Thursday, June 26, 2025

    கோவக்கார கிளியே என்னை கொத்தி விட்டுப் போகாதே!

    அத்தியாயம் : 26 “மிரு குட்டி, அன்னைக்கு கேன்டீன்ல வச்சி படிச்சிட்டு இருந்தியே, அந்த புக்கோட பெயர் என்ன?”  செழியன் பணியின் நிமித்தம் காலையிலயே கிளம்பியிருக்க,  கார்த்தியும் ஊரிலிருந்து வந்த அசதியில் உறங்கிக் கொண்டிருந்தான். மனைவியுடனும், கொழுந்தியாவுடனும் அமர்ந்து காலை உணவை அருந்திக் கொண்டிருந்த வெற்றி கேட்டதும் அவனது மனையாள் அம்முவுக்கு புரைக்கேறியது.  ஒருவேளை அன்று, தான் விரலியை...
    அத்தியாயம்: 25 அவர்களுக்குள் பெரிதாய் எந்த மாற்றமும் இன்றி நாட்கள் கடந்தன. ஆனால் வழக்கின் அடி ஆழம்வரை தோண்ட ஆரம்பித்திருந்தான் வெற்றி. “வெற்றி சார பார்க்கணும்!” என்றது ஒரு கரகரத்தக் குரல். வாரணம் ஆயிரம் படத்தில் வரும் வயதான சூர்யா போல் அதே தோற்றத்தில்  கையில் ஒரு ஸ்டிக்குடன் நின்றிருந்த நெடியவனை ஏற இறங்கப் பார்த்த உதவிக் காவலர், “வெயிட்...
    அத்தியாயம்: 24 மறுநாள் விடியலில் கண்விழித்த அம்மு, எழுந்தவள் வெற்றியின் காலில் தான் தலைவைத்திருப்பதுக் கண்டு அதிர, “ஷ்ஷப்பா…காலே மரத்துப்போச்சிடி எரும!” என்றவன் காலைப்பிடித்துக் கொண்டு எழுந்தான். இது எப்படி? என்றவள் யோசித்துத் தெளியும்முன், “குண்டம்மா உருண்டு பிரண்டு என் காலை உடைச்சிட்டாளே! என்றவன் நொண்டி நொண்டியே அறைக்குச் செல்ல, துருவனை காலைக்கடன் அழைத்துச் சென்று திரும்பிய...
    அவள் கெஞ்சியும் ஆறவில்லை அவன் மனம். சிறுவயது முதல் புரிந்த தவத்தை கொச்சைப் படுத்துவாளா? அவள் மீதான என் காதல் எதன் மீதுன்னு நான் புரிய வைக்க வேணாம்! “நீ தான சொன்ன எடுத்துக்கன்னு” பாம்பாகச் சீறினான். “என்ன சொன்ன? பத்து நிமிஷம்… இல்ல பத்து நிமிஷம்” என்று கோபத்துடன் கவிழ்ந்திருந்த அவளது நாடியை அழுந்தப் பற்றி, “நீ சொன்ன...
    அத்தியாயம்: 23 கட்டிலில் சில கோப்புகளைப் பார்த்தபடி அமர்ந்திருந்தான் வெற்றி. அம்முவின் கோபத்தை அறிந்து, அவளாக புரிந்தும் கொள்ளும்போது புரிந்துகொள்ளட்டும் என தன் வேலைகளில் மூழ்கி இருக்க, கதவைத் திறக்கும் ஒலியில் நிமிர்ந்தவனின் பார்வை உறைந்தது. சற்றுமுன் அவன் எடுத்துக்கொண்ட சபதம் எல்லாம் ஆட்டம் காண, ‘வெற்றி வேணாம்டா! வேணாம்டா! தெரிஞ்சா பேய் ஓட்டுவாடா’ எச்சரித்த மனதையும்...
