துணையான இளமானே..
15
ஊடலும் காதலில் ஓர் பாகம்..
உன் விழி
என் விழியுடன்
மௌன மொழி
பேசிடும் போது..
என்னை விட்டு
இடம் பெயர்ந்து கொள்கிறேன்
உன்னுள்…
பானுவிடம் வேண்டிய விபரம் அறிந்து வந்த ஹனிகா மன நிம்மதிக்காக சாய்பாபா காலனியில் இருக்கும் பிரசித்தி பெற்ற சாய்பாபா கோவிலுக்கு சென்று அமைதி முகத்துடன் அருள்பாலிக்கும் பாபாவை மனமுருகி வேண்டிக்கொண்டவள் கோவிலின் வளாகத்தில் அமர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி...
துணையான இளமானே..
1
துணையின் துவக்கம்...
பிரச்சனைகள்
நம்மை துரத்தும்போது..
தனிமையும்
ஒரு வரமே…
நமக்கு பிடித்தவர்கள்
அதை கொடுத்திடும்போது..
தனிமையும்
ஒரு சாபமே..
அன்புள்ள விதுரா…
“எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் என்னை காதலித்தாய்.. நான் உன்னிடம் காட்டிய பாராமுகத்திற்கும் இருமடங்கு காதலை திருப்பித்தந்தாய். நீ காட்டிய அன்புக்கு நான் கொஞ்சம் கூட தகுதி இல்லாதவள் விது. திருமணமான நாள்...
11
உணர்வுகளின் உறவாடல்..
என் அத்தனை துன்பங்களையும்
ஒற்றைப் புன்னகையில்
விழுங்கிவிடுகிறாய்..
உன் இதழில் இருப்பது
புன்னகையா!!
புதைகுழியா!
ராதா சொல்லிச் சென்றது போல் விதுரன் குடும்பத்திற்கு வேண்டிய உணவை தயாரித்து வந்தவருடன் அவரின் பிள்ளைகள் ஹரிதரனும், தருணிகாவும் வந்திருந்தனர்.
கொழுகொழு கன்னத்துடன் மழலை குரல் மாறாத நான்கு வயது தருணிகா ஹனிகாவை கண்டதும் ஒட்டிக்கொண்டிட ஹனிகாவிற்கும் அவளை பிடித்துப்போனது.
உணவைப் பரிமாறியபடி, “என்ன விதுரா, உன் கல்யாணத்துக்கு...
20. இனிதாய் ஒரு இணைவு..
சில நியாயங்கள்
நமக்கு அநியாயமாய் தோன்றலாம்..
சில அநியாயங்கள்
நியாயம் போல்
பிம்பம் காட்டி நம்மை
ஏய்க்கவும் செய்யலாம்..
எந்த நிலையிலும்
நடுநிலை தவறாமல் சிந்தித்தால்..
உண்மையின் பக்கம் சாயலாம்..
விதுரன் செயலின் மீது கொண்ட கோபத்தை வெளிப்படையாகவே காட்டியவள், வீட்டிற்கு வந்தும் வாசலில் நின்றிருந்த தேன்மொழியையும் கண்டும் காணாது அவசரமாய் தனது அறைக்குள் சென்று முடங்கினாள் ஹனிகா.
மருமகளின் அலட்சியத்தை கண்டு தேன்மொழி...
4
மணம் புரிய மன மாற்றம் ..
சூழ்நிலைகள்
என்னை சுற்றி வளைத்து
சூழ்ச்சி செய்கிறது..
மீட்சி கண்டு
மீள்வேனோ…
அதன் சூழ்ச்சியில்
வீழ்வேனோ
விடை காலத்தின் கையில்..
தன் சம்மதம் இல்லாமலேயே தன் விஷயத்தில் முடிவெடுக்கும் உறவுகளை எண்ணி கொதித்துப்போனான் விதுரன். அதே கோபத்துடன் வீடு திரும்பி தன் உடமைகளை எடுத்துவைக்கத் தொடங்கினான்.
பையனை சம்மதிக்கவைக்க வேண்டியது உன் பொறுப்பு என்ற அண்ணனின் வார்த்தை மீண்டும் மீண்டும் மனதில்...
9
காதல் மலரும் தருணம்..
எத்தனை காயங்கள்
என்னுள் இருந்தாலும்..
