Saturday, June 7, 2025

    கொல்லும் நிலவு கொஞ்சும் சூரியன்

       "ரொம்ப சுத்தம் இன்னைக்காவது முகத்தை பார்த்துட்டு வா",என்று நவீன் சொன்னான்.    "முயற்சி பண்றேன் டா., டேய் போட்டோ இருந்தா காட்டுடா", என்று கேட்டாள்.    "அடிப்பாவி இந்தா எட்டுற தூரத்தில் இருக்கான்., போய் பாத்துட்டு வா போ" என்று சொன்னான்.     "பேசணும்டா முதல்ல", என்றாள்.     "நீ முதல்ல மூஞ்ச பாரு, அப்புறமா பேசறத பத்தி...
         "ஓ அத கேக்கறியா", என்று பேசிக்கொண்டே அவர்கள் கிச்சனுக்கு அருகில் நிற்க.,  "அதுவா அன்னைக்கு எஸ்கேப் ஆகணும்னு முடிவோட வந்தேன்., சோ சுடிதார் போட்டேன், சாரி கட்டிட்டு வந்தா எஸ்கேப்பாக வாய்ப்பே இல்லை.,  ஒருவேளை நீங்க எல்லாம் ஹெல்ப் பண்ணலன்னு வைங்க., நான் தனியா தான் ஓடி இருக்கணும்.,  தனியா ஒன்னு எங்க...
    11 காலை நேரத்தில் அனைவரும் கோயில் பூஜைக்கு என கிளம்பி கொண்டிருந்தனர். துளசியின் தாத்தா பாட்டி அங்கே தான் இருந்தனர். அவர்கள் கொண்டு வந்த இவளது சூட்கேஸ் திறந்து இன்று எந்த புடவை கட்டலாம் என்று ஆராய்ந்து கொண்டிருந்தாள். அடர் கத்திரிப்பூ நிற சேலை அகல ஜரிகை பார்டருடன் கூடிய சாப்ட் காட்டன் சேலையை தேர்ந்தெடுத்தாள்.     சேலையை கட்டி விட்டு...
        ஏற்கனவே வீட்டில் இருந்து கிளம்பும் போதே சற்று தாமதம் ஆகி இருந்ததால்., தாத்தாவும் சீக்கிரம் வரவேண்டும் என்று சொல்லித்தான் அனுப்பியிருந்தார்.,      அதனால் அனைவரும் அங்கு சென்று சேரும் போது வெயில் இறங்க தொடங்கி இருந்தது. காரை விட்டு இவர்கள் இறங்கவும், அகிலா தான் "ஃபுல் அண்ட் ஃபுல் தோட்டத்தில் இருக்கிற மாதிரி வந்த நல்லா...
        அவன் மனசாட்சியோ அவனைப் பார்த்து, 'டேய் நீ ரூம்ல என்னென்ன நெனச்சிட்டு இருந்த ன்னு  எனக்கு தானடா தெரியும்', என்று கிண்டல் செய்தது.     அவனும் 'அதெல்லாம் இல்ல, நான் ஸ்ட்ராங்கான ஆளு, ஸ்ட்ராங்கா தான் இருக்கேன், அவங்க அப்பா என்கிட்ட போட்ட சண்டை எதுவும் மறக்கல., இவ வந்து  பேசினா அப்படின்னு நான்...
    10    உடைமாற்றி கொண்டு வெளியே வர நினைத்தவள், மெதுவாக எட்டிப் பார்க்க பெரியவர்கள் எல்லாம் ஒரு பக்கமாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.       நவீன் வீட்டிற்குள் நடை போட்டுக் கொண்டிருந்தான்.      நவீனின் அக்கா கணவன் தான், ஏதோ சொல்லிக் கொண்டிருப்பது தெரிந்தது.,     சுற்றும் முற்றும் பார்க்க கிருஷ்ணா கீழே இல்லை என்பதை அறிந்து கொண்டவள், 'கிஸ் பண்ணிட்டு...
    அவன் எழுந்து  கட்டில் அருகேயே  நிற்க., இவளோ கட்டிலில் நிதானமாக அமர்ந்தாள்.      "ஏய் எந்திரி, வெளியே போ", என்று சொன்னான்.      இவளோ "நான் உங்ககிட்ட சண்டை போட வரல., நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்லுங்க.,       யாரைக் கேட்டு கோவில்ல உங்ககிட்ட என்னை பத்தி பேசின ஆட்களிடம்,  வீட்டுக்கு வந்து பாட்டி கிட்ட பேசுங்கன்னு...
