எந்தன் சரிபாதியே.
ஆதனும் சாத்விகாவும் பீச்சிலிருந்து கிளம்பினார்கள். காரில் ஏறி அமர்ந்ததும் ஆதன் சாத்விகாவிடம்,"பேபி இப்போ வீட்டுக்குப் போய் என்ன பண்ணப் போறோம்? ஒன்னும் பண்ணப் போறது இல்லை. அதுக்கு நாம எங்கேயாவது அப்படியே ஜாலியா ஊர் சுத்திட்டு அதுக்கு அப்புறம் வீட்டுக்குப் போகலாமே!!" என அவன் கூற, சாத்விகா யோசித்தாள். அவன் சொல்வது போல் வீட்டிற்குச்...
சாத்விகாவும் ஆதனும் அலமாரிக்குள் நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தனர். காரணம் இருவரும் நெருக்கமாக நிற்பது அவர்களுக்குக் கூச்சத்தைத் தந்தது. ஆதனுக்கு கூச்சமாக இருந்தாலும் அவன் ரசித்துக் கொண்டும் நின்றிருந்தான். பத்து நிமிடங்கள் அப்படியே நின்ற சாத்விகா இதற்கு மேல் முடியாதென அலமாரியைத் திறந்து கொண்டு வெளியே வந்து விட்டாள். அப்பொழுது தான் அவளால் நிம்மதியாக...
எட்வின் ஆதனைப் பார்த்துப் பேசியதும் சாமிக்கண்ணுவை காவல் நிலையத்தில் ஒப்படைத்து விட்டு அவன் சென்ற இடம் தேவிகாவின் வீட்டிற்குத் தான்.
தேவிகா ஏதோ டீல் விஷயமாக ஃபோனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது எட்வின் உள்ளே வர, அவனை அங்கேயே நிற்கச் சொல்லி சைகையால் சொல்லிவிட்டு அவரது அறைக்குச் சென்று விட்டார்.
சிறிது நேரம் கழித்துத் தான் அவர்...
கல்யாண் வேகமாக ரம்யா இறந்த வீட்டிற்குள் நுழைந்தான். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்திருந்த வேலுமணி இவனைப் பார்த்து பதற்றமாக எழுந்து அவனிடம் வந்தார்.
"அந்த ஆதன் அதுக்கு அப்புறம் இங்க வந்தானா?"
"இல்லை சார்."
"சரி அவன் எங்க எல்லாம் போனான்?" என்று கேட்க,
"மாடிக்குப் போனான் சார். அப்புறம் வீட்டுக்குப் பின்னாடி போய் பார்த்திருப்பான் போல கான்ஸ்டபிள் சொன்னான். அதுக்கு...
ஆதனும் சாத்விகாவும் சென்னையின் நுழைவாயில் வரும் போதே மணி ஏழு. பின்னர் சென்னையின் போக்குவரத்து நெரிசலைச் சமாளித்துக் கொண்டு சாத்விகா வீடு வரும் போது எட்டு மணியாகி விட்டது. பிரபு, சக்தி, ரவி, ஜெசிக்கா என்று நால்வரும் இவர்களுக்காக சாத்விகாவின் வீட்டில் காத்திருந்தவர்கள் ஜெசிக்காவின் அம்மா அழைத்து வீட்டிற்கு வரச் சொல்லிச் சொல்ல, வேறு...
சாத்விகா மாட்டுவாள் என்று சுத்தமாக எதிர்பார்க்க வில்லை. அவளுக்குப் புரியவுமில்லை எப்படித் தன்னைக் கண்டுபிடித்தார்கள் என்று. அவள் சுதாரிப்பதற்குள் பாண்டியின் ஆட்கள் அவளைத் தூக்கிக் கொண்டு வந்து விட்டார்கள். இல்லை என்றால் அவள் அவர்களைக் கண்டிப்பாகச் சமாளித்துத் தப்பியிருப்பாள்.
அந்த ஃபேக்ட்டரியின் பின்னால் உள்ள காலியிடத்தில் தான் சாத்விகாவின் கையையும் காலையும் கட்டிப் போட்டு அவளை...
சக்தியும் மங்கையும் முதலில் சென்றது வேலுமணி வீட்டிற்குத் தான். சக்தி வீட்டு வேலை செய்பவள் என்பதைக் காட்டவே அவளிடமிருந்த பழைய சாயம் வெளுத்த உடையைத் தான் அணிந்திருந்தாள். முகத்திலும் எந்த விதமாகவும் அலங்காரம் செய்யாமல் வெறும் பொட்டு மட்டும் வைத்திருந்தாள்.
