பேரன்பு பிரவாகம் -33

Advertisement

Nirmala senthilkumar

Well-Known Member
Thank you so much friends.







:):):):):)


Please read and share your thoughts.
Nirmala vandhachu
 

Novel-reader

Well-Known Member
கதை ரொம்ப அருமையா பல(பாத்திரங்களோட) கோணத்துல கிளை பரப்பி நகருது.

விஷ்ணு சொல்லுவது போல மிர்ணி தனக்கு வேணும்போது மட்டும் அறிவா தெளிவா யோசிக்கறா. மத்தபடி அவனுக்கு தேவைப்படும் பொழுது அப்படியே Pampered Princess mode -க்கு போய், ஏற்கனவே சாமி ஆடற அண்ணனுக்கு இன்னும் சலங்கை கட்டி ஆடற மாதிரி சூழல் உருவாக்குறா.

பிரவாகனுக்கு தர்ஷினியால அவமானம் அவனோட இடத்துலயே, அதுக்கு விஷ்ணுகிட்ட பொங்கிறப்ப தெரியற நியாயம், அவன் போய் sorry கேட்க போறேன்னு சொல்லும் போதும் இருக்கும் ஆமோதிப்பு, இதெல்லாம் மாமியார் operation- ஐ தன் தங்கை வருவதற்காக தள்ளி வெச்ச அவ அண்ணனோட செயலுக்கு ஏன் வரலை?

மிர்ணி, அதுக்கு முதலில் போய் உன் அண்ணன் கிட்ட கோவப்பட்டு கண்டிச்சுட்டு வாமா. அப்புறம் புருஷனை விட்டு ஒரு மாசம் பிரிஞ்சு இருந்தா பசலை நோய் உனக்கு வருமா வராதான்னு ஆராய்ச்சி பண்ணலாம்.

நீ outdoor foreign ஷூட் காக 1 மாசம் போக நேர்ந்தா போகமாட்டியா? அநேகமா நீ உங்கண்ணன் மாதிரி புத்தியோட தான் உன்னை சுத்தியே யோசிக்கற.

உங்கண்ணன் உன் pregnancy பத்தி விஷ்ணுக்கு ஒரு super ஐடியா கொடுத்துருக்கான். அது தெரிஞ்சா தான் உன் சகோதரப் பெருமகனாரோட எண்ணங்களின் மேன்மை உனக்கு புரியும். அவனோட குப்பை கொட்டற மலரோட கஷ்டமும் புரியும். போய்த் தெரிஞ்சுக்கோ போ. அப்ப தான் விஷ்ணு உனக்கு புருஷனா வர நீ எவ்வளவு அதிர்ஷ்டம் செஞ்சுருக்கன்னு புரியும்.

இந்த அம்மா அன்பரசிக்கு மருமகளை பிள்ளைக்காக விட்டு கொடுக்க சொல்லத் தெரியறது போல தன் பெண்ணை அவ புருஷனுக்காக விட்டு கொடுத்து போகும் படி அறிவுரை சொல்லத் தெரியாதா?

கீர்த்தி வரவே இல்லை. நீ வந்து நல்லா உன் தங்கைக்கு சூழலுக்கு தகுந்த மாதிரி எதை எப்படி செய்யணும்னு சொல்லிக்கொடுமா. உன் தங்கச்சி
movie -ல வருவது மாதிரி ஏழையா இருந்தாலும் உங்க குடிசை தான் என் சொர்க்கம்னு வசனம் பேசாத குறையா விஷ்ணுவை கல்யாணம் செய்துகொண்டு இப்ப அவ்வை சண்முகி 'மீனா' மாதிரி யோசிச்சுட்டு இருக்கா.

டேய் பிரவாகா நாப்பதாயிரம் அடி மலர் உன்னை அடிச்சாலும்ன்னு சொல்லறா பாரு அங்க தெரியறது உன் அன்பில்லைடா உன்னோட செல்வாக்கும் அதிகார மனப்பான்மையும் தான். அவளை கூண்டுக்குள்ள அடைச்சு, போனா போகுது என்னை அடிச்சு விளையாடிக்கோன்னு சொல்லற மாதிரி தான், நீ உன் செயல்களுக்கான மலரோட எதிர்வினைகளுக்கு respond பண்ணுவதும் இருக்கு.

மலர் இந்த இடபிரச்சனைக்கெல்லாம் கவலைப்படாதம்மா. பிரவாகன் அவன் வழியில் சரி செய்ய நேரந்தாலும் வருத்தப்படாதே. எல்லாரையும் திருத்துவது உன் வேலை இல்லை. அது மட்டுமில்லை, இந்த நிலம் உங்கப்பாவோடதா இல்லாமல் இருந்தாலும் அவன் இப்படிப்பட்ட பிரச்சனைகளை deal செய்யதானே வேணும்.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top