Saturday, May 18, 2024

    நதியின் ஜதி ஒன்றே!

    "யாரு நான் பேட்" "ஆமா. நீங்க ஏன் அக்காவை லவ் பண்ணீங்க, அதனால தான் இவ்வளவு பிரச்சனை. அஜு எங்களை விட்டு தள்ளி போயிட்டான், அப்பா அவரை எவ்வளவு பேசுறார் தெரியுமா? உங்களுக்கு ஹெல்ப் பண்ண போய் அஜு தினமும் திட்டு வாங்குறாங்க" "ஜீவிம்மா. நான் பாவம் இல்லையா? என் கதையை விட்டுடேன்" "நீங்க எங்க வீட்டு மாப்பிள்ளை...
    நதியின் ஜதி ஒன்றே 12 பெண் மனதில் அஜய் பற்றிய உணர்வுகள் மிகவும் விநோதம் ஆனது. இது தான், இப்படி தான் என்று எதிலும் இணைக்க முடியா உறவு அது. ஜீவிதாவிற்கு அவனை பிடிக்கும், பிடிக்காது என்பதை எல்லாம் கடந்து அவளில் அவன் மிக மிக  முக்கியமானவன்.  குழந்தையில் அவள் முகம் பார்த்து மனதில் பதிய வைக்க தொடங்கிய...
    நதியின் ஜதி ஒன்றே 11 சென்னை அடுக்குமாடி குடியிருப்பில் தாரணி குடும்பம் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தது. கல்யாண் மதிய உணவை பேக் செய்தவன், மகளின் வருகையில் அவளிடம் சென்றான். தாரணி தங்களின் மூன்று வயது மகள், 'ஜியா'வை குளிக்க வைத்து கணவனிடம் கொடுத்தாள். "நீ கிளம்பிடு. நான் பாப்பாவை பார்த்துகிறேன்" என்ற கல்யாண், மகளுக்கு உடை அணிவித்து, உண்ண...
    நதியின் ஜதி ஒன்றே! 10 மிகவும் பிரமாண்டமாக நடந்தேறி கொண்டிருந்தது கல்யாண், தாரணி திருமணம். இன்னும் சில நொடிகளில் முகூர்த்தம். மணமக்கள் மேடைக்கு வந்துவிட்டனர்.  காதல் கை கூடிய மகிழ்ச்சியில் மணமக்களின் முகங்கள் ஜொலித்தன. ஜீவிதா அக்கா பக்கத்திலே நின்றிருந்தாள். அவளின் முகத்தில் அளவான புன்னகை.  சேனாதிபதி பக்கம் ஆட்கள் மிக அதிகம். காமாட்சி ஓடியாடி எல்லாம் செய்து...
    நதியின் ஜதி ஒன்றே! 9 முன் மாலை பொழுதில் சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது. கல்யாண் அப்பாவிடம் பேசினான்.  "எதுக்கு பேச்சு வார்த்தை எல்லாம்? அவர் போன் பண்ணுவார் தம்பி, இரு" என்றார் சேனாதிபதி. "ப்பா.. இப்படி ஒரு கல்யாணம் எனக்கு வேண்டாம். பொண்ணை பெத்தவர் மனசார கொடுக்கணும்" என்றான் மகன். "அதான் கொடுக்க மாட்டேங்கிறாரே. உன்கிட்ட கூட அவருக்கு குறை தெரியுதுன்னா...
    "என்ன பயம்? அவங்க உன்னை நெருங்க முடியாதுன்னு சொன்னேன் தானே?" என்று தள்ளி வந்து கேட்க, ஜீவிதா அக்காவிடம் பேச நினைத்து போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டாள். "ஜீவிதா" என்று அஜய் கத்த, "ஜீவி" என்று அக்கா தேம்பினாள். "என்னக்கா. என்ன ஆச்சுக்கா?" தங்கை கலங்கி போனாள். தாரணிக்கு என்னவென்று சொல்வது என்று கூட தெரியவில்லை. பேச்சு ஆரம்பிக்காத வரை...
    நதியின் ஜதி ஒன்றே! 8 இங்கு சேனாதிபதி வீட்டில், "ப்பா ஏன்ப்பா இப்படி?" என்று கல்யாண் நொந்து போய் கேட்டான். "இதுதான் ரவுடிசம். இதுக்கு தான் அவர் பொண்ணு தரமாட்டேனு சொன்னார். நீங்க அதையே லைவா அவருக்கு பண்ணி காமிச்சிட்டு வந்திருக்கீங்க. அப்புறம் எப்படி அவர் பொண்ணை கொடுப்பார்?" காமாட்சியும் கேட்டார். "என் முன்னாடியே என் மகனுக்கு அவர்...
