கண்ணே முத்து பெண்ணே
கண்ணே முத்து பெண்ணே 1
"சுப்ரமணி.. சுப்பு.. மணி.. ஓய் மணியே" என்று தொடர்ந்து ஏலம் விட்டான் செல்வம்.
"ஏண்ணே இப்படி கத்துற" என்று சுப்பு வர,
"மாமாக்கு டீ போடுடா" என்றான்.
"அதையும் நீயே போட்டு கொடுத்திருக்கலாம்" சுப்பு முனங்கி கொண்டே செல்ல,
"கொடுத்திருக்கலாம் தான். ஆனா உனக்கு ஏதாவது வேலை கொடுக்கணும் இல்லை" என்றவன், தனக்கு தானே போட்டு...
பின் காலையிலே எல்லாம் முடிந்தது. மணியை போக சொல்லிவிட்டான்.
இவனுக்கு நாச்சியை சென்று பார்க்கலாமா என்று ஒரு எண்ணம்!
காலையில நல்ல முறையில கிளம்பி போயிருக்கலாம். இப்போ அவ எப்படி இருக்களோன்னு குறுகுறுன்னு இருக்கு.
அவ தான் உனக்குன்னு முடிவு பண்ணிட்ட இல்லை. இன்னும் என்ன யோசனை?
அவ வீட்டுக்கும் தெரியும். அப்பறம் என்ன? பைக்கிலே கிளம்பிவிட்டான். அவன் ஊர்...
கண்ணே முத்து பெண்ணே 9
செல்வத்தை தன் ஆள் அகிலனிடம் அறிமுகம் செய்து வைத்த அமைச்சர், பார்ட்டியை தொடங்கிவிட்டார்.
எல்லாரும் கையில் கிளாஸுடன் மிதக்க, அகிலனும் எடுத்து கொண்டு வந்தான்.
செல்வம் அவனுக்காக வந்த சோடாவை மறுத்துவிட, "இப்படி வாங்க" என்று அவனை தனியே அழைத்து கொண்டு வந்தான் அகிலன்.
இருவரும் ஓர் இருக்கையில் அமர, அண்ணாச்சி பார்வை இவர்களையே...
கண்ணே முத்து பெண்ணே 18
ரவி அவனின் அம்மாவுடன் வீட்டிற்கு வர, நாராயணன் வாசலிலே அமர்ந்திருந்தார். கதவை திறந்து வீட்டிற்குள் கூட செல்லவில்லை.
"என்னங்க இங்கேயே உட்கார்ந்திட்டிங்க? வாங்க, உள்ள வாங்க" என்று கமலா கதவை திறந்து கணவரை அழைக்க, நாராயணன் அமர்ந்த இடத்திலே மனைவியை பார்த்தார்.
கமலா கைகளை பிசைந்து நிற்க, ரவி கார் நிறுத்தி வந்தவன்,...
செல்வம் அமைதியாக நிற்க, அண்ணாச்சி மேலும் பேசினார். "முன்ன நாம பேசி வைச்சது தான் அதுவரைக்கும் இந்த விஷயம் வெளிய தெரியாம பார்த்துக்கலாம்" என்றார்.
"என்ன தான் நாராயணன் எனக்கு பங்காளியா இருந்தாலும், நீயும் என் தங்கச்சி மகன் தான் செல்வம். அவன் உன்னை இப்படி பேசினத்துக்காகவே நாம இதை எடுத்து செய்யலாம். அப்புறம் இவனை...
கண்ணே முத்து பெண்ணே 8
மகள் இங்கு இருப்பாளோ என்ற சந்தேகத்திலே கோவிலில் இருந்து கிளம்பி வந்த நாராயணனுக்கு நாச்சி அங்கு தான் இருந்ததில் எதையும் யோசிக்காமல் காரை நிறுத்திவிட்டார்.
அவரை தொடர்ந்து மற்றவர்களும் நிறுத்தி இறங்கிவிட, நாராயணன் ம்ப்ச் என்று தலையில் தட்டி தன்னை சமாளித்து கொண்டார்.
எல்லோரும் உள்ளே வந்துவிட, "பொண்ணு இங்க தான் இருக்கா"...
கண்ணே முத்து பெண்ணே 24
செல்வம் கிளம்பி கொண்டிருக்க, அரக்க பறக்க ஓடி வந்தான் ரவி.
"மாப்பிள்ளை. நானும் வரேன். போயிடலாம்" என்று நின்றான்.
செல்வத்துக்கு யோசனை. எதற்கு வர சொல்லியிருப்பார்கள் என்ற அனுமானம் உண்டு.
அங்கு ரவி வருவது, அவனுக்கு எந்தளவு பாதுகாப்பு என்று செல்வத்திற்கு தெரியவில்லை.
