உதிரம் பருகும் உயிரே...
27....
நம்மை தொலைத்தவர்களை
தேடி செல்லாதீர்கள்..
இன்று இல்லை என்றாலும்
என்றேனும் அவமானம் தான் மிஞ்சும்...
நம்மை தேடுபவர்களை
தொலைத்து விடாதீர்கள்..
உண்மையான அன்பு
நமக்கு கிடைக்காமலேயே
போய் விடக்கூடும்..
அரண்மனை வைத்தியரின் ஆலோசனையை ஏற்ற முக்கிய பிரமுகர்கள் பணிப்பெண் மரண செய்தியை அந்நாட்டின் மன்னனான கீர்த்தி வர்ம தேசிங்கனுக்கு தெரிவிக்காமல் மறைத்தனர்.
வளமை...
இத்தனை எளிதாய் தனக்கான சம்மதம் கிடைக்கும் என்று சற்றும் எதிர்பார்த்திறாத கீர்த்தன் " என்ன உடனே சரின்னு சொல்லிட்ட, நான் நீ வர மாட்டேன்னு சொல்லுவன்னு நினைச்சேன்." என்று வியப்புடன் வினவினான்.
"கூப்பிடுவது நீங்களா இருக்கும்போது என்னால எப்படி வர முடியாதுன்னு சொல்ல முடியும் அரக்கா " என்று அழகாய் புன்னகைத்தபடி கூறினாள் சுஹனி.
அவள் அழைத்த...
31....
தொலைவேன் என்றே
தெரியாமல் மொத்தமாய் தொலைந்து கொண்டிருக்கின்றேன்
உன்னில்.....
சுஹனியின் அரக்கன் எனும் வார்த்தை கீர்த்தன் மனதில் இருந்த பழைய நினைவுகளை மீட்டெடுக்க... பழைய நினைவில் மூழ்கினான் கீர்த்தன்.
பல நூறு ஆண்டுகளுக்கு முன்.. வற்றாத வளத்துடன் செல்வ செழிப்புடன் இருந்த செங்கோட தேசிங்க புரத்தை.. கீர்த்தி வர்ம...
4...
விழி தேடும் கனவின் தேடல்கள்
விடிந்ததும் விலகிவிடும்...
மனம் தேடும் வாழ்வின் தேடல்கள்
உயிர் மடிந்தாலும் மறையாது...
" பாஸ்... " என்று சித்தேஷ் குரலுக்கு கண் விழித்தவன், " இப்போ எதை கொண்டு வந்து குடிக்க சொல்லி என் உயிரை வாங்கப் போற...?" என்று உள்ளிருந்தபடியே எரிச்சலுடன் வினவினான் கீர்த்தன்.
"...
13....
எடுத்த முடிவிலிருந்து என்றும் தடுமாறாமல் இருப்பவன்...
உன்னை கண்ட
நாளிலிருந்து
என் மனம் தடம் மாறிட
நிலையில்லா முடிவில்
தடுமாறிக் கொண்டிருக்கின்றேன்..
இரவு வேளையில் சித்தேஷ் உறங்கி விட்டதை உறுதி செய்து கொண்ட கீர்த்தன், சுஹனி குறித்த விபரங்கள் அறிய தீபேந்திரனின் உதவியாளனான ராஜதுரையை சந்திக்க அவன் இருப்பிடம் தேடிச் சென்றான்.
"யாருடா இது நட்ட நடு ராத்திரியில வந்து கதவை தட்டுறது.. "என்று...
17...
மனதின் ஆசைகள்
அதிகரிக்கும் போது..
வாழ்வில் அவஸ்தையும்
அதிகரிக்க துவங்கியது..
ஆசையை அடக்க தெரிந்தவன்..
வாழ்வை வெல்கிறான்..
அடக்க மறந்தவன்..
கால ஓட்டத்தில்
அடங்கி போகிறான்..
இரு அறைகளை சேர்த்து இணைக்கப்பட்டது போல் இருந்த அந்த பெரிய அறையின் மத்தியில், வாமை, ஜேஷ்டை, ரவுத்ரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப்பிரமதனி, சர்வபூததமனி, மனோன்மணி எனும் நவசக்திகளின் உருவங்களை பெண்ணின் வடிவத்தில் செதுக்கிய ஒன்பது கற்சிலைகள் வரிசையாய் அடுக்கி...
23....
கொஞ்சல் மொழியில்
என்னை கிறங்க செய்கிறாய்
நீயடி.....
கொஞ்சம் கொஞ்சமாய் உன்னிடம் நெருங்கிக் கொண்டிருக்கின்றேன் நானடி...