    கல்யாண் மாமாவாக வந்தால் ஜீவிதாவிற்கு மகிழ்ச்சியே. அக்காவை காதலித்தவனாக இல்லாமல், முறையாக பெண் கேட்டு வந்தது சிறு பெண்ணுக்கு பிடித்தது. பெற்றவர்கள் அங்கீகாரம் கொடுத்துவிட வேண்டும் என்று மனதுக்குள் விழுந்து விழுந்து சாமி கும்பிட்டு கொண்டிருந்தாள். "அஜு. அத்தைகிட்ட சொல்லி அப்பாகிட்ட பேச சொல்லுங்களேன்" என்றாள் கிட்சனுள் சென்று  மெல்லிய குரலில். "ஜீவிதா. முதல்ல நீ ஹாலுக்கு...
    நதியின் ஜதி ஒன்றே! 7 கல்யாண் தங்கள் வீட்டிற்கு திடுமென வந்து நிற்க, கல்பனா அவனை வரவேற்று அமர வைத்தார். கணவன், மனைவி இருவரிடமும் பேச வேண்டும் என்று சொல்ல, கல்பனா போன் செய்து கணவரை வர சொன்னார். கல்யாண்க்கு குடிக்க கொடுத்தவர், பொதுவாக பேசி கொண்டிருக்க பலராம் வந்துவிட்டார். "சொல்லுங்க தம்பி" பலராம் கேட்க, "இது பெரியவங்க வந்து தான்...
    இளையவர்கள் ஓரிடத்திலே நிற்க, அம்மாக்கள் புடவை எடுத்து வந்துவிட்டனர். "அதுக்குள்ள முடிச்சிட்டீங்களாம்மா" ஜீவிதா வாய் பிளந்தாள். ஒரு புடவையை நாள் முழுதும் எடுத்த ரிக்கார்ட் எல்லாம் உண்டே! "அண்ணி உதவி பண்ணாங்க" என்று காமாட்சியை காட்டினார். "அண்ணியா?" இளையவர்கள் திகைக்க, கல்யாண் முகம் கொஞ்சம் தெளிந்தது. "உங்களுக்கும் அண்ணியாம்மா" என்று அஜய் அவனின் அம்மாவிடம் புருவம் தூக்கி கேட்டான். "என்னை...
    நதியின் ஜதி ஒன்றே! 6 அஜய், தாரணி வேலை பார்க்க ஆரம்பித்து, முதல் மாத சம்பளத்தையும் வாங்கிவிட்டார்கள். வங்கியில் பணம் வந்து விழுந்த நேரம் என்னமோ உலகமே வசப்பட்ட உணர்வு அந்த இளையவர்களுக்கு. பிரேக்கில் சந்தித்து கொண்டவர்கள், தங்களுக்கு வந்த மெசேஜை காட்டி கொண்டிருக்க, மூன்றாவது கையும் உள்ளே வந்தது. அஜய், தாரணிக்கு அது யாரென தெரியும் என்பதால்...
    அக்கா, தங்கை சண்டை மூன்று நாள் நீடிக்க, "இன்னுமா சமாதானம் ஆகலை?" என்று கேட்டான் கல்யாண். "ஆகலை. ரொம்ப பண்றா" சின்னவள் கடுப்பாக சொன்னாள். "நானும், என் தம்பியும் சண்டைன்னு வந்தா ரத்தம் பார்க்காம ஓயமாட்டோம். ஆனாலும்  அடுத்த நாளே பேசிடுவோம்" "உங்களுக்கு தம்பி இருக்காங்களா? வேற யார் சிப்லிங்ஸ்?" "தம்பி மட்டும் தான். டாக்டருக்கு படிச்சிட்டு இருக்கான்" "சூப்பர் சீனியர்....
    நதியின் ஜதி ஒன்றே! 5 தொடர்ந்த நாட்கள் பெரிதான மாற்றம் இல்லாமல் சென்றது. ஜீவிதாவிற்கு கல்லூரி வாழ்க்கை பழகியது. நண்பர்கள் கிடைக்க, கொஞ்சம் ஜாலியாகவும் இருந்தாள். நண்பர்களுக்கு இறுதி வருடம் என்பதால் மெனக்கெட்டு படித்தனர். ப்ரொஜெக்டில் நேரம் இழுத்தது. இருவருக்கும் மேற்படிப்பு செல்லும் எண்ணம் இல்லை. தாரணிக்கு ஒரு வருடமாவது வேலை பார்க்க வேண்டும். சொந்த உழைப்பில், சுதந்திரமாக...