எனவே, "நீ வேணாம் மச்சான். நான் பார்த்துகிறேன்" என்றான்.
"இல்லை. நான் வரத்தான்...
கண்ணே முத்து பெண்ணே 17
மிகவும் எளிய வகையில் அவர்களின் திருமணம் நடைபெற்றிருந்தது. கோவிலில் வைத்து எண்ணிவிடும் ஆட்களின் முன், அவனின் முத்து பெண்ணுக்கு மாங்கல்யம் சூட்டினான் செல்வம்.
தம்பதி சகிதமாக இருவரும் நின்றதே, மணமக்களுக்கு நிறைவை தந்துவிட்டது.
செல்வம் குறைந்த நேரத்தில் தேடி பிடித்த முகூர்த்த புடவையில் முத்து பெண் மிளிர்ந்தாள். தங்க நகைகள் பெரிதாக அணியவில்லை.
செல்வம்...
கண்ணே முத்து பெண்ணே 19
செல்வத்திற்கு அடுத்து என்ன என்ற கேள்வி?
நாராயணன் அவரின் மகளிடம் எல்லாம் சொல்லிவிட்டார். அவனின் முத்து பெண் இவனை தான் பார்த்திருக்கிறாள்.
'இவர் சொல்றது உண்மையா?' என்று கண்களால் கேள்வி கேட்டு கொண்டிருக்கிறாள்.
செல்வம் அவளின் பார்வையை எதிர்கொண்டானே தவிர, பதில் அளிக்கவில்லை.
"நாச்சி. அப்பா சொல்றது உண்மை நாச்சி. பாரு அங்க அந்த பெட்டி...
கண்ணே முத்து பெண்ணே 25
"சுப்பிரமணி. சுப்பு, மணி" என்று செல்வம் தொடர்ந்து அழைத்ததில்,
"இதோ வந்திட்டேன்ண்ணா" என்று வேகமாக வந்தான் சுப்பிரமணி.
"நேரம் ஆச்சுடா" என்றவன் மனைவி, தம்பியுடன் காரில் கிளம்பினான்.
பத்திர பதிவு அலுவகத்திற்குள் அவர்கள் கார் வந்து நின்றது.
ரவி முன்னரே எல்லாம் தயாராக வைத்திருக்க, நாராயணன் பரபரப்போடு வந்தார்.
"எல்லாம் ஒண்ணாவே முடிச்சுக்கலாம் ரவி. வரிசையா நடக்கணும்....
செல்வம் ஒரு முரட்டு ஜீன்ஸ், சர்ட்டையில் கிளம்பி வந்தவன், "இன்னைக்கு பக்கத்து ஊர் பஞ்சாயத்து. நீ சீக்கிரம் வந்து சேரு" என்று அப்பாவை கண்டு கொள்ளாமல் கிளம்பிவிட்டான்.
தண்டபாணி கத்தி முடித்து கிளம்பிவிட, சுப்பிரமணி கடையை உடனிருப்பவனிடம் விட்டு தானும் பஞ்சாயத்து நடக்குமிடம் வந்தான்.
ஆட்கள் அந்த களத்தில் அதிகளவில் கூடியிருக்க, பலராம் நடுவில் அமர்ந்திருந்தார். அவருக்கு...
அறையை விட்டு வெளியே வந்த நொடி, அளவுக்கு அதிகமாக வெப்பத்தை உணர்ந்தான்.
அவ்வளவு நேரம் ஜில்லிட்டு இருந்தவன், இப்போது மூச்சையும் நன்றாக இழுத்துவிட்டு கொண்டான்.
ஒரு வார்த்தை கூட விட்டு விட கூடாது என்பதில் கவனமாக இருந்தவன், இப்போது ஆசுவாசத்துடன் அந்த கேட்டை விட்டு வெளியே வந்தான்.
அந்த தெரு முடியும் இடத்தில் ரவி காத்திருந்தவன், "மாப்பிள்ளை" என்று...
கண்ணே முத்து பெண்ணே 3
தன்னை வர சொல்லிவிட்டு அமைதியாக அமர்ந்திருந்த செல்வத்தினை கேள்வியாக பார்த்தான் ரவி.
சுப்பிரமணி டீ கொண்டு வந்த கொடுக்க, ரவி ஒரு பார்வை தான். அதிலே, "உங்களுக்கு இல்லை மச்சான், அண்ணாக்கு" என்று செல்வம் பக்கம் நீட்டிவிட்டான் மணி.
செல்வமோ, "வேண்டாம்" என, இருவருக்கும் அதிர்ச்சியே.
"ண்ணே. டீண்ணே" என்றான் சுப்பிரமணி.
"டீன்னா, எடுத்துட்டு போடா"...
