Wednesday, June 18, 2025

    Then Paandi Meenaal

    தென் பாண்டி மீனாள் 21 வில்வநாதனின் கோவம், மனைவியின் அணைப்பிலே அடங்கி போனது.  'இந்த வில்லனை பிடிக்கும், இவர் மட்டும் தான் வேணும்' என்றதில், இன்ப அதிர்வுக்குள்ளானான். உச்சியில் இருந்து உள்ளங்கால் வரை மின்னல் வெட்டி சென்றது.  அவனின் விறைத்த உடல், இப்போது வேறு மாதிரி இளகி நின்றது.  கண்கள் மூடி அந்த சுக அவஸ்தையை முழுதாக அனுபவித்தான்.  பாண்டி நாட்டு அழகி,...
    வில்வநாதன் அம்மாவை தோளோடு அணைத்து விட, தயாளன் ஆறுதலாக மனைவி கை தட்டி கொடுத்தார். பெரியவர்களும் அந்த நொடியில் திளைத்திருக்க, மீனலோக்ஷ்னி மட்டும் வெளியாளாக, தட்டையே பார்த்திருந்தாள். 'இந்த அப்பா எப்போதான் வருவார்?’ ‘ஆன்ட்டி வேற என்ன நினைச்சாங்களோ? என் மகன்கிட்ட உதவியும் வாங்கிட்டு, சண்டையும் போடுறான்னு. காட் அப்படி மட்டும் இருக்க கூடாது. எல்லாம் இவரால....
    தென் பாண்டி மீனாள் 13 'ஒரு ஊஞ்சல் ஆட நினைச்சது குத்தமா?’ ‘நல்லாத்தானே பேசிட்டு இருந்தாங்க, திடீர்ன்னு கோவப்பட்டு கத்தினா. இது ஆகாது. சட்டுபுட்டுனு இடத்தை காலி பண்ணிடனும் சாமி. எப்போதான்ப்பா வருவீங்க?' என்று மீனலோக்ஷ்னி வாசலை பார்க்க ஆரம்பித்துவிட்டாள். "மீனா பொண்ணு. என்னாச்சு? ரொம்ப வலிக்குதா?" என்று கஜலக்ஷ்மி அவள் தலை வருட, "இல்லை பாட்டி. நான் அந்த...
    "ஆஹ். வலிக்குது"  "கொன்னுடுவேன். மூச்" என்று அவளின் மறுகாலையும் பார்க்க போக, "அங்க ஒன்னும் இல்லைங்க" என்றாள். வில்வநாதன் இன்னமும் அந்த மருதாணியையவே வெறித்திருக்க, மீனலோக்ஷ்னி காலை இழுத்து கொள்ள பார்த்தாள். "எல்லாம் கையில தான் வைப்பாங்க. நீ என்ன காலுல வைச்சிருக்க?" என்று மீண்டும் கேள்வி கேட்க ஆரம்பிக்க, மீனலோக்ஷ்னிக்கு பதில் சொல்ல முடியாமல் அவ்வளுவு சங்கடம். "உன்னை...
    தென் பாண்டி மீனாள் 17 முதல் இரவு இவர்களுக்கு மட்டும் முதல் இரவாக தோன்றவில்லை போல. கட்டில் யுத்தம் செய்ய வேண்டிய நேரத்தில், வார்த்தை யுத்தம் செய்து கொண்டிருக்கின்றனர். புது மணமக்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டை கோழியாக சிலிர்த்து கொண்டு நின்றார்கள். இருவருக்கும் மற்றவர் இதயத்தில் இடமில்லாமல், தாம்பத்திய வாழ்க்கையை தொடங்க முடியாது என்பதாய் மீனலோக்ஷ்னி முடித்திருக்க, “சோ என்கிட்ட...
    தென் பாண்டி மீனாள் 10 தனபாலன் காலையிலே ஆட்களை வர சொல்லி வேலையை ஆரம்பித்துவிட்டார். அவர் முன்னின்று செய்ய வேண்டியதில்லை. இவர் நிற்குமளவு பெரிய வேலையும் இல்லை. ஆனாலும் அங்கேயே இருந்தவரிடம், "என்ன மாமா இது?" என்று கேட்டு வந்தார் தயாளன். இடிக்கும், உடைக்கும் சத்தத்தில் தள்ளி வந்துவிட்டவர்கள், "ராசா தான் செய்ய சொன்னான் மாப்பிள்ளை" என்றார் பெரியவர். "அவன்...
    தென் பாண்டி மீனாள் 25 FINAL அண்ட் எபிலாக் கந்தன் சிலைக்கு பூமாலை அணிவிக்கப்பட்டு, சந்தனகாப்பில் மாளிகையே சந்தனத்தால் மணத்தது. இன்னும் சில நிமிடங்களில் அதி சிறப்பான விழா ஒன்று மாளிகையில் நடந்தேறவுள்ளது. காணும் இடமெல்லாம் தோரணங்கள், அலங்காரங்கள், மக்கள்! அறிந்தவர், தெரிந்தவர் என்று ஒருவர் விடாமல் எல்லோருக்கும் அழைப்பு சென்றிருந்தது. மொத்த மாளிகையும் வண்ண விளக்குகளால் ஜொலிக்க, மேற்பார்வை ஆட்கள்...
