Iraiva Iraivi
கேட்டதும் வரம் கொடுத்து விட்டால்,
தெய்வமுமே கொஞ்சம்
மதிப்பிழந்து போகுமடி...
தொலைந்த நின் குறுநகையை கேட்டு
கோபக் கோதையுனை
கெஞ்சத்தான் மனம் தோன்றுதடி...
கீர்த்தனாவின் முகபாவனைகளும் நக்கலான சிரிப்பும், 'இந்த அவமானம் உனக்கு தேவையா?' என்பதை போல் மணியை வகையாய் வச்சு செய்தது. அவள் கிண்டல் சிரிப்பாலேயே தன்னை படு கேவலமாய் கலாய்ப்பது தெரிந்து இருந்தாலுமே, அசராமல் காலரை தூக்கி...