E5 Nee Enbathu Yaathenil

Advertisement

Sundaramuma

Well-Known Member
மிகவும் உணர்ச்சிகரமான அத்தியாயம் இது...
நேற்றிலிருந்து அந்த தாக்கத்திலிருந்து வெளிவர முடியவில்லை..


தப்பு என்று உணர்ந்து விட்டான்...
மனைவியையும், மகனையும் பார்க்க விருப்படுகிறான்...
அவர்கள் உலகத்தில் தான் இல்லை என்று ஏக்கப்படுகிறான்.
மீண்டும் சேர விரும்புகிறானா என்று அவனுக்கே தெரியவில்லை...
மனதில் வேறு சிந்தனையும் இல்லை, நிம்மதியும் இல்லை...

ஒரு ஆணின் மனநிலையை தெள்ளத்தெளிவாக விளக்கும் மல்லிகாவின் எழுத்துக்களுக்கு இணையில்லை....
அதை பெண்கள் மனதிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைத்த மல்லிகாவிற்கும் ஈடு இணையில்லை...
.

Super :):):)
 

Ansadoss

Well-Known Member
ஓ...தற்கொலைக்கு காரணமே தெரியாமலே இவ்வளவு விமர்சனமா விமலா பற்றி.:)
சாதாரணமா திட்டுவது வேறு....
அதற்காக எல்லாம் சாக போகமாட்டாங்க.
நான் உங்களின் கமண்ட் தொடர்ச்சியாக படிப்பேன்...நான் நினைத்தேன் நீங்கள் பெண்களை ஆதரித்துதான் எழுதுவீங்க.... ஆனால் விமலா விசயத்தில் உங்கள் கருத்து மாறுபாடா இருக்கு....(கதாநாயகி) மட்டும்தான் ஆதரிப்பீங்களா.:)
அப்படியல்ல மேகலை நான் விமர்சனம் எழுதிய SJM & NEY இரண்டிலும் கதாநாயகி நாயகனால் துன்பப்படுவது போல் அமைந்துவிட்டது. அதனால் நாயகியின் கண்ணோட்டத்தில் இருந்து விமசிக்க வேண்டியுள்ளது.

இதுவே பூவையின் நெஞ்சம் கதையை இதுபோன்று படித்திருந்தால் நிச்சயம் நாயகனுக்கு ஆதரவாக தான் பேசி இருப்பேன்:)

மல்லி வரும் காலத்தில் அப்படியோர் கதை எழுதினால் நிச்சயம் உங்களுக்கு புரியும்.

கமலா சடகோபன் எழுதிய கதவு என்ற நாவலில் எனக்கு கதாநாயகன் மாதுவை தான் பிடிக்கும். நாயகியை அப்படியே அப்பனும் போல தோன்றும். :oops:

நாயகியால் நாயகன் பாதிக்கப்படுவது போன்ற நாவல்கள் அவ்வளவாக வருவதில்லை.

அநேகமாக ராணிமாவின் கருத்தும் இதுவாக தான் இருக்கும் என நினைக்கிறேன்.:)
 

Sundaramuma

Well-Known Member
ஓ...தற்கொலைக்கு காரணமே தெரியாமலே இவ்வளவு விமர்சனமா விமலா பற்றி.:)
சாதாரணமா திட்டுவது வேறு....
அதற்காக எல்லாம் சாக போகமாட்டாங்க.
நான் உங்களின் கமண்ட் தொடர்ச்சியாக படிப்பேன்...நான் நினைத்தேன் நீங்கள் பெண்களை ஆதரித்துதான் எழுதுவீங்க.... ஆனால் விமலா விசயத்தில் உங்கள் கருத்து மாறுபாடா இருக்கு....(கதாநாயகி) மட்டும்தான் ஆதரிப்பீங்களா.:)
thumbsup.jpg
 

banumathi jayaraman

Well-Known Member
அவளை பிரிந்தபின்னே நிலவு இனிக்கவில்லை மலர்கள் பிடிக்கவில்லை...

Aval varuvalaa song
துரைக்கண்ணனோட உடைந்துப் போன மனதை ஒட்ட வைக்க,
அவள் (சுந்தரி) வருவாளா, பாத்திமா டியர்?
 

