MTN
“இல்லைங்க தம்பி, இப்பதான் சாப்பிட வச்சு மாத்திரை கொடுத்தேன்... சும்மா படுத்திருக்காங்க...” என்றாள் சாந்தி.
“ம்ம் சரி, நீங்க போயி சாப்பிட்டு வேலையைப் பாருங்க... நான் அம்மாகிட்ட இருக்கேன்...” என்றவன் அன்னையின் கட்டிலை நெருங்கினான்.
இதமான குளிர் காற்று உடலைத் தழுவ கழுத்து வரை இழுத்துப் போர்த்து படுத்திருந்தார் திலகம். ஒரு கையும் காலும் உடலோடு சேர்ந்து...
“நிலா பதறாதே, நீ இப்படிப் பேசினா அம்மு ரொம்ப பயந்து போயிருவா... எனக்கு ஒண்ணும் இல்ல... கையில சின்னதா ஒரு பிராக்சர், அவ்ளோ தான்... எக்ஸ்ரே, ஸ்கேன் எல்லாம் எடுத்து பார்த்தாச்சு... கையில மாவுக்கட்டு போட்டு விட்டிருக்காங்க... இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்டுக்கு வந்திருவேன்... நீ கவலைப்படாம இரு, அம்முகிட்டே போனை குடு...” என்றான்...
நிலா – 9
சூரியக் கதிர்கள் கோபத்தோடு பூமியை முத்தமிட்டுக் கொண்டிருந்த காலைப் பொழுது. இரவு வெகு நேரம் உறங்காமல் பலதையும் நினைத்து குழம்பிக் கொண்டிருந்த நிலா, விடியலுக்கு சற்று முன் தான் விழிகளில் கனவுகளை மிச்சம் வைத்து, உறங்கத் தொடங்கி இருந்தாள். விடியலில், அவள் தன்னை தரிசிக்க வராத கோபத்தில் சூரியன் உக்கிரமாய் உஷ்ணத்தோடு...
நிலையில்லாமல் தவிக்கும் அவள் மனதைப் போலவே சானலை மாற்றிக் கொண்டே வந்தவள் அந்தப் பாடலைக் கேட்டதும் அப்படியே பார்வை நிலைக்க, அதைப் பார்க்கத் தொடங்கினாள். ஜானகியின் உருகி வழியும் குழைந்த குரலில், சுஜாதா கைக்குழந்தையை வைத்துக் கொண்டு, உணர்ச்சியைக் குழைத்துப் வாயசைத்துக் கொண்டிருந்தார்.
“இப்படியோர் தாலாட்டு பாடவா... அதில் அப்படியே என் கதையை கூறவா...
கைபிடித்த நாயகனும்...
நிலா – 8
“வா மேனகா, உக்காரு... என்கிட்ட என்ன சொல்லணும்? தயங்காம சொல்லும்மா...” என்றாள் நிலா புன்னகையுடன் சோபாவில் அமர்ந்து கொண்டே.
“அது வந்துக்கா... நீங்க என்னைத் தப்பா நினைக்கக் கூடாது...” என்றாள் தயக்கத்துடன்.
“அதெல்லாம் நினைக்க மாட்டேன், எதுவா இருந்தாலும் ஓபனா சொல்லு...”
“வந்து... அந்த புதுசா வந்த பொண்ணை உங்க வீட்டுக்காரர் கூட பைக்ல அனுப்பி...
ஐஸ்க்ரீம் என்றதும் குழந்தையான அம்முவுக்கு குஷியாகிவிட, மற்றதை எல்லாம் மறந்து போனாள்.
“அம்மா, சீக்கிதம் வா... கோவிலுக்குப் போயித்து ஐஸ்க்ரீம் சாப்பித போகலாம்...” என்றவள் அவளையும் இழுத்துக் கொண்டு உடை மாற்றச் சென்றாள். நிலாவின் நிலை தான் தர்மசங்கடமாகிப் போனது.
கெளதம் அவள் விழிகளுக்குள் எதை விதைத்துச் சென்றானோ... அவள் உணர்வுகளில் அது விருட்சமாய் வளரத் தொடங்கியது....
நிலா – 7
நிலவு ஓய்வெடுத்துக் கொள்வதற்காய் அதன் பஞ்சு மஞ்சமாம் மேகத்தைத் தேடிச் சென்றிருக்க, பகலவன் பளபளவென்று பொன்னிறக் கதிர்களை பூமிக்குப் பாய்ச்சி உலக இருட்டுகளை எல்லாம் விரட்டத் தொடங்கியிருந்த அழகான காலைப் பொழுது.
