அழகான நிறைவு. சாஷாவோட பெயரின் மாண்பிற்கு பீஷ்மனோட விளக்கம்
அருமை -உண்மை.
பீஷ்மனுக்கு சாஷாவோட அழகு தான் ஈர்ப்பிற்கு முதற்படி என்றாலும் அவளோட அமைதி, பொறுமை அவனை அப்படியே முழுவதும் நம்பி ஏத்துக்கொண்ட விதம், தானே ஆசைபட்டாலும் அழிக்க முடியாத மாறாக்காதல் இதெல்லாம் தான் அவனை வீழ்த்திய ஆயுதங்கள். Beauty wins the beast with her eternal love.
சத்யா தாத்தா மாதிரி ஒரு மனிதருக்கு கொஞ்சம் நல்ல விதமாக பையனும் மருமகளும் அமைந்திருக்கலாம்.
ஒரு வகையில் பார்கவி சாஷாக்கு நன்றியோட இருக்கணும். தான் சிதைத்த பையனின் குணத்தை சீர்படுத்திய சாதனைப்பெண் அவள்.
ரேகா-பரமேஸ்வரன் வருகை surprise and சந்தோஷம்.
Story -ல limited characters. இதுல சத்யா தாத்தாக்கு தான் solid role lead pair -ஐ தவிர.
பார்கவி பீஷ்மனின் காதலை வெளிக்கொண்டு வர எதிர்மறையாய் உதவும் character. மத்தவங்களுக்கு அளவான role தான். So எனக்கு தனிப்பட்டு யாரையும் specially impressive என்று சொல்லத் தோணலை.
பீஷ்மனோட மனமாற்றம் அதனால் அவனோட behavioural changes இவைதான் impressive.