Saturday, July 5, 2025

    அநிருத்தன்

    அத்தியாயம் - 45 அன்று காலையில் தான் அவனுக்குத் திருமணம் முடிந்தது என்று யாரும் எண்ண முடியாதபடி புது மாப்பிள்ளைக்கான எந்த அடையாளமும் இல்லாமல் வெகு சாதாரணமான உடையில் மரசோஃபாவில் விநாயகம் அருகே அமர்ந்திருந்தான் ஷண்முகவேல். சினேகாவின் மாமாக்கள் இருவரும் எதிரே இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தனர். வரவேற்பறையை ஒட்டி இருந்த சின்ன அறையில் அவளுடைய அம்மா...
    அத்தியாயம் - 03 மதிய நேர உறக்கத்தில் இருந்த விஜயாவை கைப்பேசி எழுப்பியது. ஷண்முகமாக தான் இருக்க வேண்டுமென்று என்று எண்ணியபடி, உறக்கத்தோடு கைப்பேசியை உயிர்ப்பித்துக் காதில் வைத்து,”ஹலோ” என்று சொன்னவுடன்,”ஸாரி ம்மா..அவசரமா ஒரு மீட்டிங் போயிட்டு இருக்கேன்..அது எப்போ முடியும்னு தெரியலை..அஞ்சு மணி போல ஷர்மா வருவார்..அவரோட நீங்க கோவிலுக்கு போயிடுங்க..அங்கேயிருந்து அந்தக் கடைக்கு...
    அத்தியாயம் - 10 ‘ஸ்டேஷனுக்குப் போகலாம்..இன்ஸ்பெக்டர் அங்கே தான் இருப்பான்.’ என்று காசியப்பன் சொல்லிக் கொண்டிருந்ததைக் கேட்டபடி பின்கட்டிலிருந்து வந்த செந்தில் நாதனின் மனைவி மதி, காமராஜின் மனைவி ப்ரியா, பாண்டியனின் தங்கை வேணி மூவரும் அதிர்ச்சியாகினர். கூடத்தில் ஓர் ஓரமாக நின்றிருந்த மீனாட்சி, ஜோதி அருகில் போய் நின்று கொண்டனர். அதுவரை அறை வாசலில்...
    அத்தியாயம் - 4_1 ஸ்ட்டூல் மேல் ஏறி, கீழே குனிந்து என்று கடையில் வேலை செய்யும் நேரிடுவதால், இது போல் வாடிக்கையாளர்களோடு பேசி, பழக வேண்டிய சூழ்நிலை ஏற்படுவதால், அண்ணனின் வீட்டில் இருக்கும் அவளுடைய உடைக்கு மாறிக் கொள்வது வழக்கம். அதற்காகவே அவளின் உடைகளில் சிலவற்றை இந்த வீட்டில் நிரந்தரமாக வைத்திருக்கிறார் அவளுடைய அம்மா. ஜாகிங்கில்...
    அத்தியாயம் - 8 கணவர் உயிரோடு இருந்திருந்தால் மனோகரின் காதல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருப்பாரா? என்ற கேள்விக்கு எத்தனை முறை பதில் தேடினாலும் ‘தெரிவித்திருக்கலாம்’ என்ற ஒரே பதில் தான் ஜோதிக்கு கிடைக்கிறது. அதே போல்,’கணவர் அப்படிச் செய்திருப்பாரா?’ என்ற கேள்விக்கு எத்தனை முறை பதில் தேடினாலும்,’செய்திருக்கலாம்’ என்று அவருக்கு விடை கிடைக்க, ‘செய்திருக்க மாட்டாங்க’...
    அத்தியாயம் - 18-1 அம்மா, சினேகாவின் உதவி, புரிதல் இல்லையென்றால் ஷிக்காவிற்கும் அவனிற்கும் இடையே இருந்த பேதங்கள் அவர்களை எப்போதோ பிரித்திருக்கும். அவனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். காதலிக்கும் போது அவனும் ஷிக்காவும் உணர்ந்தது கல்யாணத்திற்கு பின் அவர்கள் உணர்வது முற்றிலும் வேறாக இருந்தது. அதாவது அவர்களுக்கிடையே இருக்கும் அன்பு  பலமடங்கு பெருகியிருந்தாலும் அவர்களின்...
