என்னுள் மாற்றம் தந்தவளே
15..
புரிதலான உறவு...
யாரை நம்புவது
நம்பக் கூடாது...
என்ற கேள்விக்கு...
அனுபவத்தின் மூலம்
விடை அறியும் முன்...
பாதி ஆயுள்
முடிந்துவிடுகிறது...
விஷல்யா குறித்த உண்மையை அமுதேவ்விற்கு தெரியப்படுத்தி விட்டதால் அவன் எப்படியும் திருமணத்தை நிறுத்திவிடுவான் என்றத் தீர்மானத்தில் இருந்த வினோத், தன்னை அவமானப் படுத்தியவள் அவமானப்பட்டு நிற்பதை காணும் ஆவலுடன் முகூர்த்த நேரம் கடந்த பிறகும் கூட திருமண மண்டபத்திற்கு வந்து சேர்ந்தான்.
அமுதேவ்...
14..
காதல் கரம் சேர்ந்ததில் சேதாரம் எவருக்கு?...
காதலில் ஜெயித்து
மகிழ்வில் திளைத்தவர்கள்
அதனை அமுதம் என்பர்....
தோற்று...
மனதில் வலியை
உணர்ந்தவர்கள்..
அதனை விஷத்துடன் ஒப்பிடுவர்..
வென்றதாய் எண்ணவும் முடியாமல்...
தோற்றதாய் துவழவும் முடியாமல்...
என்னைப்போல் தவிப்பவர்கள்..
அதனை அமுத விஷம் என்பர்...
அன்னையின் வற்புறுத்தல் காரணமாக உண்மையைக் கூறச் சென்றாலும், சூழ்நிலை காரணமாக உண்மையை கூறாமல் அமுதேவ்வை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்க வேண்டிய ஆயுதத்தை தனுஜ் கையில் கொடுத்து வந்தவள்,...
27... இனிதாய் ஒரு நிறைவு…
விட்டுக் கொடுப்பதும்
மன்னிப்பதும் தான்
வாழ்க்கை…
யார் முதலில்
விட்டுக் கொடுப்பது
மன்னிப்பது என்கின்ற
மனக்குழப்பமே!
வாழ்க்கையின்
போராட்டமாகி விடுகிறது….
தன்னைத்தானே கவனித்துக் கொள்வதாய் விஷல்யா கூறிய போதும்.. அலுவல் பணிகளை செய்ய விடாமல் மனைவியின் நினைவே அமுதேவ்வை அலைக்கழித்தது.
நிலை இல்லாத மனதுடன் நிம்மதியாக வேலை பார்க்க முடியாது என்று தீர்மானித்த அமுதேவ், தன் நண்பன் தனுஜிடம் வேலையை ஒப்படைத்துவிட்டு மனைவியைக் காண ...
13...
உண்மை விளம்புதல்..
உன்னையும் என்னையும்
பிரிக்கத் துடிப்பது..
தலைக் கனமா?..
தலைவிதியா?...
எதுவாய் இருப்பினும்
இறுதியில் எனக்கு மிஞ்சுவது
இந்தத் தனிமை மட்டுமே..
நாளை நடக்கவிருக்கும் திருமணத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளை கவனிக்க சென்றிருந்த தனுஜ்… வேலைகளை முடித்துக்கொண்டு அமுதேவ் தங்கியிருக்கும் மணமகன் அறைக்கு வந்து சேர்ந்தான்.
முதலில் அமுதேவ் அறையில் இல்லாதது பெரிய விஷயமாக தோன்றவில்லை என்றாலும் அலைந்து வந்த அயர்வு தீர சிலமணிநேரக் குளியலை முடித்து...
21.. கொண்ட கொள்கை மாறுமா?
நாம் மேற்கொள்ளும் தவறுகள்
சிறந்த அனுபவத்தை கொடுக்கும்
சேகரித்த அனுபவங்கள்
இனி மேற்கொள்ளவிருக்கும்
தவறுகளை குறைக்கும்..
கல்லூரி இறுதி ஆண்டு படித்து கொண்டிருக்கும் போதே மாணவர்கள் அனைவரும் கல்லூரியின் கடைசி நாளை நண்பர்களின் மறு இணைவு தினமாக அறிவித்து வருட வருடம் அதே தேதியில் சந்தித்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்திருந்தனர்.
