துளி துளி சாரலாய்
தூறல் -6
வெற்றிடமாய் இருந்த என்னை,
விரும்பியே நிரப்பினாய் நீ;
விரல்கள் உன் கரம் சேர துடித்திடுதே,
விடிவு என்று கிடைத்திடுமோ?
"என்னம்மா இப்படி பண்ற. உனக்கு நான் சொன்னது புரியுது தானே. மூனு நாளா நீயும் வந்து வந்து போற. ஆனால் கௌதம் சார் வரலையே.
இங்க இருக்கவங்களுக்கு அவங்க வேலை பார்க்கவே...
தூறல் - 14
எம் கானகத்து கம்பெல்லாம்
மூடர்கூட முகலினமாய் முடங்கி,
முற்போக்கென முள் புதர்தனில் புழுங்கிடுதே,
மீட்டிடுவாய் என மடல் தருவித்துள்ளேன்;
மீளும் மாட்சிமை கிட்டுமோ இறைவா?
தமிழகத்தில் ஒரு ஊரில் உள்ள சிறுவன் ஒருவன் அந்த விளையாட்டை விளையாடிக் கொண்டிருந்தான். "தம்பி சாப்பிடாம கூட அப்படி என்ன பா விளையாட்டு உனக்கு" என்ற தாயின் வார்த்தைகள் காதில் ஏறவில்லை.
...
தூறல் - 9
வீழும் நொடியிலும் எழுவேன் நான்,
அழகே உன் விரல் தீண்டிய ஸ்பரிசத்தில்;
விரைந்து வந்திடு பெண்ணே,
சாகும் என் உயிரை மீட்டிட!!
"ரோஹித் அந்த போனை வச்சிட்டு போய் படி. ரொம்ப நேரமா அதையே பாத்துட்டு இருக்க அப்படி அதுல என்ன தான் இருக்கோ" என ஒரு தாய் தன் மகனைக் கண்டித்து கொண்டு இருந்தார்.
...
தூறல் - 8
ஆர்ப்பரிக்கும் அலைக் கடலும் பெண்ணே,
அழகாய் அடங்கிடுதே உன் முன்னே;
ஆதுரமாய் சிரித்தாய் கண்ணே,
அலையில் கிடந்தேன் கரையேறாமல் தன்னே!
போலீசார் போன பின் பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட கௌதம் தற்போது தன் அருகில் இருந்த உருவத்தை கண்டான். இருளிர்க்கு பார்வை சற்று மெல்ல பழகியது.
அங்கே தலையில் முக்காடு இட்டிருந்த அந்த உருவத்தை பார்த்த...
தூரல் - 11
வென்பஞ்சு மேகமென மிதந்து வந்த பெண்ணே,
காற்றாய் உன்னில் கலந்திட வந்தேன்;
ஏனோ பாலாய் போன காற்றாய் பிறந்ததால்,
கலக்காது கலைத்து செல்வதே நான் ஆனேனே!!
"ஹலோ... ம்ம் சொல்லுங்க சார்.... இன்னும் ஒரு ஒன் ஹவர்வல கிளம்பி வரேன் சார். நான் நீங்க சொல்ற இடத்துக்கே வரேன்... ம்ம் ஓகே சார்" என கௌதம்...
தூறல்-1
கதைகள் என்றும் வாழ்வின் புதிய
அத்தியாயங்களை தருபவை அல்ல;
அவை பழைய அத்தியாயங்களையே
புதுப்பித்து தருபவை தான்.
இவ்வரிகள் எவ்வளவு உண்மை வாழ்வின் புதிய அத்தியாயங்களே நமக்கு புத்தகங்கள் புதுப்பித்து தருகின்றன அல்லவா. இந்த வரிகளை படிக்கும் போதே அவள் கண்னோடு சேர்ந்து மனதும் கனிந்தது.
அவள் ஆருத்ரா 25 வயதுப் பெண். புகழ்பெற்ற ஐ.டி நிறுவனம் ஒன்றில்...
தூறல் - 19
பூத்து குலுங்கும் பூந்தோட்டமே,
உன் பூக்களை எனக்கு தருவாயா?
புள்ளி மானாய் நான் துள்ளி வந்தேன்,
ஏனோ முகத்தை திருப்பி வைத்தாய்;
சிறு வேல் விழியாலே என்னை நிரப்பி வைப்பாயா பூக்காரியே??
