Marakka Manam Kooduthillaiyae
அத்தியாயம் – 4
“ஸ்ரீக்குட்டி... அம்மாக்கு ஒரு முத்தா குடு...” சாதனா கன்னத்தைக் காட்டிக் கேட்க குழந்தை பச்சக்... என்று அவள் அழகுக் கன்னத்தில் ஈரத்துடன் முத்தமிட்டு சிரித்தது.
“என் செல்லக்குட்டி... வெல்லக் கட்டி...” அவளை அணைத்துக் கொண்டு கொஞ்சியவள் அன்னையின் அழைப்பில் திரும்பினாள்.
“சாது... அபார்ட்மென்ட் முன்னாடி இருக்குற கடைக்குப் போயி கீரை வாங்கிட்டு வந்திடறியா...”
“ஏன்மா... நேத்தே...
அத்தியாயம் – 3
புது ஆர்டர் விஷயமாய் கம்பெனி மானேஜர் ஒருவரைக் காண வந்திருந்தான் நிதின்.
“சார்... இந்த ஆர்டர் தீபாவளிக்குள்ள முடிச்சு மும்பை அனுப்பனும்... அப்புறம் ஒரு மாசத்துக்கு போனஸ் வாங்கிட்டு ஊருக்குப் போற லேபர்ஸ் யாரும் ஒழுங்கா வேலைக்குத் திரும்ப மாட்டாங்க... அதுக்குள்ளே உங்களால முடிக்க முடியுமா...” நிதினுடன் பேசும்போதே அலைபேசி சிணுங்க எடுத்து...
அத்தியாயம் – 2
“சஹா... இந்த மிக்ஸி ஓகே வான்னு பாரு...” அன்னையின் குரலில் திரும்பிய சஹானா கண்டதுமே மனதில் சாரல் வீசும் அழகோடு இருந்தாள். பளிச்சென்ற வெள்ளை சல்வாரில் நெற்றியில் ஒரே ஒரு கறுப்புப் பொட்டு தவிர எந்த அலங்காரமும் இல்லை. காது, கழுத்து எல்லாமே காலியாய் கிடக்க ஒளி வீசும் கண்களில் மட்டும்...
அத்தியாயம் – 1
சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே
கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
கபித்த ஜம்பூ பலஸார பக்ஷிதம்
உமாஸூதம் சோக வினாச காரணம்
நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்...
மங்களகரமாய் கை கூப்பி நின்று இனிய குரலில் கணபதி மந்திரத்தைத் தெளிவாய் உச்சரித்துக் கொண்டிருந்த மகளைப் பெருமையும் புன்னகையுமாய் நோக்கிக் கொண்டே...