Thursday, June 26, 2025

    குளிர் தருவே! தரு நிழலே!

    அத்தியாயம் 7 காலை எப்போதும் ஆறு மணிக்கு எழுந்து விடுபவள் அன்று ஏழாகியும் எழுந்திருக்கவில்லை என்பதால் பொன்னம்மா கால் மணிக்கொருதரம் அவள் அறைக்கு வந்து பார்த்துச் சென்று கொண்டிருந்தாள். ஏழு மணிக்கு அறை வாசலில் எட்டி பார்த்தவள் அவள் விழித்திருப்பது கண்டு உள்ளே வந்தாள். “எழுந்துட்டீங்களா அம்மா?” “ம்ம்ம்...” “அந்த தம்பி இப்பதான் ரெண்டு நிமிஷம் மின்ன வந்தாங்க” புருவம் சுருக்கியவள்...
    அத்தியாயம் 8 அன்று நீலாயதாட்சி மிக முக்கியமான விஷயம் பேசுவதற்காக அவனை அறைக்கு அழைத்திருந்தாள்... கரும்பு தின்னக் கூலியா...அதுவும் வழக்கமாக டாப், ஸ்கர்ட் அல்லது பேன்ட், சில நேரங்களில் மேலே அணியும் கோட் என மேல்நாட்டு பாணியில் உடை அணிந்து வருபவள் அன்று அலுவலகத்துக்குப் புடைவை உடுத்தி வந்திருந்தாள். கறுப்பு நிற பாந்தினி சில்க், சரிகை வேலைப்பாடுகளுடன்...
    அத்தியாயம் 5 “அவங்க ஹஸ்பண்ட் ஹரிகார்த்திக் சுப்ரமணியன் ஒரு பக்கா வுமனைசராம் பாஸ். முதல் குழந்தைக்குத் தாயான பின்னாலதான் இவங்க கல்யாணமே நடந்துச்சாம்...அது மட்டுமில்ல பாஸ்” குரலை நன்றாகத் தணித்துக் கொண்டவள் “அந்தாளுக்கு எய்ட்ஸ் இருந்து அதுனாலதான் இறந்ததாகவும் ஒரு ரூமர் சுத்துது...நான் நெட்லல்லாம் போய் சர்ச் செய்து பார்த்துட்டேன்... அப்போதான் இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சுது” கடந்த...
    அத்தியாயம் 9 அருகில் சென்றவன் அவள் நெற்றியில் தன் புறங்கையை வைத்துப் பார்க்க, கணகணவென்றிருந்தது. சத்தமெழுப்பாமல் வெளியே வந்தவன் கதவைச் சாற்றி விட்டு “காலைல என்ன சாப்பிட்டாங்க?” என்று பொன்னம்மாவிடம் கேட்டான். “அரை இட்டிலி” அவன் முகத்தில் கோபத்தைக் கண்டவர் “எவ்வளவோ கட்டாயப் படுத்தினேன் தம்பி...வாயெல்லாம் கசக்குது...வேணாம்னுட்டாங்க” “மாத்திரை போட்டாங்களா?” “ம்ம்ம்...போட்டாங்க” “ஆனா இன்னும் காய்ச்சல் விடலையே...நீங்க ஒன்னு செய்ங்க...ஒரு கப்ல பச்சைத் தண்ணியும்...
    அத்தியாயம் 10 அவள் அதற்கெல்லாம் பயப்படவில்லை. என்ன செய்து விடுவாய் என்பது போல அவனைப் பார்த்திருந்தவள், “சீ!” என்றவன் பிடி தளர, தொண்டையைத் தடவி விட்டுக் கொண்டு தோளைக் குலுக்கிக் கொண்டாள். “எப்பப் பாரு உடம்பு உடம்புன்னு...ஏன் நீலா...உடம்பைத் தாண்டி மனசுன்னு ஒன்னு இருக்கு...அதைப் பத்தி நினைச்சுப் பார்க்க மாட்டியா?” “மனசு...ஹஹ...மனசுன்னு ஒன்னு இருந்துச்சு... எனக்கும்... ஆனா...” அவள்...
    அத்தியாயம் 12 தன் மடியில் படுத்து நல்ல உறக்கத்தில் இருந்த விக்னேஷை மெதுவாக நகர்த்தித் தலையணையில் படுக்க வைத்தாள் நீலாயதாட்சி. எழுந்து ஏசியைக் குறைத்தவள் கப்போர்டில் தேடி மெல்லிய போர்வை ஒன்றை எடுத்து அவனுக்குப் போர்த்தி விட்டாள். இரண்டு மணி நேரங்கள் முன்பு மாஸ்டர் கீ கொண்டு வீட்டைத் திறந்து உள்ளே வந்தவள் அவன் கிடந்த கோலம் கண்டு...
    அத்தியாயம் 11 மின்னல் வேகத்தில் நடந்து விட்ட நிகழ்வுகள் அதிர்வைக் கொடுத்தாலும் நிமிர்வுடனே “என்ன பண்ணிட்டு இருக்கீங்க விக்னேஷ் என் பெட்ரூம்குள்ள?” “உன் பெட்ரூம்?” கொஞ்சம் நக்கலான தொனியில் அவன் சொல்ல அவன் குரலில் ஏதோ அச்சம் விழிகளில் படர அதன் எதிரொலியாக மிடறு விழுங்கியவள் ‘ஆம்’ என்பது போல் தலையசைத்தாள். அவள் தொண்டைக் குழியில் வினாடி நேரம் அவன்...
    அத்தியாயம் 13 அவள் கேட்ட கேள்வியில் அவளை ஆச்சர்யமாகப் பார்த்தவன் அவள் விழிகளில் ஒளிந்திருந்த விஷமத்தனத்தைப் புரிந்து கொண்டவனாக “முதல்ல கல்யாணம் பண்ணிக்கலாம்” எனவும் வாய் விட்டுச் சிரித்தவள் “ரெண்டில் ஒண்ணுதான்... நான் வேணும்னா இப்பவே நான் தயார்...ஆனா கல்யாணம் இல்ல” எனவும் “நெனச்சேன்...கட்டிப் பிடிச்சப்போ ஒன்னும் சொல்லாதப்போவே” என்றவன் அவளை விட்டு விட்டு ஹாலுக்கு...
    error: Content is protected !!