துளி துளி சாரலாய்
தூறல் - 25
வாயில் வரை வந்து நின்றேன்,
வார்த்தை மட்டும் வராது நிற்க
உன் சங்கீத சிரிப்பொலியே பதிலாக;
காற்றும் அதை அழகுற என்னிடம் நீட்ட,
பற்றி கொள்கிறேன் அதையே பற்றுகோளாய்!!
கௌதம் கிளம்பினான் தன் அலுவலகம் நோக்கி. அங்கே அவன் எதிர்பார்த்த தகவல் நிச்சயம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.
அலுவலகம் வந்தவன் நேராக எடிட்டர் அறைக்கு சென்றான். கதவை...
தூறல் - 9
வீழும் நொடியிலும் எழுவேன் நான்,
அழகே உன் விரல் தீண்டிய ஸ்பரிசத்தில்;
விரைந்து வந்திடு பெண்ணே,
சாகும் என் உயிரை மீட்டிட!!
"ரோஹித் அந்த போனை வச்சிட்டு போய் படி. ரொம்ப நேரமா அதையே பாத்துட்டு இருக்க அப்படி அதுல என்ன தான் இருக்கோ" என ஒரு தாய் தன் மகனைக் கண்டித்து கொண்டு இருந்தார்.
...
தூறல் - 16
விண்மீனே உன் மைவிழியிலே
வீழ்ந்து தான் போனேனே,
மீண்டிட பலநூறு வழி கிட்டினும்,
கறையேறாது கிடக்கவே மனம் ஏங்கிடுதே;
ஒருமுறை கைக் கொடுத்து ஏற்றி விடுவாயா??
கௌதம் தன் அறையில் அமர்ந்து இன்று நடந்த அனைத்தையும் மறுபடியும் ஓட்டிப் பார்த்தான். ருத்ரா தன்னிடம் கூறியது அனைத்தும் சரியே என எண்ணினான்.
கிட்டத்தட்ட பத்து வருடங்கள் சத்யாவே அவனுடைய உயிர்...
தூறல் - 5
வழியில் பெண்ணே விழியை வைத்தேன்,
வழிப்போக்கன் நான் உன் விழியில் விழ;
வீழ்ந்ததென்னவோ என் விழிகளே,
வியப்பூட்டும் உன் பேதை மொழியிலே!
இரு நாட்கள் உறவினர்களின் வீடுகள் கோயில் பங்சன் என கௌதமை சுற்ற வைத்து விட்டார் ரேவதி. ஊர் முழுவதும் சொந்தங்கலாய் போய் விட தெரு தெருவாய் சுற்றினார் ரேவதி.
ஏனெனில் இனி வேறு...
தூறல் - 29
கோபம் கூட காற்றில் கரைந்ததே பெண்ணே,
உன் விழி வீச்சு என்னை சாய்த்த நொடிதனில்;
காற்றிலாடும் இலையென இசைந்து சென்றேன்,
நீ எனை கண்டு உன் இதழின் மென்னகை செய்த நொடி!!
'என்ன இவன் தான் மாறனா' என்று அனைவரும் அதிர்ச்சி அடைந்த நொடி "என்ன எல்லாரும் ஷாக் ஆகி நிக்கிறீங்க.
ஷாக் ஆகுறத அப்புறமா...
தூறல் - 23
என் இனிய தருனமதை கண்டவளே,
என் கடும் நாட்களையும் கண்டாயோ?
உடன் இருப்பாயோ இவை இரண்டிலும்,
இருந்துவிட்டு போவாய் எனில் சம்மதம் தந்திடு,
உன் சிரத்தின் சிறு அசைவின் வழி!!
கௌதம் தன்னிடம் சத்யாவின் எண்ணின் கடந்த ஒரு மாத லொக்கேஷனை எடுத்து தருமாறு கேட்டதில் இருந்து மறுத்துக் கொண்டு இருக்கிறாள்.
ஆனால் கௌதமும் தன்னால் முடிந்த...
தூறல் - 19
பூத்து குலுங்கும் பூந்தோட்டமே,
உன் பூக்களை எனக்கு தருவாயா?
புள்ளி மானாய் நான் துள்ளி வந்தேன்,
ஏனோ முகத்தை திருப்பி வைத்தாய்;
சிறு வேல் விழியாலே என்னை நிரப்பி வைப்பாயா பூக்காரியே??
