மிகவும் அருமையான பதிவு மல்லி.சீதா என்ன சொல்லுவாரோ என ஷர்மி தயங்க, அடுத்தடுத்து குழந்தை பொறந்தா உன் ஆரோக்யம் கெடும்னு தான் சொல்றது, நான் பார்த்துக்கறேன்
என சொன்னதே ஷர்மியின் சஞ்சலத்தை போக்க,சீதாவின் மாற்றமும் தெரியுது.
வீட்டில் உள்ளவர்கள் ரவியிடம் பேச தயங்க,மகனிடம் வாய் பேசும் சீதா பேத்தியை சமாளிக்க முடியாம திண்டாடறா.பேச்சு தான் பெரிய பேச்சு,அத்தனை குழந்தைகளை வளர்த்தேன்னு
இப்படி அழ விட்டு இருக்கீங்க.சீதாவை பேத்தி வச்சு செய்யறா.
ஷர்மி அவள் அப்பாவிடம் வீடு வேண்டும் என கேட்டதற்க்காக பிரமாண்டமா பல கோடிகளில் வீடு வாங்கிட்டான்.அகலக்கால் வைத்ததில் தொழிலும் தடுமாற,முதல் குழந்தையின் போது தான் ஷர்மி மனஉளைச்சலில் இருந்தால்,இப்போதாவது நல்லபடியாக பார்த்துக் கொள்வான் என நினைத்தால், ரவியின் கவனம் முழுவதும் தொழிலில் தான் இருக்குது.