Thursday, June 19, 2025

    உதிரம் பருகும் உயிரே...

    4... விழி தேடும் கனவின் தேடல்கள் விடிந்ததும் விலகிவிடும்... மனம் தேடும் வாழ்வின் தேடல்கள் உயிர் மடிந்தாலும் மறையாது... " பாஸ்... " என்று சித்தேஷ் குரலுக்கு கண் விழித்தவன், " இப்போ எதை கொண்டு வந்து குடிக்க சொல்லி என் உயிரை வாங்கப் போற...?" என்று உள்ளிருந்தபடியே எரிச்சலுடன் வினவினான் கீர்த்தன். "...
    16.... என் வாழ்வில் என்றும் தொலைத்திடக் கூடாத பொக்கிஷமாக உன்னை எண்ணினாலும்.. என்னிடமிருந்து தொலைவில் நிறுத்தவே எண்ணுகின்றேன்... சுஹனி இருக்கும் இடம் தெரிந்த பின்பும் தாமதிக்க மனம் இல்லாமல் பழமையான முறையில் ஓடுகள் வைத்து முற்றம் அமைப்புடன் கூடிய, கீழும் மேலுமாய் இரு அடுக்குகள் கொண்ட வீட்டினுள் செல்லும் வழியை தேடி வீட்டைச் சுற்றி இருந்த மதில் சுவரை ஆராய்ந்த படி சுற்றி வந்தான் கீர்த்தன். வீட்டினுள்...
    31.... தொலைவேன் என்றே தெரியாமல் மொத்தமாய் தொலைந்து கொண்டிருக்கின்றேன் உன்னில்.....        சுஹனியின் அரக்கன் எனும் வார்த்தை கீர்த்தன் மனதில் இருந்த பழைய நினைவுகளை மீட்டெடுக்க... பழைய நினைவில் மூழ்கினான் கீர்த்தன். பல நூறு ஆண்டுகளுக்கு முன்.. வற்றாத வளத்துடன் செல்வ செழிப்புடன் இருந்த செங்கோட தேசிங்க புரத்தை.. கீர்த்தி வர்ம...
    8.... என் கண்ணீர் துடைக்க நீளும் உன் கரங்களுக்குள் சிக்கிக் கொள்ள தவிக்கிறேன்.. நாளும் உன் காதலில் என்னைக் கலந்து... உன்னை என்னுள் சிறைபிடிக்க துடிக்கிறேன்... " என்னப்பா தம்பிகளா? கூட படிக்கிற பொண்ணு அடியாள வச்சு அடிச்சிட்டான்னு, நீங்களே தான் தேடி வந்து கம்ப்ளைன்ட் கொடுத்தீங்க! இப்போ நீங்களே அந்த பொண்ணு மேல எந்த தப்பும் இல்லைன்னு சொல்றீங்க!. இதுல எது உண்மை?" என்று...
    18.... உன் பிரிவினில் வலி உணர்வதால் தான்.. நமக்குள் இன்னும் பிரியம் கூடுகின்றது…. பூஜைக்கு வேண்டிய ஏற்பாட்டை கவனித்துக் கொண்டே ராஜதுரை கேள்விக்கு விளக்கம் அளித்து கொண்டிருந்த தீபேந்திரன்.. சற்றும் எதிர்பாராத நேரத்தில் நவசக்தி சிலைகளின் முன் இருந்த திரிசூலத்தால் தனது உள்ளங்கையை காயப்படுத்தி அதில் வழிந்த ரத்த துளிகளை ஒன்பது கலசங்களில் சேகரித்து...
    10... கவலையில் நீ கலங்கும் போதெல்லாம் உன் கரம் பற்றிக் கொள்ள துடிக்கிறேன்... இருந்தும் விதியை எண்ணிப் பார்த்து என் விருப்பத்தை தவிர்க்கிறேன்..             தேடி வந்த உதவி கிட்டவில்லை என்ற விரக்தியுடன் விடுதி பொறுப்பாளர் அங்கிருந்து வெளியேற, " ஒரு நிமிஷம் நில்லுங்க மேம். எங்க...
    7... தென்றல் காற்று வருட மலரும் மென் மலர் போல்... காதல் வருட மலர்ந்தது பெண்ணவள் மனமும்.. "என்ன சுஹனி?, உனக்கு ஹெல்ப் பண்ணுன ஆளை போய் மறுபடியும் பார்த்தியா?, அவர் என்ன சொன்னாரு?, உனக்கு ஹெல்ப் பண்ண ஓகே சொல்லிட்டாரா?" என்று அக்கறையுடன் வினவினார் விடுதி பொறுப்பாளர் அகிலா. " இல்ல மேம்,...
