Thursday, May 1, 2025

    காவியத் தலைவன்

    இரு வீட்டினரையும் தொடர்பு கொள்ளும் எண்ணம் இல்லை! நல்ல நிலையில் இருந்தால் அது வேறு! இப்படி ஒரு நிலையில் இருப்பது தெரிந்து, அவர்கள் பாவம் பார்த்து ஏற்றுக் கொண்டாலும், அவர்களுக்கும் அனுதினமும் தங்களின் நோய் வேதனையைத் தான் தரும், அதற்கு நாங்கள் விலகியே இருந்து விடுகிறோம் என்று அலக்கியா சொன்னாள். கேட்ட தாராவின் முகம் வாடிப் போய்விட்டது. “இனி கவலைப்பட...
    காவியத் தலைவன் – 34 கண் முன்னே நிகழும் காட்சியில் ஒன்றும் புரியாமல், அண்ணனை நோக்கி வந்த சத்யா, “அண்ணா இத்தனை நேரமும் உங்களைப் பார்க்கணும்ன்னு தான் அண்ணி வழி மேல விழி வெச்சு காத்திருந்தாங்க, இப்ப என்ன உங்களை கண்டுக்காம யாரையோ கட்டி பிடிச்சி கதறிட்டு இருக்காங்க…” என்று மெலிதான குரலில் குழப்பமாகக் கேட்டான். ஆதி பதில் சொல்லும்...
    இந்த வேலை அவர்களின் குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியம் என்று அவனுடைய அம்மாவுக்கு நன்றாகத் தெரியும். அதனால் தான் தன்னுடைய கனவுகளை எல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு அவன் வேலைக்குச் சென்றான். அம்மாவும் மகனின் கனவு இப்படி சிதைந்து விட்டதே என்று அழுதார்களே தவிர, இந்த வேலை வேண்டாம் என்று ஒருநாளும் சொன்னதில்லை. சொல்லும் சூழலும்...
    காவியத் தலைவன் – 33 விவேக் சிகிச்சை முடிந்து வீட்டிற்குத் திரும்பியிருந்தான். அவன் மருத்துவமனையில் இருந்தவரையிலும் அங்கு சென்று விசாரிக்க முடிந்த சத்யேந்திரனால் அதன்பிறகு அவனைப்பற்றி விசாரித்துத் தெரிந்துகொள்ள முடியவில்லை. சுந்தரி அம்மா அதற்கு அனுமதிக்கவில்லை என்பது சரியாக இருக்கும். சத்யாவும் தாரா சொன்னதை மனதில் நிறுத்தி, தன் அம்மாவின் மறுப்பை மீறி அவர்களைச் சென்று பார்ப்பதை விரும்பவில்லை. கண்டிப்பாக அண்ணா...
    பாட்டிக்கு கொஞ்சம் சிரிப்பு வந்துவிட்டது. “வந்ததுல இருந்து ஏழுமலை ஏழுமலைன்னு இவன் பேரை ஏலம் விடறேன். இன்னும் இவன் யாருன்னு நீ கண்டுபிடிக்கலையா?” என்று கேட்க, “பேரை சொன்னாலே எனக்கு தெரியுமா? அப்படி யாரா இருக்கும்” என்று வாய்விட்டே புலம்பியவன், “நிஜமா தெரியலையே பாட்டி” என பாவமாக அவரின் முகம் பார்த்தான். “அதுசரி, பேருக்கு தான்...
    காவியத் தலைவன் – 32 அப்பா இவ்வாறு சொன்னதும் தாரகேஸ்வரி பதறி  நிமிர்ந்தாள். அவளுக்கும் உண்மையில் இப்படியான ஒரு அக்கறை தேவையாகத்தான் இருந்தது! இத்தனை நாட்கள் தனியாகவே எல்லாவற்றையும் பார்த்துக் கொள்ள வேண்டும், தனியாகவே எல்லா முடிவுகளையும் எடுக்க வேண்டும் என்றிருந்த நிலை, இப்பொழுது தந்தை என்ற உறவு அவள் வாழ்வில் வந்ததும் மாறி விட்டதில் அவளுக்கும் சந்தோசம் தான்! ஏதோவொரு...
    காவியத் தலைவன் – 31 சற்று நேரம் அங்கே கனத்த மௌனமே ஆட்சி செய்தது. தாராவின் கேவலும் ஏழுமலையின் கண்ணீரும் ஒருபுறம் என்றால், இந்த துயரத்திற்கு நான் தானே காரணம் என்ற குற்றவுணர்வு உருக்க அழகாண்டாள் பாட்டியின் கண்களிலும் கண்ணீர் பொழிந்து கொண்டிருந்தது. இந்த காட்சியைப் பார்த்திருந்த சத்யேந்திரனுக்கு ஒன்றும் புரியவில்லை. கனிகா மூலம் அவனுக்கு அறிமுகமாகயிருந்த தாரா கேரளாவைச்...
