காவியத் தலைவன்
காவியத் தலைவன் – 4
ஆதீஸ்வரன் மேலே அழைத்திருக்க, அவன் குரலிலிருந்தே எதுவோ சரியில்லை என்று புரிந்து கொண்ட தென்னரசு அடித்துப் பிடித்துக்கொண்டு மேலே ஓடி வந்தான்.
மேலே ஏறி வந்தவனிடம் எதுவும் பேசாமல் ஆதி அழுத்தமாகப் பார்த்திருக்க, “சார்… என்னாச்சு?” என்று கேட்பதற்குள் அவன் வெகுவாக திணறிப் போனான்.
ஆதி தன் பார்வையை மாற்றிக் கொள்ளவே இல்லை....
காவியத் தலைவன் – 5
“அப்படியே மகாலட்சுமி மாதிரி இருக்கம்மா… உன்னை பிடிச்சிருக்க போயி தான் அவன் கல்யாணமே வேணாம்ன்னு சொல்லிட்டு திரிஞ்சிருக்கான். நீ இப்பதான் டாக்டர் படிப்பை முடிச்சியாமே…” ஆசையாகக் கன்னம் வருடிப் பேசிக்கொண்டிருந்த மூதாட்டிக்கு தாராகேஸ்வரியால் எந்த பதிலையும் சொல்ல முடியவில்லை.
“பயப்படாதம்மா என்கிட்ட நல்லா பேசு…” என அழகாண்டாள் கணீர் குரலில் சொல்லிக்...
ஐயோ கண்டுகொண்டானே என்ற பதற்றத்தில், “அ… அது… சார்…” என பாவமாகத் தொடங்க,
அவனோ வெகு இலகுவாக அவளை நோக்கி நடந்து வந்து, “சாரா? இல்லை சேட்டாவா?” என்றான் புருவம் உயர்த்தி.
‘இவன் ஏன் கண்ணுக்கு இத்தனை அழகாகத் தெரிகிறான்?’ எனப் பரிதாபமாக அவனைப் பார்த்து வைத்தாள். அவன் அழைக்கச் சொன்ன சேட்டா வேறு எக்கச்சக்கமாகப் படபடப்பைத்...
காவியத் தலைவன் – 6
திருமணம் முடிந்து ஒன்றிரண்டு நாட்கள் தான் தாராவின் கண்களில் ஆதிஸ்வரன் பட்டிருப்பான். அதன் பிறகு ஆளையே காணவில்லை.
இவர்களின் திருமணம் முடிந்த பிறகு வீட்டின் காவல் பல மடங்கு பலப்பட்டு இருப்பதை அவளால் பார்க்க முடிந்தது. முன்பு இங்கேயே தன்னை மறைத்து வாழ்ந்த போது வாசலின் முன்புறம், பின்புறம் என்று இரண்டு...
அவனின் மோனநிலையை கரடியாய் கைப்பேசியின் அழைப்பு கலைக்க, நொடியில் வேகமாக விலகிக் கொண்டான்.
அவளுக்கும் சொல்ல முடியாத ஒருவித அவஸ்தை!
இந்த திருமணத்தை ஏற்றுக்கொள்வோம், வாழ்க்கையாக இங்கே இப்படி நம்மைக் கொண்டு வந்து நிறுத்த நிச்சயம் ஏதோ காரணம் இருக்கும் என்று ஆழ் மனம் அவளுக்கு சொல்லிக் கொண்டே இருந்ததன் விளைவே இந்த திருமணத்தின் மீது தோன்றிய...
ஆனால், ஆதிக்கு கோபம் அடங்க மறுத்தது. “அவ சொன்னா என்கிட்ட சொல்ல மாட்டீங்களா?” என்றான் காட்டமாக.
“இல்லைங்க ஐயா, கையில அடி பட்டப்பவும் தாராம்மா நிதானமா என்ன செய்யணும்னு சொன்னாங்க. கொஞ்சமும் பதட்டமே படலை. அப்ப அவங்களே தான் ஹாஸ்பிட்டல் போகணும்ன்னு சொன்னாங்க… இப்ப அவங்களே ஒன்னும் பிரச்சினை இல்லைன்னு சொல்லறப்ப நான் என்ன பண்ணறது?...
காவியத் தலைவன் – 7
ஆதீஸ்வரன் இந்துஜாவின் விஷயத்தில் தலையிடவில்லை என்று தெரிந்ததிலிருந்து அவன் வரவை தாரகேஸ்வரி ஆவலோடு எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
சில நாட்கள் கழித்து வீடு திரும்பிய ஆதி, தன்னை மின்னும் விழிகளோடு வரவேற்ற தன் கரகாட்டக்காரியை அதிசயமாகப் பார்த்தான்.