    14.... அணைத்து ஆறுதல் கூற... மனம் துடிக்கிறது... விட்டு விலகி நிற்க விதி கட்டளை இடுகிறது.. இந்நிலை மாறுமோ!... என் மனம் உன்னை சேருமோ!... கீர்த்தனின் வசியத்திற்கு கட்டுப்பட்ட ராஜதுரை தீபேந்திரன் குறித்த எவரும் அறியாத பல விவரங்களை கூறத் துவங்கினார். சிறு வயதில் பெற்றோரை இழந்த பிறகு தாய் மாமனிடம் தஞ்சம் புகுந்த தீபேந்திரன் எவரிடமும் ஒட்டுதல் இல்லாமல் தான் பழகி வந்துள்ளான். தனிமையை நாடிச்...
    ~~~~~ 11... என் ஆசைகள் நிராசை என்று புரிந்தும்... ஆயுள் முழுவதும் உன்னுடன் வாழ்ந்திட ஆசை கொண்டேனடி... தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளத்தில் சோத்துப்பாறை அணைக்கட்டுக்கு செல்லும் வழியில், சுற்றிலும் மா மரங்கள் சூழ்ந்திருக்க அவற்றின் நடுவில் அரண்மனை போன்ற தோற்றத்துடன் பரந்து விரிந்த வீட்டின் முன் கீர்த்தன் பயணித்த வாகனம் வந்து நின்றது. " பாஸ்.. சுஹனி மேம் வீட்டுக்கு வந்துட்டோம், இங்க எந்த...
    25... உதிரம் பருகி வாழ்ந்தவன் நானடி... இன்று உன் உறவைத் தேடி அலைகிறேன் ஏனடி.. மன்னரின் நிலை குறித்து கவலை கொண்ட சேவகர்கள் அவசரமாய் அரண்மனை வைத்தியரை அணுகி, விசித்திரமாய் நடந்து கொண்ட மன்னரின் நடவடிக்கைகளை விவரித்தனர். "என்ன சொல்கின்றீர்!, பசிக்கிறது என்றவர் கொடுத்த பழங்களை புசிக்காமல் சேவகன் கையில் வடிந்த உதிரத்தை குடித்தாரா?,...
    9.... உன்னை காணத் துடிக்கும் கண்கள்... உன்னோடு பேசத் தவிக்கும் இதழ்கள்... உன்னை கண்டதும் பதற்றத்தில் தடுமாறும் இதயம்.. உன் விரல் தொட்டு விட தவம் கிடக்கும் விரல்கள்.. இவை யாவும் புதிரானவளே!... உன்னால் என்னுள் முளைத்த புதுமையான உணர்வுகள்.. " என்னை தேடி யாரும் வந்தாங்களா?" என்று வினவிய கீர்த்தன் முகத்தில் பிரதிபலித்த தவிப்பையும் ஏக்கத்தையும் கவனித்த சித்தேஷ்.. " என்ன பாஸ் யாராவது முக்கியமான ஆள எதிர்பார்த்துட்டு...
    12 ... உயிருடன் கலந்த உறவாய் உன்னை நினைப்பதாலோ என்னவோ ஒவ்வொரு முறை துடிக்கும் போதும்.. உன் பெயரை உச்சரிக்கிறது என் இதயம்.... "பாஸ் அக்கம் பக்கத்து தோப்புல வேலை பாத்துட்டு இருந்தவங்க கிட்ட ஓரளவு விசாரிச்சேன். இது யாரோ சுதாகர் ஐயாவோட வீடுன்னு சொல்றாங்க, "என்று சித்தேஷ் நிறுத்த... "அவர் யாரோ இல்ல, சுஹனியோட அப்பா" என்றான் கீர்த்தன். "அப்போ உங்க மாமனார்...
    24.... உயிரைக் கொல்லாமல் கொள்ளும் சாபத்தால் தத்தளிக்கிறேன் நானடி.. உயிர் காதலால் என்னை மீட்டெடுப்பாயோ நீயடி.. தேகம் உருத்தாத பட்டு வஸ்திரம் போர்த்திய மஞ்சத்தில் உறக்கமின்றி புரண்டு கொண்டிருந்தான் கீர்த்தி வர்ம தேசிங்கன். சில மாதங்களாய் தன் மக்களை அச்சுறுத்துக் கொண்டிருந்த கயவனை அடையாளம் கண்டு கொண்டு மரண தண்டனை விதித்ததால் இனி தன்...