    தென் பாண்டி மீனாள் 8 அறையில் நிலைக் கொள்ளாமல் நடந்தார் பானுமதி. சில நொடிகள் அமர்ந்தார். திரும்ப எழுந்து கொண்டார். அவரின் மனம் தளும்ப, நடையில் தன் நிதானத்தை தேடி தோற்றார். தயாளன் அவரின் அளப்பறியா காதல். அன்றும், இன்றும், என்றுமே! பானுமதி படிப்பை முடித்து, பாரம்பரியமான வழக்கமான அவர்களின் அலுவகலத்திலே வேலைக்கு சேர்ந்த காலம் அது. அங்கு தான் தயாளனை...
    "உங்களோட போங்க" என்று மீனலோக்ஷ்னி கடுப்பாக மறுபக்கம் திரும்ப, "இங்க வாடி" என்று அவளை பக்குவமாக இழுத்து தன் தோளில் போட்டு கொண்டான். அடுத்த சில வாரங்களில் மீனலோக்ஷ்னி பிரசவத்திற்காக மருத்துமனையில் சேர்க்கப்பட்டாள். வில்வநாதன் கைகளை கட்டி அழுத்தமாக நின்றிருக்க, தயாளன் மகனின் அருகிலே இருந்தார். கஜலக்ஷ்மி ஒருமாதிரி பதட்டத்துடன் வேர்த்து போக, "ம்மா. என்னாச்சு உங்களுக்கு?" என்று பானுமதி...
    "எனக்கு இதைப்பத்தி பேசவே வேண்டாம். உங்களுக்கு உங்க மனைவியோட இருக்க கஷ்டம்ன்னா நீங்க நேரடியா சொல்லலாம். இப்படி என்னை வைச்சு சொல்லணும்ன்னு அவசியமில்லை" "டேய் பானுவோட இருக்க எனக்கென்ன கஷ்டம்? என்ன பேசுற நீ?" "சரியாதான் பேசுறேன். அவங்களை விட்டு போனது நீங்க தானே?" "வில்வா. ப்ளீஸ். எனக்கு எந்த ஆர்கியூமெண்ட்டும் வேண்டாம். நான் தப்பாவே இருக்கட்டும், நீ...
    தென் பாண்டி மீனாள் 16 வில்வநாதன் மனைவிக்கு எல்லா விதத்திலும் பதிலளிக்க, மீனலோக்ஷ்னிக்கோ அவளின் கேள்விகளில் சந்தேகம் வந்துவிட்டது. அவளின் புது மாப்பிள்ளையிடம் கேட்டால், நிச்சயம் சந்தேகம் இல்லை, நீ தப்பா தான் பேசுற என்பான்.  அவளின் நலனிற்காக, தானே சென்று கட்டிலில் அமர்ந்து கொண்டாள். "இதை தான் நான் முதல்லே சொன்னேன்" என்று தோள் உயர்த்திய வில்வநாதன்,...
    தென் பாண்டி மீனாள் 19 குலதெய்வ கோவில் பூஜையில் நின்றிருந்தனர் புது மணதம்பதிகள். அன்று அதிகாலையிலே கிளம்பி வந்துவிட்டார்கள். நேற்று அந்த வீட்டில் பால் காய்ச்சியதுடன், காலை உணவு மாளிகையில் தான் என்றார் கஜலக்ஷ்மி. "லக்ஷ்மி மேடம் என்ன இது?" என்று பேரன் கடுப்பாகி போக,  "ராஜா. நீ தனியா இருக்க கேட்ட, நாங்க விட்டுட்டோம். அதே போல சாப்பிடுறது...
    தென் பாண்டி மீனாள் 1 கந்தன் திருக்கோவிலில் பூஜை மணி ஒலிக்க, அங்கிருந்தோர் பயத்துடனும், பக்தியுடனும் வேண்டுதலை வைத்தனர். அடுத்த சில நிமிடங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்க வேண்டும் என்ற பதட்டம்  எல்லோரிடமும் தெரிந்தது. "யாருக்கும் தெரியாது இல்லை" அறிவழகன் மெல்லிய குரலில் கேட்க, "தெரியாது மச்சான். தைரியமா இருங்க" என்றார் அவரின் தங்கை கணவர். ஆனாலும் அவரிடம் அந்த அச்சம்...
