அநிருத்தன்
அத்தியாயம் - 26
வீட்டிற்குள் நுழைந்ததுமே,”சாமி, சீக்கிரமா டிரெஸ் மாத்திட்டு வாங்க..சாப்பாடை முடிச்சிட்டு எல்லோருக்கும் ஃபோன் போட்டு புடவை வாங்கி இருக்கற விஷயத்தை சொல்லிடலாம்.” என்றார் விஜயா.
அவனது கைக்கடிகாரத்தில் நேரத்தைப் பார்த்தவன்,”அக்கா இரண்டு பேருக்கும் இப்போவே ஃபோன் போடுங்க ம்மா..சாப்பாட்டை முடிச்சிட்டு அவங்களோட பேசறது சரி வராது..சாப்பாடு முடிச்சிட்டுப் சிந்துவோட பேசலாம்..அவங்க டைம்முக்கு கரெக்ட்டா இருக்கும்..பெரியப்பாகிட்டே...
அத்தியாயம் - 25 -1
“அரசாங்கத்திலே பெரிய பதவிலே இருந்தும் அந்தத் தம்பிக்கு இன்னும் கல்யாணம் ஆகலை போல..ஒருவேளை அதுக்கு தான் அவங்க அம்மாவை இங்கே அழைச்சிட்டு வந்து கூட வைச்சிருக்குதோ அந்தத் தம்பி..பொண்ணுக்கு தில்லி தான் சொந்த ஊரா? விஜயாம்மா பாவம்..தில்லி பொண்ணோட எப்படி மல்லுக்கட்டப் போறாங்களா?” என்ற பேச்சு சினேகாவை எரிச்சல்படுத்த,
“உங்களுக்குக் கல்யாணத்தை...
அத்தியாயம் - 25
உறவை மீட்டெடுத்தாகி விட்டது என்று நிம்மதி பெருமூச்சு விடுமுன் டக்கென்று அவளது வாயிலிருந்து வந்த வார்த்தைகளைக் கேட்டு விஜயா ஆன்ட்டியின் முகம் வாடிப் போனதை பார்த்த சினேகாவின் மனமும் வாடிப் போனது. ‘உன் மேலே நம்பிக்கை இல்லாமயா அம்மா, மகன் இரண்டு பேரும் புடவை செலெக்ஷனை உன் கையிலே விட்டாங்க.’ என்று...
அத்தியாயம் - 24 1
“சரியா சொன்ன கண்ணு..நான் கூட அவளை மறந்திட்டேன்..பிள்ளைத்தாச்சியா வேற இருக்கா..எல்லோருக்கும் பொருந்தற மாதிரி நீயே எடுத்துக் கொடு..இந்தா அவங்களோட ஃபோட்டோ.” என்று அக்காவின் மகள்கள் மூவரும் இணைந்து இருந்த புகைப்படம் ஒன்றை அவரது கைப்பேசியில் திரையில் காட்டினார் விஜயா.
புகைப்படத்தில் வசந்தி விறைப்பாக நின்றிருக்க, ஜெயந்தியும் சிந்துவும் புன்னகைத்துக் கொண்டிருந்தனர். புகைப்படத்தைப்...
அத்தியாயம் - 24
ஜோதியின் பேச்சு ஓய்ந்தவுடன் அந்த இடமே அமைதியானது. அவருடைய ஆதங்கம், ஆத்திரம், அங்கலாய்ப்பு அனைத்திற்கு என்ன எதிர்வினை ஆற்றுவது என்று விஜயாவிற்குத் தெரியவில்லை. ஆறுதல் சொல்லும் அளவிற்கு அறிமுகம் இல்லாததால் அமைதியாக இருந்தார். அவர் சொன்னதை உள்வாங்கிய ஷண்முகமும் அவனுடைய அம்மாவைப் போல் அமைதியாக தான் இருந்தான். அந்த அமைதி தான்...
அத்தியாயம் - 23
கை சொடுக்கும் இடைவெளியில் முகத்திலிருந்து கால் வரை பலரை அலசி ஆராயந்து செயல்படும் மகனின் திறமை அம்மாவிற்கு கிடையாது. மகனின் தன்னிலை விளக்கத்தை கேட்டு சினேகாவின் எதிர்வினையை ஓரளவிற்கு விஜயாவின் மனது ஏற்றுக் கொண்டிருந்தாலும் அவரது மனத்தின் அலைப்புறுதல் ஓய்ந்தபாடில்லை. இன்றும் வலுக்கட்டாயமாக அவரைக் கடைக்கு அழைத்து வந்திருந்ததால் அவரது முகத்தில்...