வேலுமணி வீட்டில், அவர், அவரது மனைவி, இரு பிள்ளைகள் மற்றும் அவரது அம்மா இருக்கிறார்கள்....
வீட்டிற்கு வந்த ஆதனுக்கு நினைவு முழுவதும் சாத்விகா பற்றித் தான். அவனால் அவளது சந்திப்பைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவனிற்கு அவனது செயல் சரியாகப் படவில்லை. அவள் ஒரு பெண் என்றும் பாராமல் அவளைத் தான் கையாண்ட விதம் சரியில்லை என்று ஒரு பக்கம் குற்றவுணர்ச்சியாக இருக்க,
"டேய் ஆதன் அவளை அப்படியே விட்டுட்டு...
ஆதன் தன்னுடைய காவல் ஜீப்பில் தான் சாத்விகாவின் வீட்டிற்கு வந்திருந்தான். அதனால் சாத்விகாவின் காரில் தான் அவர்கள் பீச்சிற்கு வந்திருந்தனர். சாத்விகா தான் வண்டியை ஓட்டினாள். அதையே தான் ஆதனும் விரும்பினான். இருவரும் அவர்களது பயணம் முழுவதும் அமைதியாகத் தான் கழித்தனர். அந்தப் பயணம் முழுவதும் ஆதன் அவனது காதலை எப்படி அவளிடம் தெரிவிப்பது...
ஆதன், சாத்விகா அவளது வீட்டில் இல்லை என்று திரும்பி வந்தவுடன் காலை உணவு கூடச் சாப்பிடாமல் கிளம்ப, செல்வம் தான் அவனிடம்,"சார் டிஃபன் சாப்பிட்டீங்களா?"
"இல்லை செல்வம். அதுக்கு நேரமில்லை. அதை விடுங்க உங்களுக்கு மாதவரம் ஸ்டேஷன்ல யாரையாவது தெரியுமா?" என்று ஆதன் கேட்க, சில நிமிடம் யோசித்த செல்வம் வேகமாக,
"ம் தெரியும் சார். அந்த...
சாத்விகாவும் ரவியும் பணம் திருடு போன இடத்துக்கு மறுபடியும் வந்தார்கள். இப்பொழுது கழுகு கண்ணுடன் சுற்றுப்புறத்தைக் கவனமாக நோட்டம் விட, அப்பொழுது ஒருத்தர் அவர்களிடம் வந்து,"நானும் அப்போல இருந்து பார்க்கிறேன் இந்தப் பக்கமே சுத்திட்டு இருக்கீங்க? யார் நீங்க? போலிஸை கூப்பிடவா?" என்று நடுத்தர வயதிலிருந்த ஒருத்தர் வந்து அவர்களிடம் மிரட்ட, ரவி ஏதோ...
தேவிகா அவரது வீட்டில் தொலைக்காட்சியில் போட்ட செய்தியை மிகுந்த சந்தோஷத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார். நேற்று வரை அவரைப் பயமுறுத்திய வழக்கு இன்று ஒன்றுமில்லாமல் ஆகிவிட்டது. அதை நினைத்து அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. தன் வீட்டில் சமையல் வேலைச் செய்யும் பெண்ணை அழைத்து,"இன்னைக்கு நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதனால ஐயாகிட்ட காசை வாங்கிக்கோ....
ஆதனிடம் பேசிவிட்டு வெளியே வந்த எட்வின் எதிர்கொண்டது செல்வத்தை தான். அவர் சாப்பாடு கொண்டு வந்து எட்வினிடம் தர, அதை வாங்கிக் கொண்டு ராஜா இருக்கும் அறைக்குச் சென்று அவனிடம் தந்தான் எட்வின். அதைக் கொடுத்து விட்டு வெளியே வந்தவன் சற்று தள்ளிச் சென்று ஆள் நடமாட்டம் இல்லாத இடத்திற்கு வந்து தன் கைப்பேசியை...
