Tuesday, June 16, 2026

    எந்தன் சரிபாதியே.

    ஆதன் காலையில் எழுந்து எப்பொழுதும் போல் வேலைக்குக் கிளம்பினான். அதுவும் அன்று கொஞ்சம் சீக்கிரமாகவே கிளம்பினான். என்ன தான் அந்தப் பெண்ணை வீட்டில் விட்டுவிட்டு வந்தாலும் அவன் மனதில் ஏதோ சரியில்லாதது போல் உறுத்திக் கொண்டே இருந்தது. அதைத் தெளிவுபடுத்த அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்று பார்த்து விட்டு வர வேண்டும் என்று சீக்கிரம்...
    எட்வின் ஆதனைப் பார்த்துப் பேசியதும் சாமிக்கண்ணுவை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு அவன் சென்ற இடம் தேவிகாவின் வீட்டிற்குத் தான். தேவிகா ஏதோ டீல் விஷயமாக ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எட்வின் உள்ளே வர, அவனை அங்கேயே நிற்கச் சொல்லி சைகையால் சொல்லிவிட்டு அவரது அறைக்குச் சென்று விட்டார். சிறிது நேரம் கழித்துத் தான் அவர்...
    சாத்விகாவும் ரவியும் பக்கத்தில் உள்ள ஒரு நல்ல உணவகத்திற்குச் சென்றனர். அங்குக் காலியாக இருந்த இடமாகப் பார்த்து அமர்ந்தனர். பேரர் வந்து ஆர்டர் எடுத்துச் சென்றவுடன் ரவி தான் ஆரம்பித்தான், "என்ன பண்றது ராக்கி? இந்த கேஸ் நமக்குக் கொஞ்சம் ரிஸ்க்கா இருக்கும்னு தோனுது." "பீஸ்ட் இந்த மாதிரி கேஸ் தான் நம்மளை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு...
    ஆதனும் சாத்விகாவும் பீச்சிலிருந்து கிளம்பினார்கள். காரில் ஏறி அமர்ந்ததும் ஆதன் சாத்விகாவிடம்,"பேபி இப்போ வீட்டுக்குப் போய் என்ன பண்ணப் போறோம்? ஒன்னும் பண்ணப் போறது இல்லை. அதுக்கு நாம எங்கேயாவது அப்படியே ஜாலியா ஊர் சுத்திட்டு அதுக்கு அப்புறம் வீட்டுக்குப் போகலாமே!!" என அவன் கூற, சாத்விகா யோசித்தாள். அவன் சொல்வது போல் வீட்டிற்குச்...
    சாத்விகாவும் ஆதனும் அலமாரிக்குள் நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தனர். காரணம் இருவரும் நெருக்கமாக நிற்பது அவர்களுக்குக் கூச்சத்தைத் தந்தது. ஆதனுக்கு கூச்சமாக இருந்தாலும் அவன் ரசித்துக் கொண்டும் நின்றிருந்தான். பத்து நிமிடங்கள் அப்படியே நின்ற சாத்விகா இதற்கு மேல் முடியாதென அலமாரியைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டாள். அப்பொழுது தான் அவளால் நிம்மதியாக...
    சாத்விகா அவளது பெற்றோர்களைப் பற்றிக் கூறியதும், அவள் சாதாரணமாகி விட, கேட்ட ஆதனிற்குத் தான் மனம் கணத்தது. சாத்விகாவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டுமென முடிவெடுத்தான். அவன் ஏதோ வேகத்தில் முடிவெடுத்து விட்டான். ஆனால் சாத்விகா அவனது காதலை ஏற்பாளா? அப்படி அவள் ஏற்றாலும் அவனது பெற்றோர்கள் அவளை ஏற்றுக் கொள்வார்களா? கண்டிப்பாக அது...