பல அறைகள் கொண்ட அந்த பங்களாவின் கீழ்தளத்தில் ஒரு பகுதி முழுவதுமாய் சுஹனிக்காக ஒதுக்கப்பட்டு அவளது உடமைகள் அவ்விடத்தில் சேர்க்கப்பட்டது.
பல வருடமாக வீட்டில் இருப்பவர்களுக்கு பசியாற்றிக் கொண்டிருந்த மஞ்சு சுஹனியை இரு மடங்கு பரிவுடன்...
22....
முதல் பார்வையிலே
பற்றிக் கொள்ளும் காதல்..
என்ன வகை தீயோ...
உள்ளுக்குள் நுழைந்ததும்
உயிர் வரை உருக்கி குடிக்கும்..
என்ன வகை நோயோ!
விடுதியில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த வேளையில், வாகனத்தை இயக்கிக் கொண்டிருந்த சித்தேஷிடம் மெதுவாய் பேச்சு கொடுக்கத் துவங்கினாள் சுஹனி. "அப்புறம் சொல்லுங்க மிஸ்டர் . சித்தேஷ், உங்க வீட்ல...
7...
தென்றல் காற்று வருட
மலரும் மென் மலர் போல்...
காதல் வருட மலர்ந்தது
பெண்ணவள் மனமும்..
"என்ன சுஹனி?, உனக்கு ஹெல்ப் பண்ணுன ஆளை போய் மறுபடியும் பார்த்தியா?, அவர் என்ன சொன்னாரு?, உனக்கு ஹெல்ப் பண்ண ஓகே சொல்லிட்டாரா?" என்று அக்கறையுடன் வினவினார் விடுதி பொறுப்பாளர் அகிலா.
" இல்ல மேம்,...
28...
நான் பிறந்த போது
பிறப்பின் வலியை
உணரவில்லை...
ஆனால்
இறப்பின் வேதனையை
வாழும் நாட்களிலேயே...
அனுவனுவாய் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன் ...
"தங்கள் திட்டமெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது இருந்தாலும் இது நடைமுறைக்கு எப்படி சாத்தியமாகும். " என்று ஒருவர் சந்தேகமாய் இழுக்க... "அறிவார்ந்தோரை ஆலோசகராய் வைத்துக் கொண்டு அறிவிலிகள் அரசாலும் முறை ஒழிந்து.....
24....
உயிரைக்
கொல்லாமல் கொள்ளும்
சாபத்தால்
தத்தளிக்கிறேன்
நானடி..
உயிர் காதலால்
என்னை மீட்டெடுப்பாயோ
நீயடி..
தேகம் உருத்தாத பட்டு வஸ்திரம் போர்த்திய மஞ்சத்தில் உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்தான் கீர்த்தி வர்ம தேசிங்கன்.
சில மாதங்களாய் தன் மக்களை அச்சுறுத்துக் கொண்டிருந்த கயவனை அடையாளம் கண்டு கொண்டு மரண தண்டனை விதித்ததால் இனி தன்...
உதிரம் பருகும் உயிரே...
1......
ஒரு தேடல் முடிந்ததும்..
மற்றொரு தேடலை துவங்கிவிடும்
விசித்திர குணம் கொண்டது மனம்...
கி.பி. 1974...
மனித நடமாட்டமே இல்லாத இருள் படர்ந்த அடர் வனம்... நிலவில்லா வானத்தின் இருள் அந்த வனத்தை மேலும் இருளில் மூழ்கடிக்க...
ஒரு கையில் தீப்பந்தம் ஏந்திக்கொண்டு மறுக்கையால் அழகு மங்கை ஒருவள்...
~~~~~
11...
என் ஆசைகள்
நிராசை என்று புரிந்தும்...
ஆயுள் முழுவதும்
உன்னுடன் வாழ்ந்திட
ஆசை கொண்டேனடி...
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் சோத்துப்பாறை அணைக்கட்டுக்கு செல்லும் வழியில், சுற்றிலும் மா மரங்கள் சூழ்ந்திருக்க அவற்றின் நடுவில் அரண்மனை போன்ற தோற்றத்துடன் பரந்து விரிந்த வீட்டின் முன் கீர்த்தன் பயணித்த வாகனம் வந்து நின்றது.
" பாஸ்.. சுஹனி மேம் வீட்டுக்கு வந்துட்டோம், இங்க எந்த...
25...
உதிரம் பருகி வாழ்ந்தவன்
நானடி...
இன்று உன் உறவைத் தேடி
அலைகிறேன்
ஏனடி..
மன்னரின் நிலை குறித்து கவலை கொண்ட சேவகர்கள் அவசரமாய் அரண்மனை வைத்தியரை அணுகி, விசித்திரமாய் நடந்து கொண்ட மன்னரின் நடவடிக்கைகளை விவரித்தனர்.
