Paarthuvidu Konjam
பார்த்துவிடு கொஞ்சம் – 20
ஆகிற்று பத்து நாட்கள்..
பார்த்திபனுக்கு அவன் எதிர்பார்த்த லோன் பணம் வந்துவிட்டிருந்தது. ஆனால் அதற்கு முன்னமே தன்யாவும், காஞ்சனாவும் நான் தருகிறேன் என்று போட்டியிட, பார்த்திபனுக்கு தயக்கமே மிஞ்சியது. சிறிது தாமதம் ஆனாலும் சரி, காத்திருந்தே செய்வோம் என்ற முடிவில் இருந்தான்.
“இல்ல வேணாம் சித்தி... வேணாம் தன்யா..” என,
“டேய் என்...
பார்த்துவிடு கொஞ்சம் – 19
பார்த்திபன் அமைதியாகவே இருந்தான். அவனின் அப்பா பேசவே கூடாது என்று சொல்லியிருந்தார். ஆக நடப்பது அனைத்தையும் கவனித்தபடி பார்வையாளனாகத் தான் இருந்தான். அனைவரின் முன்னும் முரளி தன்னைத் தானே இவ்வளவு தாழ்த்திக் கொள்வான் என்று பார்த்திபன் நினைக்கவேயில்லை.
ஆனாலும் நடந்தேறியது..
முரளி தானாக அனைத்தும் நடத்திக்கொண்டு இருந்தான். அவன் தீட்டியிருந்த திட்டங்கள் எல்லாம்...
பார்த்துவிடு கொஞ்சம் – 6
“அதான் சாரின்னு சொல்லிட்டேனே லேகா. இன்னமும் ஏன் இப்படி பார்த்து வைக்குற.. எனக்கு கில்டியா இருக்கு...” என்றான் பார்வையை வேறு எங்கோ பதித்து பார்த்திபன்.
“ஓ... தென்??!!!” என்று லேகா அலட்சியமாய் கேட்க,
“தென் வாட்..?? இன்னும் என்னை என்ன பண்ண சொல்ற நீ...” என்றான் இவனும் பதிலுக்கு..
‘தெனாவட்டு தான் டா உனக்கு..’...
பார்த்துவிடு கொஞ்சம் – 14
முரளி செய்த மூளை சலவை, நன்கு வேலை செய்தது. ஹேமாவின் மூளையை வெளுத்துவிட செய்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். பேசி பேசி கரைப்பது என்பது ஒருவகை என்றால், முரளி செய்தது பேசி பேசி வெளுப்பது.
இறுதியில் அவன் சொன்னது மட்டுமே சரி என்று நம்ப வைத்து, ஹேமாவை அதற்குமேல் சிந்திக்கவிடாது செய்தும்...
பார்த்துவிடு கொஞ்சம் – 9
நம்மின் வாழ்வில் சூழ்நிலைகள் மாறுதல் அடையும்போது, நம்மின் நடவடிக்கைகளும் மாறும். மாற்றங்கள் எப்படியாகினும் ஏற்படலாம். நல்லவை நடக்கவேண்டும் என்று ஒரு கெடு செயல் நடக்கலாம் இல்லையோ ஒரு நல்லது போலவே நடந்து இறுதியில் அது கெடுதலாய் முடியலாம்.
எது எப்படியாக இருந்தாலும், சூழல் எப்படியானதொரு மாற்றம் கொடுத்தாலும், நாமும் நாளொன்று சிந்தித்து,...
பார்த்துவிடு கொஞ்சம் – 7
தன்யாவிற்கு மனதில் இருந்த வருத்தங்கள், வேதனைகள், அழுகை எல்லாம் பார்த்திபனோடு அடிக்கடி பேசத் தொடங்கியதுமே கொஞ்சம் மட்டுப்பட்டு, பின் மறைந்துப் போகத் தொடங்க அதன பெரிதாக அவள் வெளிக்காட்டவில்லை என்றாலும், அவளின் மாற்றம் பார்த்திபனுக்கு புரியாது போகுமா என்ன??
