Thursday, May 1, 2025

    Mayanga Therintha Manamae

    அத்தியாயம் 19 பெரும் அலறலோடு விஜய் அப்படியே சாய்ந்தமர்ந்துவிட, விக்ராவின் புது அவதாரம் கிடுகிடுங்க செய்தது மூன்று பெண்களையுமே. தொல்லை ஓய்ந்தது என இவன் போனை  எடுத்து கொண்டு மீண்டும் சோபாவில் அமர்ந்தான். வெகு நேரமாய் தேடியதில் தான் கவனித்தான் பேஸ்புக், இன்ஸ்டா என அனைத்தும் சுத்தமாய் இருந்தது. அடுத்து கேலரி, ஜிமெயில் என பாய்ந்தது அவன்...
    அத்தியாயம் 4 ‘தான் ஆடிய நடனத்தை தானே பார்த்து ரசிப்பது ஒரு வகை பிடித்தம். அதுவும் தனக்கு தானே ரசித்து சிலாகிக்கும் வகையிலிருப்பது ஆக சிறந்த போதை. அப்படி ஒரு போதையில் போனில் கவனமாய் இருந்த லாவன்யாவிற்கு காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்க, ‘ஐய்யய்யோ.. மீனா வந்துட்டா’ மூளைக்குள் அலாரம் வெடித்தது. போனை ஒரு பக்கமாய் விட்டெறிந்து, சரசரவென...
    அம்மாச்சி, அப்பத்தா போய்ட்டு வரோம் என காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினர். பின்னோடு வந்த வீரா “பத்து நாளுக்கு முன்னாடி எல்லாம் வர வேணாம், எதையாவது ஏழறையை இழுத்து விட்டு இன்னும் நாழு வருஷத்துக்கு நீ தள்ளி போடுவ..  ஜீன் மாசம் 11 ம்ந்தேதி, 9 மணிக்கு தான் முகூர்த்தம், நீ பத்து மணிக்கு வா...
    அத்தியாயம் 5 தோட்டத்தின் பின் நிறுத்தியிருந்த ஸ்கூட்டியின் சாவியை அதன் துவாரத்தில் சொருக முயன்று முயன்று தோற்ற லாவாவிடம்.. “லாவா.. ரொம்ப ராவா அடிச்சிட்டடி நீ.. உன்னால வண்டி ஓட்ட முடியாது.. கொடு நான் ஓட்றேன்” என விக்ரா கூற “ஆமா நான் ராவா.. அடிச்சேன்.. நீ ரவை போட்டு அடிச்ச..” அவன் நெற்றியில் ஓங்கி தன் உள்ளங்கையால்...
    “டேய்.. விக்ரா.. இன்னும் என்னத்தடா புடுங்குற, என் கண் முன்னாடியே என் விஜய் கூட போறாளே, உன்னை.. உனக்கு இருக்குடி!” வாய்விட்டே அலறியவள், ஸ்கூட்டியை விக்ராவின் வீட்டுக்கே விட்டாள் படு வேகமாக. நீண்டு வளைந்த பாதையில், வளர்ந்து வரும் நகரங்களில் தீப்பெட்டியை அடுக்கி வைத்தார்ப்போல் இல்லாமல், அதே தீப்பெட்டிகளை சிதறடிக்கப்பட்டார் போல் அங்கொன்றும் இங்கொன்றுமாக வீடுகள்...
    அத்தியாயம் 8 அதிகாலை வேளை குடும்பமாய் ஆழ்ந்து உறங்கி கொண்டிருந்த பூனைகளை வைத்த கண் வாங்காமல் பார்த்திருந்தான். வேறு யார் எல்லாம் நம் விக்ரா பய தான். முதலில் மினி, அதன் மேல் கால்களை போட்டபடி ஷினி,  ஷினியை அடுத்து, பிறந்து இருபதே நாட்களான மூன்று குட்டி பூனைகள் வரிசைகட்டி படுத்திருந்தை பார்த்தவன். புருஷனும் பொண்டாட்டியும் சேர்ந்து நேத்து...
    மூன்று பவுன் தாலி ஏனோ முப்பது கிலோவாக கனத்து போனாற்போல் கைகள் அதை நழுவ விட, எங்கிருந்து எடுக்கபட்டதோ அங்கேயே போய் ஒய்யாரமாய் அமர்ந்து கொண்டது தாலி. தாலியை அவள் கழுத்தில் போட்டதை எளிதாய் ஏற்க முடிந்தவனுக்கு, அதே தாலி அவள் கழுத்தை விட்டு இறங்கியதை, அவளே இறக்கிவிட்டதை அத்தனை எளிதாய் ஏற்கமுடியாது போனது அவனுக்கு. ஆக...
