En Kalla Kaamugane
5
சுட்டு வைத்திருந்த ஆட்டின் மண்டை ஓட்டை லாவகமாய் வெட்டிக்கொண்டிருந்தான் அண்ணாமலை. கைகள் வேலை செய்தாலும், சிந்தனை மட்டும் வேறு பக்கம் தான் இருந்தது. அன்று வார நாள் தான் என்பதால் கூட்டம் ஒன்றும் பெரிதாக இல்லை. அதனால் அவனும் நந்தாவும் மட்டுமே இருக்க, தலைக்கறி கேட்டவருக்காக தான் வெட்டிக்கொண்டிருந்தான்.
வெட்டி முடித்ததும் அவன் கைகள் இயந்திரத்தனமாய்...
“ரசம் வச்சுருக்கேன், மறுசோறுக்கு போட்டுக்கோ” அவள் சொல்ல, மெல்வதையும் பிசைவதையும் நிறுத்திவிட்டு நிமிர்ந்தவன், “ஏன் தொன தொனங்குற?” என்றான் எரிச்சலாய். இதற்கு முன்னும் இவன் பேச்சு இப்படி தான் என்றாலும், இப்போது புதிதாய் அவளுக்கு முகம் வாடியது.
“சரி நான் பேசல, நீ தின்னு” முணுமுணுத்தாள்.
“நீ கிளம்பு, நான் பாத்துக்குறேன்” என்றவன், நீ போனால் தான்...
11
வெளியே மழை அடித்துக்கொட்ட, உள்ளே இருவரும் ஆளுக்கு ஒருபுறமாய் படுத்திருக்க, நடுவே கொஞ்சமாய் மல்லிகைப்பூ தூவி, விரித்து வைத்திருந்த கல்யாண பாயை பார்த்துக்கொண்டே, தனக்கு முதுகு காட்டி படுத்திருந்தவனை பெருமூச்சோடு ஏறிட்டாள் நிம்மதி.
அவன் தூங்கவில்லை என்று தெரிந்தாலும், அசைவே இல்லாமல் படுத்துக்கிடந்தவனை, ‘எப்படி டா வழிக்கு கொண்டு வரது?’ என்ற எண்ணத்தில் தான் தூங்காமல்...
“அவன் எவ்ளோ பதட்டமா வந்து சொல்றான். நீ என்னன்னா நாயை கண்ட மாறி விரட்டுற?” அவள் மெல்லிய குரலில் அழுத்தமாய் பேச, அண்ணாவின் கண்கள் அவளை முறைத்துப்பார்த்தன.
“என்னை எதுக்கு முறைக்குற?” என்றவள், “உடன்பொறப்பு, கூட்டாளிங்கன்னு அவனுங்களோட தானே இத்தனை வருஷமா கடந்த? இப்போ அதுல ஒருத்தனை காணோம்ன்னு சொன்னா பதறலியா உனக்கு?” என்று கேட்க,...
18
இப்போதெல்லாம் லோடு வண்டிக்கு தாஸ் அலைவதில்லை. மொத்தமாய் வெளி வேலையை அண்ணாமலையே பார்த்துக்கொள்ள ஆரம்பித்திருந்தான். அவன் பொறுப்பெடுத்தப்பின் நிம்மதிக்கு நிம்மதி கூடினாலும், மனதின் ஓரம் அரித்துக்கொண்டு தான் இருந்தது.
‘எங்கே இவன் இப்படியே தேங்கிவிடுவானோ?’ என்று!
கேட்டால் பதில் சொல்வது ஒரு ரகம். பதில் சொல்லாமல் விடுவது இன்னொரு ரகம். இவன் தான் புது ரகமாயிற்றே! தேய்ந்த...
முன்குறிப்பு:
* ‘காமுகன்’ என்ற சொல்லுக்கு ‘மன்மதன்’, ‘காதலன்’ என்ற அர்த்தமும் உண்டு.
*வைரமுத்து அவர்கள் எழுதிய, ‘வான் வருவான்’ பாடலில் இருந்து பெறப்பெற்ற வரி தான், ‘என் கள்ள காமுகனே’
1
‘’இப்பழி தப்புனை ஏன் நினைப்பித்தாய்
இனியார் விடுவார் அருணாச்சலா!
அருணாச்சல சிவ, அருணாச்சல சிவ,
அருணாச்சல சிவ, அருணாச்சலா!” பத்தடிக்கு ஒன்றாக கட்டியிருந்த ஸ்பீக்கரில் இருந்து வெளிப்பட்ட அருணாச்சல அக்ஷரமாலையின்...
4
தள்ளுவண்டி கடை வியாபாரத்தை முடித்து கடைக்கட்டிக்கொண்டிருந்தான் பரத். உடன் அவனுக்கு உதவியபடி நின்றிருந்த அண்ணாமலையிடம், “இன்னைக்கு இத்தினி மீந்துடுச்சேடா! என்ன பண்ணலாம்? வழக்கம் போல பண்ணிடலாமா?” என்று கேட்டான் பரத்.