“என்ன தனியா.. இப்போ கொஞ்சம் காரம் கம்மியா இருக்கே..” என்று...
பார்த்துவிடு கொஞ்சம் – 12
முரளி எப்படி தன் செயல்களால் தன்யா மற்றும் பார்த்திபனின் உறக்கத்தை கெடுத்தானோ, இப்போது லேகாவின் ஒரே ஒரு அழைப்பு அவனின் உறக்கம் மட்டுமில்லை நாள் முழுதான அவனின் இயக்கம் முழுதையும் தன் வசப்படுத்திக்கொண்டது.
லேகா சொன்னதற்கு மறுப்பாகவும் அவனால் எதுவும் அப்போது சொல்ல முடியவில்லை. யோசிக்க நிறைய இருந்தது. சட்டென்று மறுக்கும்...
பார்த்துவிடு கொஞ்சம் – 5
பார்த்திபன் மட்டும் கண் முன்னே இருந்திருந்தால், தன்யா அவனை ஒருவழி செய்திருப்பாள். அவனின் நல்ல நேரம் அவன் இங்கில்லை.. இங்கில்லாது போனதுனாலே தானே இதெல்லாம் நடந்தேறியது.. அனைத்தும் சுற்றி சுற்றி திரும்ப திரும்ப அவளை போட்டு படுத்த, அடுத்து வந்த இரண்டு நாட்களும் தன்யா மிக மிக சோர்ந்து...
பார்த்துவிடு கொஞ்சம் – 2
பார்த்திபன்.. ஜப்பான் வந்தும் கூட ஒரு வாரம் ஆகிப்போனது.. இதுவரைக்கும் அவனாய் வீட்டினர் யாருக்கும் பேசவில்லை. பேசும் எண்ணமே வரவில்லை. ஆனால் இவன் ஜப்பான் வந்து இறங்கியதுமே ஆளாளுக்கு அழைத்து பேசினார்..
அனைத்தும் லேகாவின் மூலமாய்..
ஒருவித கோபத்தில் தான் இங்கே வந்தான் பார்த்திபன்.. பிடித்து வரவில்லை. இங்கே வந்தும் கூட...
பார்த்துவிடு கொஞ்சம் – சரயு..
அத்தியாயம் – 1
“போதும்... எல்லாமே போதும்.. இங்கிருந்து கிளம்பிடு தன்யா...” என்று தன்யாவின் மனது பெரும் சப்தமிட்டுக்கொண்டு இருக்க,
அவளோ தனக்குள்ளே இப்படியொரு இத்தனை போராட்டம் நடக்கிறது என்பதனை எதுவுமே வெளிக்காட்டாது, அவளின் விம்மல் கேவல் எல்லாம் தொண்டை குழியிலேயே புதைத்து, கண்களில் இதோ இதோ இப்போதே நான் வருகிறேனே...
பார்த்துவிடு கொஞ்சம் – 15
தன்யாவிற்கு இன்னமும் நம்ப முடியவில்லை. காண்பதெல்லாம் கனவா என்றும் விளங்கவில்லை, கேட்டதெல்லாம் நிஜமா என்றும் புரியவில்லை. ஆகமொத்தம் தலைகால் புரியாத நிலை. மனதில் சந்தோஷ ஊற்று தான்.
பார்த்திபன் காஞ்சனாவிடம் தங்களின் திருமண விசயம் பற்றி பேசுவான் என்று அவள் நினைக்கவும் கூட இல்லை. அவளிடம் பேசப்போகிறேன் என்று சொல்லவுமில்லை....
பார்த்துவிடு கொஞ்சம் – 21
லேகா இப்படி வக்கீல் வைத்து அவளின் காரியங்களை சாதிப்பாள் என்று முரளி எதிர்பார்க்கவில்லை. எத்தனை அழகாய் அனைத்தையும் நடத்தி, முரளியால் எதுவுமே செய்ய முடியாதபடி அவனை வெறும் ஆளாய் உட்கார வைத்து, அதிலும் பொறுப்புகள் அனைத்தையும் சுந்தரம் கையில் கொடுத்தப் பாருங்கள் என்றுவேறு சொல்லி, முரளியை ஆட்டம் காண வைத்துவிட்டாள்.
