Sunday, July 6, 2025

    என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி

    அத்தியாயம் -9(2) பதில் எதுவும் சொல்லாமல் இருந்த அம்மாவிடம், “அப்பாவை நினைச்சு சைலன்ட் ஆகிட்டியா ம்மா?” எனக் கேட்டான். “அவரை எப்படி நீ சமாளிப்பேன்னு யோசனையா இருக்கு” என விஜயா சொல்ல, அம்மாவை தோளோடு அணைத்துக் கொண்டவன், “நீ சம்மதிச்சதுக்கு தேங்க்ஸ் மா” என்றான். ஸ்ருதி மூலமாக செல்வராஜ் வீட்டிலும் அனைவருக்கும் தெரிந்து போனது....
    அத்தியாயம் -10(2)  “இன்னொரு ஹெல்ப் வேணும் அங்கிள், முடியும்னா செஞ்சு தாங்க” எனக் கேட்டான். நிஜத்தில் அவருக்கு ‘என் பெண்ணை வேண்டாம் என்கிறாய், உனக்கு ஏன் செய்ய வேண்டும்?’ என கோவம்தான் வர வேண்டும். அவனது அணுகுமுறை அவருக்கு பிடித்திருக்க, பேச்சிலும் அவரை கவர செய்து விட்டான். ஆகவே, “சொல்லுப்பா, என்ன செய்யணும் நான்? என் சக்திக்கு...
    அத்தியாயம் -6(2) “சரியான அடவாடி குடும்பம்! வெளில வந்து கார்ல இருக்க உன் பொண்டாட்டி சாமானை அள்ளிக்க, நான் என் அத்தை வீட்டுக்கு போறேன்” என முறுக்கிக் கொண்டே எழுந்தான் அசோக். “சாப்பிட்டுட்டு போ” என்றான் சமரன். “சைவ சாப்பாடுதானே? வியாழக் கிழமை லதா அத்தை விரதம்னு தெரியும்டா, இந்த இலை தழை எல்லாம்...
    அத்தியாயம் -8(2) வேலை முடித்து வீட்டுக்கு வந்த பாக்யா, மகளுக்கு அழைத்து எப்போது வருகிறாய் என கேட்டார். வீட்டுக்கு போனால் அசோக்கிடம் வெளிப்படையாக எதுவும் பேச முடியாதே, ஆகவே ஸ்ருதி அக்காவுக்கு உதவிக் கொண்டிருக்கிறேன், வந்து விடுவேன் என சொல்லி விட்டாள். அவனிடம் பேசப் போவது ஸ்ருதியின் காதில் விழுந்து விடாமல் இருக்க, பின்...
    என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -6 அத்தியாயம் -6(1) மூன்று மாதக் குழந்தையோடு கணவனின் வீடு வந்து விட்டாள் ஸ்ருதி. குழந்தைக்கு ‘ஜிவின்’ என பெயரிட்டிருந்தாள். மனைவியும் மகனும் வருவதால் அன்று விடுப்பு எடுத்திருந்தான் சமரன். இன்னும் இரண்டு மாதங்கள் இரு என சொன்னாலும் பெண் கேட்க மாட்டாள் என்பதால் குழந்தையை எவ்வாறு பேணுவது...
    என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -8 அத்தியாயம் -8(1) திருமணம் முடிந்த அன்றே மதுரைக்கு வந்து விட்டான் அசோக். அதற்கு மேல் விதுரனை திண்டுக்கல்லில் நிறுத்தி வைக்க முடியவில்லை, புகழேந்தியும் ‘எப்போது வருகிறாய்?’ என கேட்டு விட்டார். அனன்யாவுடன் தனிமையில் இரண்டு வார்த்தைகளாவது பேச வேண்டும் என ஆவலாக இருந்தும் அப்படி செய்ய முடியாமல்...
    என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -1 அத்தியாயம் -1(1) திண்டுக்கல் அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் ஏதோ போராட்டம் செய்து கொண்டிருந்தனர். இன்று விடுமுறை தினம் ஆகிற்றே என்ற யோசனையோடு பைக்கை ஓரமாக நிறுத்தி விட்டு கூட்டம் கலைவதற்காக காத்துக் கொண்டிருந்தான் அசோக். அவர்கள் கல்லூரி விடுதியில் நடந்த ஏதோ பிரச்சனைக்காக நடக்கும் போராட்டம்...