    9     துளசியை அழைத்து ஹாலில் அமர வைத்தார்.      பாட்டி வந்தவர்களை உறவினர் என்று அறிமுகப்படுத்தி விட்டு.,     "உன்கிட்ட ஏதோ கேட்கணுமாம்", என்று சொன்னார்.    அவர்களும் அவர்கள் வந்த விஷயத்தை உடைத்து பேச தொடங்கினர்.  "உனக்கு லண்டன்ல பார்த்த மாப்பிள்ளை பிடிக்கலை ன்னு கல்யாணத்தை நிறுத்திட்ட ன்னு கேள்விப்பட்டோம்.,     இப்ப லண்டன் போற வரைக்கும் இங்க...
    "கிளம்பிட்டேன் பாட்டி" என்று உள்ளே இருந்து மெதுவான குரலில் சத்தம் வந்தது.     அது மட்டுமல்லாமல் அவள் வெளியே வரவும் அவளுடைய அப்பா பாட்டியும் தாத்தாவும் வருவது தெரிந்தது.      அவர்கள் வருவதை பார்த்தவுடன் கலையை நிமிர்ந்து பார்க்க.,  கலையோ அவள் அம்மா அப்பாவையே வெரித்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.       போனில்  பேசிக் கொண்டாலும்,  எப்போதாவது விசேஷங்களுக்கு வருபவர்கள்...
    8 பாட்டி வீடு.,  விசேஷ வீட்டிற்கான அடையாளத்தோடு களைக்கட்ட தொடங்கி இருந்தது. வீட்டினர் இரண்டு நாட்களுக்கு முன்பாகவே வர தொடங்கி இருந்தனர்.     அனைவரும் வந்திருந்தாலும்.,  கிருஷ்ணாவும் நவீனும் மட்டும் இன்னும் வராமல் இருந்தனர்.     இவளும் யாரிடமும் எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை., தனக்கு எல்லாம் தெரிந்தது போலவும் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை.      அவளுக்குத் தெரியும், என்பது அனைவருக்கும் தெரியும் என்பதால்...
    "அது மட்டும் இல்ல அதோட உறவு முறிக்கிற மாதிரி நிறைய விடக்கூடாத வார்த்தைகள் எல்லாம் விட்டு சண்டை போட்டான்.,     நாங்க பேச்ச கூட விட்டுட்டு வந்துட்டோம், அப்பவும் அவனா தான் நான் பிசினஸ் பண்றதுக்கு கடன் வாங்கினேன்.,  ஏதோ சொந்தம் ன்ற நினைப்புல கொடுக்காம இருந்துட்டேன்., இப்ப வேணா, இத்தனை வருஷத்துக்கும் சேர்த்து வட்டி...
    7    பாட்டி தாத்தா வெளியே சென்றவுடன்., தன் வேலைகளை கை தன்போல செய்தாலும், மனம் முழுவதும் இரண்டு நாட்களுக்கு முன்பு பாட்டி சொன்ன விஷயங்களை அசை போட்டுக் கொண்டிருந்தது.     ஆனால் முகத்திலோ எதுவும் காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடி வளைய வந்தாள்.        அவர்கள் சென்ற சற்று நேரத்தில் காலை உணவை முடித்துக் கொண்டவள், வீட்டை சுற்றி...
    ஏன்னா சில நேரம் வீட்டை சுத்தி நடக்க ஆரம்பிச்சானா., எத்தனை தடவை சுத்தி நடக்குறானு பாக்குற நமக்கு தான் தெரியும்., அவளுக்கு தானா கால் வலிச்சா தான் வந்து உட்காரவே செய்வா, சாயங்கால நேரம்  அப்படித்தான் நடந்துகிட்டே இருக்கிறா.,  காலையில கொஞ்சம் ஓரளவுக்கு நடப்பா., ஆனா சில நேரம் அதுவும் ஒழுங்கா பண்ண மாட்டா.,...