    அப்படி பார்த்து கொண்டிருந்தவனின் விழிகள் லாவா அழுக்கு கூடையில் தேட துவங்க, “ஐய்யய்யோ அழுக்கு கூடையில தேடுறாளே, பாட்டிலை பார்த்தா, இருக்குற கோபத்துக்கு சமரசுகிட்ட போட்டு கொடுத்துருவாளே” நேற்று இரவு மறைத்து வைத்த பாட்டிலை தேடி பாய்ந்தோடினான் லாவாவிடம். அழுக்கு கூடையை இழுத்து தன் புறம் வைத்தபடி, “அதுக்குள்ள பூனை இல்ல” என வேறு பக்கம்...
    “ம்க்கும், ஏண்டா பாண்டிகளா இதுக்கு தான் இத்தன அலம்பலா.. நான் கூட ஏதோ பண்ண போறீயளோன்னு நினச்சுபுட்டேன்டா” கூட்டத்தில் ஒருவன் கத்த “ஏன், என்ன பண்ணனும்கிற” செல்லம் வழக்கம் போல சிலுவிழுக்க “அதான் வரிசை கட்டி நிக்கிறீகளே, அப்படியே ஒரு  பேஷன் ஷோவ போடுறது” என ஏற்றிவிட, ஆர்ப்பரித்தது அந்த இடம் “பேஷன் ஷோ தானே நடத்திடுவோம்” எதற்கும்...
    “அப்படி சொல்லாத விக்ரா, உன் மேல எப்படி நம்பிக்கை இல்லாம போகும். பிரச்சனைன்னா சொல்லுவேன். அசிங்கம் விக்ரா இது.. எப்படி சொல்ல உன்கிட்ட?” அடிவயிற்றிலிருந்து குரல் வர “அவன் கூட எப்படியெல்லாம் பேசியிருக்கேன் தெரியுமா, பெசிஷன்லாம்..” சொல்லி முடிக்கும் முன் கன்னம் விட்டு அவள் வாயை பொத்தினான் இவன். இவன் கையை தட்டு விட்டவள், “எல்லாத்தையும் படிச்சிருப்ப...
    மற்றவர்களை பொருத்தவரை, சகல பாதுகாப்போடும் இருக்கும் பெண் லாவா. ஆனால் வீட்டினரை பொருத்தவரை பாண்டிகள் குழுவில் ஐந்தாவது பாண்டியாய் சேர்ந்தவள் தான் இந்த லாவன்யா பாண்டி. தாங்கள் கற்ற அத்தனை மொள்ளமாரிதனங்களை அவளுக்கும் கற்று கொடுத்தனர், அவளது மாமன் மகன்கள். இவள் பாசையில் சொன்னால் லகுடபாண்டிகள். கிட்டத்தட்ட அவர்கள் மத்தியில் மகுட பாண்டியாய் தான் வளர்ந்தாள். வம்பு,...
    அத்தியாம் 6 அவனிடம் கேட்க கேள்விகள் ஆயிரமிருந்தும், முகத்திலறைந்து கேட்கும் துணிவு தான் வந்தபாடில்லை. நெஞ்சில் குத்தும் எதிரியை கேட்கலாம், முதுகில் குத்தும் நண்பனை எப்படி கேட்பது. வெகு நேரமாய் தனக்கு முதுகு காட்டி நின்றிருந்தவனையே பார்த்திருந்தவளின் விழிகள் மட்டும் கண்ணீரை சுரந்த வண்ணமே இருந்தது. “எனக்கு புடிச்ச வாழ்க்கையை இல்லாமல் பண்ணிட்டல்ல” அழுகையோடு வந்தது அவளது வார்த்தைகள். அதற்காகவே...
    இவனுடன் சாதாரணமாய் சிரித்து பேசியபடி வந்தவளை கண்டு “யப்பா, சரிபண்ணிட்டியா விக்ரா! இப்போ தான் சிரிச்ச மூஞ்சா இருக்கா, நாளைக்கு இவ அப்பா வராரே வந்து “புள்ள இப்படி கலை இல்லாமல் இருக்கா என்னத்த புடுங்குறன்னு” என்னைய பாடா படுத்துவாருன்னு பயந்திட்டு இருந்தேன். நல்ல வேளை அவளை நார்மல் ஆக்கிட்ட நீ” என மீனா...
