Wednesday, June 18, 2025

    Un Paarvai Naanarivaen

    20 அரவிந்தும், கீர்த்தியும் பேசிக் கொள்வது மிகவும் குறைவு. அரவிந்த் ஏதாவது கேட்டாலும் கீர்த்தி பதில் பேச மாட்டாள். ஏதாவது அவசியமாக குழந்தையின் பொருட்டு பேச வேண்டும் என்றாள் மட்டும் பேசுவாள். இப்படியே ஆறு மாதந்கள் ஒடிவிட்டன. இப்போது குழந்தைக்கு எல்லோர் முகமும் நன்றாக அடையாளம் தெரிவதால் அம்மு கீர்த்தியை விட்டுப் பிரிவதேயில்லை. அம்மு உறங்கும் நேரமே. கீர்;த்தி...
    19 “கார்ட் எதுவும் கொடுக்கலையே டாக்டர்” என்றாள் கீர்த்தி. “வெளில கார்ட் இருக்கும் நீங்க போய் வாங்கிட்டு வந்துடுங்க சார்” என்றார் டாக்டர். அரவிந்த் கார்ட் போடுவதற்காக வெளியே போக, அந்த சந்தர்ப்பத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டாள் கீர்த்தி. “டாக்டர் இந்தக் குழந்தை எய்ட் மந்த்ஸ்ல பொறந்த ப்ரீ மெச்சூர்ட் பேபியா டாக்டர்” என்று கேட்டாள். “இல்லையேம்மா, அப்படிப் பார்த்தா தெரியலையே”...
    18 சிதம்பரம் மெதுவாக, “இந்தக் குழந்தையோட அம்மா” என்றார். “அவ வரமாட்டா, நானும் அவளும் பிரிஞ்சிட்டோம், அதனால தான் குழந்தையை என்கிட்ட குடுத்துட்டு அவ விலகிட்டா” என்றான். அவளருகில் வந்த கீர்த்தி, “இல்லை, நான் நம்பமாட்டேன் பொய் சொல்றீங்க நீங்க, நீங்க என்னை ஏமாத்தமாட்டீங்க.” “இல்லை கீர்த்தி. நான் உன்னை ஏமாத்தலை, நீதான் என் மனைவி, அதே மாதிரி இதுவும்...
    17 அழகு தேவதையாக இருந்தால் குழந்தை, சற்று லிசாவை கொண்டு, சற்று தண்டபாணியை கொண்டு, அவள் அன்னையின் கலரோடு, தண்டபாணியை போல் கருகருவென்ற முடியோடு, ஒரு ஆங்கிலோ-இந்திய கலவையாக இருந்தாள் குழந்தை இந்து. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பாளோ லிசா என்று பயந்து கொண்டே இருந்தான். ஆனால் அவள் அங்கே இருந்த சிஸ்டர் சொன்ன விதத்தில் பவுடர் பாலே...
    16 அவர்கள் இருவரும் ரூமை விட்டு வெளியே வந்ததே, குளித்து முடித்து ப்ரெஷ் ஆக தான். வீடே அமைதியாக இருந்தது. கல்யாண அலுப்பில் இருந்து இன்னும் யாரும் வெளியே வரவில்லை போல. மணி பார்த்தால் ஏழு என்றது. கீர்த்தியே உள்ளே சென்று இருவருக்கும் வேண்டியதை குடிக்க தயாரித்து எடுத்து வந்தாள். “நல்லாதான் இருக்கு உன் டீ கீர்த்தி, ஆனால்...
    15 கீர்த்தி அவன் பார்வையிலேயே சற்று திருப்தியாகி இருந்ததால், மேலும் எதுவும் கேட்கவில்லை. நடக்க வேண்டிய சடங்குகள் எல்லாம் விமரிசையாக நடந்தன. அரவிந்திற்கு உடனே லண்டன் போக வேண்டும் போல இருந்தது. கல்யாணம் முடிந்தவுடன் அடுத்த நாளே டிக்கெட் இருக்குமா என்று பாருங்கள் என்று ட்ராவல் ஏஜன்சிக்கு போன் செய்தான். அது எவ்வளவு விலையானாலும் பரவாயில்லை. உடனே...
    14 அவன் வந்து ஒரு வாரம் பொறுமையாக இருந்த அவன் தந்தை, அரவிந்திடம் அவன் திருமணப் பேச்சை ஆரம்பித்தார். “அரவிந்தா, அந்த தண்டபாணியோட அப்பா ரொம்ப மனசொடிஞ்சு போயிட்டார்டா. இப்போ எங்கயும் வேலைக்குக் கூடப் போறதில்லை. வீட்டோட தான் இருக்கார் போல… ஏதோ உங்க கல்யாண விஷயம் பேசுனா, மனுஷன் கொஞ்சம் தேறுவாரோ என்னவோ… ஏற்கனவே அவங்கண்ணன்...
      13 தண்டபாணி இல்லாத தனிமையில் அரவிந்திற்கு ஹரிஷின் நட்பு, ஒரு சிறு மருந்தாய் அமைந்தது. ஹரிஷ{ம் நன்றாகப் பழகினான் தான். ஆனால் அதில் நிறைய அவனுடைய பேச்சுகள் லிசாவையே குறிக்கும். இந்த அவனுடைய செயல்களே ஹரிஷ் லிசா மீது கொண்ட காதலை உணர்த்தின. அன்றிரவே லிசாவின் அன்னையுடன் பேசினான். குழந்தையைப் பற்றி… குழந்தை பிறக்கும் முன்பே தன்...
    12 தண்டபாணியின் உடலோடு சென்னை செல்வதா இல்லையா என்று அரவிந்திற்கு பெருங்குழப்பமாக இருந்தது. இங்கே லிசாவின் அம்மா, குழந்தையை எதுவும் செய்யமாட்டோம் என்று சொன்னாலும் நம்ப மனம் மறுத்தது. அதனால் உடலை மட்டும் அனுப்பிவிட்டு தன் விசா காலாவதி ஆகும் வரை அங்கேயே இருக்கலாமா என்று யோசித்துக் கொண்டு இருந்தான். தங்குவது பிரச்சனையில்லை, தண்டபாணியின் வீடு இருக்கிறது....
    11 காச் மூச் என்று சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. எதையும் சட்டை செய்யாமல் படியில் அமர்ந்து கொண்டான் அரவிந்த். ஆயாசமாக இருந்தது. தண்டபாணி தன்னுடைய வாழ்க்கையை சிக்கலாக்கிக் கொண்டது போலத் தோன்றியது. இந்த விஷயமெல்லாம் தனக்குத் தெரிந்தும் கீர்த்தியிடம் மறைப்பது… அது மிகவும் குற்றவுணர்ச்சியைக் கொடுத்தது. சிறிது நேரம் கழித்து இவன் அருகில் வந்தமர்ந்தான் தண்டபாணி. அரவிந்த்...
    10 லண்டன் போவதற்கு நிறைய விஷயங்கள் அரேஞ்ச் செய்ய வேண்டி இருந்ததால்… ஷோரூம் பக்கம் எட்டிப் பார்க்கக் கூட நேரமில்லை அரவிந்திற்கு… அவன் கிளம்புவதற்கு முன் தினம் தான் அங்கே அவனால் வர முடிந்தது. கீர்த்தியை கண்களில் நிரப்ப ஆரம்பித்தான். “நாளைக்குக் கிளம்பறேன் கீர்த்தி” என்றான் விடாமல் அவளையே பார்த்தவாறு. “சரி” என்பது போலத் தலையசைத்தாள். வேறு என்ன பேசுவது...

