “உள்ளதைதான் சொன்னேன்” “போக போக எல்லாரும் பழகிடுவாங்க மித்ரா” “பார்க்கலாம்” என சொல்லிக் கொண்டே படுத்தாள். ‘ஹப்பா! ரெண்டாவது நாள் முடிவுல சண்டை இல்லைடா சாமி. இப்படியே கூட இவளோட ஓட்டிட்டா போதும்’ என பிரயாசை பட்டுக் கொண்டே...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -8 அத்தியாயம் -8(1) தன்னோடு வந்து விடும் படி சர்வாவிடம் வற்புறுத்திக் கொண்டிருந்தார் அறிவுடைநம்பி. அவனோ பிடிவாதமாக அவரோடு செல்ல மறுத்தான். “உன் சம்மதமே இல்லாம உன்னை இங்கேருந்து அழைச்சிட்டு போக தெரியும் எனக்கு, பார்க்கிறியா?” கோவமாக கேட்டார் நம்பி. “உங்களால முடிஞ்சுத பார்த்துக்கோங்க பெரியப்பா” அலட்சியமாக சொன்னான்...
    அவளோடு அவன் நெருங்கி நின்று கொள்ள, தள்ளிச் சென்றாள்.  “குளிருக்கு கொஞ்சம் இதமா இருக்கட்டுமேன்னுதான்…” என இழுத்தான்.  “இதமா இருக்கிறது இருக்கட்டும், யாராவது பார்த்தா?”  “ஓ அதான் பிரச்சனையா, யாரும் வர மாட்டாங்க” என குறும்பாக சொன்னான்.  அவள் அடக்கப் பட்ட சிரிப்புடன் கடல் நீரின் பக்கம் பார்வையை திருப்பிக் கொள்ள அவளை உரசிக் கொண்டு நின்றான்.  அவள் விலகிச் செல்லாமலும்...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -15 அத்தியாயம் -15 ராஜனின் வீட்டில் அவரது உறவினர்கள் குழுமியிருந்தனர்.  “என்னதான் நம்ம பொண்ணு ஆசை பட்டு நம்மள மீறி போயிருந்தாலும் அப்படியே விட்ர முடியுமா? நம்ம குல பொண்ணுங்களுக்கு நாமதான் காவல். அங்க எப்படி இருக்கு, ஒண்ணும் பிரச்சனை இல்லையேன்னு ஆராஞ்சு தெரிஞ்சுக்கணுமா இல்லயா?” என சொல்லிக் கொண்டிருந்தார் அவர்களின் குலப்...
    அத்தியாயம் -7(2) “அதெப்படி தாத்தா நான் கூப்பிட்டா உடனே வந்திடுவாங்களா அந்த பொண்ணு?” சலிப்பாக கேட்டான். “முறையா கல்யாணம் பண்ணி இங்க முழு உரிமையும் உள்ளவளா அழைச்சிட்டு வா. அவ மூலமா இந்த வம்சம் தழைக்கும்” “விளையாடுறீங்களா? மேரேஜ் என்ன சின்ன விஷயமா? எதுவும் தெரியாம யாரோ ஒரு பொண்ணை எப்படி கல்யாணம் செய்வேன்?...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -13 அத்தியாயம் -13 தான் என்ன பேசினாலும் வெடித்துச் சிதறி விடுவாள் என்பதை புரிந்திருந்த சர்வா இயலாமையுடன் மித்ராவை பார்த்தான்.  அவன் சொன்னதை வைத்து லிசி மீண்டும் இவன் வாழ்க்கைக்குள் வர முயற்சி செய்கிறாள் என்பதை புரிந்து கொண்டவளுக்கோ அத்தனை ஏமாற்றமாக இருந்தது.  இவனும் வேறு வழியின்றி என்னோடு வாழப் போவதாக சொல்கிறான் என்பதாக...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -19 அத்தியாயம் -19 குன்னூரில் ராஜனின் குல தெய்வ கோயிலில் திருவிழாவுக்கான ஏற்பாடுகள் பற்றி ஆலோசிக்க கூட்டம் நடைபெற்றது. ராஜனோடு மித்ராவும் வந்திருந்தாள். அவருக்கு முகமே சரியில்லை, மகள் நினைத்தது நடக்குமா, என்ன எதிர்வினை ஆற்ற போகிறார்களோ என்ற சிந்தனையில் உழன்று கொண்டிருந்தார்.  இரண்டு நாட்கள் முன்பே பிறந்த வீடு வந்து விட்ட...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -17 அத்தியாயம் -17 மித்ராவின் பிறந்தகத்திலிருந்து ஐம்பதுக்கும் மேலான நபர்கள் திருமண வரவேற்புக்கு வரப் போகிறார்கள் என சொல்லியிருந்தார் சௌந்திரராஜன்.  மாலையில்தான் வரவேற்பு, விஷேஷம் நடக்கும் தினத்தின் காலையிலேயே வந்து விடும் அவர்களை தங்க வைக்க குடியிருப்பு பங்களாவின் பக்கத்திலிருந்த விருந்தினர் மாளிகை தயார் செய்யப் பட்டுக் கொண்டிருந்தது.  அப்பாவுடன் அப்போதுதான் கைப்பேசி உரையாடலை...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -16 அத்தியாயம் -16 பிரதீப்க்கு அறுவை சிகிச்சையில் அபாயத்தை ஏற்படுத்தும் வண்ணம் சிக்கலான இடத்தில் இருந்த இரத்தக் கட்டு பாதி கரைந்து விட்டதாகவும் இனி ஓரளவு  பயமில்லாமல் அறுவை சிகிச்சை செய்து விடலாம் எனவும் மருத்துவர் கூறினார்.  இந்தியாவில் செய்வதை காட்டிலும் அமெரிக்காவில் தலைசிறந்த நரம்பியல் வல்லுநர் செய்தால் நன்றாக இருக்கும் என...
