கோவக்கார கிளியே என்னை கொத்தி விட்டுப் போகாதே!
அத்தியாயம் : 9
வெற்றி அம்மு இருவருமே அது பயிற்சி என்பதை மறந்து களம் கண்டிருந்தனர்.
அதுவும் முந்தையை நாளே அவனது நண்பர்களுடன் அவளை மோதவிட்டு அவளது சூட்சமங்களை, காலின் அசைவுகளை தெரிந்து வைத்திருந்தவன் அதற்கேற்றார்போல் கவனித்து விளையாடியதில் அவளைவிட முன்னிலையில் இருந்தான்.
சுற்றி இருந்த மாணவர் கூட்டம் “வெற்றி…வெற்றி…” என கோஷமிட அது அந்தச் சின்னவளை வெறுப்பேற்றியது....
அத்தியாயம் : 8
அன்று இரவு செழியனிடம் பேசி வைத்த கையோடு வெற்றியின் அலைபேசி சிணுங்கி ஒலி எழுப்ப, நேரம் அப்போதே இரவு பதினொன்றை நெருங்கி இருந்தது.
இந்நேரத்தில் யார்? புது எண்ணாக இருக்கவும், “ஹலோ வெற்றி ஹியர்” என்ற கம்பீரமான குரலில் மறுமுனை மௌனம் சாதித்தது.
இரண்டு மூன்று முறை குரல் கொடுத்தும் பதில் இல்லாமல் போக...
திருதிருவென அவள் முழித்த முழியும் படபடபடத்த அவள் பேச்சும் அப்பட்டமாய் காட்டிக் கொடுத்துவிட, “நீதான அன்னைக்கு மௌண்ட் ரோட்ல அதிவேகமா காரை ஓட்டிட்டுப் போனது?” என்றதும் அவளின் திகைத்தப் பார்வையில் அவனது புன்னகை விரிந்தது.
அதை முகத்தில் காட்டாது, “அது எவ்ளோ பெரிய குற்றம்னு தெரியுமா? சாட்சி வேணும்னா சிசிடிவி ஃபுட்ஏஜ் காட்டவா?” என்றான் சும்மாவேணும்.
அவள்...
அத்தியாயம் : 7.1
“ஓய் சில்வண்டு நில்லு!”
தன் முன்னால் நீட்டப்பட்ட லத்தியால் நிமிர்ந்து பார்த்தாள் மிருத்யூ.
வெற்றிதான் ஜீப்பில் சாய்ந்து நின்றிருந்தான். இன்னும் முழுதாக குணமாகாததால் ஒரு கை கட்டுப்போட்டு தொங்க விடப்பட்டிருந்தது. பார்த்ததுமே அவன் யாரென புரிந்துபோக, அவள் இதழ்கள் தானாக ‘மாமா’ என்றசைந்தது.
கடந்த பத்து பதினைந்து நாட்களாக இவனது பேச்சுத்தானே வீட்டில் ஓடிக்கொண்டிருக்கிறது. பற்றாக்...
அத்தியாயம் : 6
அம்மு ஸ்டேஷன் கிளம்பிக் கொண்டிருக்க, “போகும்போது அந்தப் பையனைப் பார்த்து இதைக் குடுத்துட்டுப் போடி. பாவம். உனக்காகப் பார்த்து அந்தப் பிள்ளை காயம்பட்டுக் கிடக்குது” காலையில் பணிக்கு கிளம்பிக் கொண்டிருந்த அம்முவிடம் வெற்றிக்காக ஆட்டின் நல்லி எழும்பில் சூப்பு வைத்து அதை அவனிடம் கொண்டு கொடுக்கச் சொல்லி அம்முவிடம் நீட்டினாள் திவ்யபாரதி.
“அம்மா…!...
அத்தியாயம்: 5
காயம்பட்டிருந்த வெற்றியைக் காண மருத்துவமனை வந்திருந்த செழியன், “ஹவ் ஆர் யூ யங் மேன்!” என்றதும், செழியன் குரலை வைத்தே அடையாளம் கண்டுகொண்ட வெற்றி மெல்ல கண்விழித்தான்.
செழியனே நேரில் வருவான் என்று அவன் எதிர்பார்க்கவில்லை என்பது அப்பட்டமாய் அவன் பளிச்சிட்ட முகத்தில் தெரிய, கையில் போடப்பட்ட கட்டுடன்,“குட் மார்னிங் சார்! ஐயம் ஃபைன்”...
அத்தியாயம் : 4
"மேடம்! ரெஸ்ட்டாரண்ட்லருந்து சிக்னல் வந்துடுச்சி. அந்தப் பொண்ணு அடையாளம் காட்டிட்டா அவனுங்க அங்கதான் இருக்கானுங்க".
“வெல்! லெட்ஸ் கோ!”
அந்த புகழ்பெற்ற உணவகத்தின் வெளியே தன் ஜீப்பில் காத்திருந்த அம்மு, தன் இடுப்பிலிருந்த பிஷ்டலை சரிபார்த்தபடி குதித்து இறங்க, கூடவே இரண்டு கான்ஸ்டபிளும் இறங்கினர்.
தன் பரிவாரங்களுடன் புயலென உள்ள நுழைந்தவள், குறிப்பிட்ட இடத்தை நோக்க,...
அத்தியாயம் : 3
செழியனின் அறையிலிருந்து வெளிவந்த நொடி, “ஷ்ஷப்பா” என்று மூச்சை இழுத்து விட்டாள் அம்மு எழிலரசி.
தந்தை இதை நிச்சயம் விடப்போவதில்லை. அப்போதைக்கு சமாளித்து வைத்திருந்ததில், நிம்மதி பெருமூச்சை கொஞ்சம் சத்தமாகவே ஊதி வெளியேற்ற, வெற்றியின் ஆர்ப்பாட்டமானச் சிரிப்பு திரும்பிப் பார்க்கச் செய்தது.
உருண்டு பிறளாத குறையாக வயிற்றைப் பிடித்துச் சிரித்துக் கொண்டிருந்தான்.
முறைத்து விட்டு நகரப்போனவளை,...
அத்தியாயம் : 2
செழியனின் அறைக்குள் நுழைந்த அம்மு விறைப்பாய் சல்யூட் ஒன்றை வைத்துத் தளர்ந்தாள்.
மகளை மிடுக்காக போலீஸ் உடையில் கண்டதும் கர்வம் மேலிட மீசையை மெலிதாய் நீவி விட்டுக் கொண்டான்.
அதை வெளிக்காட்டாதவனாக, “கங்கிராட்ஸ்! இன்னைக்குதான் ஜாய்னிங் இல்லையா?” என்றான். ஒன்றும் அறியாதது போல்.
காலையில்தானே அன்னையையும் தந்தையையும் ஒருசேர நிற்கவைத்து ஆசிர்வாதம் வாங்கி இருந்தாள். தெரிந்தும்...
சாய்ராம்…
அத்தியாயம் : 1
“ஹேய் அம்முகுட்டி செம்மயா இருக்க!”
தன் காதுக்கருகில் கேட்ட குரலில், தங்கையிடம் அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த அம்மு எழிலரசி திரும்பினாள்.
அவள் மாமன் கார்த்திதான் அவளை செல்லமாக அம்முக்குட்டி என்றழைப்பான்.
‘வேறு யார்?’ இந்த கரகரத்த குரல் தன் மாமனுடையது இல்லை என்றதும் அலைபேசியில் பேசிக்கொண்டே விழிகளால் துழாவினாள்.
“என் செல்ல அம்மு! என் பட்டு அம்மு!” மெரூன்...