    Un Paarvai Naanarivaen 9

    0
    9 “என்னவோ கோபம் போ… அதெல்லாம் சொல்ல முடியாது” என்றாள் குழந்தைதனமாக… வேலையில் ஏதாவது பிரச்சனையாக இருக்கும்… நிறைய வேலை வாங்குகிறார்களோ என்னவோ… அதனால் கோபமாகப் பேசுகிறாள் போல என்று தான் தண்டபாணிக்குத் தோன்றியது. விருப்பம், திருமணம் என்றெல்லாம் அவன் சிறிதளவு கூட யோசிக்கவில்லை. என்னை நம்புங்க என்று அரவிந்த் எல்லோரிடமும் சொல்லும் நம்பிக்கையை நிறைய அரவிந்த் மேல்...

    Un Paarvai Naanarivaen 8

    0
    8 தன்னுடைய தந்தையே இவ்வளவு சப்போர்ட் செய்கிறார் என்றால் நிச்சயம் நல்ல பொண்ணாகத்தான் இருப்பாள் என்று நளினிக்குத் தோன்றியது. அதனால் அவளை பார்க்கும் ஆர்வமும் பெருகியது. “உங்களுக்கு ஓ.கே. வாப்பா” என்றாள் நளினி. “பெரிசா ஒண்ணும் அப்ஜக்ஷன் இல்லைம்மா. நம்ம ஆளுங்க தான்னு எனக்கு நிச்சயம் தெரியும். வேலைக்கு எடுக்கும்போதே அதைப் பார்த்துதான் எடுத்தேன். ஹே… குடும்பம், அவங்களுக்கு...