சாத்விகா தன் வீட்டுக்குள் வந்து வேக வேகமாக அவளது வேலையைச் செய்ய ஆரம்பித்து விட்டாள். ஒரு வாரம் போட்டிருந்த துணிகளைத் துணி துவைக்கும் இயந்திரத்தில் போட்டுவிட்டு வீடு முழுவதையும் கூட்டித் துடைத்து விட்டாள். வீடு கூட்டுவது மற்றும் துடைப்பது தினமும் நடக்கும். துணி மட்டும் வாரம் ஒரு முறை அல்லது இரண்டு முறை மொத்தமாகப்...
ஆதனும் சாத்விகாவும் மருத்துவமனை வந்து சேர்ந்த போது மணி எட்டு. கிட்டதட்ட முக்கால் மணி நேரத்தில் வர வேண்டிய இடத்திற்கு ஆதன் ஒரு மணி நேரத்திற்கும் மேல் எடுத்துக் கொண்டதால் தான் இந்தத் தாமதம். ஆதன் நன்றாக அதுவும் வேகமாகவே வண்டி ஓட்டக் கூடியவன் தான். ஆனால் இன்று சாத்விகா பின்னால் அமர்ந்திருந்தது அவனுக்கு...
மூன்று நாட்களாகிவிட்டது மாசாணியிடமிருந்து எந்தத் தகவலும் ஆதனுக்கு வரவில்லை. அடுத்த என்ன செய்வதெனப் புரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். அதே போல் அவன் அனைவரின் முன்பும் எட்வினைக் கத்தியதை சுத்தமாக மறந்து விட்டான். எட்வினைப் பார்க்கும் போது அவன் சாதாரணமாகவே பேச, எட்வினிற்குப் பயங்கர கோபம் வந்து விட்டது. இது மட்டும் பத்தாது என்று தியாகு...
சாத்விகாவும் ரவியும் பக்கத்தில் உள்ள ஒரு நல்ல உணவகத்திற்குச் சென்றனர். அங்குக் காலியாக இருந்த இடமாகப் பார்த்து அமர்ந்தனர். பேரர் வந்து ஆர்டர் எடுத்துச் சென்றவுடன் ரவி தான் ஆரம்பித்தான்,
"என்ன பண்றது ராக்கி? இந்த கேஸ் நமக்குக் கொஞ்சம் ரிஸ்க்கா இருக்கும்னு தோனுது."
"பீஸ்ட் இந்த மாதிரி கேஸ் தான் நம்மளை அடுத்த லெவலுக்கு எடுத்துட்டு...
கமிஷ்னர் பத்திரிகையாளர்களிடம் பேசி முடித்துவிட்டு உள்ளே வர, ஆதன் இன்னும் வெறித்த பார்வையுடன் தான் நின்று கொண்டிருந்தான். அவனிற்கு அடுத்து என்ன செய்வதெனப் புரியவில்லை. யாரோ என்ன யாரோ கண்டிப்பாக இதை அந்த பாண்டி தான் செய்திருக்க வேண்டும். ஆனால் எப்படி அவன் உள்ளே வந்து இந்த ராஜாவை அடித்துக் கொன்றான் என்பது இன்னும்...
ஆதன் செல்லும் வழியிலே கமிஷ்னருக்கு அழைத்து விவரத்தைக் கூறிவிட்டான். அவரும் வரச் சொல்ல, ஆதன் தான் மிகுந்த பரபரப்பாக இருந்தான்.
ஆதன் பின்னால் திரும்பி,"இங்கப் பார் சாமிக்கண்ணு நீ பயப்படாத சரியா. என்கிட்ட என்ன சொன்னியோ அதை அப்படியே கமிஷ்னர்கிட்ட சொல்லு. அவரைப் பார்த்து நீ பயப்பட வேண்டிய அவசியமில்லை புரியுதா?" நிதானமாக ஆதன் எடுத்துரைக்க,...
ஆதன் கமிஷ்னர் அறையிலிருந்து வெளியே வந்து அவனது வண்டிக்குப் பக்கத்தில் நின்றான். சிறிது நேரத்தில் சாமிக்கண்ணுவுடன் எட்வின் வெளியே வரவும் அவனைக் க்ரோதத்துடன் பார்த்தான் ஆதன்.
வேகமாக அவனிடம் சென்றவன் அவனது சட்டைக் காலரைப் பிடித்து,"உனக்கு என்ன டா துரோகம் பண்ணேன் நான்? ஏன் டா இப்படி என்னை நம்ப வைச்சு கழுத்தறுத்த?" என்று கோபமாகக்...