    ஆதன் கமிஷ்னர் அறையிலிருந்து வெளியே வந்து அவனது வண்டிக்குப் பக்கத்தில் நின்றான். சிறிது நேரத்தில் சாமிக்கண்ணுவுடன் எட்வின் வெளியே வரவும் அவனைக் க்ரோதத்துடன் பார்த்தான் ஆதன். வேகமாக அவனிடம் சென்றவன் அவனது சட்டைக் காலரைப் பிடித்து,"உனக்கு என்ன டா துரோகம் பண்ணேன் நான்? ஏன் டா இப்படி என்னை நம்ப வைச்சு கழுத்தறுத்த?" என்று கோபமாகக்...
    கமிஷ்னர் பத்திரிகையாளர்களிடம் பேசி முடித்துவிட்டு உள்ளே வர, ஆதன் இன்னும் வெறித்த பார்வையுடன் தான் நின்று கொண்டிருந்தான். அவனிற்கு அடுத்து என்ன செய்வதெனப் புரியவில்லை. யாரோ என்ன யாரோ கண்டிப்பாக இதை அந்த பாண்டி தான் செய்திருக்க வேண்டும். ஆனால் எப்படி அவன் உள்ளே வந்து இந்த ராஜாவை அடித்துக் கொன்றான் என்பது இன்னும்...
    கல்யாண் வேகமாக ரம்யா இறந்த வீட்டிற்குள் நுழைந்தான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த வேலுமணி இவனைப் பார்த்து பதற்றமாக எழுந்து அவனிடம் வந்தார். "அந்த ஆதன் அதுக்கு அப்புறம் இங்க வந்தானா?" "இல்லை சார்." "சரி அவன் எங்க எல்லாம் போனான்?" என்று கேட்க, "மாடிக்குப் போனான் சார். அப்புறம் வீட்டுக்குப் பின்னாடி போய் பார்த்திருப்பான் போல கான்ஸ்டபிள் சொன்னான். அதுக்கு...
    மூன்று நாட்களாகிவிட்டது மாசாணியிடமிருந்து எந்தத் தகவலும் ஆதனுக்கு வரவில்லை. அடுத்த என்ன செய்வதெனப் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அதே போல் அவன் அனைவரின் முன்பும் எட்வினைக் கத்தியதை சுத்தமாக மறந்து விட்டான். எட்வினைப் பார்க்கும் போது அவன் சாதாரணமாகவே பேச, எட்வினிற்குப் பயங்கர கோபம் வந்து விட்டது. இது மட்டும் பத்தாது என்று தியாகு...
    தேவிகா அவரது வீட்டில் தொலைக்காட்சியில் போட்ட செய்தியை மிகுந்த சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். நேற்று வரை அவரைப் பயமுறுத்திய வழக்கு இன்று ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. அதை நினைத்து அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. தன் வீட்டில் சமையல் வேலைச் செய்யும் பெண்ணை அழைத்து,"இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால ஐயாகிட்ட காசை வாங்கிக்கோ....
    ஆதனும் எட்வினும் கிளம்பியதும் சதீஷ் வேகமாக அவனது அறைக்குச் சென்று கதவைப் பூட்டி விட்டு அவனது கைப்பேசி எடுத்து யாருக்கோ அழைத்தான். "சொல்லு சதீஷ் எதுக்கு கூப்பிட்ட?" என்று கணீர் குரலில் கேட்டான் பாண்டி. "பாண்டி ரம்யா கேஸை க்ளோஸ் பண்ணிட்டாங்கனு நீங்கச் சொன்னீங்க!! ஆனால் இங்க ஆதன்னு ஒரு ஏ.சி.பி. வந்து எங்களுக்குச் சில சந்தேகம்...
    வீட்டிற்கு வந்த ஆதனுக்கு நினைவு முழுவதும் சாத்விகா பற்றித் தான். அவனால் அவளது சந்திப்பைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவனிற்கு அவனது செயல் சரியாகப் படவில்லை. அவள் ஒரு பெண் என்றும் பாராமல் அவளைத் தான் கையாண்ட விதம் சரியில்லை என்று ஒரு பக்கம் குற்றவுணர்ச்சியாக இருக்க, "டேய் ஆதன் அவளை அப்படியே விட்டுட்டு...