    அத்தியாயம்: 22 ஒரு வழியாகத் திருமணம் நல்லபடியாக முடிந்திருந்தது. அதில் முதல் ஆளாக நிம்மதியான பெருமூச்சை இழுத்து விட்டவள் அம்முதான். தாலி கட்டும் கடைசிநொடிவரை உள்ளுக்குள் அலை அலையாய் பயம் ஊடுருவிக் கொண்டுதான் இருந்தது. தந்தையும், கணவனும் அருகிலிருக்க தனக்கு ஏதும் நடந்துவிடாது என்று முயன்று தன்னைத் தேற்றிக்கொண்டாலும் எத்தனுக்கு எத்தனாக, ஏர்போர்ட், மருத்துவமனை துணிக்கடை என்று ஒவ்வொன்றிலும்...
    அத்தியாயம்: 21 இனி தனிமையை பழகிக்கணும் என்று விரக்தியாய் கார்த்தி சொல்லவும் வெற்றியின்‌ மனம் கனத்தது. கார்த்தியும் சொல்லவேண்டும் என்று நினைக்கவில்லை. எண்ணங்களின் அலைகளில் வார்த்தைகள் தானாய் கோர்த்துக் கொண்டன. உண்மைதானே! இதே வருத்தம் அவனது எழிலரசிக்கும் இருக்குமே! இருவருக்கும் உள்ள அன்பை நன்றாக அறிந்தவன்தானே வெற்றியும். அதில் “அவ மட்டும் உங்களைப் பிரிஞ்சி இருப்பான்னு நினைக்கிறீங்களா?” நேரடியாக கார்த்தியின்...
    அத்தியாயம் : 20 அம்முவும், திவ்யபாரதியும் கடையைவிட்டு இறங்கி வந்தபோது செழியன் வெற்றியை காய்ந்து கொண்டிருந்தான். ‘நல்லா வாங்கட்டும். இவன் மட்டும் நடுவுல போகாம, என்னையே சைட் அடிச்சிட்டு இருந்திருந்தா அந்த விருமாண்டி சந்தானம் என்கிட்ட நெருங்கி இருப்பானா? இதுல ஐய்யாவுக்கு கோவம் வேற…’ மனதுக்குள் தானும் வெற்றியை வறுத்தெடுத்தாள். “பீ சீரியஸ் மேன்!” என்று எச்சரித்த செழியன்...
    அத்தியாயம் : 19 அம்முவும், திவ்யபாரதியும் கடைக்குச் சென்று அரைமணி நேரத்திற்கெல்லாம், வெற்றியும் செழியனும் அந்த பிரபல ஜவுளி கடைக்குள் நுழைந்தனர். புடவையை விரித்துப் பார்த்திருந்த திவ்யபாரதி வெற்றியைக் கண்டதும், “வாங்க தம்பி” என்றழைக்க, பதிலாக அவன் குரல் கேட்டும் திரும்பவில்லை அம்மு. மும்முரமாக சேலையை பிரிப்பதுபோல் திரும்பி இருந்தவள் வேண்டுமென்றே விற்பனைப் பெண்ணிடம் எதையோ கேட்டுக்...
    அத்தியாயம் : 18 “வாவ்… வாவ்..வாவ்!  வாட் எ ப்ரோப்போஸல்” அடக்கமாட்டாமல் சிரித்தான் வெற்றி. அவன் எதிரே கடுப்புடன் நின்றிருந்தாள் எழிலரசி. “பாரேன்! இத்துனூண்டு வயசுல பத்திரம் காட்டினதுல இருந்து இங்க சுமந்துட்டு இருக்கேன். எனக்கு கூட இப்படி ப்ரோப்போஸ் பண்ண தோணலயே” என்றவனின் சிரிப்பு மட்டும் அடங்கிய பாடில்லை. அவளிருந்த நிலையில் அவன் சொன்னதைச் சரியாக உணரவில்லை அவள். உணர்ந்திருந்தால்...
