ThangaMalar
Well-Known Member
காத்திருக்கிறோம் நாங்களும் உன் கருத்துரைக்கு மீரா...
கண்ணன் நான்
ஆம் கண்ணன் நான்
மாய கண்ணன் இல்லை நான்
மானிட கண்ணன்... துரை கண்ணன் நான்
ஆசை எனக்கும் உண்டு
என் இணை எனக்கு இணையாய்
இருத்தல் வேண்டுமென எண்ணுதல் இயல்பு
படிக்கும் வயதில் தலையாட்டி
பிடிக்காத அடமெல்லாம் பிடித்து பின்
வேண்டாத எண்ணமெல்லாம் கொண்டு
சந்தித்தேன் திருமணத்தை
நிந்தித்தேன் அவளை
வேண்டாம் என்றான பின்பு
கடுகும் மலை ஆகுமல்லவா
அதே தான் இங்கும்
கடுகு ஆனது மலை
உயிர் பிரிந்தது உடலை
எனக்கு அவள் உயிரல்ல
என்னுயிர் அவளுள்
சீமைக்கு சென்று வந்த என்னை
சீமை கருவேல மரம் என்றாய்
சீமை கருவேல மரம் நஞ்சாமே
நஞ்சு நான் சரி
நஞ்சினால் வந்த பிஞ்சினை
மட்டும் ஏற்பது ஏன்
அபராஜிதன் ஆமே அவன்
உலகை வெல்லும் கடவுளாம்
கண்ணனையும் வெல்லுவானோ
என் மனதையும் வெல்லுவானோ
காத்திருக்கிறேன் தோற்க
அபாரம் மீரா...
அத்தியாயம் வந்த சில நிமிடங்களில் கவிதை ஊற்று பொங்குதே...
பாராட்டுக்கள்