    29.... நீ இல்லாமல் நான் இல்லை என்பது கூட மெய்யாகாமல் போகலாம்... ஆனால் உன்னை நினைக்காமல் நான் இல்லை என்பது மட்டும் என்றும் பொய்யாகி போகாது.... நயவஞ்சகர்களின் பிடியிலிருந்து தப்பி வந்தவன்.. 48 வருடத்திற்கு ஒருமுறை வரும் சந்திர கிரகணத்தின் அன்று தன்னை உண்மையாய் நேசிக்கும் பெண்ணை காந்தாரனை கழுவேற்றி கொடும் கொலை புரிந்த...
    13....  எடுத்த முடிவிலிருந்து என்றும் தடுமாறாமல் இருப்பவன்...  உன்னை கண்ட  நாளிலிருந்து  என் மனம் தடம் மாறிட  நிலையில்லா முடிவில்  தடுமாறிக் கொண்டிருக்கின்றேன்..  இரவு  வேளையில் சித்தேஷ் உறங்கி விட்டதை உறுதி செய்து கொண்ட கீர்த்தன், சுஹனி குறித்த விபரங்கள் அறிய  தீபேந்திரனின் உதவியாளனான ராஜதுரையை சந்திக்க அவன் இருப்பிடம் தேடிச் சென்றான்.  "யாருடா இது நட்ட நடு ராத்திரியில வந்து கதவை தட்டுறது.. "என்று...
    20... உனை நினைத்தே... என் நாட்கள் நீளுதடி.. என்றும் எனை நீங்காமல் நீ இருந்திட வேண்டுமடி.. அந்த நேரத்தில் கீர்த்தனை சற்றும் எதிர்பார்த்திராத சுஹனி.. தயக்கத்துடன் பேச்சை நிறுத்திக் கொள்ள.. "என்ன பாஸ் இவ்ளோ ஈசியா ஒன்னும் இல்லன்னு சொல்லிட்டீங்க, உங்க ரெண்டு பேருக்கும் நடுவுல நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இருக்கு, அதை என்னாலேயே புரிஞ்சுக்க...
    28... நான் பிறந்த போது பிறப்பின் வலியை உணரவில்லை... ஆனால் இறப்பின் வேதனையை வாழும் நாட்களிலேயே... அனுவனுவாய் அனுபவித்துக் கொண்டிருக்கின்றேன் ... "தங்கள் திட்டமெல்லாம் கேட்க நன்றாகத்தான் இருக்கிறது இருந்தாலும் இது நடைமுறைக்கு எப்படி சாத்தியமாகும். " என்று ஒருவர் சந்தேகமாய் இழுக்க... "அறிவார்ந்தோரை ஆலோசகராய் வைத்துக் கொண்டு அறிவிலிகள் அரசாலும் முறை ஒழிந்து.....
    23.... கொஞ்சல் மொழியில் என்னை கிறங்க செய்கிறாய் நீயடி..... கொஞ்சம் கொஞ்சமாய் உன்னிடம் நெருங்கிக் கொண்டிருக்கின்றேன் நானடி... பல அறைகள் கொண்ட அந்த பங்களாவின் கீழ்தளத்தில் ஒரு பகுதி முழுவதுமாய் சுஹனிக்காக ஒதுக்கப்பட்டு அவளது உடமைகள் அவ்விடத்தில் சேர்க்கப்பட்டது. பல வருடமாக வீட்டில் இருப்பவர்களுக்கு பசியாற்றிக் கொண்டிருந்த மஞ்சு சுஹனியை இரு மடங்கு பரிவுடன்...
    30... உயிர் வாழ வேண்டும் என்பது                                             எனது ஆசையாக இருந்தாலும்                                                உன்னுடன் வாழ வேண்டும் என்பதே                                        எனது பேராசையாக இருக்கிறது.. 48 வருடங்களுக்கு ஒரு முறை வரும் சந்திர கிரக தினத்திற்கு இன்னும் சரியாக மூன்று நாட்கள் இருந்த நிலையில்.... சுஹனியை வீட்டிற்கு அழைத்து செல்வதற்காக கல்லூரி முடியும் நேரத்தை கணக்கிட்டு காருடன் வந்திருந்த சித்தேஷ்.. அவளுக்காக  கல்லூரி...
    26.. மரணத்தை வேண்டி தவிக்கிறேன்... நானடி.. காதலோடு என் மார்பில் தஞ்சம் புகுந்திட தவிக்கிறாய் நீயடி... இது விதியின் செயலோ.. இல்லை நம்மை படைத்தவன் சதியோ! விடை நான் அறியேன்.. சேவகர்கள் விலகிச் சென்றதும்.. மன்னிப்பு வேண்டும் விதமாய் தலை தாழ்த்தி நிமிர்த்தவர், "இரவு பொழுது என்பதால் எதையோ கற்பனை செய்து கொண்டு கண்டதையும்...
    error: Content is protected !!