அத்தியாயம் - 22-1
அதுவரை பொறுமையாக இருந்த அந்த இளைஞன்,”ஆன்ட்டி” என்று ஜோதியை அழைத்து, அவனது கைப்பேசித் திரையைக் காட்டி ஹிந்தியில் ஏதோ சொன்னான். அவனது கைப்பேசியைத் தீவிரமாக சில நொடிகளுக்குப் பார்த்த ஜோதி,”ஆன்லைன்லே வாங்கிக்கோங்க.” என்று இரண்டே வார்த்தைகளில் நிர்தாட்சண்யமாக பதில் கொடுக்க,”டீக் ஹே ஜி” என்று சொல்லி விட்டு வெளியேறி விட்டான் அந்த...
அத்தியாயம் - 22
கடையின் வாசலை பெருக்கி விட்டு, வெளியே இருந்த விளக்கை போட்டு, கண்ணாடிக் கதவைச் சாத்திக் கொண்டு கையில் துடைப்பத்துடன் உள்ளே சென்றார் ஜோதி. வீட்டுக்கு செல்லும் கதவைத் திறந்து அதற்குப் பின்னால் துடைப்பத்தை வைத்து விட்டு வரவேற்பறை விளக்கை ஒளிர விட்டு, கதவைச் சாத்தி விட்டு கல்லாவில் வந்தமர்ந்து கொண்டார். சில...
அத்தியாயம் - 21-1
“கொஞ்ச நாள், கொஞ்ச நாள்னு நிறைய நாள் ஆகிடுச்சு விஜயாம்மா..இன்னும் கொஞ்ச நாள் போச்சுன்னா தில்லிலே குளிர் பிச்சிட்டுப் போகும்..அப்போ எப்படியும் சென்னைக்கு பறந்து வரத் தான் போறீங்க.” என்று கேலி செய்தாள் நித்யா.
“அப்படி எதுவும் நடக்காது..இங்கே இருக்கறவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா? வெய்யிலைச் சமாளிக்கற மாதிரி குளிரையும் சமாளிக்கக் கத்துக்க...
அத்தியாயம் - 21
பிரகாஷின் தில்லி விஜயம் நடந்து கிட்டதட்ட ஒரு மாதமாகி இருந்தது. அந்த விஜயத்திற்குப் பின் பிரகாஷின் சொல்வளத்திலிருந்து போலீஸ்க்காரன் என்ற வார்த்தை நிரந்தரமாகக் காணாமல் போயிருந்தது. அதே சமயம் அந்த ஒரு மாதத்தில் மகன் மீது சினேகாவிற்கு ஏற்பட்ட தவறான அபிப்பிராயமானது அவள் மீது தவறான அபிப்பிராயத்தை விஜயாவின் மனத்தில் ஏற்படுத்தியிருந்தது....
அத்தியாயம் - 20 - 1
அதில் தலையை உயர்த்திய பிரகாஷ், குற்றம் சாட்டும் அவளது பார்வையைச் சந்திக்க முடியாமல் உடனேயே பார்வையைத் தாழ்த்திக் கொள்ள,”அவன் போலீஸ்காரனில்லை கண்ணு.” என்று சொல்லி பிரகாஷிற்கு ஷாக் கொடுக்க, டக்கென்று தலையை உயர்த்தி அதை வெளிப்படுத்தினான் பிரகாஷ்.
அதற்கு சினேகா எதிர்வினை ஆற்றும் முன்,”அத்தை என்ன உளர்ற?” என்று ஏகவசனத்தில்...
அத்தியாயம் - 20
கேமரா கண் வழியாக பார்க்காமல் நேரடியாக பிரகாஷைப் பார்த்த நொடியில் அவனது கள்ளத்தனம் உறுதியாக சினேகாவின் மனம் உலைக்களமானது. எதிரில் இருந்தவனை கண்களால் எரித்தவளின் மனது அவளுக்குத் தெரியாமல் அவளைக் கேமரா வழியாக நோக்கியிருந்தவனைப் பஸ்மமாக்கும் அளவிற்கு பொங்கியது. அன்று சத்தம் செய்யாமல் கடையினுள் ஷண்முகம் நுழைந்தது இன்று திருட்டுத்தனமாக நுழைந்தது...
அத்தியாயம் - 19-1
அந்தப் பதில் சரியான பதில் தானலென்றாலும் அதில் ஏதோ தப்பாக இருக்கிறது என்று உணர்ந்த சினேகாவிற்கு அது என்ன என்ற ஆராய்ச்சியில் இறங்க அவகாசம் கிடைக்கவில்லை. ,”ஷண்முகவேல் என்னோட மகன் கண்ணு..அன்னைக்கு வந்திருந்தானே.” என்றார் விஜயா.
“யெஸ்..அன்னைக்கு கடைக்கு வந்திருந்தாங்க..நியாபகமிருக்கு.” என்று சினேகா சொல்ல அதற்கு அடுத்து அந்த உரையாடல் எந்தப் பாதையில்...