    முதல் நாள் பற்றி பலராம் சின்னவளிடம் கேட்க, "ஓகே தான்ப்பா" என்று முடித்து கொண்டாள் மகள். அவள் சென்னை, கோயம்பத்தூர் என்று பிளான் போட, தந்தை பெரிய மகளுக்கு போட்ட பிளானையே இவளுக்கும் போட்டுவிட்டார். இங்கேயே பிடித்து வைத்து கொண்டார். முன்பு ஜீவிதா நண்பர்களிடம் சொன்ன போது அவர்கள் சிரித்ததிற்கான காரணம் இப்போது விளங்கியது. "எல்லாம் மோசம். உங்க...
    நதியின் ஜதி ஒன்றே! 4 இன்று தான் ஜீவிதாவிற்கு முதல் நாள் கல்லூரி. தாரணியின் கல்லூரியில் தான் சேர்ந்திருந்தாள். வேறு வேறு துறை. பெற்றவர்களிடம்  வாழ்த்து வாங்கி  கொண்டு அக்காவுடன் கல்லூரிக்கு கிளம்பினாள். பலராம் சின்னவளுக்கும் போன் வாங்கி கொடுத்திருக்க, அடிக்கடி எடுத்து பார்த்தாள். அஜய் அழைக்கவே இல்லை.  கல்லூரி பேருந்து வந்துவிட்டால் மொபைல் எடுக்க முடியாது. "உன்...
    நதியின் ஜதி ஒன்றே! 3 சங்கர் குடும்பம் ஊருக்கு கிளம்பி விட்டிருந்தார்கள்! கல்பனாவிற்கு கணவன் எப்போது வீடு திரும்புவார்  என்றிருந்தது. முக்கியமான மீட்டிங் என்று ஹெட் ஆபிஸ் சென்றிருக்கிறார் மனிதர். போனில் இது பற்றி பெரிதாக பேச முடியவில்லை. "நான் நேர்ல வந்து பேசுறேன்" என்று முடித்து கொண்டார் பலராம். இரண்டு நாட்கள் சென்று பலராம் வந்தார். "ப்பா" என்று...
    கல்பனாவின் கண்ணீரை நிறுத்தும் பொருட்டு, ஜீவிதா அந்த வருடம் பெரிய பெண்ணாகி இருந்தாள். விடுமுறை நாளிலே நிகழ்ந்துவிட, ஜீவிதாவிற்கு முதலில் அப்படி ஒரு அழுகை. தாரணி தான் முழு நேரமும் தங்கை உடன் இருந்து அவளை சமாளித்தாள். ஊரில் இருந்து உறவுகள் ஒவ்வொருவராக வந்தனர். சகுந்தலா தினமும் எதாவது செய்து கொண்டு வருவார். அங்கே இருக்கும் ஹாலில்...
    நதியின் ஜதி ஒன்றே! 2 அந்த இரவு நேரத்தில் கொண்டாட்டம் களை கட்டியிருந்தது. வண்ண விளக்குகளியின் ஒளியிலும், ஸ்பீக்கரின் இசையிலும் வளாகமே அதிர்ந்தது. சிமெண்ட் தொழிற்சாலை ஆரம்பித்த நாள் என்பதால் பெரிய பதவியில் இருப்பவர்கள் எல்லாம் வந்திருந்தனர். மேடையில் பிள்ளைகள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் பங்களிப்பை கொடுத்து கொண்டிருந்தனர். அஜய், தாரணி வயதோர்க்கான  குரூப் டேன்ஸை ஜீவிதா உதடு...
    நதியின் ஜதி ஒன்றே 1 கந்தன் முன்பு வணங்கி கொண்டிருந்த சகுந்தலா கணவனின் குரல் கேட்கவும் குங்குமம், திருநீறு இட்டு கொண்டு வந்தார். "எனக்கு நேரம் ஆச்சு சகு" என்று சங்கர் அவசரபட, "இதோ டிபன் வைக்கிறேன். ஒரு நிமிஷம்" என்று கிட்சனுக்குள் ஓடினார். "தம்பி எங்க? வேன்க்கு நேரம் ஆச்சே" என்று கேட்க, "வந்திடுவாங்க" என்றபடி காலை உணவு பரிமாற,...
    error: Content is protected !!