    தென் பாண்டி மீனாள் 18 வில்வநாதன் முடிவை ஏற்று கொள்ள  முடியாத பெரியவர்கள், "ராஜா. என்னப்பா இது" என்றனர். மீனலோக்ஷ்னி கணவனின் பற்றிய கையை விட முடியாமல் நிற்க, வீட்டினர் பார்வை அதில் பதிந்தது. 'போச்சு, என்னை தப்பா நினைக்கிறாங்களா?' என்று மீனலோக்ஷ்னி பதறி, கையை இழுத்து கொள்வதற்கு பதிலாக, இன்னும் கணவனையே  இறுக்கமாக பற்றி கொண்டாள். வில்வநாதன், "என்ன...
    "ண்ணா, நீங்க எல்லாம் சாப்பிட்டீங்களா முதல்ல?" என்று பானுமதி கேட்டு, அவர்கள் பதிலை நம்பாமல் உணவிற்கு ஏற்பாடு செய்தார். மறுத்தவர்களை விடாமல் வீட்டிற்குள் அழைத்து சென்று, உணவுண்ண வைத்தனர். "இப்போதான் கண்ணே தெரியுது" என்று வினய் இவளிடம் மெல்லிய குரலில் சொன்னான். "ரொம்ப பயந்துட்டீங்களா, சாரி என்னாலதான் எல்லாம்" என்று பெண் வருத்தம் கொள்ள, "மீனா. அந்தளவு பயம் எல்லாம்...
    தென் பாண்டி மீனாள் 3 இப்படி என்று விஷயம் தெரியவும் மீனலோக்ஷ்னி அதிர்ந்து தான் போனாள். பெரியவர்கள் பேச்சில் 'அந்தளவா தூங்கிட்டேன்' என்று சங்கடபட்டு போனவள், "சாரிம்மா. எனக்கு தெரியலை" என்று அம்மாவிடம் மென்குரலில் சொன்னாள். சுஜாதவிற்கு அந்த கோவம் உண்டென்றாலும், கடந்த ஒரு வாரமாக மகளின் மனவுளைச்சலும் நினைவுக்கு வந்ததில், "பரவாயில்லை. விடு" என்றார். பெண்ணவள் மெல்ல நிமிர்ந்து...
    தென் பாண்டி மீனாள் 14 பெரிய குடும்பத்தினர் நேரடியாக பெண் கேட்டுவிட்டனர். அறிவழகன் குடும்பம் தான் திகைப்பில் திளைத்திருந்தது. கஜலக்ஷ்மி முடிவாக சொல்லிவிட்டார். "நீ என்னைக்கு சொல்றியோ அன்னைக்கு நாங்க பொண்ணு கேட்டு உங்க வீட்டுக்கு வரோம் அறிவழகா" என்று.  "உடனே எல்லாம் இல்லை. நேரம் எடுத்து, எல்லாம் பேசி, எங்களுக்கு தகவல் சொல்லுங்க" என்றார் தனபாலன். பானுமதியும், தயாளனும்...
    "சும்மா சொல்லாத. நீயாவது லவ் பண்றதாவது" என்று விடுமுறைக்கு வந்திருந்த வினய் வாரிவிட, மற்றவர்களும் அதை பார்வையில் பிரதிபலித்தனர். "நான் ஏன் சும்மா சொல்ல போறேன். ஏன் என்னை பார்த்தா லவ் பண்ற மாதிரி இல்லையா? நான் அந்தளவுக்கு ஒர்த் இல்லைங்கிறீங்களா" என்று கடுப்பாகிவிட்டான். "நிஜமா தான் சொல்றியா?" என்று அப்போதும் கேட்க, பெண்ணின் புகைப்படத்தை எடுத்து...
    தென் பாண்டி மீனாள் 2 அந்த நெடுஞ்சாலையில் கார் ஒன்று வேகமாக, மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. அவ்வளவு கோவம். விட்டால் பறந்துவிடுவான். முடியாததால் இந்தளவு வேகம். அந்த காருக்கு பின்னால் வந்த மூர்த்திக்கு மகனின் காரை தொடர்வது பெரும் சவாலாக இருந்தது. "அண்ணா. தம்பி ரொம்ப வேகமா போகுது. நம்மால பிடிக்க முடியலை" என்றார் ஓட்டுநர். "இவனோட எனக்கு பெருத்த...
    தென் பாண்டி மீனாள் 5 'கட்டி பிடிச்சுட்டு போடா' என்ற தயாளனின் வார்த்தைகள் இப்போதும் காதுக்குள் ஒலித்து கொண்டிருக்கிறது. அமைதியான இரவு, அவனுக்கு இரைச்சலாக தான் உள்ளது. அழகான தோட்டத்தை வெறித்து கொண்டிருக்கிறான். சில விஷயங்கள் மனதிற்கும் புரியும், மூளைக்கும் உரைக்கும். ஆனால் அதை ஏற்று கொள்ள தான் முடியாது. வில்வநாதனை போல்! பள்ளி படிப்பில் இருந்த சமயம். புது உலகத்திற்குள் மெல்ல...
    error: Content is protected !!