"என்ன சொல்கின்றீர்!, பசிக்கிறது என்றவர் கொடுத்த பழங்களை புசிக்காமல் சேவகன் கையில் வடிந்த உதிரத்தை குடித்தாரா?,...
16....
என் வாழ்வில்
என்றும் தொலைத்திடக் கூடாத
பொக்கிஷமாக
உன்னை எண்ணினாலும்..
என்னிடமிருந்து
தொலைவில் நிறுத்தவே
எண்ணுகின்றேன்...
சுஹனி இருக்கும் இடம் தெரிந்த பின்பும் தாமதிக்க மனம் இல்லாமல் பழமையான முறையில் ஓடுகள் வைத்து முற்றம் அமைப்புடன் கூடிய, கீழும் மேலுமாய் இரு அடுக்குகள் கொண்ட வீட்டினுள் செல்லும் வழியை தேடி வீட்டைச் சுற்றி இருந்த மதில் சுவரை ஆராய்ந்த படி சுற்றி வந்தான் கீர்த்தன்.
வீட்டினுள்...
6....
ஆணின் கோபம்
பெண்ணின் கண்ணீரிலும்..
பெண்ணின் கோபம்..
ஆணின் உண்மையான அன்பிலும் கரைந்து போகும்...
இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்ட... சுஹனிக்கு மீண்டும் கீர்த்தனை தேடிச் செல்வதை தவிர வேறு வழி தெரியவில்லை.
இனி என்றும் தன்னைத் தேடி வரக்கூடாது என்று கடுமையாக எச்சரிக்கை கொடுத்தவன் வீட்டின் வாசலிலேயே அடுத்த நாளும் காவல் இருந்தாள் சுஹனி.
"என்ன மேடம், உங்களுக்கு ஒரு தடவை சொன்னா...
9....
உன்னை காணத் துடிக்கும்
கண்கள்...
உன்னோடு பேசத் தவிக்கும்
இதழ்கள்...
உன்னை கண்டதும் பதற்றத்தில்
தடுமாறும் இதயம்..
உன் விரல் தொட்டு விட
தவம் கிடக்கும் விரல்கள்..
இவை யாவும் புதிரானவளே!...
உன்னால் என்னுள் முளைத்த புதுமையான உணர்வுகள்..
" என்னை தேடி யாரும் வந்தாங்களா?" என்று வினவிய கீர்த்தன் முகத்தில் பிரதிபலித்த தவிப்பையும் ஏக்கத்தையும் கவனித்த சித்தேஷ்.. " என்ன பாஸ் யாராவது முக்கியமான ஆள எதிர்பார்த்துட்டு...
10...
கவலையில் நீ
கலங்கும் போதெல்லாம்
உன் கரம் பற்றிக் கொள்ள
துடிக்கிறேன்...
இருந்தும் விதியை
எண்ணிப் பார்த்து
என் விருப்பத்தை
தவிர்க்கிறேன்..
தேடி வந்த உதவி கிட்டவில்லை என்ற விரக்தியுடன் விடுதி பொறுப்பாளர் அங்கிருந்து வெளியேற, " ஒரு நிமிஷம் நில்லுங்க மேம். எங்க...
12 ...
உயிருடன் கலந்த உறவாய்
உன்னை நினைப்பதாலோ என்னவோ
ஒவ்வொரு முறை துடிக்கும் போதும்..
உன் பெயரை உச்சரிக்கிறது
என் இதயம்....
"பாஸ் அக்கம் பக்கத்து தோப்புல வேலை பாத்துட்டு இருந்தவங்க கிட்ட ஓரளவு விசாரிச்சேன். இது யாரோ சுதாகர் ஐயாவோட வீடுன்னு சொல்றாங்க, "என்று சித்தேஷ் நிறுத்த... "அவர் யாரோ இல்ல, சுஹனியோட அப்பா" என்றான் கீர்த்தன்.
"அப்போ உங்க மாமனார்...
21...
தேவைகள் தீர்ந்ததும்
தேடுதல் தீர்ந்திடுமோ...
உண்மை
காதலைத் தேடியே
என் வாழ்வின் பயணம்
நீண்டிடுமோ..
தீபேந்திரனிடம் இருந்து சுஹனியை காக்க வேண்டி தனது இல்லத்திற்கே அழைத்து வந்திருந்தான் கீர்த்தன்.
தன் இல்லத்தில் தஞ்சம் புகுந்தவளுக்கு எந்நேரமும் பாதுகாப்பாய் இருக்கும் படி சித்தேஷிற்கு வெளிப்படையாகவே உத்தரவு பிறப்பித்து இருந்தான் கீர்த்தன்.
முதலாளியின் உத்தரவை ஏற்று...