முரளி...
பார்த்துவிடு கொஞ்சம் – 4
“ம்மா அப்படி எல்லாம் இல்லம்மா...” என்று சலிப்பாய் பதில் சொல்லிக்கொண்டு இருந்தாள் தன்யா.
“பின்ன அத்தை சொல்றா.. நீ சரியா சாப்பிடுறது இல்லன்னு.. பார்த்தாலே தெரியுதே இப்படி லீனா இருக்க...” என்று தன்யாவின் அம்மா சுகந்தி கேட்க,
“ம்மா அதெல்லாம் இல்லம்மா...” என்றாள் பல்லைக் கடித்து.
“நீ இல்லன்னு சொன்னா.. எங்களுக்கு கண்ணு தெரியாதா...”...
பார்த்துவிடு கொஞ்சம் – 11
‘எனக்கு கொஞ்சம் ஸ்பேஸ் வேணும் பார்த்தி.....’
தன்யாவின் இவ்வரிகள் பார்த்திபனை கொல்லாமல் கொன்றது எனலாம். ‘என்னாச்சு இவளுக்கு...’ என்ற எண்ணமே அவனை ஓரிரு நாளாய் படுத்த, ‘சரி எதுனா டென்சன்ல இருப்பாளா இருக்கும்...’ என நினைப்பு அடுத்து ஒரு நான்கு நாட்கள் அவனை அமைதியாய் இருக்க வைக்க, அதற்குமேல் அவனால் அவளோடு ...
பார்த்துவிடு கொஞ்சம் – 18
முரளிக்கு தன் கண் முன்னே நடப்பது எல்லாம் நம்புவதா வேண்டாமா என்றிருந்தது. எங்கே ஏதேனும் குளறுபடி நடக்குமோ என்று ஒவ்வொரு நொடியும் அவன் கண் கொத்திப் பாம்பாய் கவனித்துக்கொண்டு இருக்க, பார்த்திபனும் சரி, லேகாவும் சரி வந்து இரண்டு நாட்கள் ஆகியும் எதுவுமே வாய் திறக்கவில்லை.
பொதுவான விஷயங்கள் பேசினர் அவ்வளவே..
எங்கே...
பார்த்துவிடு கொஞ்சம் – 16
“என்ன தன்யா.. என்னம்மா விசயம்??” என்று அப்பா கேட்க,
“பேசணும்னு கால் பண்ணிட்டு என்ன தன்யா அமைதியா இருக்க??” என்று அம்மாவும் கேட்க,
“ம்ம் ஆமா ம்மா...” என்றவள், “ப்பா நெக்ஸ்ட் மன்த் இந்தியா வர்றீங்க தானே...” என்றாள் அவர்களின் முகத்தினையே பார்த்து.
“ஆமாடா தன்யா.. பட் டேட் இன்னும் பிக்ஸ் பண்ணலை.. ஏன்...
பார்த்துவிடு கொஞ்சம் – 10
ஆகிற்று இன்றோடு ஒரு வாரம்..
பார்த்திபனும் தன்யாவும் பேசி..
லேகா வீடு வந்தும் கூட..
அவளை கவனித்துகொள்ளவென அக்கியோ ஒரு நர்ஸ் உடன் அனுப்ப, பார்த்திபனுக்கு அங்கே வேறு வேலையில்லை. மருத்துவமனையில் லேகா கண் விழிக்கவும், பார்த்திபன் ஒன்றுமே கேட்கவில்லை. மௌனமாய் இருந்தான். அக்கியோவும் அவளும் ஜப்பானிய மொழியில் பேச, அவனுக்கு எதுவும் விளங்கவில்லை.
எழுந்து...