    அத்தியாயம் : 17 விலங்குகளுக்கான மருத்துவமனையில் துருவனை கையில் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்தாள் அம்மு. மருத்துவரை சந்திக்க நீண்டதொரு வரிசை அமர்ந்திருந்தது. அவளுடையது பத்தாவது டோக்கன். “உன்னைத் தனியா சந்திக்க எவ்வளவு பாடு படுறது?” வெகு அருகில் கேட்ட குரலில் திரும்பினாள். பக்கத்தில் மாஸ்க்குடன் அமர்ந்திருந்தவன் யாருடனோ அலைபேசியில் பேசிக்கொண்டிருந்தான். துருவன் வேறு அவன் பக்கமாகவே இழுக்க, துருவனை சமாளிக்க...
    அத்தியாயம் : 16 வெற்றிதான்‌ மறுபக்கம் அழைத்துக் கொண்டிருந்தான். ‘அதுக்குள்ள எந்த புல்லுருவி போட்டுக்குடுத்துச்சின்னு தெரியலையே’ என்று எண்ணியபடி சுற்றிலும் மாணவர்களை  பார்வையால் வலம் வந்தவள் அலைபேசியை எடுக்கவில்லை. எங்கே ஏடாகூடமாக பேசி, கோபித்துக்கொண்டு திருமணத்தை நிறுத்தி விடுவாளோ என்ற பயத்திலயே அவளை தவிர்த்து இருந்தவன், திருமணம் பேசிய பிறகு முதல்முறை அழைக்கிறான். அவள் எடுக்காததில், ‘எடுத்துத் தொலைடி’ என்று...
    அத்தியாயம் : 16 வெற்றிதான்‌ மறுபக்கம் அழைத்துக் கொண்டிருந்தான். ‘அதுக்குள்ள எந்த புல்லுருவி போட்டுக்குடுத்துச்சின்னு தெரியலையே’ என்று எண்ணியபடி சுற்றிலும் மாணவர்களை  பார்வையால் வலம் வந்தவள் அலைபேசியை எடுக்கவில்லை. எங்கே ஏடாகூடமாக பேசி, கோபித்துக்கொண்டு திருமணத்தை நிறுத்தி விடுவாளோ என்ற பயத்திலயே அவளை தவிர்த்து இருந்தவன், திருமணம் பேசிய பிறகு முதல்முறை அழைக்கிறான். அவள் எடுக்காததில், ‘எடுத்துத் தொலைடி’ என்று...
    அத்தியாயம் : 15 கன்னங்கள் நனைந்துகொண்டே இருந்தது. துடைத்துவிட்டு ஒத்தைக் கையால் ஸ்டீரியங்கைப் பிடித்தாள் எழிலரசி. ஒருமனம் விளையாடுகிறான் என்று வெற்றிக்காக வாதாடிக் கொண்டிருந்தது. விளையாட்டென்றாலும் ஒரு எல்லை இல்லையா என்ன?  அவனைப்பற்றி உனக்குத் தெரியாதா? சிறுவயதில் உன்னை ஜெயிக்க களறி ஆடத்தெறியாததுபோல் நாடகமாடியவன்தானே அவன். ‘தந்திரக்காரன்’ வசைபாடினாள். தனக்கு வேண்டுமெனில் எந்த குறுக்கு வழியையும் கையாள்வான். ஏன் நண்பனைக்...
    அத்தியாயம் : 14 அறைக்குத் திரும்பிய எழிலரசி, உடல் தூக்கி தூக்கிப்போட, அனத்திக் கொண்டு படுத்திருந்த தங்கையைக் கண்டு அதிர்ந்துதான் போனாள்.  ‘அம்மாட்ட படுக்கப் போறேன்னுட்டு இவ இங்க என்ன பண்றா?’யோசனையுடன் உடலைத் தொட்டுப் பார்க்க அனலாய்க் கொதித்தது. அடுத்த அரைமணி நேரத்தில் மொத்தக் குடும்பமும் மருத்துவமனையில் இருந்தது. இரண்டு நாட்கள் கடந்தே வீடு திரும்பினாள் மிருத்யூஸ்ரீ.  நடந்த களேபரத்தில் தாய்...