அத்தனையும்
மறந்து போகிறேன்..
உன் கொஞ்சல் மொழியில்
கரைந்து போகிறேன்..
விதுரன் உருவமில்லா எதையோ பின்தொடர்ந்து செல்ல, ‘விது மாமா என்னை விட்டு போகாதீங்க. நீங்க இல்லாம என்னால வாழ முடியாது, என்கிட்ட வாங்க மாமா’ என்று கத்திகொண்டே ஹனிகா கதறலுடன் அழைக்க, ‘ஹனி’ என்று ஏக்கத்துடன் அழைத்து தயங்கி நின்ற விதுரன், மறுநொடி ...
18
ஊர் பயணம்..
உதவி என்பது
கேட்டுப் பெறும்
தட்சனை அல்ல
உண்மைக்கு
தானாய் கிடைக்கும்
வெகுமானம்
நியாயம்
உன் பக்கம் இருக்குமெனில்
உதவியும்
கேட்காமல் கிடைக்கும்
பாலாவின் தங்கை நிச்சயவிழாவிற்கு செல்வதற்காக, வேலை விஷயமாக வெளியூர் பயணம் என்று பொய்யுரைத்து தன் சொந்த ஊருக்கு கிளம்பத் தயாரானான்.
கோபமாய் இடையில் கைவைத்து முறைத்து நின்ற ஹனிகா,“எப்படி, எப்படி நான் இல்லாத இடத்துல இருந்தா உங்களுக்கு மூச்சு முட்டுமா?, ஒரு நிமிஷம் கூட...
10
மோதலில் மலரும் காதல்..
உன்னை விட்டு
விலக மனமில்லாமல்
விட்டுக்கொடுக்கின்றேன்
என் விருப்பங்களை..
கல்லூரி படிப்பு முடிந்து கட்டுமானப்பணி பயிற்சி மேற்கொள்ளும் எண்ணத்தில் கோயம்புத்தூர் தனியார் அலுவலகத்தில் சிலகாலம் பணிபுரிந்து அதன் பயனாக மதுரையில் சொந்தமாய் கன்ஸ்ட்ரக்ஷன் கம்பெனி துவங்கியவன் சிறுகச்சிறுக வளர்ச்சியடைந்து தன் தொழிலை விரிவுபடுத்த கோயம்புத்தூரில் அலுவலகம் துவங்கினான். அந்த ஊரின் தட்பவெப்பநிலையும் மனிதர்கள் பழகும் விதமும் தொழில்...
3
உணர்வுகளின் போராட்டம்…
உயிர் பிரிந்தும்
உணர்வில் கலந்த
உறவு நீ..
உயிர் வாழ்ந்தும்
உன் நினைவில் மடியும்
உணர்வில் நான்..
“ அம்மா நீங்க என்ன வேணும்னாலும் சொல்லிக்கோங்க, என்னால இன்னைக்கு வர முடியாது, என்னை விட்டுடுங்க எனக்கு முக்கியமான வேலை இருக்கு, இன்னைக்கு ஒரு பார்ட்டி லேண்ட் பார்க்க வராங்க, அவங்க ஓகேன்னு சொல்லிட்டா.. நாளைக்கு ஊருக்கு கிளம்பிடலாம். மத்த வேலையெல்லாம் புரோக்கர்...
6
இணைசேரும் நாள் அறிவிப்பு…
உன் கரம் கோர்க்கும்
நாளுக்கு தான்..
தவம் கிடக்கின்றேன்..
உன் வாழ்வில்
இணைந்திடவே
வரம் கேட்கின்றேன்..
என் தவமும் தவத்தின்
வரமும் நீயே..
குலதெய்வ கோவில் திருவிழா நாளில் திருமணம் நிச்சயம் செய்வதற்கு சம்மதம் சொன்ன விதுரன் மறுநாளே தன் தொழிலை கவனிக்க ஊருக்கு சென்று விட தேன்மொழி மட்டும் நிச்சய ஏற்பாட்டை கவனிக்க சொந்த ஊரிலேயே தங்கிக்கொண்டார்.
திருமணத்திற்கு சம்மதம் சொன்னதும் தன்னை...
19
நிச்சயதார்த்த விழா..