தாராவிற்கு அவனிடம் பேச வேண்டும் என்ற ஆர்வம் இருக்க, அவன் பின்னேயே சுற்றி திரிந்தாள். தேநீர்...
தந்தையின் இழப்பிற்குப் பிறகுத் தன் மொத்த தைரியமும் வடிந்தது போல உணர்ந்தவன், ஆதீஸ்வரனை பார்த்தபிறகு மொத்தமாக மாறி போனான். அவன் இழந்த தைரியம் அவனுக்கு மீண்டது போல உணர்வு. நிமிர்ந்து நிற்க வேண்டும் என்ற உறுதி.
ஏன் என்று காரணம் கேட்டால் அவனுக்கு தெரியாது. ஆதீஸ்வரனை பார்த்ததிலிருந்து ஒரு பிரமிப்பு. அவனுக்கு நெருக்கமானவனாக இருக்க வேண்டும்,...
காவியத் தலைவன் – 9
கடலின் அலைகளைப் போன்று ஆர்ப்பரித்துக் கொண்டிருந்தது சத்யேந்திரனின் மனம். அவன் எதிர்பாராத நேரத்தில் விழுந்த பலமான அடியால் மொத்தமாக நிலைகுலைந்து போயிருந்தான். இதயத்தைப் பிடுங்கி எரிந்தது போல வலி. வலியை தாங்கிக்கொள்ள முடியாத ஆத்திரம், கோபம், ஆக்ரோசம்.
அவனது அறையிலிருந்த பொருட்கள் எல்லாம் திசைக்கொன்றாக சிதறி சின்னாபின்னமானது.
அப்படியே தரையில் மண்டியிட்டு அமர்ந்து,...
காவியத் தலைவன் – 8
சில நாட்களாக ஆதி நேரடியாக முகத்தைத் திருப்பிக்கொண்டு செல்லவில்லை அவ்வளவு தான் வித்தியாசம். மற்றும்படி தாராவிடம் நின்று ஒரு வார்த்தை பேசுவதில்லை. சிறு தலையசைப்பு, புன்னகை என எதுவுமே இல்லாத பஞ்ச நிலை தான்.
தாராகேஸ்வரிக்கு கணவனின் இந்த செயலில் மிகுந்த கோபம்.
‘இதே போல இவனிடம் போய், இவன் கொள்கைக்கு, தர்மத்திற்கு...
காவியத் தலைவன் – 10
வீரராகவனுக்கு விஷயம் கசிந்ததில் ஆதீஸ்வரனுக்கு இன்னமும் கொஞ்சம் இறுக்கம் கூடியது. தம்பியின் உடல்நிலையில் முன்னேற்றம் வரும்முன் யாருக்கும் விஷயம் போய்ச்சேர்வதில் அவனுக்கு உடன்பாடில்லை.
சத்யாவின் நண்பர்கள் அவனைப் பின்தொடர்வதைத் தவற விட்டிருந்த காரணத்தால், அவர்களுக்கு விபத்து நடந்தது மட்டும் தான் தெரியுமே அன்றி, அவனாக விபத்தை ஏற்படுத்திக் கொண்டது தெரியாது. அதனால்...
ஒரு கட்டத்தில், அந்த விஷயம் ஆதிக்கு தெரிய வந்தபோதும் சரி, கனிகா பிரிந்த போதும் சரி... காரணமே இல்லாமல் பூஜிதா மீது கோபம் கொண்டான். இதற்கும் அவள் இதில் இம்மியும் சம்பந்தப்படவில்லை. ஆதி, திருமணம் குறித்து கேட்டுப் பார்த்தது கூட தம்பியிடம் மட்டும் தான், அது குறித்து வீரராகவனிடமோ, பூஜிதாவிடவோ ஒரு வார்த்தை பேசியதில்லை....
காவியத் தலைவன் – 11
தாரகேஸ்வரிக்கு மனம் ஒரு நிலையில் இல்லை. நிறைய சஞ்சலங்களும் வருத்தங்களும் மனதை வறுத்த, மிகுந்த சோர்வுடன் கணவனை நாடி சென்றாள்.
வழக்கம் போல அவன் அவனுக்கான பிரத்தியேக உள்ளறையில்!
இதுநாள் வரையிலும் தாரா அந்த அறைக்குச் சென்றதோ, செல்ல வேண்டும் என்று எண்ணியதோ எதுவும் இல்லை. இன்று ஏனோ அவன் வெளியே வரும்...
காவியத் தலைவன் – 13
ஆதீஸ்வரனுக்கும் தாரகேஸ்வரிக்கும் இன்னமும் எதுவும் நேர் ஆகியிருக்கவில்லை.
இவள் தன் படிப்பில் முழுக, அவன் தன் வேலையில் மூழ்கிப் போனான்.