    “ட்ரஸ் மாத்திட்டு வாடி! சாப்பிடலாம்” தன்னவன் நினைவுகளுடன் ஜீப்பிலிருந்து இறங்கி வீட்டுக்குள் நுழைந்தவளை சாப்பிட அழைத்தாள் தாய் திவ்யபாரதி. திரும்பியும் பாராமல், “எனக்குப் பசி இல்லமா” என்று அறையில் நுழைந்து கொண்டாள். மகளின் முகம் எதையோ இழந்ததுபோல் கலையற்றுக் கிடந்ததில் கேள்வியுன் சாப்பிட்டுக் கொண்டிருந்த கணவனை ஏறிட்டாள். மனைவிக்கு நேரடியாகப் பதில் சொல்லாமல், “நீ சாப்பிடு” என்றான் செழியன். “என்னப்பா...
    அத்தியாயம் : 13 அவளது வெற்றியா அவளிடம் கோபப்பட்டது! எழிலரசியால் நம்பமுடியவில்லை. மெல்லியப் புன்னகை இழையோட கண்ணெடுக்காமல் அவன் தன்னை இரசிக்கும் கணங்களை அவனுடன் சேர்த்து அவளும் இரசித்திருக்கிறாள்.  அவனின் அந்தச் சிரிக்கும் கண்கள், அவன் பேசாத காதலை எல்லாம் சேர்த்து வைத்து அவளிடம் ஆயிரமாயிரம் கதைப் பேசி இருக்கிறது. எப்போது அவனை இரசிக்க ஆரம்பித்தாளென கேட்டால் நிச்சயம் சொல்லத்...
    அத்தியாயம் : 12 அன்று மாலையே எடுத்த விடுமுறையை முழுதாக அனுபவிக்க முடியாமல் பணிக்குத் திரும்பி இருந்தாள் அம்முஎழிலரசி. “ஃபாரன்சிக் சொல்லியாச்சா? பாடி எங்க இருக்கு?” இன்ஸ்பெக்டரிடம் கேள்வி கேட்டுக்கொண்டே அந்த பங்களாவின் உள்ளே நுழைய, ஒரு அறையை சுட்டிக் காட்டினார் இன்ஸ்பெக்டர். “யார் முதலில் பார்த்தது?” என்றபடி அவர் சுட்டிக்காட்டிய அறைக்குள் நுழைந்தவளுக்கு ஒரு நிமிடம் திக்...
    அத்தியாயம்: 11 தன் உயிர் மாமனிடமிருந்து இப்படியொரு வார்த்தைகளை கொஞ்சமும் எதிர்பார்த்திராதவள், அதிர்ச்சியில் விழிகள் கலங்க உறைந்து நின்றாள். அவள் செய்து கொண்டிருக்கும் மடத்தனத்தை ஒற்றைக் கேள்வியில் புரிய வைத்திருந்தவனும் கை இரண்டையும் மார்புக்குக் குறுக்காக கட்டிக்கொண்டு மருமகளின் விழிகளைத்தான் அழுத்தமாகப் பார்த்திருந்தான். அவள் விழிகள் தன்முன்னே கண்ணீரைச் சொறிய, துடைத்துவிடத் துடித்தக் கரங்களைக் கடினப்பட்டு அடக்கிக் கொண்டு...
    அத்தியாயம் : 10 பழைய நினைவுகளிலிருந்து வெளி வந்த வெற்றி தன் காதல் முளைவிடும் முன்னே கருகியதை எண்ணி பெருமூச்சொன்றை விட்டுக் கொண்டான். அருகில் அதே பெருமூச்சின் சத்தத்தில் திரும்பிப் பார்க்க மயிலாதான் கூண்டுக்குள்ளிருந்து காதை சொறிந்தது. “ஓய்! என்ன கொழுப்பா? நான் செய்றத அப்படியே செய்வியா நீ?” அதன் செய்கையில் சுவாரஷ்யம் மிக தன் படுக்கையின் அருகே...
    error: Content is protected !!