E4 Nee Enbathu Yaathenil

Advertisement

Adhirith

Well-Known Member
Hi malli mam
உங்க இந்த கதையை முதலில் இருந்தே தொடர போறேன் ரொம்ப சந்தோஷமா இருக்கு பிடிவாதக்காரி சுந்து அம்மா இல்லாத பொண்ணு வேற, நல்லவன் ,அமைதியானவன் துரை சூப்பர் ரொமான்ஸ் இல்லமா ஆரம்பம்
ஆனா என்ன ? நடந்து இருக்கும் அவன் ஏன் வேணான்னு சொன்னான் உடல் சேர்ந்த பிறகு அமைதியானவன் எதுக்கு இப்படி ஒரு முடிவு எடுத்தான் அழகுதான் காரணமா இதுல சேத்திவைக்க வரங்களோ இல்லையோ கெடுக்கறதுக்குனு வந்துடுவாங்க சொந்தக்காரங்க
சம அந்தஸ்து உள்ளவர்கள் என்னதான் பங்குகள் நான்கா போனாலும் இவனுக்கு என்ன ஏன் கடன் இருக்கும் part time job செய்யும் அளவுக்கு அதுவும் ஒரு காரணமாக இருக்குமோ கதையில் , அம்மா பிள்ளையோ பாவம்கனவுகளை வளர்த்து வைத்தவன் அவங்க அவங்களுக்கு கனவுகள் வருமில்லையா இந்த அப்பாக்களை கட்டிவைத்து உதைக்கவேண்டும் அது என்ன படிக்கிற பசங்களுக்கு அவசரமாய் கல்யாணம் பண்ணனும் இப்ப யாரு அவஸ்தை படறத்து அவன் உறவை நினைத்து வருந்தும் போது எதோ பெரிய காரணம் இருக்கு போல அவனின் அப்பாவே பொண்டாட்டியை மதிச்சு வாழலை அதை பார்த்து வளர்ந்த பிள்ளை அதே தான் செய்யும் பெரிசா பேசவந்துடாரு
அந்த புள்ளசுந்து பாவம் பச்சமண்ணு அதுக்கு என்ன புரியும் அவன் ஏன் விட்டான்? எதுக்கு விடடான்? எது புடிக்கலைனு சொல்றான்னு?? இன்னும் வயசு போன புரியும் நிலைமையை சீர்தூக்கி பாக்கும் அவன்தான் ஆகட்டும் அந்த பொண்ணு ரொம்பவும் சின்னபொண்ணாச்சே அதுவும் பாவம் நினைச்சனா தன்னோட தங்கச்சியே பத்தி மட்டும் கவலை பட தெரியுது அப்புமட்டும் இவரு பெரியவனாயிடுவாரமா துரை
ஏதேதோ செஞ்சுட்டு அப்புறம் பச்சாதாபம் படடா அவ் விட்டுவாளா போடா சரிதான் சொல்லிடா தாயில்லா பிள்ளையுனு கூட நினைக்கலை எல்லோரும் என்ன மனிதர்கள் மீன் குஞ்சுக்கு நீந்த கத்து கொடுக்கணுமா அது சக்க போடு போடுது விவசாயத்தில் அந்த கெத்து வேற மண்ணை விரும்பும் பொண்ணா போச்சே
வயசு ஏறின பிறகு மனச இறுக்குது செஞ்ச செயலை நினைத்து கண்ணு போறதுக்கு முன்னாடியே கண்ணாடி போட்டு சூரிய நாமஸ்காரம் பண்ணலாமா என்று யோசனைவருது துரைக்கு அவதான் உச்சாணி கொம்புள்ள இருக்காளே இதுல இவன் அம்மா இந்த வயசுல தற்கொலை பண்ணிக்க பாக்குதாம் புருஷன் திட்டிட்டார்னு கண்ணு முன்னால தன் பையன் வேணான்னு சொன்ன பொண்ணு தலை நிமிர்ந்து வாழுது இந்தம்மாக்கு இந்த கேடு ம்ம் அப்புறம் ஐயோ
mam நீங்கலாம் கிரேட்டு எப்படித்தான் இப்படி எழுதுரியங்களோ பக்கம் பக்கமா கதைப்பத்தியும் யோசிச்சுகிட்டு எழுதற்றத்தையும் பார்த்துகிட்டு சூப்பர் mam எனக்கு ஒரு பக்கம் எழுதறதுக்குள்ள நாக்கு தள்ளுதுஇன்னும் சொல்ல ஆர்வம் இருந்தாலும்



இரு வரிகள் எழுதவே
எனக்கெல்லாம் நாக்கு தள்ளுது....