கண்ணே முத்து பெண்ணே 16
மகளை எதிர்பார்த்து நாராயணன் வாசலையே பார்த்திருக்க, மகன் தான் வந்தான்.
"எங்கடா பாப்பா?" என்று அவனுக்கு பின்னால் தேடி போய் பார்த்து வந்தார் தந்தை.
"அவ செல்வத்தோட வரா" ரவி சொல்ல,
"ஏன் நீ கூட்டிட்டு வர வேண்டியது தானே? அவனோட எதுக்கு அவளை விட்ட? வர வர உனக்கு புத்தி மழுங்கி போச்சு....
எல்லாம் இருக்கும் போது சார் தான் என்பதால், "சொல்லுங்க செல்வம்" என்றான் அகிலன்.
"அது அண்ணாச்சி, என்கிட்ட ஷேர் பத்தி பேசினார். அதான் உங்ககிட்ட கேட்டு"
"செல்வா, செல்வா என்ன பேசுற நீ? அதெல்லாம் ஒன்னுமில்லை" என்று அண்ணாச்சி பதறி போய் செல்வத்தின் கையை பிடித்து நிறுத்தினார்.
"என்ன ஷேர்?" அகிலன் அவன் பொறுப்புக்கு வந்து கூர்மையாக கேட்டான்.
"அது...
கண்ணே முத்து பெண்ணே 5
அண்ணாச்சி பரபரப்பாக சாலையையவே பார்த்திருந்தார். நேரம் நெருங்கிவிட்டது. செல்வம் இன்னும் வரவில்லை.
"அவன் வர மாட்டான்" என்றார் நாராயணன்.
"அவன் வரலைன்னா ஆப்பு நமக்கு தான். மறந்துட்டியா நாராயணா" அண்ணாச்சி கேட்க,
"எல்லாம் தெரிஞ்சு தானே இறங்கினோம், பார்த்துக்கலாம்" என்றார் அவர்.
"உனக்கு உன் பொண்ணு பைத்தியம் பிடிச்சுடுச்சு. அவளை காப்பாத்துறேன்னு நாம தான் மாட்டிக்க...
கண்ணே முத்து பெண்ணே 20
முத்து பெண்ணை கல்லாவில் பார்த்ததும் செல்வத்திற்கு அதிர்ச்சியே!
அடுத்து அவள் என்ன செய்ய போகிறாள் என்பதை மிக தெளிவாக காட்டிவிட்டாள்.
ஆனால் அது கணவனுக்கு தான் ஒப்பவில்லை.
எனக்கு தான் தலையெழுத்து, இவளுக்கு என்ன?
நல்லா படிச்சு, அருமையான வேலையையும் விட்டு, இதென்ன?
செல்வம் முகம் சுருங்க, மேலேறிவிட்டான். நேரம் எடுத்து குளித்து வர, சமையல் அறையில்...
"அவனை வெளிநாடு போக சொன்னப்போ முடியாதுன்னு உன்கூடவே இருந்துட்டான். பணம் கையில வைச்சிருந்தாலும், அவனுக்குன்னு தனியா பொழைப்பு வேணாமா? நாளைபின்ன பொண்ணு பார்க்க போனா இதெல்லாம் கேட்க மாட்டாங்களா? பார்த்து ஏதாவது செஞ்சி விடு" என்று பேசியிருந்தார் மனிதர்.
சித்தப்பா சொன்னதில் இருந்த உண்மை செல்வத்திற்கும் புரிந்தது.
செல்வத்தின் டீ கடை இப்போது ஒரு பிராண்டாக பல...
கண்ணே முத்து பெண்ணே 14
அதிகாலையில் எப்போதும் போல் சென்னைக்கு கிளம்பிய முத்து நாச்சியை காணவில்லை என்று ஓடி வந்தான் ரவி.
செல்வம் புது கடையிலே இருந்தான். இரவு நாச்சியிடம் பேசி முடித்தபின் அவனின் தந்தை அழைத்திருந்தார்.
'என்ன இந்த மனுஷன் புதுசா போன் எல்லாம் பண்றார்? அதுவும் இந்த நேரத்துல?' செல்வம் நினைத்தபடி எடுக்க, "முக்கியமான விஷயம்...
கண்ணே முத்து பெண்ணே 23
எப்படி நடந்தது இது? எப்படி, எப்படி? என்று அண்ணாச்சி திணறி கொண்டிருந்தார். அவருக்கு நடந்ததை ஏற்று கொள்ளவே முடியவில்லை.
திடீர்ன்னு சொத்தை என் பேர்ல எழுதுற அளவுக்கு, என்ன நடந்திருக்கும்? யார் பார்த்த வேலை இது? சுத்தி உள்ள அனைவரையும் யோசித்தார். நாராயணன், செல்வம் உட்பட. எவ்வளவு யோசித்தும் பதில் மட்டும்...