கௌதம் தனக்கு முன் பரப்பி வைக்கப்பட்டிருந்த புத்தகங்களை கண்டு "என்ன ருத்ரா இதுல என்ன இருக்கு. எதுக்கு இப்படி எல்லாத்தையும் பரப்பி வச்சிருக்க" என்றான்...
தூறல் - 3
அற்ப மானுடம் ஆட்டூம் பொம்மை அல்ல வாழ்க்கை,
அடுத்த பக்கம் காண காத்திருக்க வேண்டுமே தவிர,
அப்பக்கத்தை கதையால் நாம் நிரப்ப இயலாது!
"டேய் சின்சியர் சிகாமணி என்னடா சீக்கிரம் வந்துட்ட போல, என்ன செய்ற" என தன் கணினியில் தட்டச்சு செய்து கொண்டு இருந்த நண்பன் சத்யாவிடம் கேட்டுக் கொண்டு வந்து தன்...
தூறல் - 13
வாழ்வே என்னிடம் எதை சொல்ல விழைகிறாய்,
என் ஆழ்மனதின் ஆசைகள் நிறைவேறாது என்றா?
அல்லது அந்த எண்ணங்களை என்னுள்,
விளைவித்து வேடிக்கை பார்ப்பதே நீயென்றா?
"ருத்ரா.. ஹேய் ருத்ரா" என அதிர்வுடன் நின்றிருந்த ருத்ராவின் முன் தன் கையை ஆட்டினான் கௌதம். "என்னாச்சு ஏன் இப்படி பாக்குற" என்றான்.
"ஆன்... அது...
தூறல் - 17
சிப்பி விழியிலே காந்தம் கொண்டாயோ,
உலோகமென உன் நிழலிலே நிதம் தவறாமல் உறைகிறேன்;
கண் அசைவிலே எனை கைதாக்கி செல்கிறாயே,
உன் நோக்கம் தான் என்னவோ?
விடுதலை என்று தான் தருவாயோ!!
கௌதம் மடிக்கணினி பற்றிய பிரச்சினையை சொன்னவுடன் ஆரு சொன்ன பதில் இதுதான் "நான் திறந்து தருகிறேன்" என்று. அதை கேட்ட கௌதம் ஆருவிடம் "உன்னால...
தூரல் - 11
வென்பஞ்சு மேகமென மிதந்து வந்த பெண்ணே,
காற்றாய் உன்னில் கலந்திட வந்தேன்;
ஏனோ பாலாய் போன காற்றாய் பிறந்ததால்,
கலக்காது கலைத்து செல்வதே நான் ஆனேனே!!
"ஹலோ... ம்ம் சொல்லுங்க சார்.... இன்னும் ஒரு ஒன் ஹவர்வல கிளம்பி வரேன் சார். நான் நீங்க சொல்ற இடத்துக்கே வரேன்... ம்ம் ஓகே சார்" என கௌதம்...
தூறல் - 4
வாழ்வில் பல வண்ணம் உண்டு,
அதை நிரப்புவதும் நம் எண்ணங்களே;
இருளோ ஒளியோ வாழ்வு மலர்வதும்,
அவரவரின் மனதின் உபயத்தாலே!
"என்னம்மா நினைச்சுட்டு இருக்க உன் மனசுல. இங்க வேலை பார்க்க வந்தியா, இல்லை ஓபி அடிக்க வந்தியா. சொல்ற வேலை ஒன்னு கூட சரியா செய்ய முடியாதா. நீ நேத்து பார்த்த வொர்க்ல அவ்ளோ...
தூறல் - 8
ஆர்ப்பரிக்கும் அலைக் கடலும் பெண்ணே,
அழகாய் அடங்கிடுதே உன் முன்னே;
ஆதுரமாய் சிரித்தாய் கண்ணே,
அலையில் கிடந்தேன் கரையேறாமல் தன்னே!
போலீசார் போன பின் பெருமூச்சு ஒன்றை வெளியிட்ட கௌதம் தற்போது தன் அருகில் இருந்த உருவத்தை கண்டான். இருளிர்க்கு பார்வை சற்று மெல்ல பழகியது.
அங்கே தலையில் முக்காடு இட்டிருந்த அந்த உருவத்தை பார்த்த...
தூறல் - 10
இருள் அது துவங்கிய நேரம்,
ஒளியென வாந்தாய் பெண்ணே;
நிரந்தர கலங்கரை விளக்காய்,
நீடித்திடுவாய் என்றும் என் வாழ்வில் நீயே!