கல்லூரி முடிந்த சில வருடங்கள் அதனை...
என்னுள் மாற்றம் தந்தவளே...
1
உடல் வலிமை
கொண்டவன்…
ஆண் எனில்..
அவனை
அடக்கியாள
உள்ளத்தில்
வலிமை கொண்டவள்
பெண்…
எப்போதும் அளவான புன்னகையில் மலர்ந்திருக்கும் முகம் இன்று கோபத்தில் சிவந்திருக்க.. “ இப்போ என்னதான் சொல்றீங்க..?” என்று அழுத்தமாக வினவினாள் விஷல்யா.
“ ஷாலு.. இதெல்லாம் காலங்காலமா நடக்கிற சம்பிரதாயம், நம்ம இஷ்டத்துக்கு மாத்த முடியாது.. இப்போ உன் பிரச்சனை என்ன வீட்டுக்கு வந்து பொண்ணு பாக்குறது ...
6...
நிலையில்லா உறவுகளின்..
நிரந்தர அன்பைப் பெறுவதற்கு..
வேடமிடும் உலகம் இதில்..
அரிதாரம் பூசாத முகங்கள்..
போலி முகமென அறிவிக்கப்பட்டு..
விதவிதமாய் முகமூடி
அணிந்த முகங்கள்..
அரியணை ஏற்றிவைக்கப் படும்...
தன் காதல் கைகூடாமல் போன கதையை விஷல்யா கூறி முடிக்க.. சிலநொடி நேரம் எதையோ எண்ணி தனக்குத்தானே சிரித்துக் கொண்டிருந்தவர் சூழ்நிலை புரிந்து... தனது சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ சாரி மா.. என் மாமியார்...
தன் அன்னையின் வற்புறுத்தல் காரணமாக பாவை நோம்பு மேற்கொள்ள மார்கழி மாதத்தின் அதிகாலையில் எழுந்து நோம்புக்கு ஏற்ற முறையில் தன்னைத் தயார்படுத்திக்கொண்டு, சென்னையில் பிரசித்திப் பெற்ற மயிலாப்பூர் மாதவப்பெருமாள் கோவிலுக்கு தாமரையுடன் சென்றாள் விஷல்யா.
முதல் ஒரு வாரம் விஷல்யாவுடன் வந்த தாமரைக்கு விடியற்காலைப் பனிக்காற்று ஒத்துவராமல் உடல்நலக்குறைவு உண்டானதால் அடுத்து வந்த நாட்களில்.. விஷல்யா...
16...
எவர் எண்ணம் ஈடேறும்
காதலில் திளைத்து
உன்னுடன் கலந்தது போல்
கனவு கண்டேன்..
விழி கண்ட கனவுகள்..
விரல் தீண்டிட நிறைவேறுமா...
விரகத்தில் என் உயிர் நோகுமா!..
பொழுது புலர்ந்ததென உலகுக்கு அறிவிக்க பறவைகளின் கீச்சுக் குரல் வானமெங்கும் எதிரொலித்தது.
பல வண்ணப் பறவைகளின் சங்கமக் கீதத்துக்கு எதிர் ராகம் போல பெண்ணவள் வளையோசையும், கால்களில் மின்னிய கொலுசின் சிணுங்கல் இசையும் சமையல் கூடத்தில் இன்னிசை...
12...
மனம் விரும்பும் மணம் நிகழுமா?...
காதலும்
மனித உணர்வுகளில்
ஒன்றென்று எண்ணியிருந்தேன்
நானடா..
காதல் தான்
மனிதனை மனிதனாய்
உணரச்செய்யும்
உணர்வு என்று
உணர்த்திச் சென்றாய்
நீயடா…
உறவில் விரிசல் கொண்டு வருடக் கணக்கில் பிரிந்திருந்த உறவுகள் ஒன்று கூடும் திருமண நிகழ்வில், மனைவி பேச்சைக் கேட்டு அன்னையை ஒதுக்கி வைத்த வாசுதேவ் மீது வெறுப்பில் இருந்த தாய் வழி உறவுகளும் கலந்துக் கொண்டிருந்தனர்.
“ என்னப்பா வாசு நல்லா இருக்கியா?” என்று...
17...
நிலையில்லா நிர்ப்பந்தங்கள்...
வார்த்தைகள் இல்லா
மௌனத்தின் அர்த்தத்தையும்..
