சுடர்விடும் ஒளி நீயே
ப்ரனவிகா மிகுந்த சந்தோஷத்துடன் தன் நண்பர்களுடன் அந்த ஆடிட்டோரியம் உள்ளே சென்றாள். ப்ரனவிகாவும் ஹரிதாவும் மட்டும் தான் பெண்களில் இங்கு வந்துள்ளனர். மற்றவர்கள் அனைவரும் மால் சென்று விட்டார்கள். அவர்களுடன் துணைக்காக ஒரு பையன் சென்றான். மற்ற மூவரும் ப்ரனவிகா மற்றும் ஹரிதாவுடன் இங்குத் தான் இருந்தார்கள்.
"ஏய் முப்பத்திரண்டு பல்லும் தெரியுது. பார்த்து மா...
ஹரிதாவும் ப்ரனவிகாவும் சந்தோஷத்துடன் கோயம்புத்தூர் செல்வதற்குத் தயாராகினர். முதல் முறையாகத் தன் நண்பர்களுடன் அதுவும் ப்ரனவிகாவிற்கு மிகவும் பிடித்த இரயில் பயணம். அவர்கள் வகுப்பிலிருந்தே பத்து மாணவிகளும் நான்கு மாணவர்களும் தேர்வாகி இருந்தனர். மாணவர்களும் இவர்களுடன் வரேன் என்று கூறியிருந்ததால் இன்னுமே நன்றாக அதே சமயம் ஜாலியாக இருக்கும் என்று கருதினர்.
ஹரிதாவையும் ப்ரனவிகாவையும் வழியனுப்ப...
இளமுகிலன் அவனது கடந்த கால நிகழ்வுகளை மற்றுமொரு முறை நினைத்துப் பார்த்ததில் அவனது மனம் கனத்து போனது. யாரது வாழ்க்கையிலும் இப்படி நடக்கக் கூடாது. சொந்த பெற்றோரே பணத்திற்காக மகனை கை விட்டு விட்டனர். அவர்களைச் சொல்லி குற்றமில்லை. திவ்யாவின் உண்மையான குணத்தை அறியாமல் ஒன்றரை வருடம் அவளைக் காதலித்த தன்னை நினைத்து அசிங்கமாகவும்...
ஹரிதா, ப்ரனவிகாவை கேலியாகப் பார்த்து,"யாரோ ஒருத்தங்க இன்னைக்கு காலைல தான் அதெல்லாம் சும்மா க்ரஷ் தான். மத்தபடி வேற எதுவுமில்லைனு சொன்னாங்க. ஆனால் இப்போ என்ன டா னா அவங்க வந்ததுக்கு அவ்ளோ சந்தோஷப்படுறாங்க. அது யாருனு தெரியுமா உனக்கு ப்ரனு?" என்று நமட்டுச்சிரிப்புடன் கேட்க,
"அப்படியா அண்ணி? யார் அந்த அறிவு ஜீவி?" என்று...
ப்ரனவிகா அவர்களது சேஸ் அகாடமிக்கு கிளம்பித் தயாராகிக் காத்திருக்க, ஹரிதா வரவே இல்லை. பூர்ணிமா தான் புலம்பிக் கொண்டே இருந்தார். ஒரு பெண் சுதந்திரமாக இருக்க வேண்டும், அவளது சொந்தக் காலில் நிற்க வேண்டும் என்று அவர் எண்ணுவதும் தவறு இல்லை. அவரது கணவர் இறந்த போது அவரில்லை என்று வருந்தியவர் தான். ஆனால்...
இளமுகிலன் மீண்டும் வேலைக்கு வந்து ஒரு வாரமாகி விட்டது. இந்த ஒரு வாரத்தில் ப்ரனவிகா அவனிடம் கூறியபடியே வேலை விஷயமாக மட்டுமே பேசினான். மற்றபடி வேறு எந்த விதப் பேச்சும் இல்லை.
இது அவனைச் சந்தேகப்பட வைத்தது. முதலில் திவ்யா எப்படி அவனைப் பத்து நாட்கள் கண்டுக்காமல் இருப்பது போல் நடித்தாளோ அதே மாதிரி ப்ரனவிகாவும்...