திரும்பி அவன் கையில் இருந்த பாத்திரத்தை பார்த்தான் அண்ணாமலை. கணிசமான அளவு சிக்கன் பக்கோடா மீந்திருந்தது. அன்று ஏனோ இரவு வியாபாரம் சற்று டல்...
20
வண்டியில் ஆடுகளை ஏற்றிக்கொண்டு கிளம்பிய அண்ணாமலைக்கு மனமெல்லாம் ஏதோ போல இருந்தது. ஒருவித பாரமாய், ஏதோ தன்னை அழுத்துவதாய்... நிம்மதியின் அருகே அமைதியாய் சிறுது நேரம் இருக்க வேண்டும் போல கூட தோன்ற, தன்னை எண்ணி தானே சிரித்துக்கொண்டான்.
அவளை கண்டாலே காத தூரம் ஓடும் அவனுக்கு, இப்போது நிம்மதி தான் அவன் ‘நிம்மதி’ என்றால்,...
22
ஆஸ்ரமத்தின் வெளியே இருந்த தோட்டத்தில் எல்லாரும் ஒன்றாக அமர்ந்திருந்தனர். பன்னிரண்டு குழந்தைகள் உட்பட, அறுபதை கடந்த நான்கு பெரியவர்கள் வாந்தி மயக்கம் என்று மருத்துவனைக்கு சென்று வந்திருந்தனர். அவர்கள் ஓரளவு தெளிய கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் ஆனது. இன்னமும் அவர்கள் பழைய நிலைக்கு மீண்டபாடில்லை. மருந்து மாத்திரை கொடுத்து ஓய்வெடுக்க சொல்லி அனுப்பியிருந்தனர்.
ஆஸ்ரம நிர்வாகியின்...
7
குளத்திற்கான ஏலம் இன்னும் பத்து நாட்களில் என முடிவு செய்யப்பட்டிருந்தது.
அன்று காலை தன் கடையில் நின்று வியாபாரம் பார்த்துக்கொண்டிருந்த அண்ணா’வின் அலைபேசி ஒலிக்க, ஐயப்பன் தான் எடுத்தான். பேசிவிட்டு வைத்தவன், கறியை வெட்டிக்கொண்டிருந்தவனிடம், “தலைவர் உன்னை வீடு வரைக்கும் வர சொல்றாரு அண்ணா!” என்றான்.
‘ஏன்?’ என்ற பார்வையோடு அண்ணா திரும்ப, “ஏதோ பேசணுமாம், நீ...
“டேய் சேகரு, பின்னால கடலை போருக்கிட்ட இவளை கட்டிப்போடு! நான் கோழிய சுத்தம் பண்றேன்” என்ற அண்ணா மாட்டை அவனிடம் விட்டு, கிணற்றடியில் அமர்ந்து கோழியின் ரோமங்களை பொசுக்கிக்கொண்டிருந்த நந்தாவிடம் சென்றான்.
இரவு கடைக்காக இப்போதே கோழியை சுத்தம் செய்து துண்டாக்கி வேண்டிய மசாலாக்களை போட்டு ஊற வைத்துவிட்டால் தான், ஆறு மணிக்கு மேல் வரும்...
15
பிஸ்கட்டுகளுக்கு புது வடிவம் ஒன்றை யோசித்துக்கொண்டிருந்தாள் நிம்மதி. சுற்றி எல்லோரும் வேலை செய்துக்கொண்டிருக்க, “அம்மாடி, இந்தா காசு. இந்த மாச ஸ்கூல் கணக்கு முடிஞ்சுது” என்று நீட்டினார் தாஸ். ஒருமுறை பார்த்தவள், “சரியா கணக்கு பார்த்து வாங்கிட்டீங்களா ப்பா?” என்றாள்.
“ஆச்சும்மா! நீ ஒருக்க பாக்குறப்போ சரிபாத்துடு” என்று அவர் சொல்ல, “சரிப்பா... வீட்ல வச்சுடுங்க”...
“உங்களோட சேர்த்து வைக்க நான் ராப்பகலா அல்லாடுறேன், நீ என்னையே குத்தம் சொல்ற?” மதி விடாப்பிடியாய் சண்டைக்கு இறங்க, “அட விடுந்த... சும்மா சொல்றதெல்லாம் ரோஷமாக்கிகிட்டு” என்று மத்யஸ்தம் செய்தான் நந்தா.
“பின்ன சொல்றான் பாரு என்னைய. அந்த மனுஷனை பாரு, எவ்ளோ ஆசை இருந்தா வந்ததுல இருந்த ஒவ்வொரு ஆடா தொட்டு பார்த்து மனசுக்குள்ள...