உங்களின் ஒரு பக்க விமர்சனம்...
Chance ஏ இல்லை...wow. Superrrrrrr
 

Adhirith

Well-Known Member
இல்லப்பா நான் சொன்னது மறக்காது எப்போதும் என்பதை பற்றி வாசனை பிடிக்குமா..... பிடிக்காதா..... என்பது வேறு நிலை ஒரு பெண் தாய் ஆகிவிடடாள் அவளின் எல்லா வற்றிலும் முதல் உரிமை குழந்தையே சாரும் அவளை பொறுத்தவரை அது ரசனையானாலும்....... பின்புதான் மற்றவர்கள் வருவார்கள்

மறக்காது,பிடிக்குமா,பிடிக்காதா
அதையெல்லாம் விட்டுவிடலாம்

எப்போழுதும் அவளின் முதல் உரிமை
அவள் குழந்தை....
இரண்டாவது, அவளின் உணர்வுகளுடன்
கலந்துவிட்ட அவளது தாய் மண்..,.

சரியா பூவிழி????
 

Ansadoss

Well-Known Member
What about தயிர் வடை?
நம்ம ஊர் ஸ்பெஷல்.....
:D
கண்ணனுக்கு ரொம்ப பிடிக்கும்
என்று நினைக்கிறேன்
:D:D அதிகம் பேசமாட்டான் என்பதால் தயிர் சொல்றீங்களா?
பேசறவங்களை கூட நம்பிடலாம் இவன மாதிரி அமுக்குனி பசங்கள நம்பமுடியாது ராணிமா:D
சின்ன கண்ணன் உதித்த வேகத்தை பார்த்தால் இவனுக்கு தயிர் (சாதம், வடை, பூரி) பிடிக்குமா:(;)
 

Manimegalai

Well-Known Member
டென்ஷன் பார்ட்டி
ராமசாமிக்கு,அன்று வெளியூர் செல்வதால் வேகவேகமாக கிளம்பிக்கொண்டிருதர்,அப்படியும் நேரம்ஆகிவிட்டது.காரை பார்க்கிங்கில் விட்டுவீட்டு வேகமாக உள்ளே சென்றார்.ஆனால் அதற்குள் விமானம் பறந்தது விட்டது.கவுண்டர் சென்று அடுத்த விமானதுக்கு டிக்கெட்டை மாற்றி கேட்டார்.அதற்கு கவுண்டர் ஆள், முடியாது என கூறினார்.ஏன்? என்றதுக்கு இது ரயில்வேநிலையம்,அதனால் முடியாதுஎன் கூறினர்.தலையில் தட்டிக்கொண்டு காரை எடுத்தார்.விமானநிலையம் சென்று கவுண்டரில் டிக்கேட்டை கொடுத்து மாற்றி கேட்டார் .அந்த நபர் முடியாது என கூறினார்.ராமசாமிக்கு கன்னபின்ன என கோபம் வந்ததுவிட்டது.நான் யார் தெரியுமா? மினிஸ்டரிடம் செல்வேன்,கோர்ட் போவேன் என் குதித்தார்.அந்த நபர் மிகவும் அமைதியாக, “ஐயா,நீங்க எங்க வேனானும் போங்க ஆன முதலா விமானநிலையம் போங்க,எனா,இது பஸ்நிலையம்,” என்றாரே, பார்க்கலாம். ராமசாமி திருதிரு என விழித்தார்.{
NO TESION,BE HAPPY} (தென்காசிசுவாமிநாதன் அவர்களின் கருத்திலிருந்து எடுத்த சிறு கதை}


சூப்பர் அண்ணா...
நான் பள்ளிக்கு போகும் நாட்களில் எனது தந்தை.. காலை நேரத்தில் தென்கச்சி.கோ சுவாமிநாதன் வானொலியில் பேசுவதை சத்தமாக வைப்பார்...குடும்பத்தில் உள்ள எல்லோரும் கேட்போம்...இப்ப எனக்கு அவரை பற்றி தெரியலை....உங்களுக்கு தெரியுமா.
பாடல் பற்றின தகவலுக்கு நன்றி...
கவிஞர் கங்கை அமரன்...சோ அவர் கட்டாயம் நோட்டீஸ் அனுப்ப மாட்டார்...
அது மீராவ கலாய்க்க சொன்னேன்:D
 