இளமுகிலனும் ப்ரனவிகாவும் அவர்களது உணவகத்திலிருந்து வெளியே வந்தார்கள். ப்ரனவிகா சற்றுக் கோபத்துடன் தான் இருந்தால். இளமுகிலன் அவளது கையை அழுத்திக் கொடுத்து,
"ப்ரனவிகா நீ வொர்ரி பண்ணிக்காத!! என்னை நம்பு. நான் பார்த்துக்கிறேன். அப்படி என்னால முடியாத பட்சத்துல நாம அங்கிள்கிட்ட கேட்டுக்கலாம் சரியா!!" என்று அவன் கூற,
"எனக்குப் பயமா இருக்கு முகிலன். இவ்ளோ கிரிமினலா...
இளமுகிலனின் சொந்த ஊர் திருச்சி மாவட்டத்திலிருக்கும் முசிறி என்னும் கிராமம் தான். அவனது அப்பா குமாரும் அம்மா வசந்தியும் படிக்காதவர்கள். அவர்களைப் போல் தங்கள் பிள்ளை இருக்கக் கூடாது என்று அவனை நன்றாகப் படிக்க வேண்டுமென வைராக்கியமாக உழைத்து பணம் சேர்த்தார்கள். அவர்களுக்கு என்று எதுவும் வாங்காமல் இளாவின் படிப்பிற்கு என்ன தேவையோ அதை...
சங்கர் திருச்சி மேற்கு தொகுதியைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டாளும் வீட்டில் தன் பெண்ணை அவரது கைக்குள் வைத்துக் கொள்ள முடியவில்லை. அதை அவர் விரும்பவும் இல்லை. எல்லா தகப்பனைப் போல் அவருக்கும் தன்னுடைய பெண் திவ்யா என்றால் உயிர். அவளுக்காக எதை வேண்டுமானாலும் செய்வார். அவள் கேட்டு அவரால் முடிந்தும் முடியாத ஒன்று...
அன்று ஞாயிற்றுக் கிழமை, வேலைக்குச் செல்ல வேண்டியது இல்லாததால் பரத்தும் இளமுகிலனுக்கு வீட்டு வேலையில் உதவி செய்யச் சீக்கிரமே அனைத்தையும் முடித்து விட்டனர். இளமுகில் தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு உட்கார, பரத் அவனது கைப்பேசியை எடுத்துக் கொண்டு அவனது வீட்டிற்குப் பேச பால்கனி பக்கம் சென்றான்.
தொலைக்காட்சி ஓடினாலும் இளமுகிலனின் கவனம் அதில் இல்லை. அவனது எண்ணம்...
பரத் வீட்டினரிடம் கூறியபடியே உடனே சென்னை செல்ல தயாராகினான். ஒரு வேளை இளமுகில் ஈரோடு வர ஒத்துக் கொண்டால் பேருந்திலோ அல்லது இரயிலிலோ கூட்டிக் கொண்டு வர முடியாது. அதற்கு இளமுகிலனும் ஒத்துக் கொள்ள மாட்டான். என்ன செய்வது என்று யோசித்த போது தான் அவர்களது வீட்டில் மகிழுந்து இருப்பது ஞாபகத்துக்கு வந்தது.
நேராக அவனது...
இளமுகிலன் திருச்சிக்கு வந்து ஒரு மாதங்களாகி விட்டது. திவ்யாவின் மேல் வழக்குக் கொடுத்ததால் அவன் நீதிமன்றத்திற்குச் செல்ல வேண்டிய அவசியம் வர, அவன் அங்கேயே இருந்து விட்டான்.
திவ்யா கொலை செய்தது நிரூபணமாக அவளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப் பட்டது. சங்கர் நில மோசடி, சொத்துக் குவிப்பு, வரி எயிப்பு, அரசாங்க டெண்டர்களில் லஞ்சம்...
காவலர்கள் வந்திருப்பதாக ரேஷ்மி கூறியதும், இளமுகிலனுக்கு ஒரு நொடி ஒன்றுமே புரியவில்லை. ஒரு வேளை ப்ரனவிகா தார் வர வைத்திருப்பாளோ என்று தவறாக நினைத்தான். இப்போது என்ன செய்வதென அவன் யோசிக்க, வெளியே சென்ற ப்ரனவிகா மீண்டும் உள்ளே வந்து,"முகிலன் இங்கேயே இருங்க, நீங்க வெளில வர வேண்டாம். நான் போய் என்ன விஷயம்னு...