Sundaramuma

Well-Known Member
எனக்கு இந்த epi படிச்சு கொஞ்சம் mixed feelings (உமா மாம் HIFI )
அப்புறம் உங்க cmts உம் படிச்சப்புறம்
கொஞ்சம் எனக்கு புரிஞ்ச அளவில ஒவ்வொரு charecterayum
இன்று வரை அவர்களின் எண்ணங்களை
வைத்து சொல்லி இருக்கிறேன்


இன்று வரை நான்

சந்திரன் நான்
வளர்ந்து பின் தேயும் அல்ல
தேய்ந்து வளரும் பிறை சந்திரன் நான்
ஆம்
தேய்ந்து போனேன் மகனின் விவாகரத்தால்
வளருவேன் மகனின் மறுவாழ்வால்
பௌர்ணமி ஆவேன் பேரனின் வரவால்


மனைவியின் அழகு கண்டேன்
நண்பனின் பணம் கண்டேன்
மகனின் மனம் தவிர்த்தேன்
மருமகளை மறந்தே விட்டேன்
பேரனை காண தவிக்கிறேன் இன்று


சொல்லின் கூர்வாளால்
வெட்ட தயங்கவுமில்லை நான்
யாரையும் கொட்டவும் தயங்கவுமில்லை
தப்பென்று தோணவில்லை
அது தவறென்று அறியவுமில்லை நான்
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
குணத்தை பார்க்கவில்லை
யாரின் குணத்தையும் பார்க்கவில்லை
அதற்கு காலம் இன்னும் கனியவில்லை
அவர் மருமகளை மறக்கவில்லை .......

அவர் இவ்வளோ பேசறதுக்கு காரணமே மருமகள் யாரும் இல்லாமல்
குழந்தையை இடுப்பில் வைச்சுக்கிட்டு எல்லா வேலையும் பார்ப்பது தான் .....
அவரரிடம் இருக்கு தவறு ..... குணம் பார்க்காமல் பணம் மட்டும் பார்ப்பது தான்.....
கவிதை அருமை மீரா.......:):):)
 
S

semao

Guest
துரைக்கண்ணனோட உடைந்துப் போன மனதை ஒட்ட வைக்க,
அவள் (சுந்தரி) வருவாளா, பாத்திமா டியர்?
அம்மா
முதல்ல இவன் வரணும்
அவள் எண்ணம் அது தான்
இவன் அவள் வீட்டை தாழ்வாக எண்ணியதும்
ஒரு காரணம்
 
S

semao

Guest
அவர் மருமகளை மறக்கவில்லை .......

அவர் இவ்வளோ பேசறதுக்கு காரணமே மருமகள் யாரும் இல்லாமல்
குழந்தையை இடுப்பில் வைச்சுக்கிட்டு எல்லா வேலையும் பார்ப்பது தான் .....
அவரரிடம் இருக்கு தவறு ..... குணம் பார்க்காமல் பணம் மட்டும் பார்ப்பது தான்.....
கவிதை அருமை மீரா.......:):):)

பேரன் வந்ததும் தானே அம்மா
 

Sundaramuma

Well-Known Member
இன்று வரை நான்
விமலா

அழகால் வந்தேன் ரோகினியாக
சந்திரனின் ரோகினியாக


வந்தது இரு மகவு
ஆண் மகவு என் நிழலே
அழகிலும் என் நிழலே
என் மகனின் முதலாக
தாயவள் இருக்கிறேன்
மன்னவனோ நிந்தித்தாலும்
என்மகனின் அன்பினாலே
மகிழ்வேன்

சுற்றமே ஆனாலும்
சூழவே இருந்தாலும்
மற்றவர்கள் பின்னே
நானிங்கே முன்னே
இதுவே என் எண்ணம்
அதுவே என் திண்ணம்


மகனின் மணத்தை
பணம் கொண்டு
கண்டிட்டார் என்னவர்
தன்னது மட்டும் அழகாயிருக்க
முன்னவனின் மனைவியோ
அழகியில்லை என் சொல்ல
வெளுப்புமில்லை கறுப்புமில்லை
சுந்தரியின் சுந்தரத்தில்
எனக்கு ஒரு விருப்புமில்லை
பெண்ணவளை வைத்திருக்க
மனதில்லை
இங்க வாழவிடவும்
விருப்பமில்லை
எனக்கும் வாழ விருப்பமில்லை
காரணம் கூறவில்லை
இப்போது காரணம் கூறவில்லை
காத்திருக்க கூறுகிறேன்
சிறிது பொறுத்திருக்க கூறுகிறேன்


என் எண்ணம் கண்டு
பின் பெண் வண்ணம் கண்டு
கூறுவீர் நியாயத்தை
என் பக்க நியாயத்தை

Perfect for Vimala......
அற்புதம் .....:):):)
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top