இப்பொழுதெல்லாம் அவன் சென்னையில் இருப்பதே அரிது என்பதுபோல வெளி மாநிலங்களில் தான் அவனது ஜாகை. அவன் வேலை தொடர்பாக நிறைய கண்டறிய வேண்டியிருந்தது. நிறைய விசாரணைகள், நிறையத் திட்டமிடல்கள் என கடிகாரம்...
மெதுவாகப் பேசிக்கொண்டிருந்தாலும் அவளின் பேச்சு சத்தத்தை ஆதி கவனித்துக் கொண்டுதான் இருந்தான்.
‘அடியே! கரகாட்டாக்காரி. என்னை இழுத்துட்டு போவியா? நீ இப்படி பேசினா பாட்டி நம்மளைப் பத்தி என்ன நினைப்பாங்க?’ அவளின் முந்தைய புரிதலான பேச்சில் பூரித்தவன், வாக்குறுதியில் கொஞ்சம் அரண்டுதான் போனான்.
ஆனால், இவனைப்பற்றி இவன் பாட்டிக்கு தெரியாதா என்ன? அப்படியிருக்க தாராவின் பேச்சை அவர்...
காவியத் தலைவன் – 29
தாரகேஸ்வரி கணவனை வழியனுப்பி விட்டபிறகும் வாசலிலேயே கொஞ்ச நேரம் நின்றிருந்தாள். மனதில் இனம்புரியாத படபடப்பு. முகம் லேசாக செம்மையை பூசியிருந்தது.
வரங்களை அள்ளித்தர கடவுள் தான் பூமிக்கு வர வேண்டும் என்பதில்லை போல! நாம் எதிர்பார்க்கும் வரத்தை எதிர்பாரா நேரத்தில் யாரோ ஒருவர் போகிற போக்கில் தூரலென நம் மேலே சிதறி விட்டு போய்விடுகிறார்கள்!
தன்னிடம்...
காவியத் தலைவன் – 12
நாட்கள் கடக்க, ஆதீஸ்வரன் தான் எடுத்திருந்த சவாலான பொறுப்பில் எந்தவித முன்னேற்றமும் இல்லாமல் தேங்கிய நிலையிலேயே இருந்தான். அவனுக்கு அதற்கான அழுத்தம் கூடிக்கொண்டே இருந்தது.
கொடுத்த பொறுப்பை கச்சிதமாக முடிப்பவன் என்ற பெயரைப் பெற்றிருந்ததாலேயே கட்சியின் தலைமையிலிருந்து இந்த பொறுப்பை அவனுக்கு நியமித்திருந்தனர். ஆதியும் பல்வேறு வழியில் அந்த குற்றச்சம்பவத்தைக் கண்டறிய...
காவியத் தலைவன் – 25
பூஜிதா நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட ஆதிக்குள் பெரும் பிரளயம். பெற்றோரைக் கொலை செய்தது வீரராகவன் என்கிற அதிர்விலிருந்தே அவன் இன்னும் மீளவில்லை. இப்பொழுது இரு வீட்டுப் பிள்ளைகளை மாற்றி வைத்து தங்கள் குடும்பத்திற்கு பெரும் அநியாயம் இழைத்திருக்கும் விஷயத்தை எப்படி அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியும்?
‘அப்படியானால், பெற்றோரை இழந்த பிறகு...
*** சத்யா, பூஜிதாவின் உறவு மெல்ல மலர்ந்திருந்தது. கனிகா விஷயத்தில் பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்திருந்த சத்யாவிற்கு அதிலிருந்து மீண்டு வருவதே பெரிய விஷயமாக இருந்தது!
வெளியேறவே முடியாதோ என்று வேதனையோடு கழிந்த இரவுகள் ஏராளம்! உயிர் பிரியுமளவு வேதனையைச் சுமந்து வந்தவன் மீள வேண்டும் என்று நினைத்தது தன் அண்ணன் ஒருவனுக்காகத்தான்!
பெற்றோரை இழந்து நிலைதடுமாறி நின்றபோது...
தென்னரசுவின் பெயரைப் பார்த்ததும் நொடியில் அவனது உணர்வுகள் அறுபட பரபரப்பாகி எழுந்து அமர்ந்திருந்தான். அந்த அலைப்பேசியின் ஒலியில் பெண்ணவளும் நிதானித்திருக்க, தன்னிலை எண்ணி முகம் சிவக்க அவனுக்கு முதுகு காட்டி படுத்துக் கொண்டாள். அவனையுடைய ஆளுமையில் இத்தனை தூரம் தான் கூட்டுண்டிருந்ததை எண்ணி அவளுக்கு ஒருபுறம் ஆச்சரியமாக இருந்ததென்றால் மறுபுறம் கணக்கே இல்லாமல் பிடித்தும்...