கோபத்தில் வெளிப்படும்
அர்த்தமற்ற வார்த்தைகளில்
பொதிந்துள்ள அன்பையும்
புரிந்து கொண்டால்
உறவில் பிரிவில்லை...
தன் அன்னை தந்தையின் இல்லம் விடுத்து... தன் கணவனின் வசிப்பிடம் நுழைந்து இருந்தாள் விஷல்யா.
வீட்டின் ஒவ்வொரு அறைகளையும் அறிமுகப்படுத்தக் கடமைப்பட்டவனாக... " இது ஹால், ரைட் சைடு ரூம் சும்மா இப்போதைக்கு ஸ்டோர் ரூம் மாதிரி யூஸ் பண்ணிட்டு இருக்கேன், வீட்டுல இருக்கிற...
19… கடிவாளக் காதல்..
எனக்கான உரிமை கோரல்கள்
உன் உணர்வுகளை
காயப் படுத்திவிடுமோ என்று
உரிமைக் குரல் கொடுக்காமல்
இருக்கின்றேன்…
என் கடுமையான வார்த்தைகள்
உன் கனிவான இதயத்தை
காயப்படுத்திவிடுமோ என்று
கடுஞ்சொற்களை
எனக்குள்ளேயே வடிகட்டி
மென் சொற்களை மட்டுமே
உன்னிடம் அனுப்பிவைக்கிறேன்…
இருப்பினும் நீ காயப்படுகிறாய்..
உன்னிடம் சொல்லாமல்
மறைக்க நினைக்கும் கவலைகள்
என் கண்களில்
தேங்கி நிற்கக் கண்டு…
மூன்று இரவு நான்கு பகல்.. நீண்ட நெடுந்தூரக் கப்பல் பயணம்… இருவருக்குமான நெருக்கத்தை அதிகப்படுத்தியது.
இத்தனை ஆண்டுகளாய் இருவரும்...
25.. உன்னை கைவிடுவேனோ காதலே..
என் உயிர் நீ தானடி..
நீ இன்றி நான் ஏதடி…
அலுவலகம் செல்ல பரபரப்பாக தயாராகிக் கொண்டிருந்த மனைவியை, பின்னிருந்து அணைத்துக்கொண்ட அமுதேவ். “ எதுக்கு இவ்வளவு டென்ஷனா இருக்க?, “ என்றான்.
“ மறந்துட்டியா!, இன்னைக்குதான் ப்ராஜெக்ட் டிஸ்கஷன், என்னோட பிரசன்டேஷன் அவங்களுக்கு பிடிக்குமோ பிடிக்காதோன்னு. கொஞ்சம் டென்ஷனா இருக்கு அம்மு. “...
9..
மற்றவரிடம்
மௌனம் கொள்ளும்
நான்..
உன்னிடம் மட்டும்
வாய் ஓயாமல்
காதல் பேசித் தீர்த்தேன்..
என் மௌனத்தை
அறிந்தவர்கள் கூட
என் மனதை
புரிந்து கொள்ள முயற்சி செய்ய..
என் காதல் மொழிகள்
அத்தனையும் அறிந்தவள் நீ
என்னை நிராகரித்து
சென்றது ஏனோ..
அமுதேவ் காதல் இன்னும் மாறாது இருப்பதை அறிந்ததும்.. அவனை மணக்க சம்மதிப்பதாக பானுஸ்ரீக்கு தெரியப்படுத்தினாள் விஷல்யா.
எடுத்த முடிவில் இருந்து பின் வாங்க மாட்டேன் என்று உறுதியாக சொல்லிச் சென்றவள்.. அதுவரை...
23… உறுதுணையான உறவே…
ஒருவரை
நேசிக்கத் துவங்கும் போதே
அவரின் விருப்பங்களையும்
நேசிக்க துவங்கிடுங்கள்…
அப்போதுதான் அந்த அன்பு
உண்மையானதாகவும்…
நீண்ட காலம்
தொடரக் கூடியதாகவும் இருக்கும்..
கண்ணன் வீட்டிலிருந்து திரும்பும்போது தனுஜை வாகனத்தை இயக்க சொல்லிவிட்டு பக்கத்து இருக்கையில் தீவிர யோசனையுடன் அமர்ந்திருந்த அமுதேவ், கண்ணன் விஷல்யாவிற்கு பரிசளிக்க வழங்கிய புத்தகத்தை மீண்டும் மீண்டும் புரட்டி பார்த்தபடி வர… “ என்னடா அந்த புக்கையை வெறிச்சு...