    அத்தியாயம் 12 இவள் வர தாமதமாகிக்கொண்டே இருக்க, இவன் இவளுக்கு போன் அடித்தும் எடுக்கவில்லை. ‘அத்த நீங்க கூப்பிட்டு பாருங்களேன்' என மீனாவையும் இழுத்துவிட்டான்.  தாயின் அழைப்பை உடனே எற்றாள். அவரோ வழக்கம் போல கிழித்து தள்ள, அவருக்கு பயந்து வீட்டிற்கும் வந்து சேர்ந்தாள். “ஏண்டி இம்புட்டு நேரம்” என திட்டிய அன்னையை கண்டு கொள்ளாது, விக்ரா வந்திருப்பது...
    அத்தியாயம் 11 வீரா, கண்மணி சொந்தமில்லையென்றாலும் ஒரே ஊர், ஒரே இனம் என்பதால் சரியாக ஒரு வருடம் முன்பு இவர்களது திருமணம் பற்றி பேச்சு எடுத்த போது, போகையிலும் வருகையிலும் கண்மணி மீது பார்வை விழுந்ததில் அவனுள்ளும் விழுந்துவிட்டாள்.  லேசாய் பிரியமும் முளைவிட தொடங்கிட திருமணத்திற்கு வீரா உடனே ஒப்புக்கொண்டு விட, கண்மணியோ அவனது முரட்டு தோற்றத்தை...
    அத்தியாயம் 7 “கடைசியா யோசிச்சு சொல்லு, இரண்டு நாள் டைம் கூட எடுத்துக்கோ” அவளின் நிராகரிப்பை தாங்காதவனாய் மீண்டும் கேட்டான் விக்ரா. “அதுக்கு அவசியமே இல்லை” இரண்டு நொடி கூட யோசியாதவளாய் முகத்திலடித்தாற்ப்போல் கூறி முறைக்க, அவன் விழிகளோடு மோதிக்கொண்டது இவள் விழிகள் படு வேகமாய். “அப்போ நான் வேண்டாமா?” விழிகளோடு அவன் உதடுகளும் கேட்டது. “சொல்லு நான் வேணாமா?”...
    “மகா பிரச்சனை?” என இவள் இழுக்க, “அவளும் சைபர் கிரைம்ல கம்ளைண்ட் பண்ணினா தான் தப்பிக்க முடியும். அவ வாழ்க்கையை அவ தான் பார்த்தக்கனும். அவள் தான் மீண்டு வரணும். இதுவரை எதுவும் ஹெல்ப் கேட்டு வரலை.. வந்தா கண்டிப்பா கைட் பண்றேன்” என அதோடு நிறுத்தி விட்டான். “இனி அவங்களை பத்தி என்கிட்ட பேசாத” என...
    “இவனை உனக்கும், உனக்கு இவளையும் தான்”  இப்போதும் இருவருக்குமாய் இவன் பதில் கூறினான். அதை கேட்ட அடுத்த நொடியே “ச்சைய்..” என அவளும் “ச்சை ச்சை“ என டபுள் ‘ச்செய்’ களோடு வீராவும் முகம் சுளிக்க வீராவையே வைத்த கண் வாங்காமல் பார்த்த விக்ரா, ‘ச்சைய்யா.. இருக்குடா உனக்கு' இம்முறை கோரசாய் நினைத்தது விக்ராவும் அவளும் தான். “கண்மணி அவன்...
    ராஜசேகர் சமரசு இருவரும் ஊர்கதை உலக கதை என முழுதாய் ஒரு பத்து நிமிடங்கள் வரை பேசிய பின் தான் தனக்கு இடப்புறமாய் அமர்ந்திருந்த விக்ராவிடம் திரும்பினார். “நீ எப்படிடா இருக்க. ஹைதராபாத்ல வேலைனு கேள்வி பட்டேன். பேசாம நீயும் ஆர்மி வந்திருக்கலாம் விக்ரா. பாடி நல்லா மெயின்டெய்ன் பண்ற மேன்” என எதிர்பாரத நேரம்...
    “டேய் ஏண்டா இரண்டுநாள் முன்னாடியே வரலை” இவள் ஆரம்பிக்க “அதான் இப்போ வந்துட்டன்ல்ல.. சொல்லு என்ன செய்யனும்” இவன் டீல் பேச “நாளைக்கு விஜய்க்கும், மகாக்கும் கல்யாணம்.. எனக்கு விஜய் வேணும்.. அவனில்லாமல் என்னால வாழ முடியாது” கராராய் இவளும் கூற “அது தெரிஞ்சது தானே, இத தான் ஆறு மாசமா என் காதுல போட்டு டெய்லி பஞ்சர்...
    error: Content is protected !!