    என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -11 அத்தியாயம் -11(1) இரண்டு மாதங்களாக புகழேந்தி அதி தீவிரமாக தன் மகனுக்கு பெண் பார்த்தும் யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. ஸ்ருதி இல்லை என்றான பிறகு அப்போதிலிருந்தே பெண் பார்க்கிறார்தான். மகனுக்கு பெண் பொருத்தமில்லை, ஜாதகம் பொருந்தவில்லை, ஆண் பிள்ளை இல்லாத வீடாக இருக்கிறது என்...
    என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -5 அத்தியாயம் -5(1) அனன்யாவை அருகில் உள்ள கிளினிக் அழைத்து சென்று காண்பித்து சிகிச்சை செய்து, பயப்பட ஒன்றுமில்லை என உறுதி படுத்திக் கொண்ட பிறகுதான் நிம்மதியடைந்தான் அசோக். தங்கையை இன்னும் காணவில்லையே என கைப்பேசிக்கு அழைத்து விட்டாள் அவந்திகா. பயமுறுத்தாமல் விவரத்தை சொல்லி, “அம்மாகிட்ட சொல்லாத, கொஞ்ச...
    என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -7 அத்தியாயம் -7(1) அவந்திகா, மணிகண்டன் இருவரது திருமண நாள். குறை ஏதும் சொல்ல முடியாத படி நல்ல படியாகவே எல்லா ஏற்பாடுகளும் இருந்தன. “வேலை வேலைன்னு ஓடிட்டே இருக்கேன்பா, ரிலாக்ஸ் பண்ணிக்க நானும் விதுரனும் நாலு நாள் கொடைக்கானல் போலாம்னு இருக்கோம்” என பொய் சொல்லி, திண்டுக்கல்...
    அத்தியாயம் -13(2) அடுத்த நாள் காலை பதினோரு மணி அளவில் பாக்யாவின் வீட்டிற்கு வந்து விட்டனர் அசோக் குடும்பத்தினர். வீட்டில் இட வசதி இருக்காது என்பதால் மாடியில் ஷாமியானா பந்தல் போட்டு ஏற்பாடு செய்திருந்தான் சமரன். அனைவரும் நேராக மாடிக்குத்தான் சென்றனர். அறையில் ஸ்ருதியும் அவந்திகாவும் சேர்ந்து அனன்யாவுக்கு அலங்காரம் செய்து கொண்டிருந்தனர். இதுவரை...
    அத்தியாயம் -14(2) காலையிலிருந்து ஏற்பட்ட சிறு பிரிவும் இப்போது ஏற்பட்ட அந்த நெருக்கமும் ஒருவர் மற்றவரை மனதாலும் தேகத்தாலும் தேட வைத்தது. அத்துமீறல்கள் அரங்கேறிக் கொண்டிருக்க, திடீரென அவள்தான் நினைவு வந்தவளாக, “இன்னும் நாம சாப்பிட வரலைன்னு அத்தை பார்த்திட்டு இருப்பாங்க” என மெல்லிய குரலில் சொன்னாள். “அப்படியா நாம இன்னும் சாப்பிடலையா? ரூம்...
    என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -3 அத்தியாயம் -3 அனன்யாவுடன் படித்த மேகா எனும் மாணவிக்கு ஒருவன் பல நாட்களாக காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளான். மேகா சம்மதிக்காமல் போக திராவக வீச்சு செய்ய முயன்றிருக்கிறான். அவளுக்கு பின்னால் நடந்து வந்து கொண்டிருந்த அனன்யாவுக்கு அவன் என்ன செய்ய போகிறான் என சரியான கணிப்பு...