10...
அனைவரிடமும்
பாசம் கொள்வது..
வாழ்விற்கு ஆரோக்கியமாகும்…
ஒருவரை மட்டும்…
அன்போடு நேசிப்பது..
காதலுக்கு அழகாகும்..
அதே நேசம்…
உரிமையோடும்
என்றும் மாறாமல் இருப்பது..
உறவை மேலும் ஆழமாக்கும்..
அமுதேவ் அன்னையிடம் திருமணத்திற்கு சம்மதித்த விஷல்யா, அந்த செய்தியை தன் வீட்டில் இருப்பவர்களுக்கும் தெரியப்படுத்தினாள்.
“ என்ன சொல்ற.. பொண்ணு பார்க்க வர சொல்லியிருக்கியா?, இது எப்ப நடந்தது?, இதையெல்லாம் எங்ககிட்ட முன்னாடியே சொல்லணும்னு உனக்கு தோணலையா?, நீயா உன் இஷ்டத்துக்கு...
9…
அன்பிற்கு மட்டுமே
அடிபணியும்
ஆடவள் இவள்..
அதிகாரத்திற்கு
அடங்கி ஒடுங்கும்
அடிமையாய்
மாற்ற முயற்சிக்காதே..
உன் முயற்சி வீணாவதோடு
உன் மீது நான் கொண்ட
அன்பும் முறிந்திடக் கூடும்..
அமுதேவ் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்திருந்தாலும் அவன் அன்னையின் மனதில் சிறு சஞ்சலம் இருந்துகொண்டே இருந்தது அதற்கு காரணம் மகனின் ஆருயிர் நண்பன் தனுஜ்.
நண்பனுக்கு வேண்டாத துரோகமிழைக்கின்றோம் என்ற எண்ணத்தில் தனுஜ் அமுதேவ்விடம் உண்மையை உரைத்துவிட்டால், இதுவரை மேற்கொண்ட முயற்சிகள்...
7...
“ இட்ஸ் ஓகே மேம், முன்னாடியெல்லாம் நடந்ததை நினைக்கும் போது கோபம் தான் வந்தது, ஆனா இப்போ அப்படி இல்ல, சிலநேரம் என்னையும் மீறி உங்கப் பையனோட பேச்சை நினைச்சு என்னகுள்ள சிரிச்சுக்குவேன் ” என்று மெல்லிய புன்னகையுடன் கூறினாள் விஷல்யா.
“ ஃஇப் யூ டோன்ட் மைன்ட் நான் ஒன்னு கேட்கலாமா?, “...
8..
மறக்க வேண்டுமென்று
மனதில் புதைத்து வைக்க..
மண்ணைக் கீறி
வெளிவரும் விதை போல..
என் மனதைக் கிழித்து..
விருட்சமாய் விரிந்து..
என்னை விழுங்கப் பார்க்கிறது..
உன் நினைவுகள்..
கல் மனதையும் கரைக்கும் வித்தை அறிந்த காதல், பெண்ணியம் பேசும் பெண் மனதை மட்டும் விட்டு வைக்குமா என்ன?.. அமுதேவ் அன்னையிடம் பேசிவந்ததில் இருந்து… மனம் அவனையே நினைக்க… தன்னை விட்டுக் கடந்து சென்றதாய் எண்ணிய...
4…
ஒரு நொடி நினைவில்
நீ வந்து போனால்..
பலமுறை என்னுள்
சிதறிப்போகிறேன்..
பிறந்ததிலிருந்து தன் விருப்பு வெறுப்புக்கு மதிப்பளித்து, எதற்காகவும் தன்னை வற்புறுத்தாத தந்தையின் வேண்டுகோளுக்கிணங்கி அமுதேவ் அன்னையை சந்திக்க காத்திருந்தாள் விஷல்யா.
“சாரிமா, வந்து ரொம்ப நேரமாச்சா..?, சொன்ன நேரத்துக்கு முன்னாடியே வர்றது தான் என்னோடப் பழக்கம். ஆனா இன்னைக்கு அதைக் கீப்பப் பண்ண முடியல அதுக்கு காரணம்...