நேசத்தின் நிழல் கறுப்பு
அத்தியாயம் – 1
அதிகாலை கிழக்குத் திசையில் சூரியனைப் பிரசவிக்கத் தயாராகிக் கொண்டிருக்க வானெங்கும் காலைப் பட்சிகளின் வரவேற்புக் குரல்கள் ஒலித்துக் கொண்டிருந்தன.
பூஜையறையில் மணமணக்கும் ஊதுபத்தி, சாம்பிராணி மணங்களுக்கு நடுவே தீபத்தை ஏற்றி வைத்து கை கூப்பி அமர்ந்திருந்தாள் ரேவதி. பதினாறு வயதுப் பெண்ணுக்கு அன்னையாக இருந்தாலும் அழகாய் இளமையாய் இருந்தாள்.
இயல்பாய் சிவந்திருந்த மெலிந்த இதழ்கள்...