    ஆதனும் சாத்விகாவும் மருத்துவமனை வந்து சேர்ந்த போது மணி எட்டு. கிட்டதட்ட முக்கால் மணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு ஆதன் ஒரு மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொண்டதால் தான் இந்தத் தாமதம். ஆதன் நன்றாக அதுவும் வேகமாகவே வண்டி ஓட்டக் கூடியவன் தான். ஆனால் இன்று சாத்விகா பின்னால் அமர்ந்திருந்தது அவனுக்கு...
    ஆதன், சாத்விகாவின் வீட்டிலிருந்து நேராகச் சென்றது அவனது காவல் நிலையத்திற்குத் தான். போகும் முன் மீண்டும் மங்கையிடம்,"அம்மா நீங்க நாளைக்கு வேலைக்குப் போறதுக்கு முன்னாடி இங்க வந்துட்டு போங்க. கொஞ்சம் சீக்கிரம் வந்தீங்கனா நம்ம என்ன பண்றதுனு பேச வசதியா இருக்கும். உங்களை இன்னைக்கு மாதிரி இவர் கூப்பிட்டு வந்துடுவார்." என்று அவன் கூற, "சரிங்க...
    ஆதனும் சாத்விகாவும் சென்னையின் நுழைவாயில் வரும் போதே மணி ஏழு. பின்னர் சென்னையின் போக்குவரத்து நெரிசலைச் சமாளித்துக் கொண்டு சாத்விகா வீடு வரும் போது எட்டு மணியாகி விட்டது. பிரபு, சக்தி, ரவி, ஜெசிக்கா என்று நால்வரும் இவர்களுக்காக சாத்விகாவின் வீட்டில் காத்திருந்தவர்கள் ஜெசிக்காவின் அம்மா அழைத்து வீட்டிற்கு வரச் சொல்லிச் சொல்ல, வேறு...
    ஆதன், சாத்விகா அவளது வீட்டில் இல்லை என்று திரும்பி வந்தவுடன் காலை உணவு கூடச் சாப்பிடாமல் கிளம்ப, செல்வம் தான் அவனிடம்,"சார் டிஃபன் சாப்பிட்டீங்களா?" "இல்லை செல்வம். அதுக்கு நேரமில்லை. அதை விடுங்க உங்களுக்கு மாதவரம் ஸ்டேஷன்ல யாரையாவது தெரியுமா?" என்று ஆதன் கேட்க, சில நிமிடம் யோசித்த செல்வம் வேகமாக, "ம் தெரியும் சார். அந்த...
    இரவு நேரம், தெரு விளக்கின் ஒளியில் வண்டி ஓட்டிக் கொண்டு அந்தச் சாலையில் வந்து கொண்டிருந்தான் அவன். அவனது முகத்தில் வேர்வையின் தடங்கள். அதைத் துடைத்துக் கொண்டே வண்டியைச் செலுத்திக் கொண்டிருந்தான். தீடிரென பின்னால் ஏதோ சத்தம் கேட்க, வண்டியின் கண்ணாடி வழியாக அவன் பார்க்கச் சரியாக பின்னால் வந்த அந்த லாரி வேகமாக...
    ஆதன் முதல் நாள் ராஜாவைச் சென்று சந்தித்து வந்த பிறகு அவனுக்குத் தெரியாமல் அவனை நான்கு நாட்கள் கண்காணித்தான். அந்த நான்கு நாட்களில் ராஜா செய்தது அவனது படையுடன் காலையில் அலப்பறையாக ஏதாவது ஒரு உணவகத்திற்குச் சென்று நன்றாகச் சாப்பிடுவது. பின்னர் அங்கு வருவோர் போவோரை வம்புக்கு இழுப்பது. அதன் பின்னர் மதுக்கடைக்குச் சென்று...
    சாத்விகா தன் வீட்டுக்குள் வந்து வேக வேகமாக அவளது வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டாள். ஒரு வாரம் போட்டிருந்த துணிகளைத் துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டுவிட்டு வீடு முழுவதையும் கூட்டித் துடைத்து விட்டாள். வீடு கூட்டுவது மற்றும் துடைப்பது தினமும் நடக்கும். துணி மட்டும் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மொத்தமாகப்...
    error: Content is protected !!