மருத்துவமனையில் சேர்ந்து மூன்று நாட்கள் முடிந்திருந்த நிலையில், அன்று காலை போல நிம்மதியை கைத்தாங்கலாய் நடத்தி பழக்கிக்கொண்டிருந்தான் அண்ணா. நந்தா அந்நேரம் உணவு கொண்டு வர, இருவரும் சாப்பிட அமர்ந்தனர்.
“வலிக்குதா? என்ன பண்ணுது?” மெல்ல அமர்ந்தவள் லேசாக புருவம் சுருக்கியதற்க்கே பதட்டமாய் கேட்டான் அண்ணாமலை. அவனை பதற வைக்க கூடாது என்றே வலித்தால் கூட...
25
“யோவ்... யோவ்வ்வ்வ்” தனக்கு முதுகு காட்டி உறங்கிக்கொண்டிருந்தவனை சுரண்டிக்கொண்டிருந்தாள் நிம்மதி. ‘தூங்கு’ என்றுவிட்டு அவன் படுத்ததும் உறங்கிவிட்டான். அவளுக்கு தான் உறக்கம் ஒரு பொட்டு கூட இல்லை.
‘அவளை அவனுக்கு பிடிக்கும்’ என்பது அவளுக்கு ஸ்திரமாய் தெரிந்த ஒன்று தான். ஆனால் அதை அவன் வாய்மொழியாய் கேட்டுவிட வேண்டும் என்பது தான் அவளது நீண்ட நாள்...
9
அன்று காலையில் இருந்து மட்டுமே ஒரு ஐம்பது முறையாவது அந்த ஐவரின் போனில் இருந்தும் ஆழியூர் அய்யாக்கண்ணுவுக்கு அழைப்பு போயிருக்கும். ஒருமுறை கூட தவறாது அழைப்பை எடுப்பவன், “இதோ வந்துட்டேன்... கிட்ட வந்துட்டேன்! காசெல்லாம் முன்னூறு ரூவா நோட்டா இருக்கு, அதை ஆயரூவா நோட்டா மாத்திட்டு நிக்குறேன்... நீ பத்து எண்ணிட்டு திரும்பிப்பாரு, உன்...
சிகிச்சை அறையின் வெளியே பித்துப்பிடித்தது போல அமர்ந்திருந்தான் அண்ணாமலை. தேன்மொழியும் தாஸும் அழுதே கரைந்தனர். பரதனும் நந்தாவும் தான் சற்று தெளிவாக மருத்துவர்கள் கேட்பதை எல்லாம் வாங்கி வந்து கொடுத்துக்கொண்டிருக்க, ஐயப்பனும் சேகரும் அவசரமாய் வந்தனர்.
“அவனுங்கள போலீஸ்ல ஒப்படைச்சாச்சு... கொஞ்ச நேரத்துல போலீஸ் வரும் இங்க விசாரிக்க!” என்றனர். இது எதுவுமே அண்ணாவை சென்று...
21
அந்த இரவு நேரத்தில் வாசலில் தேன்மொழியை கண்ட அண்ணாமலைக்கு திகைப்பானது. அதிலும் அவள் மூச்சுவாங்க படபடப்புடன் நின்ற தோற்றம் ‘என்னவோ ஏதோ’ என்று அவனை நினைக்க வைக்க, “யாரு வெளில?” என்று நிம்மதி கேட்டதும் தெளிந்தவன், “அது, அந்த பொண்ணு” என்று திணறும்போதே எழுந்து வந்துவிட்டாள் மதி.
அவளும் தேன்மொழியை கண்டு திகைத்து, “என்ன இந்த...
12
மறுநாள் பொழுது விடிந்து சில மணி நேரங்கள் கடந்தே கண் விழித்தாள் நிம்மதி. உறங்கியதே அதிகாலையில் தான் என்பதால் கண்ணெல்லாம் உறக்கம் பத்தாமல் எரிந்தது. அதோடு, உடல் வேறு அடித்து போட்டதை போல எல்லா பக்கமும் வலி எடுக்க, சுனக்கமாய் எழுந்து அமர்ந்தவள் முகத்தில் மட்டும் கூடுதல் பொலிவு.
இன்னமும் வெட்கங்கள் மிச்சம் இருக்க, மூலையில்...
19
சொற்ப ஆயிரங்கள் அடங்கிய கவரை அந்த ஆதரவற்றோர் இல்ல நிர்வாகியிடம் நீட்டினாள் நிம்மதி. அவள் வாடிக்கையாய் கொடுத்துக்கொண்டிருக்கும் பிஸ்கட்களை அந்த மாதத்துக்கும் கொண்டு வந்திருந்தவள் எப்போதும் இல்லாததாய் பணத்தை நீட்ட, அதை வாங்க தயங்கினார் அவர்.
“செய்யுற உதவியே போதும்மா, பணம் இப்போதைக்கு தேவைப்படல” என்றவர் சொல்ல, “ஏன் அண்ணே, நான் குடுத்தா வாங்க மாட்டீங்களா?...