    இருள் வனத்தில் விண்மீன் விதை – 18 அத்தியாயம்-18 அன்றைய அதிகாலையிலேயே மித்ராவுக்கு உற்சாகமும் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. அவளுடைய பிறந்த வீட்டினர் உற்றார் உறவினர்களோடு  இவளது புகுந்த வீட்டை இன்னும் சற்று நேரத்தில் வந்தடைந்து விடுவார்களே.  குளித்து தயாராகி வந்தவள் இன்னும் உறங்கிக் கொண்டிருந்த சர்வாவை தட்டி எழுப்பி விட்டாள். ஈரத்தை சரியாக துடைக்காமலே அவசரம் அவசரமாக...
    அத்தனை பிரபலங்கள், அரசியல்வாதிகள், முக்கியஸ்தர்கள் வந்தாலும் மித்ராவின் பெற்றோரையும் அவர்களது தரப்பு உறவினர்களையும் குறையில்லாமல் கவனித்தனர். அந்த வகையில் எல்லோருக்குமே மிகுந்த திருப்தி.  மித்ரா இங்கு நன்றாக வாழ்வாள் என்ற நம்பிக்கை அனைவருக்குமே ஏற்பட்டு விட்டது.  இரண்டு நாட்கள் தங்கிச் செல்லுங்கள் என நம்பியும் ருக்மணியும் சௌந்திரராஜன் குடும்பத்தினரை கேட்டுக் கொண்டனர்தான். காஞ்சனாவும் அவர் பங்குக்கு இருக்க...
    அத்தியாயம் -9(2) மித்ரா ஏதும் சொல்லாமல் சாப்பிட மட்டும் செய்தாள். நல்ல பசியாக இருந்தும் அவளால் அதிகம் சாப்பிட முடியவில்லை. “சாப்பாடு பிடிக்கலையா?” எனக் கேட்டான். “எதுவுமே பிடிக்கல” கடுப்பாக சொன்னாள். மித்ரா இப்படியே எரிச்சல் பட்டுக் கொண்டே இருந்தால் தன்னால் அமைதியாகவே இருக்க முடியுமா என்ற யோசனையோடு அவளுக்கு பால் கொண்டு வரச்...
    அத்தியாயம் -14(2) காரில் சென்று கொண்டிருக்கையில் லிசியின் மனதை நோகடித்து விட்டாய் என திட்டினாள் மித்ரா. “மியூச்சுவலா பேசித்தான் பிரிஞ்சு போனோம். திரும்ப அவ மறுபடியும் அதே எண்ணத்தோடு என்னை நெருங்கும் போது அவளை பத்தி யோசிக்கிற நிலையில இல்லை நான். உன்னை தேடி வராம போயிருந்தா கூட அவளுக்கு என் லைஃப்ல இடம்...
    இருள் வனத்தில் விண்மீன் விதை -14 அத்தியாயம் -14(1) காதலை புதுப்பிக்க வருகிறான் சர்வா என ஆசையோடு காத்திருந்த லிசி வேறொரு பெண்ணுடன் ஜோடியாக அவன் வந்திருப்பதை கண்டு ஏமாற்றமும் திகைப்புமாக வரவேற்றாள். மித்ராவின் கழுத்தில் கிடந்த மஞ்சள் கயிறும் நெற்றித் திலகமும் சர்வாவுடன் நெருங்கி நிற்பதும் லிசியின் அடி வயிற்றை கலங்க வைத்தது....
    ஆளுக்கொரு பக்கம் சென்றவர்களை பார்த்து பெரு மூச்செறிந்த ருக்மணி இலக்கியாவின் அறைக்கு சென்றார்.  மித்ராவின் மனதை நோகடிக்கும் படி என்ன பேசினாய் என அவர் கேட்டதற்கு ஒன்றுமே பேசவில்லை என சாதித்தாள் இலக்கியா.  “கொஞ்ச நேரம் கழிச்சு மித்ரா வாயிலேருந்தே உண்மை வரப்போகுது. அப்ப சும்மா விட்ருவேன்னு நினைக்காத, ஒழுங்கா நீயே சொல்லு” என ருக்மணி எச்சரிக்கையாக...
    குன்னூர் கோயில் திருவிழா நடைபெற்றது. சதானந்தம் பெரியவரிலிருந்து லக்ஷன் வரை சர்வாவின் குடும்பத்தினர் கோயிலுக்கு வந்திருந்தனர். பிரதீப்பும் அவனது பெற்றோர் மட்டும்தான் வரவில்லை.  திருவிழா சிறப்பாக நடைபெற கொடை கொடுத்ததோடு அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்திருந்தனர்.  ராஜன் குலத்து பெரியவர்தான் விக்கிரஹம் எங்கு இருக்க வேண்டுமென அம்மனிடம் உத்தரவு கேட்கும் சீட்டுக்களை தயாரிக்க வேண்டும். அவரால் விக்கிரஹம்...
    error: Content is protected !!