கதிரவனை வரவேற்பதற்கான அடையாளமாய் பட்சிகளின் கீச்... கீச்... ஒலிகள் அங்கங்கே ஒலித்து மெல்லத் தேயத் தொடங்க, பூக்களின் மொட்டுக்கள் மெல்ல...
அவள் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவன், “என்ன...” என்று புருவத்தைக் கேள்வியாய் மேலே தூக்கினான். அவள் அப்போதும் அவனையே பார்த்திருக்க,
“புரியுது... இவனுக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு ஆச்சர்யமா பார்க்கற... அதானே... எங்களுக்கும் சிலதெல்லாம் தெரியும்...” என்று டீஷர்ட்டின் காலரைத் தூக்கி விட்டுக் கொண்டவன், அவனுக்கும் இரண்டு தோசைகளை சுட்டு எடுத்துக் கொண்டு பொடியை வைத்து சாப்பிட...
நிலா – 6
வானவெளி எங்கும் திட்டுத் திட்டாய் குழப்பத்துடன் நிறைந்திருந்த மேகங்களை இரவு முழுதும் மழையாய் கொட்டித் தீர்த்து மெதுவாய் தெளியத் தொடங்கியது வானம். சாலையில் அங்கங்கே தேங்கி இருந்த நீரை இருபுறமும் வாரி இறைத்துக் கொண்டு விரையத் தொடங்கி இருந்தன இருசக்கர வாகனங்கள்.
மரம், செடி, கொடிகள் எல்லாம் மழையில் குளித்து அழுக்காடையைக் களைந்து...
“அச்சோ... ரொம்பவும் இருட்டிட்டு வருதே, இன்னும் பஸ்ஸை வேற காணோம்... ஆட்டோவும் ஏதும் வர மாட்டேங்குது... அம்மு எழுந்திருச்சு என்னைக் கேப்பாளே... என்ன பண்ணுறது...” மழைக்கு நிகராய் அவளது மனதும் அரற்றிக் கொண்டிருந்தது.
கௌதமிற்கு விவரம் சொல்லிவிடலாம் என நினைத்து, கைப்பையில் இருந்த அலைபேசியை எடுத்தவள், அது உயிரற்றுக் கிடப்பதைக் கண்டு திகைத்தாள்.
மழையின் குளிர்ச்சியில் தன்னை...
நிலா – 5
கலண்டரில் மீண்டும் சில தினங்கள் கிழிக்கப் பட்டிருக்க, மேலும் சில நாட்கள் நகர்ந்திருந்தது. மழைக்காலம் தொடங்கி விட்டதால் வானில் அவ்வப்போது சூரியனை மறைத்துக் கொண்டு மேகங்கள் உலா வரத் தொடங்கி இருந்தன. தங்களுக்குள் ஆனந்தமாய்ப் பேசி சிரித்துக் கொண்டு மழையைப் புன்னகையாய்த் தூவிச் சென்றன. மேகங்களின் புன்னகைத் தூறல் மனிதர்களுக்கும் வெயிலின்...
அவனுக்கு வண்டி எப்போதும் பளபளவென்று இருக்க வேண்டும். பைக்கைத் துடைக்கும்போது யாரோ தன்னையே கவனிப்பது போல மனதுக்குத் தோன்ற திரும்பிப் பார்த்தான்.
பின்னில் யாரும் இல்லை. சுற்று முற்றும் பார்த்தும் யாரையும் காணவில்லை.
“யாராய் இருக்கும்... யாரோ என்னையே கவனிக்குற போலத் தோணுச்சே...” நினைத்துக் கொண்டே வேகமாய் பைக்கைத் துடைத்து முடித்தான்.
அடுக்களையில் பால் காய்ச்சிக் கொண்டிருந்த நிலாவிடம்...
நிலா – 4
மாலையில் யாரோ மனதோடு பேச...
மார்கழி வாடை மெதுவாக வீச...
தேகம் பூத்ததே ஓ... மோகம் வந்ததோ...
மோகம் வந்ததும் ஓ... மௌனம் வந்ததோ...
நெஞ்சமே பாட்டெழுது...
அதில் நாயகன் பேரெழுது...
