விறுவிறுப்பான பதிவு சவீதா.அந்த அம்மாவும்,பையனும் யாரா இருக்கும். புதையலை பற்றிய ரகசியம் அவங்களுக்கு தெரிஞ்சிருக்கு,இருக்கும் இடம் தெரிஞ்சிக்க தான் மில் கடனில் இருக்கறதா சொல்லி கடனுக்கு பதில் வீட்டை கேட்கறாங்களா.
சீதா கனவுல சிமி ஏதோ இக்கட்டுல மாட்டிக்கறதை போல வந்ததா,அதனால் தான் கோவிலுக்கு போறாரா.சிமி தனக்கு அப்படி எதுவும் தோனலைன்னு சொன்னாலும்,சீதாவின் கனவில் கண்டதும் நடக்குதே, என்ன நடக்க போகுதோ.
உதிரன் அவனோட அப்பா ரூமை சுத்தம் பண்ணும் போது,ஏதோ உருளும் சத்தம் கேட்குது,ஆனா எங்கே இருந்து கேட்குது என தெரியலை,தன்னை சுத்தி ஏதோ நடக்குது என உதிரனுக்கு புரியுது....
சித்தப்பாவை பார்க்க உதிரன் செல்ல,அங்கே என்ன நடக்குது என தெரிந்து கொள்ள அறையின் விளக்கை அணைத்த சினா அங்கேயே இருக்க சினாவின் அலறல் சத்தம் கேட்குதே என்ன நடந்தது.அடுத்து என்ன என நடந்தது என்று சொல்லாமலேயே நிறுத்திட்டீங்க ஜீ.
பிரச்சனைக்கு காரணமானவர்களிடம் வினயா மாட்டிக்கொண்டாளா.......கட்டாயம் திருமணம் செய்துகொள்ள அவசியத்தில். உதிரனின் அத்தைக்கு மகனுண்டா......
உதிரனின் சித்தப்பாக்களுக்கு தொழிலைக் கொடுத்து மகனுடைய எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி வீட்டைத் தக்கவைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது.... கனவில் பைரவர் அறிவுறுத்தினாரா.....
என்னாங்கடா இது?
நேற்றுத்தான் ஒரு சித்தப்பன் வந்து கண்டமேனிக்கு பேசிட்டு அந்த ரூமுக்கு போனதும் பெட்டிப் பாம்பாட்டம் அடங்கி பதவிசா போனான்
இன்னிக்கு இன்னொரு சித்தப்பனைக் கூட்டிட்டு வந்திருக்கான்
இவனையும் அந்த ரூமுக்கு கூட்டிட்டு போய் கொஞ்சம் மந்திரிச்சு அனுப்பு, உதிரன்
சினாமிகா எதுக்கு அலறினாள்?
அந்த ரூமுக்கு வரும் உருவம் யாருன்னு கண்டுபிடிச்சிட்டாளோ?
அந்த ரூமுக்கு வந்தது யாரு?
"மடவரல் இன் துணை"-ன்னா அழகு பொருந்திய துணைவின்னு சொல்லுறீங்க
ஆனால் எதிரியும் அவன் அம்மாவும் சினாவை உதிரனின் அழகுக்கு ஈடு இல்லைன்னு சொல்லுறாங்க
எது சரி, சவீதா டியர்?