    அத்தியாயம் - 54 மாலை நேரத்தில் ஷேர் ஆட்டோவிற்காக கூட்டம் கூட்டமாக மக்கள் காத்திருக்க,“இந்தப் பக்கம் வந்திடு.” என்று வசந்தியின் கையைப் பிடித்து இழுத்து அவரின் இடதுப் பக்கம் அழைத்துக் கொண்டார் ஜோதி. கடந்த மூன்று மாதங்களாக வசந்தி தில்லிவாசியாகி இருந்தாலும் முதல் மாதம்  முழுவதும் வீட்டை விட்டு நகரவேயில்லை. வீட்டு வேலைகள் செய்தபடி வீட்டிற்குள்ளேயே...
    அத்தியாயம் - 12-1 சற்றுமுன் சமாதானம் செய்து கொள்ள வேண்டுமென்று மகள் சொன்ன போது அடங்க மறுத்த மனசு இப்போது மகன் சொன்னதைக் கேட்டதும் முற்றிலும் முடங்கிப் போனது. அவரின் சம்மதத்தை கேட்கவில்லை அவருக்குத் தகவல் மட்டும் கொடுக்கிறான் மகன் என்று உணர்ந்த போது உடலில் பாரம் ஏறிப் போன உணர்வு ஜோதிக்கு. சினேகாவின் எதிர்காலத்தை...
    அத்தியாயம் -  46 2 ‘எது?’ என்று கேட்காமல் அவன் சொன்ன உப்புச்சப்பு இல்லாத காரணத்தை தான் சொல்கிறான் என்று புரிந்தாலும் அதற்குப் பதில் அளிக்காமல், அவனது கட்டளைக்கு அடிபணியாமல் அப்படியே நின்று கொண்டிருந்தான் காசியப்பன். அசையாமல், அசராமல் அவனையே பார்த்துக் கொண்டிருந்தான் ஷண்முகம். என்ன நடக்கப் போகிறதோ என்ற அனைவரின் பதற்றத்தை காசியப்பனின் கைப்பேசியிலிருந்து...
    அத்தியாயம் - 13 -1 தொண்டை ஒரு மாதிரி கரகரவென்று இருந்ததால் சாதாரண தேநீருக்குப் பதிலாக இஞ்சி போட்ட தேநீரோடு சோபாவில் விஜயா அமர்ந்த போது பக்கவாட்டு மேஜையில் இருந்த அவரது கைப்பேசி ஒலித்தது. அழைத்தது அவருடைய அக்கா மகாலக்ஷ்மி.  காணொளி அழைப்பை ஏற்றவுடன்,“விஜி, டீ குடிக்கறேயா?” என்று அவர் கையிலிருந்த தேநீர் கோப்பையப் பார்த்து விசாரிக்க,  “ஆமாம்...
    அத்தியாயம் - 30 நவராத்திரி என்பதால் வீட்டிற்கு அருகே இருந்த கோவிலுக்கு வந்திருந்தாள் வசந்தி. விஜயா அனுப்பியிருந்த புடவையை உடுத்தியிருந்தாள். வெகு நாள்களுக்குப் பிறகு மனத்தில் ஓர் உற்சாகம். புதுப் புடவையின் மாயமாக இருக்குமென்று எண்ணிக் கொண்டாள். அவளது அந்த எண்ணத்தை மெய்ப்பிப்பது போல், “புதுப் புடவையா வசந்தி? உனக்கு ரொம்ப பொருத்தமா இருக்கு எங்கே வாங்கின?”...
    அத்தியாயம் - 27 அவளது கைப்பேசி அழைப்பு நின்று போனதும் சமையலறையிலிருந்து வெளியே வந்த வசந்தி அவள் சார்பாக யாரிடமோ அவள் பிஸியாக இருப்பதாக வெங்கடேஷ் சொன்னதைக் கேட்டு மீண்டும் சமையலறைக்குள் சென்று விட்டாள். யாரென்று அவனிடம் கேட்டால்,’இந்த நேரத்துக்கு ஃபோன் வருது..நான் இல்லாத போது இப்படித் தான் கண்ட கண்ட நேரத்திலே கால் பேசிட்டு...
    அத்தியாயம் - 53 ஒரு கணவனை இப்படியும் அவமானப்படுத்த முடியுமென்று அவனுடைய வீட்டில், அவனின் கண் முன்னால் நடந்ததைப் பார்த்த பின்னரும் ராதிகாவின் கணவனால் அதை நம்ப முடியவில்லை. அதுவும் தாலியை துச்சமாக கருதி வசந்தி அதை தூக்கி எறிந்ததை அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை. சில மாதங்களில் விவாகரத்தில் முடிய இருந்த திருமணம் இப்படி...