கௌதம் தனக்கு முன் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை கண்டு "என்ன ருத்ரா இதுல என்ன இருக்கு. எதுக்கு இப்படி எல்லாத்தையும் பரப்பி வச்சிருக்க" என்றான்...
தூறல் - 30
கண்டேன் என் காதல் நீயென,
இனி தடையேதும் இல்லை பெண்ணே;
வந்துவிடு என் முன்னே,
காத்திருப்பேன் உனகாய் கரையேறும் மீனாக,
கடல் நடுவில் காற்றாக!!
"கௌதம் என்னடா செஞ்சுக்கிட்டு இருக்க. பொம்பள புள்ள கணக்கா இவ்ளோ நேரமாவா கிளம்பிக் கிட்டு இருப்ப.
அங்க பொண்ணு வீட்ல மாப்பிள்ளை வரலைன்னு நிச்சயித்த வேற தேதிக்கு மாத்திர போறாங்க" என்று...
தூறல் - 28
திண்டாடி திணறும் திங்களே,
ஏனோ காற்றும் தற்போது வெட்டி செல்ல,
காணலும் தான் நமை கண்டு சிரிக்க,
காலம் நேரம் வந்துவிடும் கலங்காதே பெண்ணே;
ஆருடமே சொல்லி செல்லிடுதே வெற்றி அருகேயென!!
விஷ்ணு பிரசாத் கௌதமை தெரிந்தது போல பேச பேச அதிர்வுடன் பார்த்திருந்தனர் அனைவரும். ஆனால் கௌதம் மட்டும் எந்த உணர்வையும் காட்டாது அமைதியை கடைப்பிடித்தான்.
...
தூறல் - 23
என் இனிய தருனமதை கண்டவளே,
என் கடும் நாட்களையும் கண்டாயோ?
உடன் இருப்பாயோ இவை இரண்டிலும்,
இருந்துவிட்டு போவாய் எனில் சம்மதம் தந்திடு,
உன் சிரத்தின் சிறு அசைவின் வழி!!
கௌதம் தன்னிடம் சத்யாவின் எண்ணின் கடந்த ஒரு மாத லொக்கேஷனை எடுத்து தருமாறு கேட்டதில் இருந்து மறுத்துக் கொண்டு இருக்கிறாள்.
ஆனால் கௌதமும் தன்னால் முடிந்த...
தூறல் - 24
மிதக்கும் காகித கப்பலே,
நீரில் உன் மிதவை கண்டு மகிழும்
என் மதியை திருடி சென்றவளிடம்,
என் மனதையும் கொண்டு சேர்ப்பாயோ?
அவள் நகர்வதற்குள் இதை நிகழ்த்தி கொடுப்பாயா?
அந்த காபி ஷாப்பில் இன்னும் கூட்டம் வரவில்லை. அவர்கள் வந்து ஒரு மணி நேரம் கடந்து சென்றுவிட்டது. அவர்களுக்கு பின் ஒருவரே வந்தார்.
அவரும் வந்தவர் ஒரு...
தூறல் - 4
வாழ்வில் பல வண்ணம் உண்டு,
அதை நிரப்புவதும் நம் எண்ணங்களே;
இருளோ ஒளியோ வாழ்வு மலர்வதும்,
அவரவரின் மனதின் உபயத்தாலே!
"என்னம்மா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல. இங்க வேலை பார்க்க வந்தியா, இல்லை ஓபி அடிக்க வந்தியா. சொல்ற வேலை ஒன்னு கூட சரியா செய்ய முடியாதா. நீ நேத்து பார்த்த வொர்க்ல அவ்ளோ...
தூறல் - 20
காற்றில் கலந்த உன் சுகந்தத்தை சுவாசித்தேன்;
காற்றும் நீ அருகே இருக்கிறாயென,
என்னை தேற்றிக் கொண்டே நகர்கிறது;
காத்திருக்கிறேன் காற்று கூறியது
உண்மையா என்று அறிந்திட!!
மாறன் பேசிக் கொண்டு இருக்கும் போதே கார்முகிலனின் அறை வாயிலில் யாரோ அவன் பேசுவதை கேட்பது தெரிந்தது.
போன முறை மாறன் அழைப்பு விடுத்து எச்சரிக்கை செய்தபின் தன் அறையை நன்கு...