அன்று காலை பத்து மணி, அந்த கமிஷனர் அலுவலகம் மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. அங்கே ஒருவர் வெகு நேரமாக யாரையே எதிர்ப்பார்த்து அமர்ந்திருந்தார்.
அவரிடம் வந்த போலீஸ் ஒருவர் "சார் கமிஷனர் வர...
தூறல் -27
காற்றும் நுழையா காட்டில் மாட்டிய பெண்ணே,
காக்க வேண்டி எனகாய் காத்திருந்தாய்;
வருவேனா என்ற ஏக்கம் நிறைந்த உன் முகத்திற்கேனும்,
நான் விரைந்து வந்திடுவேன் பெண்ணே;
பயம் விடுத்திடுவாய் நான் என்றும் உன்னருகிலே தான்!!
ஆருத்ரா தன் வாயை மூடிய நபரை கண்டு பயத்திற்கு பதில் நிம்மதி தான் அடைந்தாள். ஏனென்றால் அது அவள் தோழி மீரா தான்.
...
தூறல்-1
கதைகள் என்றும் வாழ்வின் புதிய
அத்தியாயங்களை தருபவை அல்ல;
அவை பழைய அத்தியாயங்களையே
புதுப்பித்து தருபவை தான்.
இவ்வரிகள் எவ்வளவு உண்மை வாழ்வின் புதிய அத்தியாயங்களே நமக்கு புத்தகங்கள் புதுப்பித்து தருகின்றன அல்லவா. இந்த வரிகளை படிக்கும் போதே அவள் கண்னோடு சேர்ந்து மனதும் கனிந்தது.
அவள் ஆருத்ரா 25 வயதுப் பெண். புகழ்பெற்ற ஐ.டி நிறுவனம் ஒன்றில்...
தூறல் - 22
கடைக்கண் பார்வை வீசி சென்றுவிடு பெண்ணே,
காத்திருந்து காயமடைந்த நெஞ்சை தேற்றிட;
சிறு ஊண் உறக்கம் இல்லாது அலையும்,
என் ஆற்றமையேனும் ஆறிடும் பெண்ணே;
தரிசனம் காண ஏங்குகிறேன் வந்திடுவாயா முன்னே??
கௌதம் கரும்பலகையில் தன் சந்தேகங்கள் கணிப்புகள் என்று ஒருபுறம் எழுதியவன் மற்றொரு புறம் தன் நண்பன் சத்யாவின் பெயரை எழுதினான்.
'சத்யா அந்த சிறுவனை...
தூறல் - 30
கண்டேன் என் காதல் நீயென,
இனி தடையேதும் இல்லை பெண்ணே;
வந்துவிடு என் முன்னே,
காத்திருப்பேன் உனகாய் கரையேறும் மீனாக,
கடல் நடுவில் காற்றாக!!
"கௌதம் என்னடா செஞ்சுக்கிட்டு இருக்க. பொம்பள புள்ள கணக்கா இவ்ளோ நேரமாவா கிளம்பிக் கிட்டு இருப்ப.
அங்க பொண்ணு வீட்ல மாப்பிள்ளை வரலைன்னு நிச்சயித்த வேற தேதிக்கு மாத்திர போறாங்க" என்று...
தூறல் - 18
வர்ணங்கள் பல சேர்த்த ஓவியம் நீ,
உயிர் பெற்று நடக்கையிலே
புவியும் புது வர்ணம் அடைந்திடுதே;
புண்ணாய் போன என் மனதிற்கும்,
உன் வர்ணம் புத்துணர்வு தந்திடுதே!
ஆருத்ரா தன் தோழி மீரா தன்னை பின்தொடர்வதை கவனிக்கவில்லை. ஆனால் ஒரு சிக்னலில் அவள் பின்னால் வந்த மீராவின் ஆட்டோ நின்றுவிட ஆரு வந்த ஆட்டோ முன்னே சென்றுவிட்டது.
இதை...
தூறல் - 12
விண்ணவரும் வீழ்ந்து போவர் அவள் முன்னே ,
வீழாது செல்லவே வீணாய் என் மனம் முயல,
அடியோடு என்னை சாய்த்து சென்றாளே,
அவள் ஓர விழி பார்வை வீச்சிலே!!
தன் முன்னே நீண்டிருந்த கடலை கண்ட கௌதம், தன் மனம் சமன்பட கடற்கரை மணலில் சிறிது தூரம் நடப்பது சிறந்த வழி என எண்ணி...