SS
சங்கீத சக்தி – 18
கதவை யாரோ தட்டும் ஓசை கேட்டு, இந்த இரவு நேரத்தில் யார் என்ற யோசனையோடே சென்று வாயில் கதவைத் திறந்த அபூர்வா நிச்சயம் அங்கே சக்திவரதனை எதிர்பார்க்கவில்லை.
காலையில் அவளை நேருக்கு நேராக நிமிர்ந்து பார்க்க அஞ்சி, பேசத் தயங்கி, ஒவ்வொரு வார்த்தைகளையும் கெஞ்சலும் தவிப்புமாய் வெளியேற்றியதற்கு எதிர்ப்பதமாக இப்பொழுது முகத்தை...
எதிரில் வந்து நின்றவனை சின்னஞ்சிறு விழிகளால் உறுத்து விழித்தாளே தவிர எந்த கேள்வியையும் கேட்கவில்லை. அவளைப் பார்ப்பதும், அந்த கோயில் வளாகத்தில் தாயுக்கு எந்த சிரமமும் தராமல் விளையாடும் மகளைக் கள்ளத்தனமாகப் பார்ப்பதுமாக நின்றிருந்தவனை, “இந்தாங்க…” என்ற அவளின் குரல் கலைத்தது.
அவளிடமிருந்த கைக்குட்டை சுருளை அவனிடம் தந்திருந்தாள். யோசனையோடு அதைப் பிரிக்க, உள்ளே கம்மல்,...
சங்கீத சக்தி – 17
மிகுந்த மனபோராட்டத்தின் பின்னரே யாழிசையின் நன்மையை முன்னிட்டு அபூர்வா வேறொருவரின் பண உதவியுடன் மகளுக்குச் சிகிச்சை செய்வதற்கு ஒப்புக் கொண்டாள். சிகிச்சை முடிந்து மகளின் குறை நிவர்த்தியானபிறகு அவள் அடைந்த ஆசுவாசம் அளப்பரியது.
இன்று மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு கிளம்பலாம் என்ற நிலையில், செவிலியர் யாழிசைக்குச் சிகிச்சை செய்யப்பட்ட மேல் உதட்டின் மேல்...
சங்கீத சக்தி – 16
இந்த சில ஆண்டுகளாக அபூர்வா பட்ட கஷ்டம் மிகமிக அதிகம். தனது ஊரிலிருந்து பிரீத்தி வேலை செய்யும் நகரமான ஓசூருக்குப் பயணப்பட்டவள், தோழியின் கம்பெனியிலேயே அவள் சிபாரிசில் வேலையைத் தொடங்க, சாதாரண வேலை தான். ஆனால், அதுவே அவளுக்கு அத்தனை சிரமமாக இருந்தது.
தோழியையும் அதிகம் சார்ந்திருக்கக் கஷ்டமாக இருந்தது. உண்மையைச்...
சங்கீத சக்தி – 15
“வளர்மதியோடு மருமகன் தானே நீங்க?” பொது இடத்தில் எதிர்பாராத சந்திப்பில் மருத்துவர் வஞ்சுளா சக்திவரதனை அடையாளம் கண்டு பேச, பேச்சு தடைப்பட்ட உணர்வு அவனுக்கு.
“ஆ… ஆமாம்… டாக்டர்” என்றான் திணறலாக.
“உங்க மனைவிக்கு இப்ப ஆறு மாசம் கிட்ட ஆகியிருக்கும் இல்லை… எப்படி இருக்காங்க? நான் அவ்வளவு தூரம் சொல்லி விட்டும்...
சங்கீத சக்தி – 14
சக்திவரதன் கண்டிப்பு காட்டவும் ஷர்மிளாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது. அத்தனை எளிதில் தன்னை ஏமாற்ற விட்டுவிடுவதா என்று தோன்றக் கண்ணில் நீரை தேக்கிக் கொண்டு, “ஏன் நான் என்ன தப்பா கேட்டுட்டேன். உன்னை நம்பி நான் காத்துட்டு இருக்கேன். நீ என்னடான்னா... இங்கே?” என்று சொன்னவள் மேற்கொண்டு பேச முடியாதவள் போல...
