eppadi ippadi... supermy dedication to sundari continues
this shows her mind
already nethu eluthiyathu dears
எதற்கு திருமணம்
அதனால்
எனக்கு இரு மனம்
தவிக்குது ஒரு மனம்
தடுக்குது மறு மனம்
போராட்டத்தில் என் மனம்
ஒரு மனம் இது
என் மனம் அறியாப்பருவம் எனக்கு
தந்தை வழி நடந்தேன்
மணம் புரிய வந்தாய் நீ
ஆம்
வந்தாய் மணவாளனாய்
பதிந்தாய் என் மனதில்
வாழ்ந்தேன் உள்மனதோடு
ஏற்றேன் முழு மனதோடு
உன் நிழலை என் நிஜமாக
மறு மனம் அது
பணத்தை கொண்டு மணத்தை கணித்த உன் தந்தையும்
அழகை கொண்டு மனதை கசக்கிய உன் தாயும்
நாகரிக தோற்றத்தில் பற்று கொண்டு என்னை நினையாத நீயும்
உனைச் சார்ந்து என்னை தவிர்த்த உன் சுற்றமும்
அறியுமோ என் மனம்
காயமானால் மருந்திடலாம்
காணாமல் போனால்
கண்டறியலாம்
நின்று போனால்
என் செய்ய
அது
மறு மனம் அது
நின்று போனதே என் செய்ய
நான் என் செய்ய
எனக்கு இரு மனம்
தவிக்குது ஒரு மனம்
தடுக்குது மறு மனம்
போராட்டத்தில் என் மனம்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஆம்
மல்லியின் நாயகி நான்
இள (கும் ) மனம் மறைத்து
இறுகும் மனம் காட்டுவேன்
ஒருகணம் உன் மனம்
ஊர் மனம் மாறினாலும்
உரிய காரணம் இல்லாது
மாறுமா என் மனம்
அபி மனம் கண்டு
உன் மனம் கொண்டு
என் மனம் காட்டுவேன்