சொர்ணலதாவின் குரல் எப்எம்மில் தேனாய் வழிந்து கொண்டிருந்தது. அடுத்த வீட்டில் இருந்து காற்றில் மிதந்து வந்த பாடலைக் கேட்டுக் கொண்டே முன்னில் இருந்த வாசல் படியில் அமர்ந்திருந்தாள்...
நிலா – 3
பால் நிலவு இரவு விளக்காய் வானத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்தது.
விரிந்திருந்த ஆகாயத்தில் நிறைந்திருந்த நட்சத்திரங்களை எண்ணிக் கொண்டு நிலவுடன் தனித்திருந்தாள் நிலா. குளிர்ந்த காற்று அவள் மனதில் ரகசியம் பேச ஏகாந்தமான அந்த சூழ்நிலையின் அமைதியை ரசித்துக் கொண்டு அதில் தன்னை கரைத்துக் கொண்டிருந்தாள்.
மனதுக்குள் ஒருவித மையல் நிறைந்திருக்க காகிதப் பக்கங்களை கவிதைப்...
“வலிக்குதாம்மா...” அவள் செய்வதையே வருத்தத்துடன் பார்த்துக் கொண்டிருந்த அந்தக் குட்டிக் கண்கள் பரிவுடன் கேட்டன.
“இல்லடா செல்லம்... சரியாகிடுச்சு... இந்தா உன் ஜெம்ஸ் பாக்கெட்.... நீ போயி சாப்பிடு...”
“ம்ம்... அம்மா... ஆ காத்து...” வாயைத் திறந்த அன்னையின் வாய்க்குள் ஒரு நீல வண்ண குட்டி நிலவைப் போட்டு விட்டு தந்தையிடம் ஓடினாள் அபூர்வா.
“அப்பா... அம்மா கையில...
மண்டபத்தில் அங்கங்கே எல்லாரும் தலை சாய்த்திருக்க மெதுவாகத் தலையைத் திருப்பி அங்குமிங்கும் பார்த்தபடி மண்டபத்தின் பின் வாசலுக்கு சென்றாள்.
அவளது அலைபேசியில் இருந்த டார்ச்சை உயிர்ப்பித்து அதை மேலும் கீழும் ஆட்ட அடுத்த நொடியில் அதே போல எதிர்ப்புறம் இருந்து ஒரு வெளிச்சம் உற்பத்தியாகி மேலும் கீழுமாய் நகர்ந்தது. அதைக் கண்டதும் சிறு சமாதானத்துடன் வேகமாய்...
நிலா – 2
மாப்பிள்ளையைக் காணவேண்டும் என்ற நிலாவின் தோழியரை அழைத்துக் கொண்டு சுதாகரின் அறைக்கு சென்றான் கதிர்.
“என்ன கதிரு, யாரு இவங்கல்லாம்... நிலாவோட படிச்சவங்களா...” சுதாகரின் அறைக்கு முன்னால் ஹாலில் அமர்ந்து யாருடனோ பேசிக் கொண்டிருந்த அவனது அத்தை சுமங்கலி கதிரிடம் விசாரித்தார்.
“ஆமாம் அத்தை, நிலாவோட சிநேகிதிங்க... எல்லாரும் ஒரே காலேஜ் தான்... மாப்பிள்ளையைப்...
“அய்யோ சாமி... ஆளை விடு... நமக்கு இந்த ஆட்டம், பாட்டமெல்லாம் ரொம்ப தூரம்...” என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே நாலைந்து சுரிதார் அணிந்த பட்டாம் பூச்சிகள் அவர்களை நெருங்கி வந்தன. அதில் நடுநாயகமாய் இருந்த ராணிப் பட்டாம்பூச்சி ஒன்று கதிரிடம் வந்து தேன்சுளை உதடுகளைப் பிரித்துப் பேசத் தொடங்கியது. மற்ற பட்டாம் பூச்சிகளின் பார்வை...
நிலா – 1
தடக் தடக்.... தடக் தடக்......
குலுங்கிக் குலுங்கித் தாலாட்டுவது போல் சென்னையை நோக்கி விரைந்து கொண்டிருந்தது அந்த ரயில். பல வித முகவரிகளுடன் கூடிய மக்களும் பல விதக் கவலைகளைத் தாங்கிக் கொண்டு, பயணித்துக் கொண்டிருந்தனர். சிலர் பர்த்திலும், சிலர் அமர்ந்து கொண்டேயும் உறங்கிக் கொண்டிருக்க, சிலர் யோசனை படிந்த முகத்துடன் உறங்க...