Joher
Well-Known Member
இவள் வந்து தொடுவதற்குத்தான் மருது நாக்கைத் தொங்கப் போட்டுட்டு காத்துக்கிட்டிருந்தானா?
அப்போ அவனைப் பத்தி ஜதி எவ்வளவு கேவலமாக நினைச்சிருக்காள்ன்னு இதிலேயே தெரியுதே மல்லிகா டியர் சரி அப்படித்தான் அவளுக்கு இவனும் இசைஞ்சு கொடுத்தாலும் சும்மா விட்டுடுவாங்களா?
இரண்டு வருஷம் பொண்டாட்டி இல்லாமல் இருந்திருந்தாலும் இவன் நல்லவனான்னு சந்தேகப்படமாட்டங்களா?
எலும்பில்லாத நாக்கு எப்படி வேண்ணாலும் பேசுமே இந்த கலைச்செல்வியைப் போல எவளாவது இரண்டு வருஷம் கழிச்சு வந்த பொண்ணை வேலைக்கு போகலையான்னு வந்த மறுநாளே கேட்பாளா?
இவளெல்லாம் என்ன அம்மா?
பொண்ணைக் கட்டியவன் குடிகாரனோ பொறுக்கியோ எவனாயிருந்தாலும் மகள் அவனோடு சந்தோஷமாக வாழணுமுன்னுதான் நினைப்பாள்
இங்கே என்னடான்னா அவள் பாட்டுக்கு பாரீனு போவாளாம் அவளைப் பெத்தவங்க உனக்கும் எனக்கும் சம்பந்தமில்லைன்னு மருமகனை கண்டுக்க மாட்டார்களாம் தள்ளி நிற்பார்களாம்
பிடிக்காத மருமகன்னா பொண்ணை ஏன் கல்யாணம் செஞ்சு கொடுக்கிறீங்க?
ஓவர் செல்லம் கொடுத்து கூறு கெட்டு புத்திக்கெட்டுப்போன எங்க அறிவாளிப் பெண்ணுக்கு நீயி சரிப்பட மாட்டேன்னு சொல்லியிருக்கணும் மல்லிகா டியர்
ஜெயந்தியை அடித்தது ஒன்றுதான் மருது செய்த தவறு அதுவும் அவள் இழுத்து வைத்ததுதான்ப்பா
ஏன் இவளோட அழகான சமையலை வாய் திறக்காமல் சாப்பிட்டுப் போகும் மருது வெளியே போனவுடன் அம்மா வீட்டுக்கு ஜதி போக வேண்டியதுதானே
கொஞ்ச நேரம் கழித்து போனால் உள்ளே விட மாட்டார்களா ஒரு நாள் இவளோட சொந்தக் கடைக்குப் போய் வேணுங்கறதைப் பார்த்து எடுத்துட்டு வந்திருக்கலாமே
வேறு யாராவதுன்னா கூட பரவாயில்லை மனைவி அடுத்த கடையில் எடுத்தால் எவனுக்குமே கோபம் வரத்தான் செய்யும் இந்தம்மாவை வாங்கன்னு சொல்லாத குற்றத்துக்கு கலையச்செல்வி வாங்கின பொருள்களை எடுக்காமல் போவாளா?
அப்படிப் போனால் மகளுக்கும் மருமகனுக்கும் இன்னும் சண்டை வருமுன்னு வாழ்ந்து பார்த்த ஒரு பொம்பளைக்கு தெரியாதா?
இல்லை இவங்க இரண்டு பேருக்குள்ளும் சண்டை வரட்டுமுன்னே கலை போனாளா மல்லிகா டியர்
எது எப்படியோ ஒரு நல்ல குடும்பத்துக்கு ஆசைப்பட்ட மருதுவுக்கு அது கிடைக்கலைப்பா