    Un Paarvai Naanarivaen 7

    0
    7 அவளே தண்டபாணிக்கு அழைத்தாள். இந்த நேரத்தில் அழைக்க மாட்டாளே என்று பதறிய தண்டபாணி அவனே அழைத்தான். “என்ன கீர்த்தி” என்று பதட்டத்தோடு கேட்க… “ஒண்ணுமில்லை அண்ணா” என்றாள் அவசரமாக… “உன்கிட்ட பேசணும் போல தோணிச்சு அண்ணா.” “என்ன விஷயம் சொல்லுடா” என்றான் வாஞ்சையாக… அழைத்ததென்னவோ அரவிந்த் ப்ரபோஸ் செய்ததைப் பற்றிக் கூறத்தான்… ஆனால் மனம் அதைச் சொல்ல கூச்சமாக உணர்ந்தது. “ஒண்ணுமில்லை...
    6 பெரும் குழப்பத்தில் ஆழ்ந்தான் அரவிந்த்… தான் வனஜாவை திருமணம் செய்வதா. திருமணம் என்றதுமே அவன் முன் கீர்த்தியின் முகம் மின்னி மறைந்தது. அவன் உணர்ந்தான், கீர்த்தியை அவனுக்குப் பிடித்திருந்ததை. ஆனால் அது சரி வருமா என்று தெரியவில்லை. அவளுக்கு தன்னைப் பிடிக்குமா தெரியவில்லை. கீர்த்தியை அவனுக்கு மிகவும் பிடித்தது. அது திடீரென்று இப்போதுதான் தோன்றியது. முன்பெல்லாம் அவன்...
    5 அன்றிலிருந்து ஷோரூமிற்கு வந்தால், கீர்த்தியோடு பேசமாட்டான். வெறும் பார்வை பரிமாறல் மட்டுமே. கீர்த்தியும் அவனோடு பேச விழையவில்லை. அவளுக்கு நிச்சயமே, அவன் தவறு செய்கிறான், அந்த மாதிரியான நடத்தையால் என்று. அதனால் அவன் உணரட்டும் என்று அவளும் அவளிடத்தில் சற்று அலட்சியப் போக்கையே காட்டினாள். அந்த அலட்சியப் போக்கு, அவளை திமிர் பிடித்தவளாகவே அரவிந்திடம் உருவகப்...
    4 மறுநாள் காலை, அன்று தான் புதிதாக கீர்த்தி வேலைக்குச் சேரும் தினம் சற்று படபடப்பாக உணர்ந்தாள். அதை விட படபடப்பாக உணர்ந்தான் அரவிந்த், ஏனென்றால் அவன் ஷோரூம் செல்வதே கிடையாது. இன்று தண்டபாணியிடம் கீர்த்தியை பார்த்துக் கொள்வதாக வாக்கு கொடுத்தாகி விட்டது. அதற்காகவாவது சென்று தான் ஆக வேண்டும். ஏன் ஒத்துக் கொண்டோம் என்று அவன்...
    3 அவனை கடுமையாகப் பார்த்தார் அவன் தந்தை. “டேய் நீ தேவையில்லைடா. நானே பார்த்துக்கறேன். உனக்கு மட்டும் இல்லை உன் பசங்களுக்கும் சேர்த்து சொத்து சம்பாதிச்சு வெச்சிருக்கேன். நீ இப்படி வெட்டியாவே சுத்திட்டு இரு. எனக்கு இனிமே அதைப்பத்தி கவலையில்லை. ஆனா நான் உயிரோட இருக்கற வரைக்கும் நீ வெளிநாடு போறதுன்றது நடக்காது.” “ஆமா காலம் போன...
    2 அரவிந்தின் குடும்பம் முன்பு மிகவும் பணக்கார வகையைச் சேர்ந்த குடும்பம். ஆனால்… இப்போதும் அவர்கள் வசதியானவர்களே, முன்பு அளவு இல்லை. முப்பாட்டன், பாட்டன் என்று அழித்தது போக எஞ்சியிருந்தது சொற்பமே. அதில் அரவிந்தின் தந்தை புத்திசாலித்தனமாக பிஸினெஸ் ஆரம்பித்து வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார். சென்னை சிட்டியில் இரண்டு கிளைகள் இருக்க, அதே பர்னிச்சர் ஷோரூம் இப்போது கோவையிலும்,...
    உன் பார்வை நானறிவேன் காலையில் வீடு பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. எல்லோரும் எழுந்து அவரவர் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க அதன் சாயல் சிறிதும் இல்லாமல் நல்ல உறக்கத்தில் இருந்தாள் கீர்த்தி. இந்த எல்லோரும் என்பதில் அவள் அன்னை இந்துமதி, தந்தை ராஜேந்திரன், அண்ணன் தண்டபாணி அடக்கம். கீர்த்தியின் அண்ணன் தண்டபாணி பெயருக்கு சற்றும் பொருத்தமில்லாமல் நல்ல அல்ட்ரா...
    error: Content is protected !!