Adhirith
Well-Known Member
Hi mam
கண்ணனை நினைத்தால் கோபம் கோபமாய் வருகின்றது,தன்தந்தையிடம் தான் அந்தப்பொண்ணு என்று சொல்லலாம் ஆனால் தாயார் தன்னிடம் அந்தப்பொண்ணு என்று சொன்னால் கோபம் கொள்வாராம்,ஏன் பிடிக்குதோ பிடிக்கவில்லையோ சகமனுசிதானே பெயர் சொல்லி சொல்லலாமல்லவா,பெயர் தெரியவில்லையென்றால் கூடப்பரவாயில்லை,ஆனால் இதைக்கூட கொஞ்சம் விட்டுவிடலாம் பிள்ளையின் பெயர் தெரியாமல் தன்தந்தையிடம் கேட்கும்போது அப்படியே புல்லரிச்சுப்போய்விட்டது,திருமணம வாழ்க்கை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்,அம்மாவோ அப்பவோ தங்கள் குழந்தைகளை பிரிந்திருக்கும் பட்சத்தில் தங்கள் குழந்தைகளின் குணநலன்கள் பற்றித்தெரியாமல் இருப்பார்கள் ,பிள்ளையின் பெயர் தெரியாமல் இருந்தது இல்லை,வீட்டினருடன் பேசுவதில்லை அதனால் பெயர் தெரியவில்லை என்று சொன்னால் நம்பமுடியுமா,ஏனெனில் கண்ணன் தன் தங்கையுடன் தொடர்பில்தானே இருந்தார்,என்ன அதனைத்தெரிந்துகொள்ள ஆசை ஆர்வம் அக்கறை இது எதுவுமேயில்லை ,இந்த லட்சணத்தில் வேலிக்குப்பக்கத்தில் நின்று அவர்கள் குரலைக்கேட்பாராம்,அவர்களுக்கு இடையூறு செய்யாமல் விலகிப்போவாராம் அத்தோடு அவர்களின் உலகத்தில் தான் இல்லையென்று வருந்துவாராம்,கல்யாணத்தின் பின் எந்தப்பெண்ணையும் கவனித்தது இல்லை ஆர்வம் வந்ததும் இல்லை ,மஞ்சள் கயிற்றின் மகிமை என்ற நினைப்புவேறு,ஏன்அந்த மஞ்சள் கயிறு மகிமை விவாகரத்து கேட்கும்போது எங்கே போய்விட்டது,எல்லாக் காரணத்தையும் தனக்கு சாதகமாகத்தான் கண்ணன் நினைக்கின்றார், இன்னும் புரிந்துணர்வு வரவில்லைப்போல என்றைக்கு சுந்தரி பக்கம் இருந்து யோசிக்கப்போகின்றார்.
நன்றி
Aravin22
He is like junior Esh....
காரணங்கள் அனைத்தையும் தனக்கு சாதகமாக
மாற்றிக் கொள்வதில்.....