சங்கீத சக்தி – 13
அதற்குள் விஷயம் கேள்விப்பட்டு கருணாகரனின் வீட்டில் அக்கம் பக்கத்தினர், உறவினர்கள் எல்லாம் கூடி விட்டிருந்தனர். எதையும் கவனிக்கும் நிலையில் அபூர்வா இல்லை. ஆட்டோவிலிருந்து இறங்கியவளைச் சிலர் சூழ்ந்து கொண்டு அழ, அவர்களோடு நடுவீட்டில் அமர்ந்தது மட்டுமே அவள் அறிவாள்.
யார் இருக்கிறார்கள், யார் வந்தார்கள் என எதையும் கவனிக்கும் மனநிலையில் இல்லாமல்...
சங்கீத சக்தி – 12
தன் வீட்டை நோக்கி வந்த அபூர்வாவிற்குப் பூட்டிய வீடே காணக்கிடைத்தது. இது வழக்கம் தான்! பெரும்பாலும் பெற்றோர்கள் கோயில், ஆசிரமம், மருத்துவமனை, விசேஷ வீடு என எங்காவது செல்வதுண்டு.
எங்கே சென்றிருப்பார்கள் என ஊகிக்கவோ கேட்டறியவோ தெம்பில்லாமல், வழக்கமாகச் சாவி வைக்கும் இடத்திலிருந்து சாவியை எடுத்து வீட்டைத் திறந்தவள், குளித்து உடைமாற்றிவிட்டு...
சங்கீத சக்தி – 10
சக்திவரதனுக்கு சமீப கால மணவுளைச்சலின் பயனாய், வேலையில் கூட ஒன்றி எதையும் செய்ய முடிவதில்லை.
அன்றும் அப்படித்தான் தலைவலி வெகுவாக படுத்த, இடது கையை தலையில் அழுந்த ஊன்றியவாறே சில கணக்குவழக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருக்க, தலைவலிக்கு இதமாக இருக்கும் எனச் சூடாகக் காபி கலந்து கொண்டு வந்து தந்தாள் அபூர்வா.
‘ம்ப்ச்’ என...
சங்கீத சக்தி – 9
காதல் சூழ் உலகில் உலவிக் கொண்டிருந்தனர் சக்தியும், சங்கீதாவும்! முதல் அடியை எடுத்து வைக்கத்தான் தயக்கம் என்பது இருக்கும். அதன்பிறகு எவ்வித தயக்கமும் இருக்காது.
இதற்கும், சக்தி முதல் அடியை எடுத்து வைப்பது குறித்து அதுநாள் வரையிலும் யோசித்ததே இல்லை! தன்னையும் மீறி தொடங்கிவிட்ட வாழ்வு தந்த தித்திப்பில், அதிலேயே அமிழ்ந்து...
சங்கீத சக்தி – 8
ஸ்ரீவத்சனிடம் ஏதேதோ பேசிவிட்டிருந்தாலும் மனதிலிருந்து எதையும் சொல்லியிராததால், இப்பொழுது சக்திக்கு அவன் உதிர்த்துவிட்ட சொற்கள் நெருஞ்சி முள்ளாய் நெஞ்சைக் குத்தியது.
திருமணம் என்ற முடிவை எடுத்து விட்டவன், அந்த பந்தத்தை வாழ்நாள் முழுவதும் தொடர்வது என்ற தீர்மானத்தோடு தான் எடுத்தான். உண்மையில் அந்த முடிவை எடுத்த அவனை அவனாலேயே மன்னிக்க முடியவில்லை...
சங்கீத சக்தி – 7
சக்திவரதனுக்கு இது மிகவும் நீண்டடட… நாள். அவன் எதிர்பார்த்ததற்கெல்லாம் அப்பாற்பட்டு நிறைய நிறைய நடந்து விட்டிருந்தது. ஏதோ கசப்பை வலுக்கட்டாயமாக விழுங்கியவனின் நிலையில் இருந்தான்.