    “அண்ணா என்ன பிளான் வெச்சிருக்காருன்னு தெரியலை அண்ணி. இப்ப இந்துஜா வந்து கேட்டா என்ன சொல்லறது?” “எதுவா இருந்தாலும் உங்க அண்ணா பார்த்துப்பாங்க. அதோட உங்களுக்கு ஒன்னும் இது விஷயமா தெரியாது தானே? அப்ப தெரியாதுன்னே சொல்லிடுங்க. அதுல என்ன?” என்று தாரகேஸ்வரி சொன்னதும், புரிந்தவன் போல, “ஆமாம், ஆமாம், எங்களுக்கு தான் எதுவும் தெரியாதில்லை....
    காவியத் தலைவன் – 30 யாரையும் எதிர்கொள்ளும் நிலையில் தாரகேஸ்வரி இல்லை. அவள் தனக்குள் நிறைய போராடி போராடி களைத்துப் போயிருந்தாள். நல்லவேளையாக ஆதீஸ்வரன் சொல்லி சென்றது போல அழகாண்டாள் பாட்டி அன்றே வீட்டிற்கு வந்திருக்கவில்லை. வந்திருந்தார் என்றால் அவரை எதிர்கொள்ளும் சிரமத்தையும் அவள் கடக்க வேண்டியதாக இருக்கும். இப்பொழுது இருக்கும் சூழலில் நிதானமாக அவரை எதிர்கொள்வாள் என்றும் சொல்வதற்கில்லை. தனக்கிருக்கும்...
    காவியத் தலைவன் – 29 தாரகேஸ்வரி கணவனை வழியனுப்பி விட்டபிறகும் வாசலிலேயே கொஞ்ச நேரம் நின்றிருந்தாள். மனதில் இனம்புரியாத படபடப்பு. முகம் லேசாக செம்மையை பூசியிருந்தது. வரங்களை அள்ளித்தர கடவுள் தான் பூமிக்கு வர வேண்டும் என்பதில்லை போல! நாம் எதிர்பார்க்கும் வரத்தை எதிர்பாரா நேரத்தில் யாரோ ஒருவர் போகிற போக்கில் தூரலென நம் மேலே சிதறி விட்டு போய்விடுகிறார்கள்! தன்னிடம்...
    “அதுதான் சார், உடனே உங்ககிட்ட சொல்லாம இன்னொருமுறை சரிபார்த்துட்டு உங்ககிட்ட சொல்லலாம்ன்னு இருந்தோம். ஆனா நம்ம பேட் லக் இந்த ரிப்போர்ட் நிஜம் சார்” என்று சொன்னவர்களின் முகத்திலும் பெரும் சோகம். யாராலுமே இந்த தகவல் அறிக்கையை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. “அதெப்படி???” என்ற ஆதிக்கு ஒன்றும் புரியவில்லை. தான் சந்தேகப்பட்டியலில் வைத்திருந்த பள்ளிகள், கல்லூரிகளில் எல்லாம்...
    காவியத் தலைவன் – 28 காலையில் எழுந்ததிலிருந்தே ஆதீஸ்வரன் ஒரு நிலையில் இல்லை. அவன் பாட்டிற்குக் கிளம்பிக் கொண்டிருந்தாலும் என்னென்னவோ யோசனைகள். நெஞ்சம் படபடத்துக் கொண்டிருந்தது. அடிக்கடி திரும்பி மனைவியைப் பார்த்துக் கொண்டான். பார்வையில் அச்சம், ஏக்கம், தவிப்பு என்று கலவையான உணர்வுகள். தாராவுக்கும் ஒருகட்டத்தில் கணவன் மிகுந்த அலைப்புறுதலோடு இருக்கிறான் என்றளவில் புரிந்தது. ஆனால், காரணம் இன்னதென்று சரியாகக் கணிக்க...
    காவியத் தலைவன் – 27 எப்பொழுதுமே உறக்கத்தில் கூட கொஞ்சம் விழிப்புடன் இருப்பது ஆதீஸ்வரனின் வழக்கம். ஆழ்ந்த உறக்கம் என்பதை அவன் தொலைத்துப் பல வருடங்கள் ஆகியிருந்தது. இன்றோ ஓய்வில்லாத அலைச்சல் காரணமாக மனையாளின் வலது கரத்தை தன் கரங்களுக்குள் பொத்தி வைத்தபடி விரைவிலேயே ஆழ்ந்த உறக்கத்திற்குப் போயிருந்தான். பிடியில் மெல்லியதாக அழுத்தம், எளிதாக விடுவதில்லை என்கிற முனைப்பு அதில்...