நீண்ட நாட்களுக்குப் பிறகு அஸ்வத் ஹரிதாவை தனியாக அழைத்து வந்திருந்தான். அதுவும் ஆகாஷால் வீட்டில் ஏற்பட்ட பிரச்சனைக்குப் பிறகு, ஹரிதா அவனிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை. இப்போதும் கூப்பிடதும் அவள் வரவில்லை. அவன் அவளிடம் கெஞ்சி கேட்ட பிறகு தான் அவள் அவனுடன் வருவதற்குச் சம்மதித்தாள்.
"சாரி ஹரி!!! நான் இப்படியாகும்னு எதிர்பார்க்கலை. அதுவும் ஆகாஷோட...
ஆகாஷ், அஸ்வத்தின் பால்ய காலத்திலிருந்தே நண்பன். பல வருட நட்பு. ஆகாஷ் கூறியது போல் அவனது பெற்றோர்கள் அஸ்வத்தின் நிச்சியப் படங்களை அவனுக்கு அனுப்பி வைத்தது என்னவோ உண்மை தான். அதில் ப்ரனவிகா மட்டும் அவன் கண்ணுக்குத் தனித்துத் தெரிந்தாள். அவள் அஸ்வத்தின் தங்கை என்பது அவனுக்கு நன்றாகவே தெரியும். பார்த்ததும் அவள் அவனை...
இளமுகில், பரத் கூறியது போல் அவனுக்கு ஒதுக்கப்பட்ட அறையில் போய் படுத்தாலும் அவனுக்குத் தூக்கம் வரவே இல்லை. மாறாகப் பல எண்ணங்கள் அவனை வாய்பித்தது. என்ன தான் தைரியமாக அவன் முடிவு எடுத்து விட்டாலும் ஏனோ மனம் நெருடிக் கொண்டே இருந்தது.
அவன் அதையே நினைத்துக் கொண்டே இருக்க, நேரம் போனதே தெரியவில்லை. சரியாக இரண்டு...
பரத் தன் வீட்டிற்கு வந்து இன்றோடு ஐந்து நாட்கள் ஆன நிலையில் அவனது அலுவலகத்தில் இருந்து அவனது மேலாளர் அழைத்திருந்தார்.
"எஸ் டேவிட் சொல்லுங்க."
"பரத் நீ உன் மெயில் செக் பண்ணியா மேன்?"
"இல்லை டேவிட். நான் பார்க்கலையே. இப்போ தான் ஓபன் பண்ணேன். நீங்க கால் பண்ணிட்டீங்க."
"அப்படியா! அப்போ சரி. உனக்கு நேத்தே மெயில் வந்துருச்சு....
இளமுகிலன் தயாராகி கீழே வர, மூன்று வருடங்களுக்கு முன்பு அவனைக் கைது செய்த அதே பெண் காவலர் தான் வந்திருந்தார். அவரைப் பார்த்து நக்கலாகச் சிரித்து,
"அட நீங்க இன்னும் இன்ஸ்பெக்டரா தான் இருக்கீங்களா? இந்நேரம் ப்ரோமோஷன் வாங்கி வேற யாராவது வாழ்க்கையைக் கெடுத்துட்டு இருப்பீங்கனு நினைச்சேன். சை இப்படியாகிடுச்சே!!" என்று கேலியாக அவன் கூற,
அந்தப்...
ஹரிகா க்ரான்ட் பேலேஸ்,
ஈரோடு மாவட்டத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள இந்த ஐந்து நட்சத்திர விடுதி ஜகஜோதியாக ஜொலித்து கொண்டிருந்தது. அந்த விடுதியின் ஒரு பகுதியில் அமைந்துள்ள திறந்தவெளி இடத்தில் மேடை போன்ற அமைப்பில் தன் இணையுடன் உட்கார்ந்திருந்தான் அஸ்வத். அவனுக்கு அருகில் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருந்தாள் ஹரிதா.
ராகவன், அஸ்வத்தின் தந்தை மற்றும் ஹரிதாவின் தாய் மாமா...
இளமுகிலன் திவ்யாவிடம் என்ன பேச வேண்டும் எப்படிப் பேச வேண்டும் என அவனது பயணம் முழுவதும் அதையே நினைத்துக் கொண்டு வந்தான். இந்த முறை இப்படி வருவதற்கு வீட்டில் என்ன சொல்லுவார்களோ என்ற சிந்தனையுடன் தான் வீடு வந்து சேர்ந்தவனுக்கு அதிர்ச்சி.
திவ்யா அவளது பெற்றோருடன் அவனது அப்பா மற்றும் அம்மாவிடம் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்ததும்...