இன்றைய அவனது முதல் சறுக்கல் அபூர்வாவிடமிருந்து பிள்ளையார் சுழி போட்டது. ஏன் அவளிடம் அத்தனை நெருக்கம் காட்டினோம்? ஏன் அவளோடு அத்தனை இணக்கமாக இருந்தோம் என...
சங்கீத சக்தி – 6
உள்ளத்தைத் திடமாக வைக்க நினைத்தாலும் அபூர்வாவால் வைக்க முடிய வேண்டுமே! தந்தையின் சுகவீனத்தை நினைத்தே தினமும் மறுகுபவள், இப்பொழுது தாயுக்கும் உடல்நிலை சரியில்லை எனக் கேள்விப்பட்டதும் ஒடிந்து போனாள்.
சக்திவரதன் கிளம்புவதற்குத் தயாராக இருந்தவன், அவளின் கலங்கிய தோற்றத்தையும் பதற்ற குரலையும் கேட்டதும் தன்னையும் மீறித் தேங்கிவிட, அவள் அழைப்பைத் துண்டித்ததும்...
சங்கீத சக்தி – 5
கீழே விழுந்த அபூர்வா எப்படி விழுந்தோம் என திருதிருக்க, சக்தியின் புன்னகையில் அவளுக்கு லஜ்ஜையாக இருந்தது.
ஒற்றை நாளில் எத்தனை அதிசயத்தைத் தான் அவளும் தாங்குவாள்? எப்பொழுதும் இவள்புறம் அவனது பார்வையே திரும்பாது, இன்றானால் வெகு உரிமையாக ரசித்துப் பார்க்கிறான். அசராமல் நெருங்கி வருகிறான். தயக்கமேயின்றி அணைத்துப் பிடிக்கிறான். எல்லாவற்றிக்கும் மேலாக...
சங்கீத சக்தி – 4
சக்திவரதன் வெகுவாக தடுமாறி நின்றது சில கணங்களே! ஆவலும், எதிர்பார்ப்புமாய் தன்னையே மூவரும் நோக்க, என்ன முயன்றும் அவனால் அந்த நேரத்தில் தன் கோபத்தை எண்ணிப் பார்க்கக் கூட முடியவில்லை.
தன்னை நேசிக்கும் ஒருத்தி, உடல்நிலை மோசமான நிலையிலும் கண்கள் ஒளிரத் தன்னை மட்டுமே ரட்சகனாய் நோக்கும் ஒரு மனிதர், மகள்,...
சங்கீத சக்தி – 3
கருணாகரனுக்கு உடல்நிலை அவ்வளவாகச் சரியில்லை. வயதும் அதிகம் என்று சொல்வதற்கில்லை தான். அறுபதை நெருங்கிக் கொண்டிருக்கிறார். ஆனால், உடல் உபாதைகள் சற்று அதிகமாக இருந்தது. நாளுக்கு நாள் உடல்நிலை மோசமாகிக் கொண்டே வந்தது.
திடீரென மெலிந்தார். இருமல் எனத் தொடங்கினால் விரைவில் சரியாவதில்லை. திடீரென கால் வீக்கம், வயிறு வீக்கம் என...
சங்கீத சக்தி – 2
சக்திவரதன் தன்னிடம் வந்து பேசியதை தன் தாய் வளர்மதியிடம் அன்றே சொல்லி விட்டிருந்தாள் அபூர்வ சங்கீதா.
வளர்மதியால் நம்பவே இயலவில்லை. “அந்த பையனா?” என்று அதிர்ச்சியாகக் கேட்டவருக்கு மிகவும் யோசனை! ‘இது எப்படி சாத்தியம்’ என்று என்ன யோசித்தும் அவருக்கு விளங்கவே இல்லை.
அவர் பார்வைக்கு அவர்களது மகள் பேரழகு தான்! ஆனால்,...