    அத்தியாயம் -8(3) அடுத்து என்ன சொல்வானோ என பரிதவிப்போடு அவள் பார்த்திருக்க, “சமரைதான் அவ லவ் பண்ணினா. உடைஞ்சு போயிட்டேன்னு சினிமால டயலாக்லாம் வரும்ல… லிட்ரலி என்னோட நிலைமை அப்ப அப்படித்தான்” என்றவன் அடுத்து நடந்தவைகளையும் சுருக்கமாக சொன்னான். எதையுமே நினைக்க முடியவில்லை அவளால். ஒரு விதமாக அவனுடைய வலியை உணர முற்பட்டுக் கொண்டிருந்தாள்....
    என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -10 அத்தியாயம் -10(1) தன் அம்மாவை அழைத்துக் கொண்டு அத்தையின் வீட்டுக்கு வந்திருந்தான் அசோக். திடீரென வந்து நிற்பான் என அனன்யா எதிர் பார்த்திருக்கவில்லை. உன் அண்ணன் எளிதில் சம்மதிக்க மாட்டார்தான், அதற்காக இளையவர்களின் ஆசையை நிராகரிக்க கூடாது, என் வீட்டுக்கு மருமகளாக வந்து விட்டால் நான் பார்த்துக் கொள்வேன் என பேசியிருந்தார்...
    அத்தியாயம் -4(2)  முன்பெல்லாம் பாக்யாவுக்கு இரண்டு பெண்களை நினைத்து எப்படி கரை சேர்ப்போம் என பயமாக இருக்கும். இப்போது அசோக் இருக்கிறான் என நினைத்துக் கொண்டார். பொருளாதார ரீதியாக அவனிடமிருந்து எதையும் அவர் எதிர்பார்க்கவில்லை, ஆனால் என்னவாக இருந்தாலும் நான் இருக்கிறேன் என அவன் வந்து நிற்பது அவருக்கு வார்த்தையில் சொல்லி விட முடியாத...
    ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -12 அத்தியாயம் -12(1) அனன்யாவை அவளது அம்மா அடித்து விட்டதில் அதிர்ந்திருந்தான் அசோக். “இதுக்குத்தான் சொன்னேன் வேணாம்னு, எவ்ளோ கேவலமா பார்த்திட்டு போறாங்க பார்த்தியா?” என மகளிடம் சீறினார் பாக்யா. கோவத்திலும் அவமானத்திலும் பேச்சு வராமல் அம்மாவை முறைத்தாள் அனன்யா. “சத்தியமா அவங்க என்ன பேசிட்டு போறாங்கன்னு புரியவே இல்லை...
    என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -9 அத்தியாயம் -9(1) அனன்யா தேநீர் போட்டு முடித்திருக்க பாக்யாவும் எழுந்து கொண்டார். எங்கே அம்மா தான் விரலில் அணிந்திருக்கும் மோதிரம் பற்றி ஏதேனும் கேட்டு வைப்பாரோ என அவளுக்கு ஒரே பதட்டம். கேட்டால் என்ன சொல்ல என எந்த யோசனையும் வர மாட்டேன் என்றது. மகள் தேநீர்...
    அத்தியாயம் -12(2) ஐந்து நிமிடங்களுக்கு பிறகு சமரனுக்கு அழைத்தவன் எங்கு இருக்கிறான் கேட்டான். வீட்டை நெருங்கி விட்டதாக சொல்லவும், அனன்யா இங்கு இருக்கும் விவரம் சொன்னவன், “இவளை வீட்ல விட்ரு டா” எனக் கேட்டுக் கொண்டான். இருவரும் முன் பக்கம் கேட் அருகில் செல்லவும் சமரனின் கார் வரவும் சரியாக இருந்தது. பெரிதான பேச்சுக்கள்...
    என் ஜன்னல் வந்த பட்டாம்பூச்சி -4 அத்தியாயம் -4(1) கண்ணப்பன் வீடு இருக்கும் பக்கத்து தெருவிலேயே பாக்யா குடும்பத்துக்கு வீடு பார்த்து கொடுத்து விட்டாள் ஸ்ருதி. முன்னர் இருந்த வீட்டிற்கு கொடுத்ததை விட அட்வான்ஸ் தொகை அதிகம்தான், தொகையை அத்தையிடம் குறைவாகவே சொல்ல வைத்து மீதமுள்ளதை அவருக்கு தெரியாமல் அசோக்கே கொடுத்து விட்டான். பழைய...
    error: Content is protected !!