    அத்தியாயம் - 57-1 இந்த ஊருக்கு வந்து சில மாதங்கள் தான் ஆகியிருந்தது. கடை, வீடு என்று ஒரளவிற்கு ஊரை தெரிந்து வைத்திருந்தாலும் தனியாக கடைக்குச் சென்று பொருள்கள் வாங்கும் அளவிற்கு திறமைசாலியாகி விட்டாளா? என்ற கேள்வி எழ, ‘இல்லை’ என்ற பதில் தான் கிடைத்தது வசந்திக்கு. சித்தியுடன் தான் சென்று வாங்க வேண்டும். அவரை...
    அத்தியாயம் - 55-1 மரியாதையில்லாமல் வெங்கடேஷைப் பற்றி பேசியதே வசந்தியின் நிலைப்பாட்டை அவர்களுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும்.  என்ன நடந்தாலும் எப்படியாவது வசந்தியை அவளுடைய கணவனிடம் சேர்ப்பித்திட வேண்டுமென்ற முடிவோடு புறப்பட்டு வந்தவர்களிடம் அது போய் சேரவில்லை. “நீ செய்து வைச்சிருக்கற வேலைக்கு உன்னை வேலைக்காரியா வைச்சுக்கிட்டாலே பெரிசு..எப்படியோ அவர் வீட்லே நீ இருந்தா எங்களுக்குப் போதும்.”...
    அத்தியாயம் - 47-1 கணவருக்கு காலை உணவு பரிமாறியபடி,“என்ன டா இன்னைக்கு ஆபிஸ் போகலையா? வீட்லேர்ந்து வேலை செய்யப் போறேயா?” என்று கேட்டார் சீதா. வரவேற்பறை சோஃபாவில் அமர்ந்திருந்த வெங்கடேஷிடமிருந்து பதில் வரவில்லை. ஏதோ யோசனையில் பால்கனியைப் பார்த்துக் கொண்டிருந்தான். ராதிகாவின் அறையிலிருந்து குழந்தைகளின் சத்தம், அவளின் அதட்டல் என்று காலை நேரப் பரபரப்பில் வீடு இருக்க...
    அத்தியாயம் - 50 அவனது கேள்வியில் அன்றைய இரவிற்குப் பயணம் செய்தவள் அது ஏற்படுத்திய தாக்கத்தைத் தாங்க முடியாமல் கட்டிலில் அமர்ந்தாள். அந்தக் கேள்வி எதற்கு? அது எங்கே போகிறது? என்று அவளுக்குப் புரிந்தாலும் அதற்கு உண்மையான பதிலைக் கொடுக்க முடியாமல் அமைதி காத்தாள் சினேகா. ‘தாலி’ என்ற வஸ்த்துவைப் பற்றி தனிப்பட்ட கருத்தை உருவாக்கக்...
    அத்தியாயம் - 58 “மதன்” என்ற அனிதாவின் அழைப்பில் அவரது சிந்தனையிலிருந்து வெளி வந்த மதன்,”சொல்லுங்க.” என்றார். “நீ தான் சொல்லணும் மதன்..என்ன நடக்குது?” என்று மீண்டும் கேட்டார். அதற்கு, “என்னமோ நடக்குது அண்ணி..என்னென்னு புரியலை..அவ தான் காரணம்ன்னு தோணுது.” என்று அந்த அவளின் பெயரைச் சொல்லாமல் உண்மையான பதிலை அளித்தார் மதன். அதைக் கேட்டு அனிதாவின் முகத்தில் புன்னகை...
    அத்தியாயம் - 21-1 “கொஞ்ச நாள், கொஞ்ச நாள்னு நிறைய நாள் ஆகிடுச்சு விஜயாம்மா..இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா தில்லிலே குளிர் பிச்சிட்டுப் போகும்..அப்போ எப்படியும் சென்னைக்கு பறந்து வரத் தான் போறீங்க.” என்று கேலி செய்தாள் நித்யா. “அப்படி எதுவும் நடக்காது..இங்கே இருக்கறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா? வெய்யிலைச் சமாளிக்கற மாதிரி குளிரையும் சமாளிக்கக் கத்துக்க...
    அத்தியாயம் - 46-1 ஷண்முகம் சொன்னது சரியாக காதில் விழுந்திருந்தாலும் விழுந்ததைக் காசியப்பனால் நம்ப முடியவில்லை. எனவே,”என்ன சொன்ன?” என்று அழுத்தமான குரலில் கேட்க, சோஃபாவில் சாய்ந்தமர்ந்து, அசால்ட்டாக,”உன் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள் சொன்னேன்.” என்று பதிலளித்தான். செல்வத்தின் கையை உதறி விட்டு,“டேய் என் ஃபோனை கொடு டா.” என்று அடியாளிடமிருந்து அவனது கைப்பேசியைப் பெற்றுக் கொண்டவன்,...
    error: Content is protected !!