Last edited:

Adhirith

Well-Known Member
:D:D அதிகம் பேசமாட்டான் என்பதால் தயிர் சொல்றீங்களா?
பேசறவங்களை கூட நம்பிடலாம் இவன மாதிரி அமுக்குனி பசங்கள நம்பமுடியாது ராணிமா:D
சின்ன கண்ணன் உதித்த வேகத்தை பார்த்தால் இவனுக்கு தயிர் (சாதம், வடை, பூரி) பிடிக்குமா:(;)

வேகத்துக்கும்,தயிருக்கும்
no connection
just opposite meaning....

Sir ரொம்ப ஸ்லோ, ரொம்ப late pick up
so......
 

malar02

Well-Known Member
உங்களை பற்றி சொல்லுங்க .... Friend :):):)
விளையாட்டாய்
கடந்துவந்த பயணம்
வளரும் பாதை
கரடுமுரடாய்
கற்கள்....

கடந்துவந்தால்... பக்கம் ஓடும்
பதம் பார்க்கும்
சுடுநீர்கால்வாய்....

விளையாட்டாய் தாண்டி வந்தால்
கொளுத்தும் வெயில்.....
மணல் பாதை.....

போகட்டும்... என்று
தப்பிதாவி கடந்தும்
முன்னாள்.... ஒரு மேடு பள்ளம்

வீழ்வேனோ... என்று
பலம் திரட்டி
பாதையை பிடித்தால்......

கால் உபாதை
இளைப்பாறலாமென்றால்....
இடைவிடாத மழை

நனைந்தே வந்தும்
கால் முழுவதும் சகதி
பக்கம் ஓர் ஓடை
சுகமாய் குளிர்ந்து
உறவாடி எழுந்த பின்

ஒட்டி கொண்டன மண்ணும் தூசியும்
காய்ந்த பின்பும் அதன் வாசனை
நேர்கோட்டில் பாதை

பாதை முழுவதும்
பசுமையும் ஆங்காங்கே........
எங்கிருந்தோ ஓர் பாடல்
மனதிற்கும் உடலுக்கும்
இதமாய்
ஏற்று கொள்ளும்
கொல்லும் விதமாய்

குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா
குறை ஒன்றும் இல்லை கண்ணா

கண்ணுக்கு தெரியாமல் நிற்கின்றாய் கண்ணா
கண்ணுக்கு தெரியாமல் நின்றாலும் எனக்கு
குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா

வேண்டியதை தந்திட வெங்கடேஸன் நின்றிருக்க
வேண்டியது வேறில்லை மறைமூர்த்தி கண்ணா
மணிவண்ணா மலையப்பா கோவிந்தா கோவிந்தா


கவிதையல்ல இது
வெறும் சொல்வடிவம் தான்



 
S

semao

Guest
சூப்பர் அண்ணா...
நான் பள்ளிக்கு போகும் நாட்களில் எனது தந்தை.. காலை நேரத்தில் தென்காசி சுவாமிநாதன் வானொலியில் பேசுவதை சத்தமாக வைப்பார்...குடும்பத்தில் உள்ள எல்லோரும் கேட்போம்...இப்ப எனக்கு அவரை பற்றி தெரியலை....உங்களுக்கு தெரியுமா.
பாடல் பற்றின தகவலுக்கு நன்றி...
கவிஞர் கங்கை அமரன்...சோ அவர் கட்டாயம் நோட்டீஸ் அனுப்ப மாட்டார்...
அது மீராவ கலாய்க்க சொன்னேன்:D
Ithai than ivvalo nerama search panniya
kuyilu
 

murugesanlaxmi

Well-Known Member
தென்காசிசுவாமிநாதன் ஐயா, 2009 september மாதம் இறந்து விட்டார்,சகோதரி.நம் கூகுள் கடவுளிடம் கேளுங்கள்,அவருடைய விக்கிப்பீடியாவே உள்ளது சகோதரி.அதை பார்த்து நான் காப்பி அடிகிறேன் சகோதரி.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top