குழப்பங்கள் என்னை
சூழ்ந்து நிற்கும்
போதெல்லாம்
வெளிவர முடியாமல்
திணறித்தவிக்கிறேன்..
உன் காதல் கொண்டு
என்னை மீட்டெடுத்து..
தவிப்புகளை தீர்த்திடு..
விதுரனின் நல்ல நேரமோ இல்லை ஹனிகாவின் கெட்ட நேரமோ தெரியவில்லை ஹனிகா வந்து சென்ற சில மணிநேரம் கடந்து, இட விற்பனை விஷயமாக செல்வதாக சொல்லிச்சென்ற விதுரன் தன் சொந்த வேலைகளை முடித்துக்கொண்டு பாலாவின் தங்கை பாக்யாவின் திருமணத்திற்கு வேண்டிய சில ஏற்பாடுகளையும்...
16
ஊடலின் முற்றுப்புள்ளி கூடல் ..
எதைப்பற்றி
யோசித்தாலும்
உன்னிடம் வந்து
நிலைக்கிறது
என் நினைவுகள்..
உனைப்பற்றி
யோசித்தால்
என்னவாகும்
என் நிலை…
பாராமுகம் காட்டி சென்ற தன்னவன் கோபத்தை எண்ணி பெண்ணவள் மனம் ரணமாய் வலித்தது, தன் வேதனையை வெளியில் காட்டிக்கொள்ள மனமில்லாமல் பசியில்லை என்று பொய்யுரைத்து, இரவு உணவை தவிர்த்து அறைக்குள் சென்று முடங்கினாள் ஹனிகா.
ஹனிகாவிடம் முகம் திருப்பி சென்றவன் இரவு வெகுநேரம் கடந்தே வீடு வந்து ...
12
உருகும் மனம்…
சூறாவளியில் சிக்கிய
சிறு வாழை குருத்தாய்
சிதைந்து கிடந்தேன்,
நானடி..
பட்டும் படாமல்
தொட்டுச்செல்லும்
பட்டாம் பூச்சியாய்
என் வாழ்வில் நுழைந்து
பசுமை செய்தாய்
நீயடி..
மாலை மறைந்து இருள் படர்ந்த வேலை,தன் வெளியூர் பயணத்தை முடித்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தார் ராதாவின் கணவர் மாதவன்.
தனது அன்றாடப் பணிகளை கவனிக்க துவங்கிய கணவரிடம் காலையிலிருந்து நடந்த நிகழ்வுகளை வரிசையாய் அடுக்க துவங்கினார் ராதா.
“ என்ன பொருத்தம் தெரியுமா...
2
இளமானின் அறிமுகம்
பாம்பென்று விலகவும்
முடியவில்லை..
பழுதென்று
பழகவும் முடியவில்லை
விளங்காத
பல புதிர்கள்
நிறைந்தது தான்
உறவுகள்..
“ அத்தை”, என்று ஆசையாய் கட்டிக்கொண்ட தன் அண்ணன் மகளை வியப்புடன் பார்த்த தேன்மொழி, “அடி வாலு.... இவ்ளோ வளர்ந்துட்ட” என்று அடையாளம் கண்டு கொண்ட மகிழ்வில் சந்தோசமாய் பேசிட.. “நீங்க என்ன பார்த்தே ஐந்து வருஷத்துக்கு மேல ஆச்சு… வளராம என்ன செய்வேனோம்?, கடைசியா நீங்க என்ன...
5
சஞ்சலம் கலைத்தல்..
கண்கள் உன்னை
கண்டிட….
காலங்கள் நான்
மறந்திட..
இது காதல்
தானோ..
என் காயங்கள்
கலைக்கும்
ஆறுதல் நீயோ!..
மகளின் பிடிவாதத்திற்கு பணிந்து திருமணத்திற்கு சம்மதம் சொல்லி வந்த வசுந்தரா கணபதிநாதனை தனிமையில் சந்தித்து, “இந்த பொண்ணுக்கு எப்படி இப்படி ஒரு எண்ணம் வந்ததுன்னு புரியல!” என்றார்.
“எனக்கு முன்னாடியே இப்படி ஒரு யோசனை இருந்தது, ஆனா பொண்ணு மனசுல என்ன இருக்குன்னு தெரியாம முடிவு எடுக்ககூடாதுன்னு...