ஒரு காதல் இடைவேளை
அத்தியாயம் 12
ஒட்டியாணத்தைக் கையில் எடுத்த நித்தியாவின் விழிகள் வியப்பில் குண்டு பல்பாய் விரிந்தது.
“இ..இது… இது…” எனத் திகைப்புடன் இழுக்க,
“ஆமா, இது… இது… அதே ஒட்டியாணம் தான்” எனச் சிரித்த ராமைக் கண்களில் காதல் வழியப் பார்த்தாள் அவன் மனைவி.
“என்னக்கா? நீயும் மாமாவும் ஏதோ ரகசிய பாஷை பேசிட்டு இருக்கீங்க? என்ன விஷயம்?” என்றாள் சத்யா.
“அது ஒண்ணுமில்ல...
ஒரு காதல் இடைவேளை
அந்தப் படப்பிடிப்புத் தளம் மிகவும் மும்முரமாய் இயங்கிக் கொண்டிருந்தது. கண்ணைப் பளிச்சிடும் விளக்குகளுடன் கல்யாண வீடு செட்டப்பில் அங்கங்கே மலர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. துணை நடிகையரும், நடிகர்களும் மேக்கப் போட்டுக் கொண்டிருக்க காமெரா மேன் பொசிஷன் சரி பார்த்துக் கொண்டிருந்தார். உதவி இயக்குனர்கள் அடுத்துப் பேச வேண்டியவர்களுக்கு வசனத்தைச் சொல்லிக் கொடுத்துக்...
அத்தியாயம் 3
திங்கள் கிழமை.
எல்லாம் முடிந்துவிட்டது.
இத்தனை நாள் தாம்பத்தியத்தை ஒரு ‘விவாக ரத்து’ அறிக்கை இனி இந்தத் திருமணம் செல்லுபடியாகாது என அவர்களின் திருமண பந்தத்திற்கு விலக்குக் கொடுத்து அறிவித்து விட்டது.
மணத்திற்கு வேண்டுமானால் கோர்ட்டும், சட்டமும் விலக்குக் கொடுக்கலாம். மனத்திற்கு விலக்கையோ, விலங்கையோ யார் கொடுப்பது? அது சதா சர்வ காலமும், ‘ராம், ராம்…’ என அவன் பெயரை...
ஒரு காதல் இடைவேளை
அத்தியாயம் 1
கையிலிருந்த செய்தித்தாள் காற்றில் படபடத்துக் கொண்டிருக்க, கனத்துப் போன இதயத்துடன், கண்ணில் திரையிட்ட கண்ணீருடன் பெரிய எழுத்தில் தலைப்புச் செய்தியாய் வந்திருந்த வார்த்தைகளை மீண்டும் ஒரு முறை வாசித்தாள் நித்யஸ்ரீ.
‘பரஸ்பர விவாகரத்து கோரி பிரபல திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான ராம்சரண் - நடிகை நித்யாஸ்ரீ நீதிமன்றத்தில் மனு’
கொட்டை எழுத்தில் வெளியாகியிருந்த செய்திக்குக்...
அத்தியாயம் 4
“தம்பி, சாப்பாடு எடுத்து வைக்கட்டுங்களா?” அறை வாசலில் நின்று கேட்ட ஜானகியிடம், “இப்ப வேண்டாம், அப்புறம் சாப்பிட்டுக்கறேன் மா…” என்றான் ராம்சரண்.
“நேத்தும் சரியா சாப்பிடவே இல்ல, இப்பவும் வேண்டாம்னு சொன்னா எப்படி தம்பி? பிரஷர் மாத்திரை வேற போடணும்ல”
“ம்ம்… பசிக்கல ஜானும்மா” என்றவனின் வாடிய முகமே அவன் மனதைச் சொல்ல ஜானகிக்கும் வேதனையாய் இருந்தது.
“எனக்குப்...
அத்தியாயம் 6
ஊருக்கு ஒதுக்குப் புறமாய் இருந்த தென்னந்தோப்பு ஒன்றில் தான் அன்று படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.
உணவு இடைவேளை நேரத்தில் அந்தப் படப்பிடிப்புத் தளமே கலகலத்துக் கிடந்தது. டெக்னீஷியன்கள் அவர்கள் குழுவுடன் ஒரு இடத்தில் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருக்க, துணை நடிகர்கள் ஒரு குழுவாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
அப்படத்தின் நாயகி நித்யஸ்ரீயும், நாயகன் ரவியும், டைரக்டர் பாஸ்கரும் ஒரு மேஜையைச்...
அத்தியாயம் 5
பழைய நினைவுகளில் ஆழ்ந்திருந்த ராமை அலைபேசியின் குரல் கலைத்துவிட அதை எடுத்தான்.
அக்கா ராஜலட்சுமி அழைத்திருக்க, எடுத்துக் காதில் வைத்தான்.
“சொல்லுக்கா”
“தம்பி, என்னய்யா இப்படிப் பண்ணிட்ட. நீங்க ரெண்டு பேரும் பிரியறதா சொன்னப்பகூட ஏதோ ரெண்டு பேருக்கும் மனஸ்தாபம், அந்தக் கோபத்துல சொல்லுறேன்னு நினைச்சேன். இப்ப நிஜமாலுமே பிரிஞ்சுட்டீங்களா?”
“ம்ம்… பிரிஞ்சுட்டோம் க்கா”
“ஊருல இருக்கற நிறையப் பேரு வாழ்க்கை...
அத்தியாயம் 9
நித்யா கேரளா சென்ற ஒரு வருடத்தில், தன் தோழி கீதாவின் கல்யாணத்திற்கு இரண்டு நாட்கள் சென்னை வந்திருந்தாள். மினிஸ்டர் சக்ரபாணியின் கட்சி நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாகை சூடி, அவர் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவி ஏற்ற போது ஒரு முறை நேரில் சென்று வாழ்த்தச் சென்றாள். அன்னை ரோகிணியும் அதன் பிறகு கட்சியில் பிஸியாகிவிட...