தூறல் - 15
கற்றைக் கூந்தலை காதோரம் ஒதுக்கட,
காற்றும் ஆசை கொள்ளுதடி;
ஏனோ அதனால் தான் காற்றும்,
உன் சிகை கோதி சிருங்காரம் மீட்டி செல்லுதோ?
ஆருத்ரா கௌதம் தன்னிடம் கூறிய அனைத்தையும் ஒன்றோடு ஒன்று இணைத்து பார்த்தாள். ஒரு முடிவில் தன் யோசனையை கைவிட்ட ஆரு கௌதமை நோக்கினாள்
"கௌதம்" என்று அழைத்தும் தன்னை பார்த்து கொண்டே...
தூறல் -27
காற்றும் நுழையா காட்டில் மாட்டிய பெண்ணே,
காக்க வேண்டி எனகாய் காத்திருந்தாய்;
வருவேனா என்ற ஏக்கம் நிறைந்த உன் முகத்திற்கேனும்,
நான் விரைந்து வந்திடுவேன் பெண்ணே;
பயம் விடுத்திடுவாய் நான் என்றும் உன்னருகிலே தான்!!
ஆருத்ரா தன் வாயை மூடிய நபரை கண்டு பயத்திற்கு பதில் நிம்மதி தான் அடைந்தாள். ஏனென்றால் அது அவள் தோழி மீரா தான்.
...
தூறல் - 16
விண்மீனே உன் மைவிழியிலே
வீழ்ந்து தான் போனேனே,
மீண்டிட பலநூறு வழி கிட்டினும்,
கறையேறாது கிடக்கவே மனம் ஏங்கிடுதே;
ஒருமுறை கைக் கொடுத்து ஏற்றி விடுவாயா??
கௌதம் தன் அறையில் அமர்ந்து இன்று நடந்த அனைத்தையும் மறுபடியும் ஓட்டிப் பார்த்தான். ருத்ரா தன்னிடம் கூறியது அனைத்தும் சரியே என எண்ணினான்.
கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சத்யாவே அவனுடைய உயிர்...
தூறல்-2
காற்று மீட்டும் குழலாய்
அவள் கார்மேக கூந்தலை
மீட்டிட மனம் ஏங்கிடுதே....
'என்ன ஆச்சு இவனுக்கு ரொம்ப நேரமா தானா சிரிச்சுக்கிட்டு இருக்கான். என்னவா இருக்கும்' என யோசனையோடு தன் மகனை ஒரு பார்வை பார்த்து சமையலறை சென்றார் ரேவதி.
சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து தன் மகனை கண்டு 'ஒரு வேளை எந்த பொண்ணு...
தூறல் - 12
விண்ணவரும் வீழ்ந்து போவர் அவள் முன்னே ,
வீழாது செல்லவே வீணாய் என் மனம் முயல,
அடியோடு என்னை சாய்த்து சென்றாளே,
அவள் ஓர விழி பார்வை வீச்சிலே!!
தன் முன்னே நீண்டிருந்த கடலை கண்ட கௌதம், தன் மனம் சமன்பட கடற்கரை மணலில் சிறிது தூரம் நடப்பது சிறந்த வழி என எண்ணி...
தூறல் - 26
என்னுள் புதைந்திருந்த புலவனை நீ மீட்டுள்ளாய்,
ஏனோ அதை அறிய மறுக்கிறாய்;
எனக்கே நான் புதிதாய் தெரிய,
உன்னாலான மாற்றம் உனக்கே என்கிறேன்;
இதற்கேனும் பதில் தந்திடு பெண்ணே!!
கௌதம் தன் இருசக்கர வாகனத்தில் வரும் போது அவன் கைப்பேசி அலறியது. யார் என எடுத்து பார்த்தான். அதில் ருத்ரா என்று வந்தது.
வண்டியை ஓரமாக நிறுத்தியவன்...
தூறல் - 17
சிப்பி விழியிலே காந்தம் கொண்டாயோ,
உலோகமென உன் நிழலிலே நிதம் தவறாமல் உறைகிறேன்;
கண் அசைவிலே எனை கைதாக்கி செல்கிறாயே,
உன் நோக்கம் தான் என்னவோ?
விடுதலை என்று தான் தருவாயோ!!
கௌதம் மடிக்கணினி பற்றிய பிரச்சினையை சொன்னவுடன் ஆரு சொன்ன பதில் இதுதான் "நான் திறந்து தருகிறேன்" என்று. அதை கேட்ட கௌதம் ஆருவிடம் "உன்னால...