    6      துளசியை தேடும் படலம் வீட்டில் தீவிரமாக நடந்து கொண்டிருந்தது.     ஏர்போர்ட் மட்டுமே அவளுக்கு தெரிந்த இடம், வேறு எங்கே என்று பார்த்தால், வேறு எதுவும் இல்லையே என்று சுற்றியுள்ள  பகுதிகளில் தேடியவர்கள், அவள் ஏர்போர்ட்டிற்கும் செல்லவில்லை என்று தெரிந்தவுடன் எங்கு போனால் என்று தெரியவில்லையே என்ற பயத்துடன் போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்  என...
    பாட்டி என்றவுடன்,படிக்காத வயதான கிராமத்து பாட்டி என்று நினைவோடு இருந்தால், அது தவறு அவர் சீரியலில் வரும் வில்லி பாட்டி போல அழகாக டிரஸ் செய்து கொண்டு வெளியே வந்திருந்தார்.       வீட்டில் வேலை பார்க்கும் பெண்ணை, "அலமேலு கொஞ்சம் இங்க வா", என்று அழைத்தார்.      அவரோ ஒரு ஆரத்தி தட்டோடு வர,  "கொஞ்சம் இருமா"...
    5        இருவரும் கடைக்குள் செல்ல,  "நவீன் துளசியை பத்திரமாக அனுப்பிட்டியா", என்று கேட்டார்.     "பத்திரமா அனுப்பியாச்சுமா, உங்க அண்ணன் பொண்ண", என்று பதில் அளித்தான் அவன்., அதே நேரம் குடும்பத்தில் பெரியவர்.,  "மாப்பிள்ளை நீங்க எதுவும் தப்பா நினைக்கலையே", என்று கேட்டார்.     "மாமா இதுல தப்பா நினைப்பதற்கு எதுவுமே இல்லை, அந்த பொண்ணு ஹெல்ப் கேக்கும்...
    அவர்கள் இருவரும் வெளியே வந்து சரியாக பின்வாசல் வரும் போது இவள் சற்று பதட்டத்தோடு அங்கு நிற்பதை பார்த்தவர்கள் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்துக் கொண்டனர்.        "மாப்பிள்ளை அந்த பொண்ணு பயந்து போய் நிக்குதுடா.,  வருவோமா ஹெல்ப் பண்ணுவோமா, மாட்டோமான்னு,  பாவம் என்ன பிரச்சனையோ., அவங்க அப்பா எந்தளவு கட்டாயப்படுத்தினாரோ யாருக்கு தெரியும்"., என்றான்.   ...
    4     நிச்சயதார்த்த புடவை செலக்ஷன் மும்மரமாக நடந்து கொண்டிருந்தது. தள்ளி நின்றவள் மெதுவாக நகரத் தொடங்கினாள்.     "துளசி இங்கே வா" என்ற அம்மாவின் அழைப்பில் பதறியவள் தன்னை நிதானப் படுத்திக் கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்.,      அவளைப் பார்த்தவர் வேகமாக அவள் அருகில் வந்து "ஏன் ஒரு மாதிரி இருக்க" என்றார்.     "ஆமா எங்க உங்க...
    பொண்ணுங்களுக்கு பாதுகாப்பே இல்லப்பா இந்த ஊர்ல' என்று யோசித்துக் கொண்டவள், 'எந்த ஊரிலும் பாதுகாப்பும் இல்லை' என்று நினைத்துக் கொண்டாள்.       பின்பு பத்திரமாக போக வேண்டும் என்றால்.,  'எவ்வளவு சாதாரணமாக கிளம்பி போகிறோமோ அவ்வளவுக்கு நல்லது' என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.       அப்போது அவளே அவள் மனதிற்கு தைரியம் சொல்லிக் கொண்டாள்.      அவள் தோழிகள்...
    3 வீட்டிற்கு வந்து நான்கு நாட்கள் கடந்த நிலையில் அப்பா அன்று அதிக உற்சாகமாக பேசிக் கொண்டிருந்தார்.  காலை உணவின் போது தான் அவர் உற்சாகத்தின் காரணம் தெரிந்தது.     மாப்பிள்ளை வீட்டினர் இன்னும் இரண்டு நாட்களில் வருவதாக சொல்லிக் கொண்டிருந்தார்.     அதன் பிறகு துணி எடுக்க கடைக்கு போக வேண்டும் என்றும், திருச்சியில் உள்ள பெரிய...
    error: Content is protected !!