    காவியத் தலைவன் – 26 சத்யேந்திரனால் மருத்துவமனையில் இருக்கவே முடியவில்லை. மனதில் அளவுக்கதிகமான அழுத்தம். நிதர்சனம் புரிகிறது தான்! அவனாலுமே அப்படி தன் அண்ணன் ஆதீஸ்வரன் வேண்டாம் என்ற முடிவை எடுத்துவிட்டு தன் சொந்த அன்னை, தங்கை தான் என்றாலும் அவர்களோடு சென்றுவிட முடியாது தான்! உணர்வுகளால் பிணைந்துவிட்ட உறவைத் துறப்பது பெரிய கொடுமை என்று அவன் மனதிற்கும் புரியாமல் இல்லை. ஆனால், அன்னை...
    ஓடி வந்த வேகத்தில் மயங்கிக் கிடந்தவனை கையில் அள்ளிக்கொண்டு ஆதி வாசலை நோக்கி ஓடினான். ஏனென்றே புரியாமல் கண்ணில் கண்ணீர் சிதறியது. சத்யாவிற்கு தனக்காக ஒருவன் இந்தளவு உயிரையே பணயம் வைத்தானே என்பது இன்னமும் நடுக்கம் தான்! அவனும் அண்ணன் பின்னாலேயே ஓடியிருந்தான். அவர்களுடன் நான்கு பேர் துணைக்குப் போக, மீதம் இருந்தவர்கள் எல்லாரும் அவ்விடத்தை...
    காவியத் தலைவன் – 25 பூஜிதா நடந்த அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லிவிட ஆதிக்குள் பெரும் பிரளயம். பெற்றோரைக் கொலை செய்தது வீரராகவன் என்கிற அதிர்விலிருந்தே அவன் இன்னும் மீளவில்லை. இப்பொழுது இரு வீட்டுப் பிள்ளைகளை மாற்றி வைத்து தங்கள் குடும்பத்திற்கு பெரும் அநியாயம் இழைத்திருக்கும் விஷயத்தை எப்படி அவனால் ஜீரணித்துக் கொள்ள முடியும்? ‘அப்படியானால், பெற்றோரை இழந்த பிறகு...
    விசாரணையின் போது எதிர்பாராதவிதமாக, பெரிய தலையாக வீராவும் சிக்கிக்கொள்ள, “என்ன பிரமா இந்த நேரத்துல குடோனுக்கு வந்திருக்க?” என அப்பொழுதும் வீரா சமாளிக்கத் தான் பார்த்தான். “அதை நான் தானே கேட்கணும் வீரா” என பிரமா வெகு அழுத்தமாகக் கேட்க, “ஆமா... ஆமா... நீ தான் கேட்கணும். உன்னோட குடோன் இது... நான் ஏன் இங்கே...
    காவியத் தலைவன் – 24 ஆதீஸ்வரனுக்கு தாரா அப்படி தளர்ந்து சோர்ந்து நடப்பதைப் பார்த்ததும் மனதைப் பிசைந்தது. இரு வீட்டுக்கும் செல்லப்பிள்ளையான அவளைக் கோபத்தில் அடித்தது பெரும் தவறாகவே பட்டது. ஆனாலும் அவள் செய்கையில் இன்னமும் கட்டுக்கடங்காத ஆத்திரம் தான்! அடித்துவிட்ட பிறகும் கூட அவள் மீதிருந்த கோபம் துளியும் குறைய மறுத்தது. ‘முளைச்சு மூணு இழை விடலை. அதுக்குள்ள பேச்சைப் பாரு!’...
    படிப்பு விஷயத்தில் தான் சத்யாவிற்கு பயங்கர திட்டு விழும். “உங்க அண்ணன் எல்லாம் எப்படி படிச்சான் தெரியுமா?” என அடிக்கடி அவனுக்கு வசைவுகள் விழுந்து கொண்டே இருக்கும், தொட்டதற்கும் அழகாண்டாள் பாட்டி, “இதே உங்க அண்ணனா இருந்தா என்ன செஞ்சிருப்பான் தெரியுமா?” என சொல்லிக் கொண்டே இருப்பார். சத்யாவுக்கு ரோஷம் பொத்துக் கொண்டு வரும்....
    காவியத் தலைவன் – 23 *** சில ஆண்டுகளுக்கு முன்பு *** கண்ணபிரான், அழகாண்டாள் தம்பதி ஈரோடு அருகில் வாழ்ந்து வந்தார்கள். அவர்களது ஒரே மகன் பிரமானந்தம். அந்த சுற்றுவட்டாரத்தில் அவர் மிகவும் செல்வந்தராகவும், செல்வாக்கு மிக்கவராகவும் இருந்தார். கண்ணபிரானின் உடன்பிறந்த தங்கை ஜோதிமணி. அவருக்கும் மாணிக்கம் என்பவரோடு திருமணம் முடிந்து அதே பகுதியில் தான் வசித்து வந்தார். அவர்களுக்குப் பிறந்தவர்...
    error: Content is protected !!