அத்தியாயம் - 19
பெருக்கி சுத்தம் செய்திருந்தாலும் கடை கந்தகோளமாக இருந்தது. கல்லாவில் ரசீதுகள் இறைந்து கிடந்தன. கௌண்டர் மீது துணிகள் குமிந்து கிடந்தன. மொத்தத்தில் சுலபமான வேலையை அவன் பங்காக செய்து விட்டு கடினமானதை சினேகாவிடம் தள்ளியிருந்தான் மனோகர். அவளுடைய மடிக்கணினியோடு கல்லாவில் போய் அமர்ந்து கொண்ட சினேகா, முந்தைய தினத்தின் ரசீதுகளை ஒரு...
அத்தியாயம் - 18-1
அம்மா, சினேகாவின் உதவி, புரிதல் இல்லையென்றால் ஷிக்காவிற்கும் அவனிற்கும் இடையே இருந்த பேதங்கள் அவர்களை எப்போதோ பிரித்திருக்கும். அவனது திருமண வாழ்க்கை தோல்வியில் முடிந்திருக்கும். காதலிக்கும் போது அவனும் ஷிக்காவும் உணர்ந்தது கல்யாணத்திற்கு பின் அவர்கள் உணர்வது முற்றிலும் வேறாக இருந்தது. அதாவது அவர்களுக்கிடையே இருக்கும் அன்பு பலமடங்கு பெருகியிருந்தாலும் அவர்களின்...
அத்தியாயம் - 18
மனோகர் கதவைத் திறப்பதற்குள் விடாமல் அழைப்பு மணியை அழுத்திக் கொண்டிருந்தாள் சினேகா.
“வரேன்..வரேன்.” கத்தியபடி வேகமாக வந்து கதவைத் திறந்தவனைத் தள்ளிக் கொண்டு வீட்டினுள்ளே வந்தவள், அங்கே இருந்த நாற்காலி மீது அவளது லேப் டாப் பேக்கை தொப்பென்று போட்டு விட்டு, வாசல் கதவிற்கு நேரெதிரே இருந்த ஆளுயரக் கண்ணாடியில் தலை முதல்...
அத்தியாயம் - 17
விஜயாவின் அதிர்ச்சியைப் பார்த்து வேகமாக வந்த ஷண்முகம், வாசலில் நின்றிருந்த பிரகாஷைப் பார்த்து,”என்ன டா இப்படி திடீர்னு வந்து நிக்கற?” என்று கேட்டபடி சங்கிலியை விடுவித்து வாசல் கதவை முழுவதுமாகத் திறந்தான்.
பெரிதாக புன்னகை சிந்தியபடி,“என்ன அத்தை என்னைப் பார்த்து அப்படியே அதிர்ச்சியாகிட்டே? போலீஸ் வீட்லே தலைமறைவா இருந்தா கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சேயா?”...
அத்தியாயம் - 16
அம்மாவின் அலைப்புறுதலை உணர்ந்தவன், அதைச் சரி செய்யும் பொருட்டு,”.ஒரு வாக்கிங் போயிட்டு வரலாமா? உப்பும்மா செய்திட்டீங்களா?” என்று வினவினான்.
“ஆச்சு..சட்னி மட்டும் தான் அரைக்கணும்.” என்றார் விஜயா.
“அதுக்குள்ளே எப்படி ம்மா செய்தீங்க?” என்று அவன் ஆச்சிர்யப்பட,
“அது சாமி கஞ்சிக்காக அரிசி உடைச்சு வைச்சிருந்தேனில்லே அதையே போட்டு கிளறி வைச்சிட்டேன்.” என்று விஜயா விளக்கம்...
அத்தியாயம் - 15 - 1
விஜயா தில்லிக்குப் போகப் போகிறார் என்று தெரிந்தவுடன் ஜெயந்தி, வசந்தி இருவரும் மாறி மாறி,’என்ன சித்தி இப்படித் திடீர்னு முடிவு எடுத்திட்டீங்க..என் வீட்டுக்கு வாங்க.’ என்று இருவரும் அவரது மனசை மாற்ற முயல, விஜயாவும் கொஞ்சம் போல் கரைய ஆரம்பித்தார். பெற்றோர் இருவரும் வீட்டில் இல்லாமல் முக்கியமாக அவனுடைய...
அத்தியாயம் - 15
மகாவுடன் விஜயா பேசிக் கொண்டிருந்த போது மீண்டும் அதே இலக்கிலிருந்து அழைப்பு வர,”அக்கா, அதே நம்பர்லேர்ந்து ஃபோன் வருது..யாரா இருக்கும்?” என்று அவரிடம் கேட்க,
“இரண்டு முறை ஃபோன் செய்யறாங்கண்ணா உனக்கு தெரிஞ்சவங்களா தான் இருக்கும்.” என்றார்.
“எனக்கு தெரிஞ்சவங்களா?” என்று உரக்க யோசனை செய்த போது அழைப்பு நின்று போனது.
“ஆமாம்..நம்ம சொந்தக்காரங்களா கூட...